Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 18 ஜூன், 2016

கோயில் சிலைகளை திருடுபவர்களுக்கு கடவுள் தண்டனை தருவாரா ? ஆன்மீக ஜோதிடர் ஆர் - ராவணன் BSC


                                  தாயே பூமாதேவி
                             

கோயிலில் கடவுளை வணங்க செல்லும்பொழுது   சிவன் கோயில் இருக்கும் இடத்தில் உள்ள மரங்களில் இருந்து விழும் கனிகளைக் கூட எடுக்கக் கூடாது என்று பயந்து ஒரு சிலர் ஒதுங்கிக்கொள்வார்கள். ஏனென்றால் சிவன் சொத்து குல நாசம் என்றெல்லாம் கூட கூறுவார்கள்.  

ஆனால் சில கும்பல்கள் கோயில் சிலைகளையெல்லாம் கடத்தி விற்று வருகிறார்கள் .  ஆனால் அவர்கள் பாதிக்கப்பட வில்லையே என்ற என்ற கேள்வி எழலாம். யார் சொன்னது பாதிக்கப்பட வில்லை என்று . பாதிக்கப்படவில்லை என்று சொல்ல முடியாது. பொதுவாக, சிவன் சொத்து குல நாசம் என்பதை அனுபவத்தில் நிறைய பார்த்திருக்கிறோம். 

இதில் மற்றொரு விஷயமும் இருக்கிறது. வஞ்சித்தார் வாழ்ந்தாலும், வஞ்சித்தார் வாரிசுகள் வாழ்வதில்லை என்ற பழமொழியை கேள்வி பட்டிருக்கிறோம் . அதாவது வஞ்சித்தார் வேண்டுமானாலும் அப்படி இப்படி வாழ்ந்துவிட்டுப் போகலாம். ஆனால் வஞ்சித்தாருடைய வாரிசுகள் வாழ்வதில்லை. பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்.


சிவன் கோயிலில் சிவனை வணங்கிவிட்டு, அர்த்தனாரீஸ்வரரிடம் வந்து நான் ஒன்றுமே எடுத்துக்கொள்ளவில்லை என்று கையைத் தட்டிவிட்டு வருவது எதற்கு என்றால், நான் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை சிவனே என்று சொல்லிவிட்டு வருகிறோம் என்றுதான் அர்த்தம்.

மஹாவிஷ்ணுவை அதாவது பெருமாளை அலங்காரப் பிரியன் என்று சொல்கிறோம். அதாவது பெருமாள் நிறைய ஆபரணங்கள் அணிந்துகொண்டு அலங்காரத்துடன் காட்சி அளிக்கிறார். ஆனால் சிவன் அபிஷேகப் பிரியர். அதாவது ஆடமபரமாக சிவனுக்கு அபிஷேகம் செய்யமுடியவில்லை என்றாலும்   ஒரு டம்ளர் தண்ணியும் அதில் இரண்டு பச்சை இலைகளைப் போட்டால் போதும், ஒன்றுமே தேவையில்லை. அதாவது ஆவுடையார் லிங்கம் இருக்கிறாரென்றால், அபிஷேகத்திற்கு பால், தேன், மோர் எல்லாம் தேவையில்லை, தண்ணீர் விட்டால் போதும். இயற்கையான, சுத்தமான நீர் இருந்தால் போதும். அதற்கு அடுத்ததுதான் பச்சை இலை, அதாவது வில்வ இலை இருந்தால் போதும். அபிஷேகம் முடிந்துவிட்டது.


சிவபெருமான் என்பவர் எளிமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கக் கூடிய ஒரு அவதாரப் புருஷன். அவரே சிவ சிவா என்று இருக்கும் போது அவரிடம் இருந்தே உருவிக்கொண்டு வந்தால் அதைவிட மோசம் என்று சொல்வார்கள்.

அதனால், இதுபோன்று தவறு செய்தவர்கள் பிள்ளைகள் ஊமையாகப் பிறந்துப் பார்த்திருக்கிறோம். அவர்களுடைய சொத்தை வேறொருவர் எடுத்துப் போவது, கொள்ளையடிக்கப்படுவது என்று நிறைய பார்த்திருக்கிறோம். அதனால் ஒன்றும் நடக்காது என்று சொல்ல முடியாது. நிச்சயம் பாதிப்பு இருக்கும். மாற்றம் இல்லை


                                                

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்