Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 23 மார்ச், 2013

ஏழரை சனி அஷ்டமது சனி தாக்கத்திலிருந்து விடுபட பரிகாரம் இருக்கிறதா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்


                                                        ஓம் நம சிவாய 




வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும் 
சனி பகவான் ஒவ்வொரு ஜாதகத்திலும் ஆயுளை குறிக்கும் கிரகமாக திகழ்கிறார். இந்த சனி பகவான் ஒவ்வோர் ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருக்கிறார். 

ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் ஜென்ம ராசியிலும் ராசிக்கு இரண்டாம் இடத்திலும் ராசிக்கு  பன்னிரெண்டாவது வீட்டிலும்  கோட்சார ரீதியாக சஞ்சரிக்கும் பொழுது அந்த ஜாதகருக்கு ஏழரை சனியின் காலமாகும். 

அதேபோல் ராசிக்கு நான்காவது வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கும்பொழுது அந்த ஜாதகருக்கு கண்டக சனியின் காலமாகும். 

ஜென்ம ராசிக்கும் எட்டாம் வீட்டில் கோட்சார ரீதியாக சனி பகவான் சஞ்சரிக்கும்பொழுது அந்த ஜாதகருக்கு அஷ்டமத்து சனியின் காலமாகும். 

இந்த ஏழரை சனி கண்டக சனி அஷ்டமத்து சனி நடைபெறும் காலங்களில் ஒரு ஜாதகர் அவரவர் ஜாதகப்படி சில கஷ்டமான சூழ்நிலைகளை அனுபவிக்க நேரிடலாம். அந்த கஷ்டமான சூழ்நிலையில் இருந்து விடுபட

நீங்கள் செல்ல வேண்டிய இடம் திருநள்ளாறு நள்ளாற்றீஸ்வரர் கோயில். திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராட வேண்டும்.

தீர்த்தக்கரையிலுள்ள கோள் தீர்த்த விநாயகரை வணங்கிய பின்னர் பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தத்தில் உள்ள புனிதநீரை தலையில் தெளித்து, ராஜகோபுரத்தை தரிசிக்க வேண்டும். 

கோயிலுக்குள் சென்றதும் இடையன் சன்னதியை தரிசிக்க வேண்டும். பிறகு, தியாகராஜர் சன்னதிக்கு சென்று அவரைத் தரிசனம் செய்த பின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பாள் போகமார்த்த முலையாளை தரிசிக்க வேண்டும். 

பிரகாரம் சுற்றி வந்து நள தமயந்தி ஓவியங்களைப் பார்த்தபடியே, அவர்களை மனதார நினைக்க வேண்டும். வசதி யுள்ளவர்கள் சனீஸ்வரர் சன்னதியில் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தலாம். 

மற்றவர்கள் தேங்காய் உடைத்து, எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். வெளியே வந்து மீண்டும் ராஜகோபுரதரிசனம் செய்து திரும்பலாம். 

திருநள்ளாறு செல்ல வசதி யில்லாதவர்கள் எளிய பரிகாரம் ஒன்றைச் செய்யலாம். 

உள்ளூர் சிவாலயத்திலுள்ள சனீஸ்வரர் சன்னதி அல்லது நவக்கிரக சன்னதியிலுள்ள சனீஸ்வரருக்கு சனிக்கிழமைகளில் எள்எண்ணெய் தீபம் ஏற்றலாம். 

பாடல் ஒன்றை தினமும் 3 முறை சொல்ல வேண்டும்.

மாசுமெய்யர் மண்டைத்தேரர்  
குண்டர் குணமிலிகள் பேசும் பேச்சை 
மெய்யென்று  எண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றை சூடி  
மும்மதிலும் உடனே நாசம் செய்த எம்பெருமான்  மேயது நள்ளாறே!

இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். சனிதோஷத்தின் தாக்கம் மிகவும் குறைந்து சிரமங்களைத் தாங்கும் சக்தி பெறுவீர்கள்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்