விரைவில் திருமணம்
புதன், 16 அக்டோபர், 2024
கல்யாண வரன்கள் - அக்டோபர் - 16 - 2024.
விரைவில் திருமணம்
சசிகுமார் - SASIKUMAR - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC
அதிர்ஷ்டத்தை தரும் பெயராகவும் அதே சமயத்தில் ஆபத்தை தரும் பெயராகவும் இந்த பெயரை கருதலாம்
மன உறுதி கற்பனை வளம் திரவ வகையான தொழில்களால் லாபம் கடல் வாணிபம் ஏற்றுமதி இறக்குமதி குளிர்பானங்கள் பால் மீன் வகை தொழில்கள் சிகப்பு நிறமுள்ள பொருள்களால் அதிக லாபம் உண்டு .
சசிகுமார் - SASIKUMAR - என்ற பெயரில் ஒளிந்திருக்க கூடிய இந்த அபசகுனமாக சொற்கள் உயிருக்கு ஆபத்தை உணர்த்தக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது .
சுருக்கமான சொல்லவேண்டுமானால் இந்த பெயர் ஆரம்பத்தில் நல்ல பலன்களை கொடுத்தாலும் வாழ்க்கையில் விபரீதமான பலன்களையும் முற்று புள்ளியை உணர்த்தும் என்பதில் சந்தேகமில்லை
அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )
பரிகார தலமான திருப்பதிக்கு வருடம் ஒரு முறை சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகி நன்மைகள் உண்டாகும் . .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
91 + 8122733328
பெண்களின் திருமணத்திற்கு பிறந்த ஜாதகமா? ருதுவான ஜாதகமா? எது பொருந்தும் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC
ஒரு பெண்ணுடைய பிறந்த ஜாதகத்தில் நடக்கக் கூடிய தசாபுத்தியில் தான் ஒரு பெண் ருதுவாகிறாள். அதாவது பிறந்த ஜாதகப்படி குரு திசையில் புதன் புத்தி நடக்கிறது என்றால் அதே மாதிரி ஏதோ ஒரு திசையில் புதன் புத்தி நடக்கும்போதுதான் ருதுவாகிறாள்.
அந்த பெண்ணின் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையிலேயே ருதுவாகும் காலம் அல்லது உடலியல் மாற்றம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே பிறந்த ஜாதகத்தை வைத்து எப்போது அவர்கள் ருதுவடைவார்கள் என்பதை கணிக்கலாம்.
ஒரு சில பெண்களுக்கு மாதவிலக்குப் பிரச்சினை உள்ளதை பார்க்கலாம். சிலருக்கு அதிக ரத்தப்போக்கு, ஒரு நாளில் நிற்பதையும் பிறந்த ஜாதகத்தில் பார்த்துவிடலாம். மாதவிலக்கு நிற்பதையும் ஜாதகத்தில் கணித்துவிடலாம்.
நவ கிரகங்களில் செவ்வாய் ரத்தத்திற்குரிய கிரகம். செவ்வாய் பகை கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ, பகை கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலோ பகை நட்சத்திரங்கள் அமர்ந்திருந்தாலோ மாதவிலக்கு கேள்விக்குரியாகும்.
பெண்களின் ஜாதகத்தில் பூப்பெய்தாமலே போகும்படியான ஜாதகங்களும் உண்டு. அதற்கு அவர்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி, செவ்வாய், உடலாதிபதி சந்திரன், சந்திரன் முன்னும் பின்னும் பாவ கிரகங்களால் சூழப்பட்டால் அதுதான் காரணம்.
ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஒழுங்கின்மை காரணமாகத்தான் முரட்டுத்தனமான குழந்தைகள் பிறக்கின்றன. மாதவிலக்கு என்பது சீராக அமைய வேண்டும்.
உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் மாற்றங்களே மாதவிலக்கு எனப்படும். அந்த நாட்களில் இரும்பு சத்து மிக்க எள் உருண்டை, ஒழுக்கங்கஞ்சி போன்ற உணவுகளை அளிப்பார்கள். ஆனால் இப்போது அவ்வாறு அளிப்பதில்லை. அதனால்தான் பல கன்னிப் பெண்கள் பலவீனமாக இருக்கிறார்கள். அவர்களது மகப்பேறு காலத்தில் பல சிக்கல்களையும் சந்திக்கிறார்கள். சிசேரியன் அளவிற்குப் போவதற்கும் இதுவே காரணம்.
ஒரு பெண் பூப்பெய்தல், முன்கூட்டியே பூப்பெய்தல், பூப்பெய்தாமலே போவது எல்லாமே கிரகங்களின் அடிப்படையில்தான். இப்போது பெண்கள் மிகச் சிறிய வயதிலேயே பூப்பெய்தும் நிலை ஏற்படுகிறது. அதுவும் செவ்வாயின் மாற்றம் தான். அதுவும் ஜனன ஜாதகத்தின் அடிப்படையில்தான் பூப்பெய்தல் நிகழ்கிறது.
