Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 31 டிசம்பர், 2012

2013 - ஆங்கில புத்தாண்டு கன்னி ராசி பலன்கள் . ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
வசிகரிக்கும் தோற்றத்தால் மற்றவர்களை கவரும் கன்னி ராசி அன்பர்களே
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
வசிகரிக்கும் தோற்றத்தால் மற்றவர்களை கவரும் கன்னி ராசி அன்பர்களே !

புத்தாண்டில் சனி, ராகு, ராசிக்கு இரண்டிலும் கேது ராசிக்கு எட்டாம் இடத்திலும் உள்ளனர். இந்த அமர்வு சில சிரமமான பலன்களைத் தரும். இருப்பினும், குரு பாக்ய ஸ்தானத்தில் மே 28 வரை இருந்து அளப்பரிய நற்பலன்களை வழங்குவார். அவர் மிதுனத்திற்கு பெயர்ச்சியான பின் ஐந்தாம் பார்வை சனி, ராகு கிரகங்களின் மீது பதிகிறது. இதனாலும் கெடுபலன் ஓரளவு குறைந்து நன்மை உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் தான் சிகரத்தை எட்டிப் பிடிக்க முடியும். நல்ல எண்ணத்துடன் பேசினாலும் உங்களைச் சிலர் குறை கூற நேரிடும். இதனால், அடிக்கடி மன சஞ்சலத்திற்கு ஆளாவீர்கள். பணிகளில் கவனத்துடன் ஈடுபடுவதால் மட்டுமே மக்கள் மத்தியில் நற்பெயரைத் தக்க வைக்க முடியும். வீடு, வாகனத்தில் திருட்டு பயத்தை தவிர்க்க உரிய பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம். வாகன பயணத்தில் நிதானத்தைக் கடைபிடித்தால் பயணம் இனிமையாகும். புத்திரர்கள் வருட முற்பகுதியில் குடும்ப சூழ்நிலை உணர்ந்தும், பிற்பகுதியில் தமது விருப்பங்களை நிறைவேற்றுவதில் பிடிவாத குணத்துடனும் செயல்படுவர். அவர்களை பொறுமையுடன் வழிநடத்துங்கள். பூர்வ சொத்துக்களில் வருமானம் சுமாராக இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். சிலர் குடும்ப தேவைக்காக சொத்தின் பேரில் கடன் பெறுகிற சூழ்நிலை உருவாகும். நம்பகமானவர்களிடம் மட்டும் கடன் பெறுவது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை. சத்தான உணவு உண்பது, சீரான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தம்பதியர் எதிர்கால நன்மை கருதி ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம். ஒருவருக்கொருவர் குடும்ப விஷயம் குறித்து வாக்குவாதம் செய்வது கூடாது. பெருந் தன்மையுடன் விட்டுக் கொடுப்பது நன்மை தரும். நண்பர்களின் உதவியும், ஒத்துழைப்பும் தேவையான சமயத்தில் கிடைக்கும். ஆடம்பர எண்ணத்தைக் குறைத்து செலவைக் கட்டுப்படுத்த முயற்சிப்பீர்கள். குருவருளால் திட்டமிட்டபடி குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் சார்ந்த வகையில் கடின உழைப்பு, விடாமுயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வெளிநாடு வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு ஓரளவே அனுகூலம் உண்டு.
தொழிலதிபர்கள்:  அளவான உற்பத்தி, சுமாரான லாபம் என்கிற நிலை இருக்கும். கடந்த காலத்தில் அதிருப்தி மனப்பாங்குடன் விலகிச்சென்ற ஒப்பந்ததாரர்கள், மீண்டும் சரக்கு கொள்முதல் செய்ய வருவர். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்கள். நிர்வாகத்தில் நடைமுறைச் செலவு கட்டுக்கடங்காமல் போகும். சிக்கனம் கடைபிடிப்பது நல்லது. பணியாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். தொழிலாளர் பிரச்னையைச் சமாளிக்க பணச்செலவு ஏராளமாகும்.
வியாபாரிகள்:  வாடிக்கையாளர்களிடம் பெற்ற நன்மதிப்பை பாதுகாப்பதில் அக்கறை தேவைப்படும். புதிய உத்திகளைப் பின்பற்றி புதிய வாடிக்கையாளர்களைக் கவர முயற்சிப்பீர்கள். மிதமான விற்பனை, அளவான வருமானம் கிடைக்கும். குடோன்களில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம். சக வியாபாரிகளிடம் நல்லுறவை உருவாக்கி சில நன்மைகளைப் பெறுவீர்கள். வெளியூர்ப் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.
பணியாளர்கள்:  பணிபுரியும் இடங்களில் விழிப்புடன் செயல்படுவதால் மட்டுமே குளறுபடி வராத நன்னிலை அமையும். நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுவது நல்லது. எதிர்பார்த்த கடனுதவி வந்து சேரும். சக பணியாளர்களால் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
பெண்கள்:  பணிபுரியும் பெண்கள் ஒருமுகத்தன்மையுடன் செயல்பட்டால் மட்டுமே பணி இலக்கை நிறைவேற்ற முடியும். சலுகை பெறுவதில் ஓரளவே அனுகூலம் உண்டு. குடும்பச் செலவுகளை நிறைவேற்ற பணவசதி சீராக கிடைக்கும். குடும்பப் பெண்கள் சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. கணவருடன் கருத்து பேதம் வளராத வகையில் ஒற்றுமையைப் பேணுவது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் விடாமுயற்சியால் உற்பத்தி, விற்பனையை பாதுகாத்துக்கொள்வர்.சராசரிபணவரவுகிடைக்கும்.
மாணவர்கள்:  படிப்புச் செலவுக்கான பணவசதி ஓரளவே கிடைக்கும். அன்றாடப் பாடங்களை அன்றன்றே படிப்பது அவசியம். நண்பருடன் வீண்பொழுது போக்குவது கூடாது. பயணத்தில் மிதவேகம் அவசியம். பெற்றோரின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும். படிப்பு முடிந்து வேலை தேடுபவர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும்.
அரசியல்வாதிகள்:  வருட முற்பகுதியில் அரசியல் பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். பிற்பகுதியில் தொய்வு ஏற்படும். ஆதரவாளர்களிடம் நன்மதிப்பு பாதிக்காது என்றாலும், சில தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் தாமதம் உண்டாகும்.
விவசாயிகள்:  விவசாயச் செலவுக்கான பணம் பெறுவதில் தாமதம் உண்டாகும். பயிர் வளர்ப்பில் கவனம் செலுத்துவது அவசியம். மிதமான மகசூலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும்.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் துன்பங்கள் தூள் தூளாகும்.
பரிகாரப் பாடல்:
சீர்கொண்ட செம்பொன் திருமேனியும்
செம்முக மலரும் கார்கொண்ட சட்டையும்
தண்டாயுதமும் கணங்கள் எட்டும்
கூர்கொண்ட மூவிலைச் சூலமும்
கொண்டருள் கூர்ந்த கொன்றைத்
தார்கொண்ட வேணியனே!
காழியாபதுத் தாரணனே!
ஜனவரி: குரு 9ல் இருப்பது நற்பலனைத் தரும். அதேசமயம் சனி, ராகு, கேதுவின் சஞ்சாரம் சிறப்பான பலனைத் தருவதற்கு இல்லை. குருபலம் இருப்பதால் திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும்.
பிப்ரவரி: குருவின் பலத்தால் ஆரோக்கியம் மேம்படும். மாதகிரகங்களும் அனுகூல பலன் தரும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும்.
மார்ச்: நீதிமன்ற வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நல்ல பணியாட்கள் வந்து சேர்வர். பழைய கடன் பாக்கி அடைபடும். நோய்நொடிகள் பறந்தோடும். எதிரியின் கொட்டம் அடங்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
ஏப்ரல்: சூரியன், செவ்வாயின் சஞ்சாரத்தால் கெடுபலன் உண்டாகும். வாகனப்பயணத்தில் நிதானம் அவசியம். குருபலத்தால் ஓரளவு பிரச்னையைச் சமாளிக்க முடியும். குடும்பத்தேவை அனைத்தும் சீராக நிறைவேறும்.
மே: நல்லதும் கெட்டதும் கலந்த காலகட்டம் இது என்றால் மிகையில்லை. சுபநிகழ்ச்சிகளில் தடை உண்டாகி மறையும். புதன், சுக்கிரனால் வருமானம் அதிகரிக்கும். மாதக்கடைசியில் எதிர்பார்த்த சுபசெய்தி வந்துசேரும்.
ஜூன்: குரு 10ல் இருப்பதால் தொழிலில் மிகுந்த கவனம் தேவைப்படும். ஏழரைச்சனி, ராகு,கேது, குரு போன்ற கிரகங்களால் கெடுபலன் ஏற்படும். உடல்நிலை அதிருப்தி அளிக்கும். மருத்துவச் செலவு கூடும். எதிரிகளாலும் தொல்லை உண்டாகும்.
ஜூலை: மாத கிரகங்கள் அனுகூலமாகச் சஞ்சரிக்கின்றனர். குடும்பத்தேவை அனைத்தும் நிறைவேறும் விதத்தில் வருமானம் இருக்கும். வெளியூர்,வெளிநாட்டில் இருந்து சுபசெய்தி வந்து சேரும்.  குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்ய இடமுண்டு.
ஆகஸ்ட்: மாதம் முழுவதும் சுமாரான பலன் தான். பண நெருக்கடி அதிகமாகும். வங்கியில் கடன், நிதியுதவி பெற்று தொழிலை சீர்படுத்தும் முயற்சி நிறைவேறும். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது. பிள்ளைகளின் வளர்ச்சி ஆறுதல் அளிக்கும்.
செப்டம்பர்: நண்பர்களின் உதவியைக் கேட்டு பெறுவீர்கள். கண்நோய் உண்டாகலாம் கவனம். கணவன், மனைவி ஒற்றுமை குறையும். பிள்ளைகளாலும் மனவருத்தம் ஏற்படலாம். ஆலய வழிபாட்டு செய்வதன் மூலம் நிம்மதி பெற முடியும்.
அக்டோபர்: சனியால் உடலில் எப்போதும் சோம்பல் மேலோங்கும். உடல்நிலையில் கவனம் தேவைப்படும். மருத்துவச்செலவு செய்ய நேரிடும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபவிஷயத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.
நவம்பர்: குரு வக்ரம் அடைவதால் சாதகமான பலனை எதிர்பார்க்கலாம். வருமானம் பலவழிகளில் வர வாய்ப்புண்டு. திருமண முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை குடும்பத்தில் உருவாகும்.
டிசம்பர்:  தொழிலில் லாபம் பன்மடங்கு உயரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. புதிதாக வீட்டுமனை, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். 
சிலருக்கு பூர்விகச் சொத்து கிடைக்கும். மொத்தத்தில் நல்ல காலகட்டம்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்தலையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முய உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்ற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>

