Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 23 ஜூன், 2014

திறமைகள் இருந்தும் புகழ் பெற முடியவில்லையே ஏன் ? இதற்க்கு ஜோதிட ரீதியான காரணம் இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                             ஓம் சிவசக்தி
பொதுவாக ஜாதகத்தில் பல யோகமான கிரக நிலைகள் இருந்தாலும் - பல சிறப்பான அம்ச நிலைகள் இருந்தாலும் - அந்த ஜாதகர் ஒரு தனித்துவமான புகழ் பெரும் நிலையை அடைய லக்னத்துக்கு ஐந்தாம் இடத்து அதிபதி பலமாக இருக்கவேண்டும் . இந்த ஐந்தாம்  பூர்வ - புண்ணிய ஸ்தானம் என்றும் - புத்திர ஸ்தானம என்றும் கூறுவது உண்டு. இதிலிருந்து பல  அறிய வகை விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம் . தாய்வழி பாட்டனை பற்றிய நிலையையும் தாய்வழி குடும்பத்தையும் - ஜாதகருக்கு பிறக்கும் சந்ததிகளையும் பற்றியும் அறிந்து கொள்ளலாம் . 

ஐந்தாம் பாவாதிபதி சுப கிரகங்களின் சேர்க்கை இன்றி லக்னது 6 - 8 - `12 - போன்ற இடங்களில் மறைந்தோ அல்லது பகை நீச்சம் பெற்றோ காணப்படுபவரானால் - ஜாதகர் எவ்வளவு சிறந்த மேதையானாலும் பிரகாசம் அடைவதில்லை 

ஐந்தாம் இடத்தில பாவகிரகங்கள் நின்றாலும் தான் கற்ற கல்வியை நல்ல முறையில் உபயோகித்து மேன்மை அடைய முடியாது .

ஐந்தாம்  பாவாதிபதி ஆட்சி - உச்சம் பெற்று சுபர் சேர்க்கை பெற்று கேந்திரம் என்று சொல்லப்படும் 1 - 4 - 7 - 10 - போன்ற இடங்களிலும் , திரிகோணம் என்று சொல்லகூடிய 1 - 5 -9 - போன்ற இடங்களில் இருந்தால் - அந்த ஜாதகர் சரிவர படிக்க வில்லை எனினும் தகுந்த ஆசானிடம் எந்த வித்தையையும் கற்கவில்லையாயினும் தன் புத்தி சாதுர்யத்தால் கற்றவர்களும்  போற்ற கூடிய உன்னத நிலையை பெற்றிடுவார் என்பது நிச்சயம் . 

ஐந்தாம் பாவாதிபதி ஆட்சி - உச்சம் பெற வேண்டுமானாம் ரிஷப - விருச்சிக லக்னங்களே தேர்ந்தேடுக்கபடுகின்றன . 

ரிஷப லக்னத்திற்கு 2 - 5 - குடைய புதன் 5 ம் இடமான கன்னி ராசியில் உச்சம் பெறுவது விசேஷம் . 

விருச்சிக லக்னத்தை எடுத்து கொண்டால் 2 - 5- க்கு உடைய குரு , 5 ம் இடமான மீனத்தில் ஆட்சி பெறக்கூடும் . எனினும் விருச்சிக லக்னத்தின் இந்த அமைப்பு ரிஷப லக்னத்தின் அமைப்புக்கு சமமாக சொல்வதற்கு இல்லை. 

பொதுவாக ஐந்தாம் இடத்தில சுப கிரகங்களான குரு - சுக்கிரன் - புதன் மூவரும் கூடி இருந்தாலும் அல்லது இவர்களில் இருவர் கூடி இருந்தாலும் அந்த ஜாதகன் பெரும் யோகத்தை நிச்சயமாக அடைந்தே தீருவான் . 

இப்படி சேரும் கிரகங்கள் - லக்னத்திற்கு கெட்ட ஸ்தானம் பெற்றவராயினும் அந்த ஜாதகனை சிறப்படையவே செய்வர் . ஆனால் பொருளாதார துறையில் போதிய வளம் இருக்காது என்று கூறலாம் . 

மேலும் பழம் பெரும் நூலான சந்திராபரணம் என்னும் ஜோதிட நூல் பொன் பொருள் சேரும் என்று கூறுகிறது . 

மேலும் இந்த ஐந்தாம் பாவத்தால் யோகாசன பயிற்சி - பிராணயாம மூச்சுபழக்கம் - தீவிர தெய்வ சிந்தனை முதலியவன பற்றியும் இந்த ஐந்தாம் இடத்தில நிற்கும் கிரக சேர்க்கையால் அறிய முடியும் . 

இதுவன்றி மந்திர - தந்திர விஷயங்களில் தேர்ச்சி பெறுவாரா என்பதை இந்த ஐந்தாம் இடத்தை கொண்டு அறியமுடியும் . யோகிகள் - ஞானிகள் - தொடர்பால் உபதேசங்கள் பெறுவதற்கும் ஐந்தாம் இடமே வழி செய்ய வேண்டும் . இன்னும் பல விஷயங்களை இந்த ஐந்தாம் இடத்தை கொண்டு அறியலாம். மேலும் ஒருவருக்கு யோகமான கிரக அமைப்புகள் இருந்தாலும் - ஒரு துறையில் பிரகாசமான் எதிர்க்காலத்தை அடைய லக்னத்துக்கு ஐந்தாம் இடத்து அதிபதி வலிமையாக இருந்தால் புகழ் பெறலாம் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்