குரு
பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மீன ராசி அன்பர்களே! இந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள
காலகட்டத்தில் செய்தொழிலில் இருந்து
வந்த முட்டுக்கட்டைகள் விலகி முன்னேற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் விடா முயற்சிக்கு
அரிய பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும். உங்கள்
பேச்சில் நுண்ணறிவு வெளிப்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
குடும்பத்தில்
பொருளாதாரம் நிறைவாக இருக்கும். உங்களின் அதைர்யங்கள் நீங்கி தைரியம் கூடும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப்
பொழுதைக் கழிப்பீர்கள். உங்கள் ஞாபகசக்தி
அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் உயரும். குழந்தைகளை மேற்படிப்புக்காக
வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்புவீர்கள். பொது காரியங்களில்
தன்னலம் பாராட்டாமல் ஈடுபடுவீர்கள்.
சிலர்
விலையுயர்ந்த வீட்டுப் பிராணிகளை வாங்குவார்கள்.
உங்களின்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். அதேசமயம் அரசாங்கத்திற்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை குறித்த
காலத்திற்குள் சமர்ப்பிக்கவும். தீயவர்கள் என்று
உணர்ந்திருந்தாலும் அவர்களின் தொடர்பை தவிர்க்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மற்றபடி பிறர்
தயவுடன் நீங்கள் செய்து வந்த செயல்களை
நீங்கள்
தன்னிச்சையாக முடிக்கக்கூடிய நிலைமைகள் உருவாகும். அதோடு வாக்கு கொடுத்தால் அதை எப்பாடுபட்டாவது
காப்பாற்றி விடுவீர்கள் என்கிற காலகட்டமாக இது
அமைகிறது என்றால் மிகையாகாது.
2015
- ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலட்டத்தில் உங்களின் தெய்வ பக்தி உயரும். தியானம், பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் விவகாரமின்றி
கைக்கு வந்து சேரும். சிலர் நீண்ட தூரப்பயணங்களை
மேற்கொள்வீர்கள். மனதை அரித்து வந்த பிரச்னைகள் தானாகவே தீர்ந்துவிடும். உங்கள் எதிரிகள் சிதறி
ஓடுவார்கள். புதிய எண்ணங்களைச் செயல்படுத்தி
சாணக்கியன் என்று பெயரெடுப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களிடம் நெருக்கமாகப் பழகுவீர்கள்.
நீங்கள்
பேசும் பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் செயல்களின்மூலம்
தேவைக்கேற்ற பணவசதிகளைப் பெறுவீர்கள்.
மேலும்
உங்கள் செல்வம் தர்மகாரியங்களுக்கும் பயன்படும். உங்கள் தொழிலில் அதிகாரம் கூடப்பெறுவீர்கள். உழைப்பு
கூடினாலும் அதற்கேற்ற பலன் பன்மடங்காக
உயரும்.
உங்கள் பழைய கடன்களும் இந்த காலகட்டத்தில் திரும்ப வரும். உங்கள் தொழிலில் அதிகாரமும் உயரப் பெறுவீர்கள்.
உழைப்பு கூடினாலும் அதற்கேற்ற பலன் பன்மடங்காக உயரும்.
நீண்ட
நாட்களாக நீங்கள் கொடுத்த உங்கள் பழைய கடன்களும் இந்த காலகட்டத்தில் திரும்பி வரும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால்
பாதிக்கப்பட்டிருந்தவர்கள் நிரந்தர தீர்வு காண்பார்கள்.
உங்களின் நெடுநாளைய ஆசைகள் செயல்வடிவம் பெற்று உங்களை புகழின் உச்சாணிக்கே கொண்டு சென்று
விடும். சரியான நேரத்தில் உணவை எடுத்துக்
கொள்வீர்கள். அதோடு உங்களின் ஆலோசனைகளை மற்றவர்கள் கேட்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகத்தில்
உள்ள உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் முன்கூட்டியே செயல்படுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களில் வெற்றி
பெறுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வும் உங்களைத்
தேடி வரும். உங்களின் வேலைகளை பட்டியலிட்டுச் செய்தால் அனைவரின் பாராட்டுகளையும் பெறலாம். வருமானம்
சிறப்பாக இருப்பதால் கடன்வாங்க நேரிடாது.