2013 - ஆங்கில புத்தாண்டு சிம்ம ராசி பலன்கள் . ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.

அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே  

புத்தாண்டில் சனி, ராகு உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் மிகுந்த அனுகூல பலன் தரும் வகையில் உள்ளனர். இதனால் உங்கள் செயல்களில் நேர்த்தியும் தகுந்த வெற்றியும் கிடைக்கும். சனி, ராகுவின் அனுகூலம் வருடம் முழுவதிலும் உள்ளது. குரு மே 28ல் பெயர்ச்சியாகி மிதுனத்தில் அமர்ந்து தன் பங்கிற்கு ஆதாய பலன்களைத் தருகிறார்.திட்டமிட்ட செயல்களை செயல்படுத்தி சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். பசு, பால் பாக்ய யோகம் அமையும். குடும்பத்தின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். வீடு, வாகனத்தில் வருட முற்பகுதியில் குருவின் பார்வை பலத்தால் அபிவிருத்தி பணிகளை திருப்திகரமாக நிறைவேற்றுவீர்கள். தாய்வழி சொந்தங்களின் ஆதரவு பலமாக கிடைக்கும்.புத்திரர்களின் வாழ்வில் நல்ல குணங்களை பின்பற்றி படிப்பு, செயல்திறனில் முன்னேற சனி, ராகு, குருவின் பார்வை பலம் பெரிதும் உதவும். வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கப் பெறுவர். பூர்வ சொத்தில் தாராள வருமானம் கிடைக்கும். புதிதாகச் சொத்து சேர்க்கையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை உண்டாகும். உங்கள் வளர்ச்சியைக் கண்டு எதிரிகளே தானாகப் பயந்து விலகுவர். பழைய கடன் பெருமளவு அடைபடும். எதிர்கால நன்மை கருதி சேமிக்கவும் செய்வீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்ப ஒற்றுமைக்கு பலம் சேர்த்திடுவர். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். நண்பர்களுக்கு உதவுவதும் உதவி பெறுவதுமான வாய்ப்புண்டு. தந்தைவழி உறவினர்களிடம் இணக்கம் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சிப்பவர்களுக்கு அதிர்ஷ்டகரமான காலகட்டம்.
தொழிலதிபர்கள்: தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு லாபம் குவிப்பர். நிர்வாகச்செலவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தி பெருகும். திறமைமிகு பணியாளர்களுக்கு ஊக்கமும் சலுகையும் வழங்குவீர்கள். வங்கி நிதியுதவியுடன் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தொழில் கூட்டமைப்பில் சிலருக்கு பதவி, பொறுப்பு கிடைக்கும். புதிய தொழில் துவங்குகிற முயற்சியும் இந்த ஆண்டு நிறைவேறும்.
வியாபாரிகள்: கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி விற்பனையைப் பெருக்குவர். தாராள விற்பனையால் வருமானம் உயரும். விரிவாக்கப் பணிக்கு எதிர்பார்த்தபடி வங்கியில் நிதியுதவி கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டு. சகவியாபாரிகளின் மத்தியில் கவுரவத்துடன் திகழ்வர். வாடிக்கையாளர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகும். வியாபாரம் தொடர்பாக வெளியூர் பிரயாணம் அடிக்கடி சென்று வர நேரிடும்.
பணியாளர்கள்:  அரசு, தனியார் துறை பணியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவர். பணி இலக்கை எளிதாக நிறைவேற்றி நிர்வாகத்தினரின் பாராட்டு கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை படிப்படியாகக் கிடைக்கும். பணிச்சுமையை சில சமயங்களில் சந்தித்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. சக பணியாளர் ஒத்துழைப்பு சீராகக் கிடைக்கும். தொழில்நுட்ப பணியாளர்கள் புதிய நுட்பங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொள்வர். எதிர்பார்த்த பணி, இடமாற்றம் கிடைக்கப் பெறுவர்.
பெண்கள்:  பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். தாமதமான சலுகை திருப்திகரமாக கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெற்றுத் திகழ்வர். தாராள பணவசதியால் குடும்ப வாழ்வில் சந்தோஷம் காண்பர். கணவர்வழி சார்ந்த உறவினர்களிடம் நற்பெயர் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்னை அதிகரித்து உபரி வருமானம் பெறுவர். தொழிலுக்குத் தேவையான நவீன கருவிகள் வாங்குகிற திட்டம் நிறைவேறும்.
மாணவர்கள்:  லட்சிய மனதுடன் படித்து தேர்ச்சி இலக்கை அடைவீர்கள்.படிப்புச் செலவுக்கான பணம் தாராள அளவில் கிடைக்கும். சக மாணவர்கள் முன்னேற்றத்திற்கு துணைநிற்பர். பெற்றோரின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில் செயல் படுவீர்கள். கல்வியோடு விளையாட்டு, கலைத்துறையிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். படித்து முடித்து வேலைதேடுபவர்களுக்கு இது பொன்னான காலகட்டம். நல்ல சம்பளத்தில் கவுரவமான பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்:  மக்கள் சேவையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு நற்பெயர் பெறுவர். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவகார பேச்சு வார்த்தையில் அனுகூல பலன் கிடைக்கும். எதிரி வியப்படையும் வகையில் வாழ்வு உயரும். புத்திரர் உங்களின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்படுவர். ஓய்வு நேரங்களை குடும்பத்தின் நன்மைகளுக்காக பயன்படுத்துவீர்கள்.
விவசாயிகள்:  பயிர் வளர்க்க தேவையான இடுபொருட்கள் குறித்த காலத்தில் கிடைக்கும். பயிர் விளைச்சல் சிறந்து அதிக மகசூல் பெறுவீர்கள். விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தி உண்டாகும். நவீன உழவுக்கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும் . நிலப்பிரச்னை தீர்ந்து விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம் தொழிலில் அமோக லாபம் கிடைக்கும்.
பரிகாரப் பாடல்:
உலகம் உண்ட பெருவாயா!
உவப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி
நெடியாய் அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற
திருவேங்கடத்து எம்பெருமானே!
குலத் தொல்லடியேன்
உன்பாதம் கூடுமாறு கூறாயே!

