Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 31 டிசம்பர், 2012

2013- புத்தாண்டு மேஷ ராசி பலன்கள். ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
முருக பெருமானின் அம்சத்தை கொண்ட மேஷ ராசி அன்பர்களே 

புத்தாண்டில் கேது உங்கள் ராசியிலும் சனி, ராகு ஏழாம் இடத்திலும் உள்ளனர். இந்த அமர்வு சிரமமான பலன்களைத் தந்தாலும் மேற்கண்ட கிரகங்களின் பார்வை படுகின்ற ஸ்தானங்களின் வழியாக நன்மைகளைப் பெறுவீர்கள். குரு இரண்டாம் இடத்தில் இருப்பது நன்மையை வழங்கும். மே 28ல் மூன்றாம் இடமான மிதுனராசிக்கு பெயர்ச்சியாவது சிறப்பானதல்ல. ஜனவரி முதல் மே மாதம் வரையில் உங்கள் வாழ்வில் பொன்னான காலம்தான். ஆண்டின் பிற்பகுதியில், எந்த செயலிலும் முன்யோசனையோடு ஈடுபடுவது நன்மைக்கு வழிவகுக்கும். பேச்சில் ஆன்மிகம் மேலோங்கும். அடுத்தவர் நலனில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். தம்பி, தங்கை தங்களது உழைப்பினால் பொருளாதாரநிலையில் நல்ல முன்னேற்றம் அடைவர். உங்களின் ஆலோசனையை பின்பற்றி வாழ்வில் முன்னேற்றம்காண்பர். வீடு, வாகன ஸ்தானம் ஆகிய நான்காம் இடத்தில் ராகுவுடன் சேர்ந்த சனிபகவானின் பத்தாம் பார்வை பதிகிறது. இதனால் சிலர் வசிக்கும் வீட்டில் வசதிக்குறைவை எதிர்கொள்ள நேரிடும். அவரவர் ராசிக்கு உகந்த திசைப்பொருத்தம் உள்ள வீடுகளில் குடிபுகுவதால் நன்மை கிடைக்கும். வாகனத்தில் தகுந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட தூர பயணங்களில் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவது அவசியம். புத்திரர் மனதில் ஆடம்பர ஆசைகளை வளர்த்துக்கொண்டு பிடிவாத குணத்துடன் நடந்துகொள்வர். அவர்களை பக்குவமாக வழிநடத்துவதால் சிரமம் வராமல் தவிர்க்கலாம். பூர்வ சொத்துக்களில் மராமத்துப்பணிகளை நிறைவேற்று வீர்கள். அதில் நம்பகமானவர்களை மட்டும் குடியமர்த்துவது நல்லது. ஆரோக்கியம் ஆண்டின் முற்பகுதியில் சிறப்பாகவும், பிற்பகுதியில் மருத்துவ சிகிச்சை பெறுகிற வகையிலும் இருக்கும். தம்பதியர் தமக்குள்ள கருத்துவேறுபாடுகளை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. இருப்பினும் குரு பெயர்ச்சிக்குப்பின், அதன் ஐந்தாம் பார்வை பலத்தால் கணவர் மனைவியிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும். குருபெயர்ச்சி வரையிலும் பேச்சில் நிதானம் தேவைப்படும். பிதா, பாக்ய ஸ்தானத்தில் சனி, ராகுவின் மூன்றாம் பார்வை பதிகிறது. இதனால் தந்தைவழி உறவினர்களிடம் சண்டை சச்சரவில் ஈடுபட வாய்ப்புண்டு. தகுதி குறைந்தவர்களிடம் சகவாசம் கொள்கிற சூழ்நிலையும் அதனால் அவப்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு கவனம். தொழில் வளர்ச்சிபெற விடாமுயற்சியும் கடின உழைப்பும் தேவைப்படும். வருமானம் சீரான அளவில் இருக்கும்.
