Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 8 மே, 2016

புத்திர தோஷமும் அதனை போக்கும் பரிகாரங்களும் ?ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - இராவணன் BSC

                       தாயே பூமா தேவி

ஜாதகத்தில் புத்திர தோஷம் என்பது ஒவ்வொரு லக்கினத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5ஆம் இடம்தான் புத்திர ஸ்தானத்தை குறிக்கும். எனவே, அந்த 5ஆம் இடத்தை முக்கியமாக பார்க்க வேண்டும். 
 
மூதாதையர்கள் “சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும” என்று பழமொழி உண்டு. அந்த வகையில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது. தாய்மாமன், தாய்வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான்.


ஒருவருடைய ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாக கிடைக்கும். ஒருவேளை 5ஆம் இடத்தில் உள்ள பாவ கிரகங்களை சுபக் கிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபகிரகங்கள் வேறுபடும்- மேஷத்திற்கு சந்திரனும் சுபக்கிரகம்) குழந்தை பாக்கியம் கிடைக்கும்.



அதேபோல் ஐந்தாம் வீட்டிற்கு உரிய கிரகம் பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும். இதற்க்கு எடுத்துகாட்டாக கடக லக்ன ஜாதகர் இருக்கிறார் என்றால் அவருக்கு 5 ம் வீடு விருச்சிக ராசியை வரும் . இந்த விருச்சிக ராசிக்குரிய செவ்வாய் 8 ம் வீடான கும்ப ராசியில் மறைந்து விட்டால் அவருடைய மனைவிக்கு கருப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் .

கடக லக்னம், சிம்ம லக்னதாரர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி 6 அல்லது 8இல் மறைந்தால் இதுபோன்று நிகழும்.

அதேபோல் ஆணின் ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்து, பெண்ணின் ஜாதகத்தில் 7ஆம் இடம் நன்றாக இல்லாமல் இருந்தால் கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, திருமணத்திற்கு முன்னர் பொருத்தம் பார்க்கும் போதே இதனை நன்றாக ஆராய்ந்து பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஜோதிடத்தில்  “புத்திரக்காரகன் புதன் மனை சென்றிட புத்திர சூனியம” என்ற ஜோதிட மொழியும் சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்திரக்காரகன் குரு, புதனின் வீட்டில் (மிதுனம், கன்னி) இருந்தால் புத்திர சூன்யம் (ஆண் வாரிசு இல்லாமை) ஏற்படும் என்பதே இதன் உள்ளர்த்தம்.

ஜாதகத்தில் , குரு பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ அல்லது லக்னத்திற்கு யோகாதிபதியின் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்திருந்தாலோ ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, புத்திர தோஷத்தைப் பொறுத்த வரை ஜோதிட ரீதியாக பல விஷயங்களை  கணக்கிட வேண்டும்.

உங்கள் குடுபத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ?திருமணம் தாமதம் ஆகும் நிலையா ? திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா ? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா ? சொத்து பிரச்சனையா ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா ? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா ? உங்கள் கடைக்கோ அல்லது உங்களது நிறுவனங்களுக்கோ அதிர்ஷ்டகரமான பெயர் அமையவில்லையா ? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா ? பதவி உயர்வு கிடைக்க வேண்டுமா ? காதல் திருமணம் கைகூட வேண்டுமா ? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா ? உடலில் தீராத வியாதியா ? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா ? கவலையே வேண்டாம் . உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் , உங்களின் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் , இவற்றிற்கு நன்மை தர இயலாத தீய கிரகத்தின் ஆதிக்க எழுத்தில் உங்களின் பெயர் அமைந்திருக்கலாம் .இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி அறைந்து உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தரக்கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின்  மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்