Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 10 மே, 2016

பித்ரு தோஷம் இருந்தால் குடும்பத்தை பாதிக்குமா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - R . ராவணன் BSC

                        தாயே பூமாதேவி 

அனைத்து வகை தோஷங்களிலும் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.

வம்சத்தில் இருந்த  பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து 
நிறுத்தும் சக்தியுடையது இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள் ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும்
சிவனும்  கூறியுள்ளனர்.

வாழுகின்ற நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.


புனித ஸ்தலங்களான ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று  திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும்.

குடும்பத்தில்  இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை. 

மேலும் இந்த பித்ரு தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன? 


ஒரு குடும்பத்தில் இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. 

மேலும் ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை. 


இந்த பித்ரு தோஷம் எதனால் வருகிறது ? இந்த தோஷம் வருவதற்கான காரணங்கள் என்ன ?

ஒரு பெண் கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.

குடும்பத்தில் ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும். 

மேலும் தெய்வ வழிபாட்டை விட சிறந்த வழிபாடு முன்னோரை வழிபடும் நாட்களில் அமாவாசைகளில் தை அமாவாசை மிக முக்கியமானது. ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம்.



உங்கள் குடுபத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ?திருமணம் தாமதம் ஆகும் நிலையா ? திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா ? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா ? சொத்து பிரச்சனையா ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா ? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா ? உங்கள் கடைக்கோ அல்லது உங்களது நிறுவனங்களுக்கோ அதிர்ஷ்டகரமான பெயர் அமையவில்லையா ? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா ? பதவி உயர்வு கிடைக்க வேண்டுமா ? காதல் திருமணம் கைகூட வேண்டுமா ? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா ? உடலில் தீராத வியாதியா ? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா ? கவலையே வேண்டாம் . உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் , உங்களின் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் , இவற்றிற்கு நன்மை தர இயலாத தீய கிரகத்தின் ஆதிக்க எழுத்தில் உங்களின் பெயர் அமைந்திருக்கலாம் .இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி அறைந்து உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தரக்கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின்  மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328
 

 

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்