கும்ப ராசி அன்பர்களே இந்த 2015 ஆம்
ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் பணப்புழக்கத்தில் குறைவு ஏற்படாது என்றாலும் சேமிப்புகளுக்கு இடமிருக்காது.
சமூகத்தில் உங்கள் பெயர், புகழ் கூடும். உங்களின் தன்னம்பிக்கை உயரும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு காரியங்களையும்
சிரமமின்றி முடித்து விடுவீர்கள். பெரியோர்களின் நட்பும் ஆசியும்
உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். உங்களுக்கு மனதளவில் நெருக்கடி
கொடுத்தவர்கள். விலகிச் செல்வார்கள். உடலில் இருந்த நோய்நொடி உபாதைகள் ஒவ்வொன்றாக
மறையத் தொடங்கும். குடும்பத்திலும் மருத்துவச் சலவுகள் குறையும். உங்கள்
பேச்சுக்கு மதிப்பு உண்டாகும்.
கடவுள் சம்பந்தப்பட்ட சேவைகள் ஆன்மிகத்தில்
ஈடுபாடும் கோயில், தர்மஸ்தாபனம் இவை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்மைகள்
உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் சுப
நிகழ்ச்சிகளும் நடக்கக் காண்பீர்கள்.
அதேநேரம் குழந்தைகள் வழியில் சில மனச்
சஞ்சலங்கள் தோன்றி மறையும். அதோடு
பேசும் போது கவனமாக இருக்கவும். உங்கள்
பேச்சுகள் தவறாக
புரிந்துக்கொள்ளப்படும். அவசர முடிவுகளால் பணவிரயம் உண்டாகலாம்.
எச்சரிக்கைத் தேவை.
உங்களின் மன குழப்பங்களைத் தவிர்க்க
தனிமையை நாடுவீர்கள். வெளிவிஷயங்களிலும்
காலத்தைக் கழிக்க முயற்சி செய்யுங்கள்.
மற்றபடி எவ்வளவு சிக்கலான
நிலைமையில் மாட்டிக் கொண்டாலும் எந்தவித
பாதிப்புமில்லாமல் வெளியில் வந்து
விடுவீர்கள். அதே சமயம் வாகனங்களில்
பயணம் செய்யும்போது கவனத்துடன்
இருக்கவும். அடுத்தவர்களின் தவறுகள்
உங்களை பாதிப்படையச் செய்யும். மற்றபடி
வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் நலம்
தரும்.
2015 -ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி
வரையில் உள்ள காலகட்டத்தில்
பணவருவாய் அதிகமாக இருப்பதால் எதிர்கால
பிரகாசமான வாழ்க்கைக்கு வித்திடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் கூடும்.
எதிரிகள் உங்களைக் கண்டு விலகி ஓடுவார்கள். உங்களுக்குக்கீழ் வேலை
செய்பவர்களிடம் ஆதரவுடன் நடந்து கொண்டு உங்கள் முயற்சிகள் துரிதமாக
வெற்றியடையும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.
உங்கள் குடும்ப உறவினர்களிடம் சுமுகமாக பழகி வர, உங்கள் பழைய
மனத்தாங்கல்கள் சீர்படும். உங்கள் உடலாரோக்கியம் பலப்படும். சிலருக்கு புதிய
இல்லங்களுக்கு மாறும் யோகமும் உண்டாகும். சமூகத்தில் நல்ல பெயர் உண்டாகும்.
பெரிய செல்வந்தர்களிடம் நட்பு கிடைக்கும். அவர்களின் செல்வாக்கையும்
உங்கள் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களிடம்
பெருந்தன்மை நிறைந்து காணப்படும். செய்தொழில் மூலமாகச் செய்து வந்த பயணங்களால் லாபம் அதிகரிக்கும்.
பங்கு வர்த்தகம் மூலமாகவும் உபரி
வருமானம் கிடைக்கும். குடும்பத்தில்
மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கும்.
சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கும் சேவை
செய்வீர்கள். உங்களின் விடாமுயற்சிகளால்
அரிய பலன்கள் கிடைக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகத்தில் உள்ள உத்தியோகஸ்தர்களுக்கு
அலுவலகத்தில் இருந்து வந்த கெடுபடிகள் குறைந்து சுமுகமான சூழ்நிலை
தென்படும். அதேநேரம் அலைச்சல்களுக்கு பயந்து வேலைகளை தட்டிக் கழித்தால்
வீண் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.
அதனால் பணிகளைத் திட்டமிட்டு
மகிழ்ச்சியுடன் செய்து முடிப்பீர்கள். மேலும் உங்கள் வேலைகளை சக ஊழியர்களிடம்
ஒப்படைக்க வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் கோரிக்கைகள் கருணையுடன்
பரீசீலிக்கப்பட்டு உங்கள் நிலைமை உயரும்.
வியாபாரம் செய்யும் வியாபாரிகள் கடின முயற்சிகளைச் செய்து
கொடுக்கல்வாங்கலில் சிறப்புகளைக்
காண்பார்கள். எதிரிகளின் தொல்லைகளில்
பாதிக்கப்பட்டிருந்தவர்கள்
அதிலிருந்து விடுபடுவார்கள்.
வியாபாரத்தைப் பெருக்குவதற்காக வண்டி
வாகனங்களா வாங்குவார்கள். சரளமான பணவசதி
இருப்பதால் புதிய பொருள்களை வாங்கி
விற்க முயற்சி செய்வீர்கள். கடையையும்
அழகுபடுத்தி வாடிக்கையாளர்களை
கவருவீர்கள்.
விவசாயம் செய்யும் விவசாயிகள்
விளைச்சலில் திருப்தியைக் காண்பார்கள். விளைபொருள்களில் விற்பனையும் நன்றாக
நடக்கும். விரும்பிய நேரத்தில் கடன்கள் கிடைக்கும். எதிர்காலத்திற்கு
ஏற்றம் தரும் வகையில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். நீர்வரத்தும் அதிகமாக
இருப்பதால் மாற்றுப் பயிர்களை பயிரிட்டு பலன் பெறலாம். சிலருக்கு
உஷ்ண ஆதிக்க நோய்களும் ஜீரணக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
அரசியல் துறையில் உள்ளவர்களும்
அரசியல்வாதிகளும் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். எதிரிகளும் உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவு அவ்வப்போது குறையுமாகையால் தொண்டர்களை
அரவணைத்துச் செல்லுங்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். அதனால் வாழ்க்கைத்
தரம் உயரும் ஆண்டாக இது அமைகிறது.
கலை துறையில் உள்ளவர்கள் தங்கள் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக்கொண்டு தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெற ஏதுவான
சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும் புகழும் கிடைக்கும். அதனால்
எல்லா காலத்திலும் உழைப்பைக் கூட்டிக்கொண்டு செயல்படவும். மற்றபடி
புதிய வாய்ப்புகள் தடங்கலின்றி வந்து கொண்டிருக்கும். ரசிகர்களின்
ஆதரவுடன் சில பயணங்களை மேற்கொண்டு பலன் அடைவீர்கள்.
குடும்ப பெண்மணிகளுக்கு இந்த
புத்தாண்டில் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு
மரியாதை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அக்கறையுடன் நடத்துவீர்கள். உடல்
ஆரோக்கியம் சீராக இருக்கும். யோகா,
பிராணாயாமம் போன்றவைகளைச்
செய்வீர்கள். பொருளாதாரம் ஏற்றமாக இருக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை
நிறைவு செய்வீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சி தரும் பயணங்களை
மேற்கொள்வீர்கள்.
கல்வி பயிலும் மாணவ மணிகள் படிப்பில்
வெற்றி வாகை சூடும் வருடமிது. போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
வெளி விளையாட்டுகளிலும் கவனத்துடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
பெற்றோர்களின் ஆதரவும் நிரம்ப கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை
வழிபட்டு வரவும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?
கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம்
ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த
உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து
பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும்
தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான
முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி
உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம்.
இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின்
பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் -
ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி
நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு
மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers: 91 + 8122733328
0 கருத்துகள்:
கருத்துரையிடுக