சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஒரு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தைக் கட்டுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் சௌதி அரேபிய அதிகாரிகளுக்கும் இடையே ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன. ஒரு முறையான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சௌதி அரேபியாவில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய நோக்கம். இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டால், எதிர்காலத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை நடத்துவதற்கும் இந்தப் புதிய மைதானம் பயன்படுத்தப்படலாம்.
பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் ஏற்கெனவே வர்த்தகம் மற்றும் ராஜதந்திரம் போன்ற பல விஷயங்களில் இணைந்து செயல்படுகின்றன. இப்போது, இந்தக் கூட்டாண்மை கிரிக்கெட்டிலும் விரிவடையக்கூஅங்கு அதிக எண்ணிக்கையிலான ஆசிய மக்கள் வசிப்பதும், அவர்களில் பலர் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதுமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சௌதியில் மைதானம் அமைப்பதற்கான ஒரு முக்கியக் காரணம்.
மற்றொரு முக்கியக் காரணம், சௌதி அரேபியா சமீபத்திய ஆண்டுகளில் விளையாட்டுகளுக்கான ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது. அந்நாட்டின் வலுவான பொருளாதார நிலைமை, விளையாட்டுகளில் பெருமளவில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது. இதன் காரணமாகப் பல சர்வதேச விளையாட்டு அமைப்புகள் இப்போது சௌதியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளன..மூத்த கிரிக்கெட் ஆய்வாளர் நௌமன் நியாஸ், பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், "முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராகப் பொறுப்பேற்றதில் இருந்து, விளையாட்டுத் துறை உள்படப் பல்வேறு துறைகளில் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதன் மூலம் சௌதியை ஒரு பெரிய விளையாட்டு தேசமாக உலகின் முன்பாக முன்னிறுத்தியுள்ளார்," என்று கூறினார்.
பட்டத்து இளவரசரின் முயற்சியாலேயே, கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற புகழ்பெற்ற கால்பந்து வீரர்கள் சௌதி லீக்கில் விளையாட வந்ததாகவும் நௌமன் நியாஸ் குறிப்பிட்டார்.
மேலும் விளக்கிய அவர், "சௌதி அரேபியாவில் கிரிக்கெட் தொடர்பான வாய்ப்புகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குக் கிடைத்தால், அது வாரியத்திற்குப் பெரும் நன்மையாக அமையும். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் அங்கு நடத்தப்பட்டாலோ அல்லது பாகிஸ்தான் தனது சர்வதேச போட்டிகளை அங்கு ஏற்பாடு செய்தாலோ, பல பெரிய சர்வதேச விளம்பரதாரர்கள் வருவார்கள். இது தவிர, பாகிஸ்தான் - சௌதி இடையிலான இந்த ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாட்டிலும் பாகிஸ்தானுக்கு பெரிதும் உதவும்"என்று கூறினார்.
சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஒரு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தைக் கட்டுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் சௌதி அரேபிய அதிகாரிகளுக்கும் இடையே ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன. ஒரு முறையான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சௌதி அரேபியாவில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய நோக்கம். இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டால், எதிர்காலத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை நடத்துவதற்கும் இந்தப் புதிய மைதானம் பயன்படுத்தப்படலாம்.
பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் ஏற்கெனவே வர்த்தகம் மற்றும் ராஜதந்திரம் போன்ற பல விஷயங்களில் இணைந்து செயல்படுகின்றன. இப்போது, இந்தக் கூட்டாண்மை கிரிக்கெட்டிலும் விரிவடையக்கூஅங்கு அதிக எண்ணிக்கையிலான ஆசிய மக்கள் வசிப்பதும், அவர்களில் பலர் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதுமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சௌதியில் மைதானம் அமைப்பதற்கான ஒரு முக்கியக் காரணம்.
மற்றொரு முக்கியக் காரணம், சௌதி அரேபியா சமீபத்திய ஆண்டுகளில் விளையாட்டுகளுக்கான ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது. அந்நாட்டின் வலுவான பொருளாதார நிலைமை, விளையாட்டுகளில் பெருமளவில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது. இதன் காரணமாகப் பல சர்வதேச விளையாட்டு அமைப்புகள் இப்போது சௌதியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளன.
.மூத்த கிரிக்கெட் ஆய்வாளர் நௌமன் நியாஸ், பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், "முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராகப் பொறுப்பேற்றதில் இருந்து, விளையாட்டுத் துறை உள்படப் பல்வேறு துறைகளில் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதன் மூலம் சௌதியை ஒரு பெரிய விளையாட்டு தேசமாக உலகின் முன்பாக முன்னிறுத்தியுள்ளார்," என்று கூறினார்.
பட்டத்து இளவரசரின் முயற்சியாலேயே, கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற புகழ்பெற்ற கால்பந்து வீரர்கள் சௌதி லீக்கில் விளையாட வந்ததாகவும் நௌமன் நியாஸ் குறிப்பிட்டார்.
மேலும் விளக்கிய அவர், "சௌதி அரேபியாவில் கிரிக்கெட் தொடர்பான வாய்ப்புகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குக் கிடைத்தால், அது வாரியத்திற்குப் பெரும் நன்மையாக அமையும். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் அங்கு நடத்தப்பட்டாலோ அல்லது பாகிஸ்தான் தனது சர்வதேச போட்டிகளை அங்கு ஏற்பாடு செய்தாலோ, பல பெரிய சர்வதேச விளம்பரதாரர்கள் வருவார்கள். இது தவிர, பாகிஸ்தான் - சௌதி இடையிலான இந்த ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாட்டிலும் பாகிஸ்தானுக்கு பெரிதும் உதவும்"என்று கூறினார்.