ஜனவரி: சனியும் செவ்வாயும் உச்சம் பெற்று இருப்பதால் அனுகூலம் உண்டு. ராகுவும், சுக்கிரனும் நன்மையை வழங்க காத்திருக்கின்றனர். குருபலம் இல்லை என்பதையும் மறுப்பதற்கு இல்லை. தொழிலில் வருமானம் சீராகும். ஆரோக்கியம் மேம்படும்.
பிப்ரவரி:அரசாங்க வகையில் அனுகூலம் உண்டு. சனி அருளால் தொழிலில் ஆதாயம் கூடும். கணவன் அல்லது மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். செவ்வாயின் பாதிப்பால் மனதில் அவ்வப்போது மனசஞ்சலம் உண்டாகும்.
மார்ச்: செவ்வாய், சூரியன், புதன், சுக்கிரன் நான்கு கிரகங்களும் சரியில்லை. வாகனத்தில் செல்லும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. குரு 10ல் இருப்பது தொழிலில் சிரமத்தை ஏற்படுத்தும். உடல்நலம் பாதிப்படையும்.
ஏப்ரல்: சுக்கிரன், சனி,ராகு மூன்றாலும் நன்மை உண்டு. வங்கிக் கடன் மூலம் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் தடைபல உண்டாகி விலகும். சனி, சூரியனின் பார்வையால் உடல்நிலை சுமாராகவே இருக்கும்.
மே: மாதத்தின் பிற்பகுதியில் ராசிநாதன் சூரியன் 10ம் இடம் செல்வது சிறப்பானதாகும். புதனாலும் நன்மையே. தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். எதிலும் சாதுர்யமாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வெளிநாட்டு யோகமும் உண்டு.
ஜூன்: வருஷ கிரகங்களான குரு,சனி, ராகு மூவரும் அனுகூலம் தரும் விதத்தில் சஞ்சரிக்கின்றனர். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். உடல்நிலை திருப்தி தரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நல்ல முறையில் நடத்தி முடிக்கலாம்.
ஜூலை: பொன்னான காலகட்டம் இதுவாகும். அசையாச் சொத்துக்களை வாங்க வாய்ப்புண்டு. ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழலாம். சூரியன் 11ல் இருப்பது பொன்னான காலகட்டம். அரசியல்வாதிகள் வாரிசுகளை அரசியலில் புகுத்தி மகிழ்வர்.
ஆகஸ்ட்: மனக்குழப்பம் அனைத்தும் நீங்கி தெளிவு உண்டாகும். திருமண முயற்சிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். விரோதியும் நட்பு பாராட்ட வேண்டிவரும். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் ஆதாயம் உண்டாகும்.
செப்டம்பர்: உடல்நலனில் அக்கறை தேவைப்படும். உஷ்ணவியாதிகள் ஏற்படலாம். தொழிலில் அவசரமுடிவைத் தவிர்ப்பது நன்மையளிக்கும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பெண்களிடம் அதிக நெருக்கம் கூடாது.
அக்டோபர்: சூரியனின் சஞ்சாரம் நன்மை அளிக்கும். சுக்கிரன்,குருவும் ஆதாயம் வழங்க காத்திருக்கின்றனர். திருத்தல யாத்திரை, புண்ணிய காரியங்களைச் செய்ய ஏற்ற காலகட்டம்.  பயணங்கள்  அடிக்கடி ஏற்படும். தொழிலில் லாபம் கூடும்.
நவம்பர்: குரு வக்ரம் பெறுவதால் சிரமம் கூடும். தொழிலில் தடை பல உண்டாகி மறையும். பதவிக்கு ஆபத்து நேரலாம் கவனம். திருமண முயற்சியில் அதிருப்தி நிலவும். பணப்புழக்கம் சுமார் தான். வியாபாரத்தில் சோதனையைச் சந்திக்க இடமுண்டு.
டிசம்பர்: வக்ரகுரு, செவ்வாயின் அமைப்பு அனுகூலத்தை தராது. மனதில் குழப்பம் மேலோங்கும். எதிரிகளாலும் தொல்லை உண்டாகும். வாகனத்தில் நிதானமாகச் செல்வது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை. பேச்சில் கடுமை கூடவே கூடாது.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்தலையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முய உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்ற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>

2013 - ஆங்கில புத்தாண்டு கடக ராசி பலன்கள் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட கடக ராசி அன்பர்களே !

புத்தாண்டில் சனி, ராகு உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திலும் கேது பத்தாம் இடத்திலும் உள்ளனர். இந்த அமர்வு வருடம் முழுவதும் சுமாரான பலன்களை தரும் வகையில் உள்ளது. இருப்பினும் குருபகவான் மே 28 வரை ஆதாய ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்வு சிறக்க நற்பலன்களை வழங்குவார். பின், மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிற குரு, அர்த்தாஷ்டமச்சனியாக அமர்ந்துள்ள சனிபகவானை ஐந்தாம் பார்வையால் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை. இதனால் சனி, ராகு வின்அமர்வினால் உருவாகிற சிரமம் குறைந்து வாழ்வு வளம் பெறும். இடம், சூழ்நிலை உணர்ந்து இனிமையாகப் பேசுவீர்கள். சமூகத்தில் நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள். தம்பி, தங்கைகள் சொல்கிற ஆலோசனை உங்கள் சிந்தனையில் புதிய உற்சாகத்தை உருவாக்கும். வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பு நடைமுறையும்வாகன பயணத்தில்மிதவேகமும் பின்பற்றுவதால் சிரமம் வராமல் தவிர்க்கலாம். தாய்வழி உறவினர்களிடம் தேவையற்ற பழைய விஷயம் குறித்த விவாதம் கூடாது. புத்திரர்கள் மே28ல் நிகழ உள்ள குரு பெயர்ச்சி வரை படிப்பு, சுயதிறமையில் நல்ல முன்னேற்றம் அடைவர். அவர்களைப் பாராட்டி பரிசுப்பொருள் வாங்கித்தருவீர்கள்.ஆண்டின் பிற்பகுதியில் புத்திரர்கள் ஆடம்பர எண்ணத்துடன் ஊர் சுற்றுவதில் விருப்பம் கொள்வர். கடமைகளின் முக்கியத்துவம் உணர்த்தி, அவர்களை நல்வழிப்படுத்துவது அவசியம். கடன், பிணி, எதிரி ஸ்தானம் ஆகிய ஆறாம் இடத்தை குரு, சனி, ராகு பார்ப்பதால் எதிரிகளால் வருகிற தொல்லை பெருமளவில் குறையும். உடல்நலம் சீராகும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற வங்கிக்கடன் வாங்குவீர்கள்.வெளியூர் பயணம் அவ்வப்போது அவசரகதியில் செல்ல நேரிடும். பயணத்தின்போது விலை உயர்ந்த பொருட்களை கவனத்துடன் பாதுகாப்பது அவசியம். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்பட்டு குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவர். நண்பர்களின் ஆதரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும்.தொழில் சார்ந்த வகையில் திட்டமிட்ட முன்னேற்ற இலக்கை அடைய விடாமுயற்சி தேவைப்படும். பணவரவு சீராகக் கிடைத்து குடும்பத் தேவை நிறைவேறும். சிக்கனமாக இருந்தால் கடன் வாங்கும் தேவையை தவிர்க்க முடியும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி குரு பெயர்ச்சிக்கு முன் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மூத்த சகோதரர்கள் உங்கள் வாழ்வு வளம் பெறத் தேவையான ஆலோசனைகளை வழங்குவர். வெளிநாடு வேலைவாய்ப்பு பெறுவதில் இருந்த தடை அனைத்தும் நீங்கும்.
தொழிலதிபர்கள்:  கடின முயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பணியாளர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தி தரம் மற்றும் நிர்ணயித்த இலக்கை எட்டிப்பிடிப்பீர்கள். அவர்களுக்கு தாராள சலுகைகளை வழங்குவீர்கள். தொழிற்சாலை பாதுகாப்பில் உரிய கவனம் கொள்வது நல்லது. உங்களுக்கு அனுபவம் இல்லாத தொழிலில் கூட்டுசேர நண்பர்கள் வற்புறுத்த வாய்ப்புண்டு, கவனம்.
வியாபாரிகள்:  மூலதனத்தை அதிகப்படுத்தி பொருட்களை பெருமளவில் கொள்முதல் செய்வீர்கள். போட்டியைச் சமாளிக்க வாடிக்கையாளர்களுக்கு சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். விற்பனை சீராகி ஆதாயம் கூடும். சரக்கு வாகன பராமரிப்புச்செலவு அதிகரிக்கும். அனுபவம் மிக்க வியாபாரிகளின் ஆலோ சனைகளை அவ்வப்போது கேட்டு நடைமுறைப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்வீர்கள்.
பணியாளர்கள்:  அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் விழிப்புடன் செயல்பட்டு பணியில் குறைபாடு வராத அளவில் செயல்படுவர். சில சமயங்களில் பணித்திறமையால் நிர்வாகத்தினரின் பாராட்டும் கிடைக்கும். சக பணியாளர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து நட்புணர்வு பலமாகும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறையில் கவனம் கொள்வது அவசியம். பணிச்சுமை அதிகரித்தாலும் வருமானம் அதிகரிக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி பணி இலக்கை நிறைவேற்றுவர். எதிர்பார்த்த சலுகைப்பயன் ஓரளவு கிடைக்கும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். குடும்ப பெண்கள் கணவரின்வருமானம்அறிந்து அதற்கேற்ப செயல்படுவர். தாய்வழி உறவினர்களிடம் உதவிகள் பெறுவது அவ்வளவு எளிதல்ல. அவர்களிடம் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். சுயதொழில் புரியும் பெண்கள்  புதியஆர்டர் கிடைத்து வருமானத்தை உயர்த்துவர்.