தொழிலதிபர்கள்: உற்பத்தி, தரம் உயர்த்த புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பக்கருவிகள் வாங்குவதற்கான வங்கிக் கடனுதவி கிடைக்கும். உற்பத்தி உயர்வதோடு புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். சிலருக்கு தொழில் கூட்டமைப்பில் புதிய பதவி கிடைக்கும். அனுபவம் இல்லாத புதிய தொழிலில் கூட்டுசேரும் முயற்சியை தவிர்ப்பது நல்லது. தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொள்வர்.
வியாபாரிகள்:  போட்டிகளை சமாளிக்கும் விதத்தில், விற்பனையில் புதிய நடைமுறையைப் பின்பற்றுவீர்கள். கடின உழைப்பினால் வியாபாரம் சுமாரான அளவை எட்டும். கூடுமான வரை ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம். பணத்தேவை அதிகரிக்கும். சரக்கு இருப்பு வைக்கும் இடங்களில் உரிய பாதுகாப்பைப் பின்பற்றுவது நல்லது. வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு ஆறுதல் அளிக்கும். சரக்கு வாகன பராமரிப்புச் செலவு கூடும். 
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்குரிய பணியின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது அவசியம். இதனால் பணியில் குளறுபடி வராமல் தவிர்த்து நற்பெயரை பாதுகாக்கலாம். குடும்பச் செலவில் சிக்கனத்தைப் பின்பற்றுவது நல்லது. அனுபவசாலிகளின் வழிகாட்டுதலைக் கேட்டுப் பின்பற்றுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்கள்:  பணிபுரியும் பெண்கள் திட்டமிட்டுச் செயல்படுவதால் மட்டுமே பணி இலக்கு நிறைவேறும். சலுகைப்பயன் ஓரளவு கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்பசெலவைக் குறைத்துக் கொள்வது அவசியம். விட்டுக்கொடுத்து செல்வதால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் அதிக உழைப்பினால் உற்பத்தி, விற்பனையில் சீரான வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த வங்கி கடனுதவி கிடைக்கும்.
மாணவர்கள்:  வெளிவட்டார பழக்கவழக்கத்தை தவிர்த்து படிப்பில் கவனம் கொள்வதால் மட்டுமே தேர்ச்சி விகிதம் சீராகும். படிப்புச் செலவுக்கான பணம் சீராகக் கிடைக்கும். நண்பர்களுடன் பொழுது போக்கு, ஆடம்பர விஷயங்களில் ஈடுபடுவது நல்லதல்ல. படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிர்ஷ்டகரமான வகையில் கிடைக்க வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகள்:  சமூகத்தில் பெற்ற நற்பெயரைப் பாதுகாத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவீர்கள். ஆண்டின் முற்பகுதியில், மக்கள் நலப்பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தொண்டர்களின் கருத்துக்களை கனிவுடன் கேட்டு நடப்பதால் மட்டுமே ஒற்றுமை நிலைக்கும். 
விவசாயிகள்:  அதிக வருமானம் தருகிற பணப்பயிர்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடின உழைப்பு தேவைப்படும். விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கும் ஓரளவு வருமானம் இருக்கும்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் தடையனைத்தும் நீங்கி நன்மை பெருகும்.
பரிகாரப் பாடல்:
உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத்து உணர்வூறி
இன்ப ரசத்தே பருகி பலகாலும்
என்றனுயிர்க்கு ஆதரவுற் றருள்வாயே
தம்பி தனக்காக வனத் தணைவோனே
தந்தை வலத் தாலருள் கைக்கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
ஐந்து கரத்து யானைமுகப் பெருமானே.
மாதவாரியாக பலன்கள்:
ஜனவரி: ராசிநாதன் 10ல் உச்சம் பெறுகிறார். 2ல் ராகு, குரு, 8ல் சுக்கிரன் சஞ்சரிக்கின்றனர். உத்தியோகத்தில் நன்மை உண்டாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல பணி கிடைக்கும். சிலருக்கு வாகனயோகமும் உண்டு. 
