Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 17 அக்டோபர், 2025

ஜாதகம் எந்த நேரத்தை வைத்து எழுதப்படுகிறது ? கணிக்கப்படுகிறது ? ஆன்மீக ஜோதிடர் ஆர். இராவணன் BSC .....




ஜோதிட‌த்‌தி‌‌ற்கு ஆரியபட்டர், பாஸ்கரர் இவர்களெல்லாம் கொடுத்துள்ள கணகீடுகள் மிகப் பிரமாண்டமான கணக்கீடுகள். சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட ஒரு அயல்நாட்டு அறிஞர் ஒருவர், அதிகமான இலக்கங்கள் கொண்ட எண்கள், தொகைகளை இந்திய ஜோதிடர்கள் அந்தக் காலத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், என்ன காணரத்திற்காக அவர்கள் பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் பார்த்தீர்களென்றால் திதி, நட்சத்திரம், நாழிகை என்று அனைத்தும் முழுக்க முழுக்க அஸ்ட்ரானமிக்கல் கால்குலேஷன்தான். அஸ்ட்ரானமியில் இருந்துதான் அஸ்ட்ராலஜி வந்திருக்கிறது. அறிவியல் அறிஞர்கள் கோள்களின் இயக்கங்களை மட்டும் பார்க்கிறார்கள். 

நாங்கள் என்ன செய்கிறோம் எ‌ன்றா‌ல், கோள்களின் இயக்கங்களால் ஏற்படக்கூடிய மாற்றங்கள், தாக்கங்கள். அதாவது இந்த பூமியில் இருக்கக் கூடிய ஒவ்வொரு ஜீவராசியினுடைய மாற்றங்கள்.

உதாரணத்திற்கு அன்றைக்கு சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிற பறவைகளில் 20 விழுக்காடு கூட இப்போது கிடையாது. கிரக சுழற்சிகளில் அந்த மாதிரி மாற்றங்கள் வரும்போது தானாகவே இங்கு சில உயிரினங்கள் உருவாகிறது. 

சில உயிரினங்கள் அழிகிறது. இந்த மாதிரியான சில விஷயங்கள் இருக்கிறது. அதனால்தான் ஜோதிடம் என்பது முற்றிலும் கால்குலேசன்தான். அதை அடிப்படையாக வைத்துதான் நாங்கள் அனைத்தையும் கொடுக்கிறோம்.

ஆங்கிலேயர் கணக்கில் நள்ளிரவு 12 மணி என்றால் மறுநாள் கணக்கு வந்துவிடுகிறது. நம்முடைய கணக்குப்படி 60 நாழிகைகள் கொண்டது ஒரு நாள். இன்று சூரிய உதயத்தில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதிக்கும் வரையில் 60 நாழிகைகள். 

இன்று வியாழன் என்றால் மறுநாள் காலை சூரியன் உதிக்கும் வரையில் வியாழன்தான். அதாவது 24 நிமிடம் என்பது ஒரு நாழிகை.

அதேபோல சாமக் கணக்கு, பஞ்சபுத்தி சாஸ்திரத்தில் வருகிறது. நாங்கள் பஞ்சாங்கத்தில் கணித்து சூரிய கிரகண நேரத்தைக் கொடுக்கிறோம். அதையேதானே உலக அறிஞர்களும் கொடுக்கிறார்கள். 

இந்த நேரத்தில் சூரிய கிரகணம், இந்த நேரத்தில் சந்திர கிரகணம் என்று சொல்கிறார்கள். ஆகையால், கால்குலேசனுடன் இந்தக் கலை இருப்பதால்தான். இன்றைக்கு வரை இந்தக் கலை வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.


                                                          

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
91 + 7604917240
91 +  9384372941



Share this article :

0 comments:

கருத்துரையிடுக