மாணவர்கள்: விடாமுயற்சியுடன் படித்தால் மட்டுமே திட்டமிட்ட இலக்கை அடைய இயலும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு சரியாகும். பயணத்தில் நிதான நடைமுறை அவசியம். படிப்புக்கான பணவசதி சீராகக் கிடைக்கும். வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு பொறுமை தேவைப்படும். 
அரசியல்வாதிகள்:  ஆதரவாளர்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்கவைக்க தாராள செலவு செய்வீர்கள். மே 28ல் குரு பெயர்ச்சியான பின் எதிரிகளின் மனதில் உங்கள்மீது நல்ல அபிப்பிராயம் உருவாகி பகைமை உணர்வு குறையும்.
விவசாயிகள்:  வருட முற்பகுதியில் தாராள அளவில் விளைச்சல் பெற்று சந்தையில் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கப்பெறுவர். கால்நடை வளர்ப்பிலும், பயிர் பாதுகாப்பிலும் கவனம் கொள்வது நல்லது.
பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் நன்மைகள் மேலோங்கும்
பரிகாரப் பாடல்:
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போதவாங்கு
அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப்
பிறையெயிற்று அனல் விழி பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத்
திருவல்லிக்கேணி கண்டேனே!
ஜனவரி: சனி,ராகுவின் சஞ்சாரத்தால் உடல்நலம் பாதிக்கப்படலாம். புதன், சுக்கிரனும் சுமாரான பலனையே வழங்குவர். நண்பர், உறவினர் உதவ எண்ணினாலும் எதிரிகள் அதனை தடுப்பர். குருபலத்தால் சனி,ராகு தரும் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள்.
பிப்ரவரி: செவ்வாயும், சனியும் 8ல் சஞ்சரிப்பதால் சற்று சிரமம் தான். குருவைத் தவிர யாராலும் நன்மை இல்லை என்ற நிலை தொடர்கிறது. வாகனப்பயணத்தில் கவனம் தேவைப்படும். உடல்நலனிலும் அக்கறை தேவைப்படும்.
மார்ச்: புதனும், சுக்கிரனும் அனுகூலம் தர காத்திருக்கின்றனர். குருவின் அருளால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். படித்து வேலை தேடுபவர்களுக்கு சாதகமான காலகட்டம் இது. வீடு கட்ட முயற்சிப்பவர்கள் பணியைத் தொடங்கும் நல்ல சூழல் உருவாகும்.
ஏப்ரல்: சனியின் பார்வையால் மனதில் குழப்பம் ஏற்படலாம். தொழிலில் கவனம் அவசியம். சிலருக்கு தொழில்மாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு. வெளிநாடு சென்று வரும் யோகமுண்டு. விலையுயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது நல்லது.
மே: கூட்டுத்தொழிலில் லாபம் இரட்டிப்பாகும். சகோதரர்களால் நன்மை பல உண்டாகும். பதவி உயர்வு, விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கவும் வாய்ப்புண்டு. வியாதி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.  பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
ஜூன்: 12ல் இருக்கும் குருவால் சோதனை உருவாகும். கடன் வாங்க நேரிடும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. பெற்றோர் உடல்நலனில் அக்கறை தேவைப்படும். திருத்தல தரிசனம் சென்று வர வாய்ப்புண்டு. சொன்ன வாக்கைக் காப்பாற்றுவது நல்லது.
ஜூலை: பொருள்விரயம் ஏற்படும். விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு போகும். நம்பிக்கையானவர்களே உங்களை வஞ்சிக்க இடமுண்டு. உறவினர்களின் செயல் அதிருப்தி அளிக்கும். கண்கோளாறு உருவாகும். அர” விஷயத்தில் விழிப்புணர்வு அவசியம்.
ஆகஸ்ட்: புதன், சுக்கிரன் அருளால் வருமானம் உயரும். ஆரோக்கியம் சீராகும். ஜென்மத்தில் இருக்கும் செவ்வாயால் உடலில் உஷ்ணம் கூடும். முன்கோபத்தால் வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். உறவினர்களின் செயலால் கோபத்திற்கு உள்ளாவீர்கள்.
செப்டம்பர்: சூரியன் 3ல் சஞ்சாரம் செய்வதால் நன்மை அதிகரிக்கும். நல்லவர்களின் உதவி தக்க தருணத்தில் கிடைக்கும். அரசாங்க விஷயத்தில் அனுகூலம் உண்டாகும். புதிய வாகனம் வாங்க வாய்ப்புண்டு. அரசு வேலை கிடைக்கும் யோகமுண்டு.
அக்டோபர்: வருமானம் சீராக இருக்கும். நான்காம் இட சூரியனால் உடல்நிலையில் மந்தம் தென்படும். தந்தை மகன் உறவு பாதிக்க வாய்ப்புண்டு. சகோதரர்களின் நிலையும் சுமாராகவே இருக்கும். எதிர்பாராத பிரச்னைகளையும் சந்திக்கலாம் கவனம்.
நவம்பர்: குரு வக்ரம் அடைவதால் நிலைமை சீராகும். செவ்வாயின் மூன்றாம் இட மாற்றத்தால் நற்பலன் உண்டாகும். திருமண முயற்சிகளில் அனுகூலமுண்டு. பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் காலகட்டம். நீண்டகால கடன் அடைபடும்.
டிசம்பர்: சூரியன், வக்ரகுரு, செவ்வாய் மூன்றாலும் நற்பலன் உண்டாகும். விரும்பிய படி ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். தொழிலில் பன்மடங்கு லாபம் உயரும். மறைமுக எதிரிகளால் இருந்த தொந்தரவு பெருமளவு குறையும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்தலையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முய உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்ற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>

2013- புத்தாண்டு மிதுன ராசி பலன்கள் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.