பெண்கள் பூப்பெய்தல் என்பது பூ மலரும் நேரமாகும். அதாவது தாமரை மலரும் நேரம் அல்லது அல்லி மலரும் நேரம். தாமரை காலை வைகறையில் இருந்து 7 மணிக்குள் மலரும். அதற்குள் அல்லது அல்லி மலரும் நேரம் 5.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்ளாகத்ததான் பெண்களின் உடலில் மாற்றம் ஏற்படும். அதை வைத்தே பூப்பெய்தல் என்று அழைக்கப்பட்டது.
ஒரு பெண் பூப்பெய்தல் எந்த நாளில் வந்திருக்கிறது , எந்த நட்சத்திரத்தில் வந்திருக்கிறது என்பதை மேலோட்டமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் ஜனன ஜாதகமே சிறந்தது.
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
ஆயுள் உங்களுக்கு ஜாதகப்படி தீர்க்கமா ? தெரிந்து கொள்ளுங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC
மரணத்தில் இருந்து யாரும் தப்பி ஓடி ஒளிய முடியாது. எட்டாம் பாவம் என்பது ஜாதகரின் ஆயுள் பற்றி கூறுகிறது. ஆயுள் காரகன் சனி, ஜாதகரின் லக்னத்திற்கு பாதகம் செய்யும் பாப கிரகங்களின் நிலையை வைத்துதான் ஒருவரின் ஆயுள் பற்றி கூற முடியும். ஒருவரின் ஆயுள் முடிவு பல விதமாக இருக்கலாம் என்றாலும், நோயால் ஏற்படும் மரணம் பற்றிதான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.
அதன் மூலம் ஜாதகருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்கும். எட்டாம் இடத்தின் அதிபதி லக்னத்தில் இருந்தால் சில சங்கடங்கள் தோன்றும் என்றாலும், நல்ல ஆயுள் பலன் இருக்கும். மேஷ லக்னத்திற்கு செவ்வாய் லக்னாதிபதியாகவும், எட்டாம் இட அதிபதியாகவும் உள்ளார். எனவே செவ்வாய் நீச்சம் பெற்றால் உடல் ஆரோக்கியம் கெடும். மனக் கஷ்டம் இருக்கும்.
எந்நேரமும் நோய் இருந்து கொண்டே இருக்கும். துலாம் லக்னத்திற்கு, சுக்ரன் தான் லக்னாதிபதியாகவும், எட்டாம் இட அதிபதியாகவும் இருக்கிறார். இவர் உச்சம் பெறுவது ஆறாம் இடம் என்பதால் நோய் தாக்கம் அதிகரிக்கும். ரிஷபம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு குரு தான் எட்டாம் இடத்தின் அதிபதி. இந்த ஜாதகர்களைப் பொறுத்தவரை குரு நீச்சம் பெறாமல் இருப்பது நல்லது.
மீன லக்னத்திற்கு 8-ம் இடத்தின் அதிபதி சுக்ரன். இவர் 7-ம் இடமான கன்னியில் நீச்சம் பெறுவது நன்மையை வழங்கும். மாறாக உச்சம் பெற்றால் அந்த ஜாதகருக்கு சர்க்கரை நோய், உடல் பருமன், தசைப்பிடிப்பு, தொற்று நோய்கள் வரக்கூடும். சிறுவயதில் முதல் நெஞ்சில் சளித் தொல்லை இருக்கும்.
எட்டாம் இடத்தில் நிற்கும் கிரகங்களால் ஏற்படும் நோய்களைப் பற்றிப் பார்க்கலாம். * எட்டில் சூரியன் நின்றால், தேகத்தில் ஏதாவது பிணி இருந்துகொண்டே இருக்கும். கண்களில் கோளாறு, நெஞ்சு அடைப்பு, வாயுதொல்லை, பின் தலையில் காயம் ஏற்படலாம். சூரியன் ஆட்சி, உச்சம் பெற்றால் தீர்க்க ஆயுள் பெறுவார். இல்லையேல் மத்திம ஆயுள் கொண்டவராக இருப்பார்.
செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றால் தீர்க்க ஆயுள் உண்டு. இந்த ஜாதகர் போதைக்கு அடிமையாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். * எட்டில் புதன் நிற்பதை, ‘மறைந்த புதன் நிறைந்த பலன்’ என்பார்கள். இந்த ஜாதகருக்கு தீர்க்க ஆயுள் உண்டு. இருந்தாலும் சுவாச கோளாறு, வாயுத்தொல்லை, கை கால் முடக்கவாதம், உடல் அங்க குறைவு இருக்கும். * குரு பகவான் 8-ம் இடத்தில் நின்றால், சிறு வயது முதல் ஏதாவது நோய் இருந்து கொண்டே இருக்கும். வயிற்று கோளாறு, மண்ணீரல், கணையம், பிரச்சினைகள் இருக்கும். குரு ஆட்சி, உச்ச நிலையில் இருந்தால் தீர்க்க ஆயுள் இருக்கும்.
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com