பிப்ரவரி: சூரியன், செவ்வாய், புதன், குரு நான்கு கிரகங்களும் சுபபலனை வழங்க காத்திருக்கின்றனர். வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வேலைவாய்ப்பில் வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சலுகைப்பயன் படிப்படியாகக் கிடைக்கும். சேமிப்பு  உயரும்.
மார்ச்: 11ல் கிரகங்கள் சஞ்சரிப்பதால் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். அமோக லாபம் வரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். இந்த மாதம் சனிவக்ரமாவதும் நன்மை அளிக்கும். வீண்செலவு ஏற்படும். வாகன பயணத்தில்  மித வேகம் நல்லது.
ஏப்ரல்: 7ல் இருக்கும் சனியின் பார்வை ராசி மீது படுவதாலும், ஜென்மத்தில் இருக்கும் சூரியனாலும் உடல்கோளாறு ஏற்படலாம் கவனம்.  பயணத்தில் கவனம் அவசியம். ஜென்மத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை உண்டாகும்.
மே: குருவின் மூன்றாம் இடப்பெயர்ச்சி சோதனையை உண்டாக்கும்.  மாத கிரகங்களும் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இதனால் மனம், உடல்நிலையில் சிரமங்களை அனுபவிப்பீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்படலாம்.
ஜூன்: யாரிடமும் வாக்குவாதம் செய்வது கூடாது. பணப்பற்றாக்குறை ஏற்படலாம். மருத்துவச் செலவு நாளுக்குநாள் அதிகரிக்கும். கணவன், மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நன்மை அளிக்கும். சுபநிகழ்ச்சி நடத்துவதில் தடை ஏற்படலாம்.
ஜூலை: மூன்றாமிட செவ்வாயால் நற்பலன் கூடுதலாகும். புதன், சுக்கிரனின் சஞ்சாரமும் சூப்பர். புதிய மனை வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகம் வருவதால் கையிருப்பு கூடும். வெளியூர் பயணத்தால் சந்தோஷம் உண்டாகும்.
ஆகஸ்ட்: செவ்வாயின் சஞ்சாரத்தால் நற்பலன் அதிகரிக்கும். உடல்நிலை திருப்தி தரும். வங்கிக்கடன் பெற்று தொழிலை மேம்படுத்துவீர்கள். வாழ்வில் சோதனை அதிகரிக்கும். உடல்நிலையும் அவ்வப்போது சில தொந்தரவுகள் ஏற்பட்டு விலகும்.
செப்டம்பர்: பணப்பிரச்னை தீரும். பழைய கடன்தொல்லை அகலும். நோய்நொடி விலகி உடலில் புத்துணர்ச்சி தென்படும். சட்டரீதியான சிரமங்களும் சிலருக்கு ஏற்பட இடமுண்டு. வெளிநாடு, வெளியூர் சென்று வர வாய்ப்புண்டாகும்.
அக்டோபர்: நண்பர்களால் பிரச்னை உருவாகலாம். வாகன பயணத்தில் எச்சரிக்கை தேவைப்படும். சிலருக்கு வாகனதிருட்டும் ஏற்படலாம் கவனம். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை உண்டாகும். பெற்றோர் உடல்நலனிலும் அக்கறை அவசியம்.
நவம்பர்:  குருவின் வக்ரத்தால் சுபநிகழ்ச்சி விரும்பியபடி நிறைவேறும். தாமதித்த பணிகள் மளமளவென நடந்தேறும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. சொத்துபிரச்னை தீரும். செவ்வாயின் 6ம் இட மாற்றமும் அனுகூலம் தரும்.
டிசம்பர்: வெற்றி மேல் வெற்றி வரும். எதிரிகளின் பலம் குறையும். தடைபட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிலருக்கு பணியிலும் பிரச்னை தென்படும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்தலையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முய உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்ற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்