பேச்சு திறமையால் மற்றவர்களை கவரும் மிதுன ராசி அன்பர்களே 
 
புத்தாண்டில் சனி, ராகு ராசிக்கு ஐந்தாம் இடத்தில் வருடம் முழுவதும் உள்ளனர். குரு மே 28 வரை ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்திலும், அதன்பின் ராசியிலும் அமர்ந்து செயல்படுகிறார். இதனால் வாழ்வில் சில சிரமங்களை எதிர்கொள்வீர்கள். கேதுவின் லாபஸ்தான அமர்வு மட்டுமே நல்ல பலன்களை வருடம் முழுவதும்உருவாக்கித் தரும்.அடுத்தவர்களின் தேவைகளை நிறைவேற்ற உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். கேதுவின் மூன்றாம் பார்வை ராசியில் பதிவதால் மனதில் ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும். வாக்கு ஸ்தானத்தை ராகுவுடன் சேர்ந்த உச்சம் பெற்ற சனி பத்தாம் பார்வையாக பார்க்கிறார். இதனால் பேச்சில்கடுமை உண்டாகும். நெருங்கிய உறவினர்களிடம் நிதானமாகப் பேசினால் சிரமத்திலிருந்து தப்பிக்கலாம். சந்தோஷ சூழ்நிலையை எதிர்கொள்கிற நேரத்திலும் கூட, அதை முழுமையாக அனுபவிக்க முடியாது. தம்பி, தங்கையின் கருத்துக்களுக்கு உரிய முக்கியத்துவம் தருவது நல்லது. வீடு, வாகனத்தில் வருட முற்பகுதியில் குருவருளால் தேவையான அபிவிருத்தி பணிகளை செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமான வகையில் கிடைக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புத்திரரின் தேவைகளை எவ்வளவு நிறைவேற்றினாலும் அவர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகும். பூர்வ சொத்தில் மிதமான வருமானம் கிடைக்கும். குலதெய்வ ஸ்தானத்தில் ராகு, சனி பகவானின் அமர்வு உள்ளது. இதனால் குலதெய்வ வழிபாட்டுடன் சனி, ராகுவையும் வழிபடுவதால் வாழ்வில் அதிர்ஷ்டகரமான பலன்களை பெறுவீர்கள். எதிரியால் வருகிற தொல்லையை சமாளிக்க புதிய உத்திகளைப் பயன்படுத்துவது அவசியம். உடல்நலம் அதிருப்தி அளிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்க தகுந்த ஓய்வும், தகுந்த மருத்துவ சிகிச்சையும் தேவைப்படும். கடின அலைச்சலைக் குறைத்துக் கொள்வது அவசியம். நிர்ப்பந்தம் தரும் கடன் தொந்தரவைச் சமாளிக்க சொத்தின் பேரில் புதிய பணக்கடன் பெற நேரிடும். தம்பதியர் வருட முற்பகுதியில் ஒருவருக்கொருவர் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். குரு பெயர்ச்சிக்குப்பின் விட்டுக்கொடுத்து நடந்து குடும்பத்தில் அமைதியை நிலைநாட்டுவர். இதனால் வீட்டில் நிம்மதி குடிகொள்ளும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் சீராக நிறைவேறும்.தொழிலிலும் சீரான வளர்ச்சி அமைந்திருக்கும். மூத்த சகோதரர் உங்கள் வாழ்வு சிறக்க துணைநிற்பர்.
தொழிலதிபர்கள்:  தொழிலில் சீர்திருத்தங்களைப் பின்பற்றி உற்பத்தி இலக்கை அடைவீர்கள். நிர்வாகச் செலவு அதிகரித்தாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. திறமைமிகு பணியாளர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் செய்யும் போது, லாபத்தை குறைத்து முடிக்க வேண்டிய கட்டாயச்சூழ்நிலை ஏற்படும். பாக்கியை வசூலிக்க கடும் பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கும்.
வியாபாரிகள்:  வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்வர். சந்தைப்படுத்துவதில் புதிய உத்திகளைக் கடைபிடித்து சீரான வளர்ச்சி காண்பர். கடனை வசூலிப்பதில் மிகவும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். சக வியாபாரிகளின் ஒத்துழைப்பும், ஆலோசனையும் மனதிற்கு நிறைவு தரும். சரக்கு கொள்முதலில் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்பது கூடாது.
பணியாளர்கள்:  அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாக நடைமுறைகளை கவனமுடன் பின்பற்றுவது அவசியம். சில சமயங்களில் அதிகாரிகளின் அடக்குமுறைக்கு ஆளாக நேரிடும். பணியிலக்கை எட்டிப்பிடிக்க கடின முயற்சி தேவைப்படும். சலுகைப்பயன்கள் படிப்படியாகவே கிடைக்கும். சக பணியாளர்களிடம் அவர்களின் குறைபாடுகளை விமர்சனம் செய்யும் விதத்தில் பேசுவது கூடாது.
பெண்கள்:  பணிபுரியும் பெண்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்படுவதால் மட்டுமே பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்ற இயலும். ஓரளவு சலுகை கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். குடும்ப பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளில் சிக்கனத்தைப் பின்பற்றுவர். முக்கிய செலவுகளுக்குச் சேமிப்பு பணம் கைகொடுக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்துவதில் தகுந்த கவனம் செலுத்துவது நல்லது. புதிய ஆர்டர் கிடைத்து ஓரளவு விற்பனை உயரும். வருமானமும் சீராகும்.
மாணவர்கள்:  வருட முற்பகுதியில் படிப்பில் ஞாபகத்திறனுடன் படித்து சிறந்த தேர்ச்சி பெறுவர். பிற்பகுதியில் குருவின் அமர்வால் சிறு தொய்வு ஏற்படும். கவனம். புதிய கல்வியாண்டில் மெத்தன எண்ணங்களை தவிர்த்து அக்கறையுடன் படிப்பது அவசியம். கடின உழைப்பின் மூலமே எதிர்பார்த்த தேர்ச்சி பெற இயலும். சக மாணவர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு சரியாகி நட்பு வளரும். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு சுமாரான சம்பளத்தில் வேலை கிடைக்கும். இதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகள்: எதிரியின் கண்ணில் படாமல் விலகிச் செயல்படுவது நல்லது. தேவையற்ற பண, நேர விரயம் ஏற்படலாம் கவனம். அரசு தொடர்பான முயற்சிகளில் அதிகாரிகளை அனுசரித்து செயல்படுவது அவசியம்.
விவசாயிகள்:  பயிர் விளைவிக்க இடுபொருள் கிடைப்பதில் தாமதநிலை உருவாகும். ஏற்கனவே சேமித்த பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். கால்நடை வளர்ப்பில் வருட முற்பகுதியில் நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் பணப்பிரச்னை அனைத்தும் தீரும்.
பரிகாரப் பாடல்:
உலகளந்த திருமாலின்
வலமார்பில் உறைபவளே!
உலகமெலாம் காத்து நிற்கும்
தேவி மகாலட்சுமியே!
உலகெங்கும் ஆட்சி செய்யும்
அஷ்டலட்சுமித்தாயே!
செல்வ வளம் தந்து
எனை ஆதரிக்க வேணும் அம்மா!

ஜனவரி: குருவின் வக்ரத்தால் நன்மை மேலோங்கும். புதனாலும் அனுகூலமே. ஆனால், மற்ற கிரகங்களால் சுமாரான பலனே கிடைக்கும். லாப ஸ்தானத்தில் நிற்கும் கேது பணபிரச்னையைக் குறைப்பார். வாகன பயணத்தில் கவனம் தேவை.
பிப்ரவரி: விரய ஸ்தான குரு சுபவிரயத்தை ஏற்படுத்துவார். திருத்தல யாத்திரை சென்று வர வாய்ப்புண்டு. சிலர் வீடு கட்டும் யோகமும் உண்டாகும். உடல்நிலையில் அவ்வப்போது தொந்தரவு ஏற்பட்டு விலகும். விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
மார்ச்: மாத பிற்பகுதியில் சூரியன் 10ல் வருவது சிறப்பானதாகும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். கடின அலைச்சலைத் தவிர்க்க முடியாது. சிலர் நோய்நொடியால் அவதிப்படுவர். கேதுவால் கையில் பணம் புரளும்.
ஏப்ரல்: பத்தாமிட புதனால் சிறப்பான பலன் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன், செவ்வாய், கேது, சூரியன் சஞ்சரிக்கும் இந்த காலகட்டம் நன்மையை வாரி வழங்கும். வெளிநாட்டுப் பயணத்தால் யோகம் உண்டாகும். தொழில் முயற்சி வெற்றி பெறும்.
மே: பழைய கடன்பாக்கி வசூலாகும். சுபவிஷயம் சிறப்பாக நடந்தேறும். கடன்தொல்லையும் அகலும். கையிருப்பு அதிகரிப்பதால் மனதில் மகிழ்ச்சி கூடும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் விலகுவர். ஆடை, ஆபரணச் சேர்க்கையும் உண்டு.
ஜூன்: விரைய ஸ்தான செவ்வாய், சூரியனால் எதிர்பாராத செலவு ஏற்படும். வாகன திருட்டு உண்டாக வாய்ப்புண்டு. மருத்துவச் செலவு அதிகரிக்கும். தொழிலில் திடீர் பிரச்னை உருவாகும். எதிர்நீச்சல் போட்டால் மட்டும் வாழ்க்கை சீராகும்.
ஜூலை: ஜென்ம குருவாக இருப்பதால் விழிப்புடன் இருப்பது நல்லது. உடல்நிலை அதிருப்தி அளிக்கும். வாகனப்பயணத்தில் நிதானம் தேவை. மனதில் கவலையும் உருவாகும். உறவினர், நண்பர்களால் தொல்லை ஏற்படும். செலவும்  அதிகமாகும்.
ஆகஸ்ட்: கவலை மனதில் அதிகமாகலாம். இருந்தாலும், கேது, சுக்கிரன், புதன் போன்ற கிரகங்களின் உதவியால் ஓரளவு வாழ்வில் போராடி ஜெயிக்கும் மனப்பான்மை உருவாகும். 3ல் ஆட்சி பெறும் சூரியனால் துன்பம் படிப்படியாக விலகும்.
செப்டம்பர்: சுக்கிரன், புதன், கேது போன்ற கிரகங்களால் நன்மை தொடரும். ராசிநாதன் உச்சமாக இருப்பதால் புதிதாக வாகனம், சொத்து வாங்கும் யோகம் உண்டு. படித்து முடித்து வேலை தேடுவோருக்கு வெளியூர், வெளிநாட்டில் பணி கிடைக்கும்.
அக்டோபர்: செவ்வாய் 3ல் சஞ்சரிக்கும் இக்காலம் நற்பலனை வாரிவழங்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். நிலப்பிரச்னையில் சுமூகமான தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். சாதகமான தீர்ப்பு வரும். கையில் பணப்புழக்கம் அதிகிரிக்கும்.
நவம்பர்: குரு வக்ரமாக இருப்பதால் எதிர்மறை பலன் உண்டாகும். பணம்,நகை, விலையுயர்ந்த பொருள்களைப் பாதுகாப் பதில் அதிக கவனம் தேவை. மருத்துவச் செலவும் ஏற்படலாம். வாகனப்பயணத்திலும் மிதமான வேகம் காட்டுவது நல்லது.
டிசம்பர்: வாழ்வில் பிரச்னை பல தென்பட்டாலும் வருமானத்திற்குக் குறைவிருக்காது. குடும்பத்தேவை அனைத்தும் சீராக நிறைவேறும். மனதில் தைரியம் அதிகரிக்கும். தொழில் போட்டியைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்தலையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முய உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்ற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>