மனதிற்கினிய இடமாற்றங்களும் உள்ளூரிலேயே அமையும்.
வியாபாரம்
வியாபாரிகளுக்கு நினைத்தது நினைத்தபடியே நடக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பழைய
சேமிப்புகளை முதலீடு செய்து வியாபாரத்தைப்
பெருக்க நினைப்பீர்கள். அதேசமயம் கடும்போட்டிகளை நீங்கள் சந்திக்க நேரிடும். கொடுக்கல்வாங்கல்
விஷயங்கள் நினைத்தபடியே சாதகமாக முடியும். அதேசமயம்
கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டால் உங்களின் முயற்சிகள் அனைத்தும்
வெற்றிகரமாக முடியும்.
விவசாயத்தை
நம்பி உள்ள விவசாயிகளுக்கு இந்த ஆண்டு முழுவதும் தேவையான வருமானம் கிடைக்கும். மகசூலில் எதிர்பார்த்த அளவைக்
காண்பீர்கள். அதேசமயம் புழு பூச்சிகளால் பயிர்களுக்கு
பாதிப்பு ஏற்படாமல் இருக்க சரியான நேரத்தில் பூச்சிக் கொல்லி மருந்துகளை உபயோகிக்கவும்.
வங்கிகளிடமிருந்து தக்க நேரத்தில் கடன் கிடைக்கும்.
அரசியல்
துறையினரும் அரசியல்வாதிகளும் தங்கள்
செயல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவார்கள். இதனால் எத்தகைய கடின வேலைகளையும் மன
அழுத்தத்திற்கு உள்ளாகாமல் செய்து முடிக்கவும்.
உங்களின் செயல்கள் படிப்படியாக வெற்றியைத் தேடித்தரும். கட்சி மேலிடத்திடம் இணக்கமான உறவை வைத்துக்
கொள்வது நலம் பயக்கும். குறிப்பாக ஆண்டு பிற்பகுதியில்
வாக்குவாதம், விவாதம் போன்றவற்றில்
ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.
கலைத்துறையினருக்கு
புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதேநேரம் நிதானம் மற்றும் பொறுமையாகவும் நடந்து கொண்டு
வெற்றிப்பாதையை எட்டுவீர்கள். பணவரவில் சிறிது
தாமதமுண்டானாலும் எதிர்பார்த்த பணம் கிடைத்துவிடும். அதேநேரம் இந்த ஆண்டு முழுவதும்
ரசிகர்களின் ஆதரவு சுமாராகத்தான் இருக்கும். மற்றபடி எதிர்பார்த்த பயணங்களைச் செய்வீர்கள்.
குடும்பத்தில்
உள்ள பெண்மணிகள் தன்னடக்கத்தோடும் போதுமென்ற மனநிறைவோடும் இருந்து குடும்பத்தில் தங்கள் பெயரைக்
காப்பாற்றிக் கொள்வார்கள். குடும்பத்தில் ஒற்றுமையையும்
கணவரிடம் இணக்கத்தையும் காண்பார்கள். உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம்
அதிகரிக்கும். சுற்றுலா சென்றுவர வாய்ப்புகள்
உண்டாகும். அதேநேரம் எவரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம்.
கல்வி
பயிலும் மாணவமணிகளின் முயற்சிகளுக்கு ஆசிரியரிடம் நல்ல பாராட்டு கிடைக்கும். சிறப்பான மதிப்பெண்களைப் பெற கடுமையாக
உழைப்பீர்கள். புதிய மொழிகளை கற்கவும் ஆர்வம்
உண்டாகும். உற்சாகத்துடன் இருக்க உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ அனுமனை வழிபட்டு வரவும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?
கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம்
ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த
உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து
பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும்
தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான
முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி
உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம்.
இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின்
பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் -
ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி
நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு
மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers: 91 + 8122733328
0 கருத்துகள்:
கருத்துரையிடுக