2013- புத்தாண்டு ரிஷப ராசி பலன்கள் . ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
மற்றவர்களை கவரும் ரிஷப ராசி அன்பர்களே 

புத்தாண்டில் பிரதான கிரகங்களில் சனி, ராகு ஆறாம் இடத்தில் வருடம் முழுவதும் அமர்ந்து தாராள நற்பலன்களை வாரி வழங்குகின்றனர். மே 28ல் ராசியில் உள்ள குரு இரண்டாம் இடமான மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். பெயர்ச்சிக்குப் பின், குருவும் அனுகூல பலன்களைத் தருவார். மனதில் புத்துணர்ச்சியும், செயலில் மேன்மையும் பெற்றுத் திகழ்வீர்கள். இதனால் துவங்குகிற பணிகள் எளிதாக நிறைவேறி எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரும். குருபகவானின் அமர்வால் ஆண்டின் முற்பகுதியில் மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறுவதால் அவமானம் அடைய நேரிடும். மே 28க்குப் பின் வாழ்வில் வளர்ச்சி மேலோங்கும். தம்பி, தங்கையரின் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் தேவையான மராமத்துப் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. இளவயதினருக்கு திருமணம் நல்லபடியாக நடக்கும்.தாயின் தேவைகளை தாராள செலவில் செய்து கொடுப்பீர்கள். புத்திரர்கள் வருட முற்பகுதியில் படிப்பு, வேலைவாய்ப்பில் நல்லமுன்னேற்றம் காண்பர். பிற்பகுதியில் படிப்பு தடுமாறும். ஆடம்பர விஷயங்களில் ஆர்வம் கொள்வர். தக்க வழிகாட்டி அவர்களை நல்வழிப்படுத்துங்கள். எதிரிகள் உங்களுக்கு செய்கிற கெடுதல் முயற்சி பலமிழந்து போகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.  தொழிலில் வருமானம் அதிகரிப்பதால் பழைய கடனைச் செலுத்துவீர்கள். எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டகரமாக வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பயன்படுத்தி வளர்ச்சி காண்பீர்கள். நீதிமன்ற வழக்கு விவகாரங்களில் நல்ல தீர்வு உண்டாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பர். உறவினர் வருகையால் கலகலப்பு ஏற்படும். குடும்பத்தேவை அனைத்தும் நிறைவேறும். வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். நண்பர்கள் உதவுவதும் உதவி பெறுவதுமான சூழ்நிலை அமையும். ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்தை உச்சம் பெற்ற சனிபகவான், நண்பரான ராகுவின் சேர்க்கையுடன் மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். இதனால் ஆரோக்கியம் நிலைத்திருக்கும். விபத்து கண்டம் ஏதும் அணுகாத சுமூக வாழ்வியல் நடைமுறை இருக்கும். அன்றாட வாழ்வில் சுக சவுகர்யமும், தாராள பணவசதியும் அமைந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.மூத்த சகோதரர்களின் ஆலோசனையைப் பின்பற்றி வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் சார்ந்த வகையில் நல்ல வளர்ச்சியும் உபரி வருமானமும் கிடைக்கும். வருட முற்பகுதியில் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவீர்கள்.
தொழிலதிபர்கள்: புதிய ஒப்பந்தம் கிடைத்து உற்பத்தியில் முன்னேற்றம் காண்பர். பங்குதாரர்களின் ஆதரவு சீராக அமைந்திருக்கும். திறமைமிகு பணியாளர்கள் கிடைக்கப்பெறுவர். அவர்களின் ஒத்துழைப்பினால் பொருட்களின் தரம் சிறந்து நற்பெயரை பெற்றுத்தரும். திட்டமிட்டுச் செயல்பட்டு நிர்வாகச் செலவைப் பெருமளவு கட்டுப்படுத்துவர். தொழில்ரீதியான வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் ஆதாயம் கூடும். தொழிலை விரிவுபடுத்தும் திட்டம் நிறைவேறும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் வேலையைத் திறம்பட நிறைவேற்றுவர். எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக பணியாளர்களிடம் சீரான நட்புறவு இருக்கும். தனியார் துறை பணியாளர்கள் ஓவர்டைம், அதிக சம்பளம் கிடைத்து குடும்பத்தேவைகளை மனமுவந்து நிறைவேற்றுவர்.
வியாபாரிகள்: தரம் நிறைந்த பொருட்களை கொள்முதல் செய்து சந்தையில் கூடுதல் வரவேற்பு பெறுவர். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பினால் விற்பனையில் இலக்கு அதிகரிக்கும். உபரி பணவரவு கிடைக்கும். மூலதன தேவைகளுக்கு உரிய நிதிக்கடன் பெற்று அபிவிருத்தி பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். சரக்கு வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் உத்வேகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை திறம்பட நிறைவேற்றுவர். தாமதமான சலுகைகள் எளிதாக கிடைக்கும். குடும்பப் பெண்கள் ஆரோக்கிய உடல்நலம் அமைந்து அன்றாட பணிகளை நல்லவிதமாக நிறைவேற்றுவர். கணவரின் அன்பும், சீரான பணவசதியும் கிடைத்து சந்தோஷமாக இருப்பீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள், போட்டியாளர்களின் நிர்ப்பந்தம் குறைந்து ரிலாக்ஸ் ஆக தொழில் செய்வர். உற்பத்தி, விற்பனை சீராகி உபரி பணவரவைத்தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. திருமணமாகாதவர்களுக்கு மே 28க்குப் பின், நல்ல மாப்பிள்ளை அமைவார்.
மாணவர்கள்: படிப்பு செலவுக்கான பணவசதி பெறுவதில் இருந்த சிரமம் குறையும். தகுந்த பயிற்சியினால் ஞாபகத்திறன் வளரும். தரத்தேர்ச்சி அடைந்து ஆசிரியர், பெற்றோரிடம் பாராட்டு பெறுவீர்கள். சக மாணவர்களின் நட்பு நல்லவிதமாக அமைந்து மனதிற்கு ஊக்கம் தரும். வேலைவாய்ப்புக்கு முயற்சிப்பவர்களுக்கு கவுரவமான பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: எதிர்ப்பு விலகி பெற விரும்பிய பதவி, பொறுப்பு எளிதில் கிடைக்கப்பெறுவர். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். ஆதரவாளர்களிடம் பெற்றுள்ள நன்மதிப்பு உயரும்.
விவசாயிகள்: இடுபொருட்கள் தாமதமின்றி கிடைக்கும். கடின உழைப்பினால் மகசூல் அளவு அதிகரிக்கும். விளைபொருட்களுக்கு சந்தையில் நல்லவிலை கிடைக்கும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.
பரிகாரப் பாடல்:
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்க முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
ஜனவரி: ராகுசனி 6ல் இருப்பதால் நற்பலன் கூடும். வருமானம் நாலாவழிகளில் வந்து சேரும். சேமித்து மகிழ்வீர்கள். எதிரிபயம் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு.
பிப்ரவரி: குரு வக்ரம் பெறுவதால் உடல்நலனில் அவ்வப்போது தொந்தரவு ஏற்படும். 10ல் இருக்கும் செவ்வாயால் தொழிலில் பிரச்னை உருவாகும். மாதபிற்பகுதியில் சூரியன்
சஞ்சாரத்தால் தொழிலில் பிரச்னை நீங்கி அனுகூலம் அதிகரிக்கும்.
மார்ச்: புதன், சூரியன், சனி,ராகு நான்கும் நற்பலன் தரும்விதத்தில் இருக்கின்றனர். தொழிலில் அமோக வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர், வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு சந்தோஷ அனுபவம் பெறுவர்.
ஏப்ரல்: விவசாயப்பணி சிறக்கும். சிலருக்கு புதிதாக நிலம் வாங்கும் யோகமும் உண்டு. வங்கிக்கடன் மூலம் தொழில் தொடங்க அல்லது விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும்.  சூரியனின் சஞ்சாரத்தால் விரயம் ஏற்படவும் இடமுண்டு.
மே: சனி, ராகு இரண்டைத் தவிர வேறு யாரும் நன்மை அளிப்பதற்கில்லை. உடல்நிலையில் அதிருப்தி உண்டாகும். சிலருக்கு பணிச்சுமை ஏற்படும். உறவினர்களாலும் தொல்லை உருவாகும். வாகனப்பயணத்தில் நிதானம் அவசியம்.
ஜூன்: குரு பலத்தால் திருமணயோகம் உண்டாகும். சனி, ராகுவின் 6ம் இடசஞ்சாரமும் விசேஷமே. படித்து முடித்து வேலை தேடுபவர்கள் புதிய பணிவாய்ப்பைப் பெறுவர். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத  வருமானம் கிடைக்கும்.
ஜூலை: வருஷக் கிரகங்களால் நன்மையே. தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். சுபசெய்திகள் வந்து சேரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. புதிதாக நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும்.
ஆகஸ்ட்: செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, ராகு, குரு ஆகிய அனைவராலும் நன்மையே உண்டாகும். சொத்து சேர்க்கையால் மனம் மகிழ்வீர்கள். புதிதாக வீடு கட்டும் யோகம் வந்து சேரும். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
செப்டம்பர்: உடல்நிலையில் அவ்வப்போது பிரச்னை தென்படும். பலவழிகளிலும் வருமானம் வந்து சேரும். கடன்சுமை குறையும். குடும்பத்தில் திருமணம், மழலைப்பேறு போன்ற சுபநிகழ்ச்சி நடந்தேறும். பெண்களால் பிரச்னை உண்டாக இடமுண்டு.
அக்டோபர்: சூரியனின் 6ம் இட சஞ்சாரம் வெற்றியை வாரி வழங்கும். வியாதி, கடன்தொல்லை நீங்கும். தொழிலில் நல்ல பணியாட்கள் வலிய வந்து சேருவர். செய்தொழிலில் மேன்மையும்,வளர்ச்சியும் கண்டு பெருமிதம் காண்பீர்கள்.
நவம்பர்:  குருவின் வக்ரத்தால் நன்மை குறையும். உடல்நிலையில் பிரச்னை உருவாகும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். தொழிலில் திடீர் பிரச்னையைச் சந்திக்க நேரிடும். பொருள் திருட்டு போகலாம்.அரசு விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும்.
டிசம்பர்: வக்ர குருவால் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். எட்டாமிடச் சுக்கிரனால் ஓரளவு பிரச்னை கட்டுப்படும். உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவைப்படும். பயணத்திலும் பாதுகாப்பு முக்கியம். பணியிடங்களில் பிரச்னை வரலாம், பொறுமை தேவை.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்தலையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முய உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்ற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>

2013- புத்தாண்டு மேஷ ராசி பலன்கள். ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
முருக பெருமானின் அம்சத்தை கொண்ட மேஷ ராசி அன்பர்களே 

புத்தாண்டில் கேது உங்கள் ராசியிலும் சனி, ராகு ஏழாம் இடத்திலும் உள்ளனர். இந்த அமர்வு சிரமமான பலன்களைத் தந்தாலும் மேற்கண்ட கிரகங்களின் பார்வை படுகின்ற ஸ்தானங்களின் வழியாக நன்மைகளைப் பெறுவீர்கள். குரு இரண்டாம் இடத்தில் இருப்பது நன்மையை வழங்கும். மே 28ல் மூன்றாம் இடமான மிதுனராசிக்கு பெயர்ச்சியாவது சிறப்பானதல்ல. ஜனவரி முதல் மே மாதம் வரையில் உங்கள் வாழ்வில் பொன்னான காலம்தான். ஆண்டின் பிற்பகுதியில், எந்த செயலிலும் முன்யோசனையோடு ஈடுபடுவது நன்மைக்கு வழிவகுக்கும். பேச்சில் ஆன்மிகம் மேலோங்கும். அடுத்தவர் நலனில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். தம்பி, தங்கை தங்களது உழைப்பினால் பொருளாதாரநிலையில் நல்ல முன்னேற்றம் அடைவர். உங்களின் ஆலோசனையை பின்பற்றி வாழ்வில் முன்னேற்றம்காண்பர். வீடு, வாகன ஸ்தானம் ஆகிய நான்காம் இடத்தில் ராகுவுடன் சேர்ந்த சனிபகவானின் பத்தாம் பார்வை பதிகிறது. இதனால் சிலர் வசிக்கும் வீட்டில் வசதிக்குறைவை எதிர்கொள்ள நேரிடும். அவரவர் ராசிக்கு உகந்த திசைப்பொருத்தம் உள்ள வீடுகளில் குடிபுகுவதால் நன்மை கிடைக்கும். வாகனத்தில் தகுந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட தூர பயணங்களில் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவது அவசியம். புத்திரர் மனதில் ஆடம்பர ஆசைகளை வளர்த்துக்கொண்டு பிடிவாத குணத்துடன் நடந்துகொள்வர். அவர்களை பக்குவமாக வழிநடத்துவதால் சிரமம் வராமல் தவிர்க்கலாம். பூர்வ சொத்துக்களில் மராமத்துப்பணிகளை நிறைவேற்று வீர்கள். அதில் நம்பகமானவர்களை மட்டும் குடியமர்த்துவது நல்லது. ஆரோக்கியம் ஆண்டின் முற்பகுதியில் சிறப்பாகவும், பிற்பகுதியில் மருத்துவ சிகிச்சை பெறுகிற வகையிலும் இருக்கும். தம்பதியர் தமக்குள்ள கருத்துவேறுபாடுகளை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. இருப்பினும் குரு பெயர்ச்சிக்குப்பின், அதன் ஐந்தாம் பார்வை பலத்தால் கணவர் மனைவியிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும். குருபெயர்ச்சி வரையிலும் பேச்சில் நிதானம் தேவைப்படும். பிதா, பாக்ய ஸ்தானத்தில் சனி, ராகுவின் மூன்றாம் பார்வை பதிகிறது. இதனால் தந்தைவழி உறவினர்களிடம் சண்டை சச்சரவில் ஈடுபட வாய்ப்புண்டு. தகுதி குறைந்தவர்களிடம் சகவாசம் கொள்கிற சூழ்நிலையும் அதனால் அவப்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு கவனம். தொழில் வளர்ச்சிபெற விடாமுயற்சியும் கடின உழைப்பும் தேவைப்படும். வருமானம் சீரான அளவில் இருக்கும்.
தொழிலதிபர்கள்: உற்பத்தி, தரம் உயர்த்த புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பக்கருவிகள் வாங்குவதற்கான வங்கிக் கடனுதவி கிடைக்கும். உற்பத்தி உயர்வதோடு புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். சிலருக்கு தொழில் கூட்டமைப்பில் புதிய பதவி கிடைக்கும். அனுபவம் இல்லாத புதிய தொழிலில் கூட்டுசேரும் முயற்சியை தவிர்ப்பது நல்லது. தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொள்வர்.
வியாபாரிகள்:  போட்டிகளை சமாளிக்கும் விதத்தில், விற்பனையில் புதிய நடைமுறையைப் பின்பற்றுவீர்கள். கடின உழைப்பினால் வியாபாரம் சுமாரான அளவை எட்டும். கூடுமான வரை ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம். பணத்தேவை அதிகரிக்கும். சரக்கு இருப்பு வைக்கும் இடங்களில் உரிய பாதுகாப்பைப் பின்பற்றுவது நல்லது. வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு ஆறுதல் அளிக்கும். சரக்கு வாகன பராமரிப்புச் செலவு கூடும். 
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்குரிய பணியின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது அவசியம். இதனால் பணியில் குளறுபடி வராமல் தவிர்த்து நற்பெயரை பாதுகாக்கலாம். குடும்பச் செலவில் சிக்கனத்தைப் பின்பற்றுவது நல்லது. அனுபவசாலிகளின் வழிகாட்டுதலைக் கேட்டுப் பின்பற்றுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்கள்:  பணிபுரியும் பெண்கள் திட்டமிட்டுச் செயல்படுவதால் மட்டுமே பணி இலக்கு நிறைவேறும். சலுகைப்பயன் ஓரளவு கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்பசெலவைக் குறைத்துக் கொள்வது அவசியம். விட்டுக்கொடுத்து செல்வதால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் அதிக உழைப்பினால் உற்பத்தி, விற்பனையில் சீரான வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த வங்கி கடனுதவி கிடைக்கும்.
மாணவர்கள்:  வெளிவட்டார பழக்கவழக்கத்தை தவிர்த்து படிப்பில் கவனம் கொள்வதால் மட்டுமே தேர்ச்சி விகிதம் சீராகும். படிப்புச் செலவுக்கான பணம் சீராகக் கிடைக்கும். நண்பர்களுடன் பொழுது போக்கு, ஆடம்பர விஷயங்களில் ஈடுபடுவது நல்லதல்ல. படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிர்ஷ்டகரமான வகையில் கிடைக்க வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகள்:  சமூகத்தில் பெற்ற நற்பெயரைப் பாதுகாத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவீர்கள். ஆண்டின் முற்பகுதியில், மக்கள் நலப்பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தொண்டர்களின் கருத்துக்களை கனிவுடன் கேட்டு நடப்பதால் மட்டுமே ஒற்றுமை நிலைக்கும். 
விவசாயிகள்:  அதிக வருமானம் தருகிற பணப்பயிர்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடின உழைப்பு தேவைப்படும். விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கும் ஓரளவு வருமானம் இருக்கும்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் தடையனைத்தும் நீங்கி நன்மை பெருகும்.
பரிகாரப் பாடல்:
உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத்து உணர்வூறி
இன்ப ரசத்தே பருகி பலகாலும்
என்றனுயிர்க்கு ஆதரவுற் றருள்வாயே
தம்பி தனக்காக வனத் தணைவோனே
தந்தை வலத் தாலருள் கைக்கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
ஐந்து கரத்து யானைமுகப் பெருமானே.
மாதவாரியாக பலன்கள்:
ஜனவரி: ராசிநாதன் 10ல் உச்சம் பெறுகிறார். 2ல் ராகு, குரு, 8ல் சுக்கிரன் சஞ்சரிக்கின்றனர். உத்தியோகத்தில் நன்மை உண்டாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல பணி கிடைக்கும். சிலருக்கு வாகனயோகமும் உண்டு. 
பிப்ரவரி: சூரியன், செவ்வாய், புதன், குரு நான்கு கிரகங்களும் சுபபலனை வழங்க காத்திருக்கின்றனர். வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வேலைவாய்ப்பில் வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சலுகைப்பயன் படிப்படியாகக் கிடைக்கும். சேமிப்பு  உயரும்.
மார்ச்: 11ல் கிரகங்கள் சஞ்சரிப்பதால் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். அமோக லாபம் வரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். இந்த மாதம் சனிவக்ரமாவதும் நன்மை அளிக்கும். வீண்செலவு ஏற்படும். வாகன பயணத்தில்  மித வேகம் நல்லது.
ஏப்ரல்: 7ல் இருக்கும் சனியின் பார்வை ராசி மீது படுவதாலும், ஜென்மத்தில் இருக்கும் சூரியனாலும் உடல்கோளாறு ஏற்படலாம் கவனம்.  பயணத்தில் கவனம் அவசியம். ஜென்மத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை உண்டாகும்.
மே: குருவின் மூன்றாம் இடப்பெயர்ச்சி சோதனையை உண்டாக்கும்.  மாத கிரகங்களும் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இதனால் மனம், உடல்நிலையில் சிரமங்களை அனுபவிப்பீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்படலாம்.
ஜூன்: யாரிடமும் வாக்குவாதம் செய்வது கூடாது. பணப்பற்றாக்குறை ஏற்படலாம். மருத்துவச் செலவு நாளுக்குநாள் அதிகரிக்கும். கணவன், மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நன்மை அளிக்கும். சுபநிகழ்ச்சி நடத்துவதில் தடை ஏற்படலாம்.
ஜூலை: மூன்றாமிட செவ்வாயால் நற்பலன் கூடுதலாகும். புதன், சுக்கிரனின் சஞ்சாரமும் சூப்பர். புதிய மனை வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகம் வருவதால் கையிருப்பு கூடும். வெளியூர் பயணத்தால் சந்தோஷம் உண்டாகும்.
ஆகஸ்ட்: செவ்வாயின் சஞ்சாரத்தால் நற்பலன் அதிகரிக்கும். உடல்நிலை திருப்தி தரும். வங்கிக்கடன் பெற்று தொழிலை மேம்படுத்துவீர்கள். வாழ்வில் சோதனை அதிகரிக்கும். உடல்நிலையும் அவ்வப்போது சில தொந்தரவுகள் ஏற்பட்டு விலகும்.
செப்டம்பர்: பணப்பிரச்னை தீரும். பழைய கடன்தொல்லை அகலும். நோய்நொடி விலகி உடலில் புத்துணர்ச்சி தென்படும். சட்டரீதியான சிரமங்களும் சிலருக்கு ஏற்பட இடமுண்டு. வெளிநாடு, வெளியூர் சென்று வர வாய்ப்புண்டாகும்.
அக்டோபர்: நண்பர்களால் பிரச்னை உருவாகலாம். வாகன பயணத்தில் எச்சரிக்கை தேவைப்படும். சிலருக்கு வாகனதிருட்டும் ஏற்படலாம் கவனம். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை உண்டாகும். பெற்றோர் உடல்நலனிலும் அக்கறை அவசியம்.
நவம்பர்:  குருவின் வக்ரத்தால் சுபநிகழ்ச்சி விரும்பியபடி நிறைவேறும். தாமதித்த பணிகள் மளமளவென நடந்தேறும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. சொத்துபிரச்னை தீரும். செவ்வாயின் 6ம் இட மாற்றமும் அனுகூலம் தரும்.
டிசம்பர்: வெற்றி மேல் வெற்றி வரும். எதிரிகளின் பலம் குறையும். தடைபட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிலருக்கு பணியிலும் பிரச்னை தென்படும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்தலையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முய உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்ற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.



Continue reading >>

குழந்தைக்கு படிப்பில் ஞாபக சக்தி வளர ஆன்மீக ரீதியான வழி இருக்கிறதா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
படி! படி! என்று அவர்களை எப்போதும் தொந்தரவு செய்யாமல் இருங்கள். சுயமாக யோசிக்கப் பழக்குங்கள். விளையாட்டாகப் பேசும் வழக்கிலேயே பாடங்களை நினைவுபடுத்திக் கொண்டிருங்கள். பிறரோடு ஒப்பிட்டுப் பேசுவதைக் கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். அதுவே போதும். அவர்களது தன்னம்பிக்கை வளர்வதற்கு! தினமும் உதய வேளையில் சூரியனைப் பார்த்தவாறு,புத்தி வர்த்தக தேவேச திவாகர நமோஸ்துதே என்ற மந்திரத்தை 12 முறை சொல்லச் சொல்லுங்கள். ஒவ்வொரு முறை சொல்லி முடித்ததும், சூரியனை நமஸ்காரம் செய்யச் சொல்லுங்கள்.
 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்தலையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முய உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்ற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
 
Continue reading >>

குழந்தை பாக்கியம் தரும் நியூமரலாஜி பெயர் எண்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
பெயரின் கூட்டு எண் 46 ஆக வருபவர்களுக்கு 

பழைய மந்திர நூல்களில் கிரீடத்தை அணிந்த தலைவன் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது பெரும் பண வரவும் உயர்ந்த பதவிகளையும் இந்த எண் தரும். மக்கள் செல்வங்களோடு கூடிய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இந்த எண் வழி காட்டும். வண்டி வாகன சம்பந்தமான பாக்கியங்களை இந்த எண வழங்கும் பூமியால் லாபங்களை அள்ளி வழங்கும் பாக்கியம் இந்த எண்ணிற்கு உண்டு. இந்த 4 என்ற ராகுவும் 6 என்ற சுகரனும் இணைந்த 46 ம் எண் கன்னி ராசியில் வரும் எண்ணாகும் . 
இங்கே மகாபாரதத்தை நினைவு கூற வேண்டும் கன்னியாக இருந்த குந்தியானவள் சூரியனுடைய மந்திரத்தை ஜெபிக்க சூரிய பகவான் குந்தி தேவிக்கு சந்ததியை கொடுத்ததை நினைவில் கொள்ள வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த எண்ணில்  பெயரை அமைத்து கொண்டு அவர்கள் ஜாதகத்தில் பூர்வ ஜென்ம புண்யமும் இருந்து இறை வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் ராகுவும் சுகரனும் இணைந்து 46 வருவதால் ஞானமும் செல்வமும் பதவியும் அந்தஸ்தும் அரசாலும் யோகமும் புத்திசாலித்தனம் ஆகியவைகள் கூடி கொண்டே போகும். அரசியல் வாழ்க்கையில் மிகவும் பிரகாசமான எதிர்காலம் உண்டு. இந்த 46 எண ஒரு நபரின் பெயரின் நியூமராலஜி எண்ணாக  வருவதை விட ஒரு நபரின் பெயரின் பிரமிடு எண்ணாக வருமானால் அதிர்ஷ்டத்தால் அனுபவிக்க கூடிய லாபங்கள் இரண்டு மடங்காகும்.  பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு எண் , பிறந்த தேதியின் சூட்சும எண  9 18 27 ஆக வருபவர்கள் இந்த 46 ம் எண்ணில் பெயரை வைத்து கொண்டால் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் அனுபவிக்க நேரிடும். ஆதலால் உங்கள் பிறந்த தேதிக்கு தகுந்தாற்போல் உங்களின் பெயரை அதிர்ஷ்டமான முறையில் அமைத்தும் அதிர்ஷ்டமான முறையில் உங்களின் பெயரை திருத்தும் செய்தும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்தலையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முய உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்ற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>

சமீபத்திய கருத்துகள்