Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 25 நவம்பர், 2013

கருக்கலைப்பு ஏற்படுவதற்கு ஜோதிட ரீதியான காரணம் இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் .BSC

                                                    ஓம் சிவ சக்தி 
அன்பான வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . 

5ஆம் இடம்தான் பூர்வ புண்ணிய ஸ்தானம். 5ஆம் இடத்தை பாவ கிரகங்கள் சூழ்ந்திருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

குறிப்பாக 5ஆம் இடத்தில் சூரியனோ, சந்திரன், செவ்வாயோ அமர்ந்திருந்தால் அவர்களுக்கு அபார்ஷன் ஆகும். முதல் குழந்தையே அபார்ஷன் ஆகி பின்புதான் குழந்தை பிறக்கும்.

இதில், எத்தனை உருவாகும், எத்தனை நிற்கும், எத்தனை குழந்தை பிறக்கும் என்பது எல்லாமே புத்திர பாகம் என்பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

உத்திர காலாமிர்தம், பிருகத் ஜாதகம் என்றொரு சமஸ்கிருத நூலிலும் இதுபற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

ஜாதக அலங்காரம் என்ற நூலிலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. எந்தெந்த காலகட்டத்தில் கரு சிதைவு ஏற்படும், எந்த காரணத்தினால் ஏற்படும் என்பதையெல்லாம் கூறியுள்ளது. எந்த தசா புக்தி நடக்கும்போது நடக்கும் என்பதையும் இந்நூல் கூறுகிறது.

கர்ப்ப  உற்பத்தி என்பதும் கூட ஒரு சில தசா புக்திகளில்தான் நடைபெறுகிறது. குரு அந்தரம், குரு புக்தி, குரு ராசியையோ, லக்னத்தையோ பார்க்கும்போது அல்லது குரு 5ஆம் ஸ்தானத்தை பார்க்கும் காலக்கட்டத்தில்தான் குழந்தையே உருவாகிறது என்று சுக்ர நாடி என்ற நூல் சொல்கிறது.

குருதான் குழந்தை உருவாவதற்கு அதாவது சுக்லம், சுரோனிதம் கலப்பிற்கு முக்கியமாக அமைகிறது. கலவிக்குக் காரணம் சுக்ரன். அது குழந்தையாக உருவாவதற்கு குருவின் பார்வை முக்கியம். அதனால்தான் குரு ராசியையோ அல்லது லக்னத்தையோ பார்க்கும் போது, 5ஆம் இடம் சுக்ரன் திசையைப் பார்க்கும் போதோ அல்லது எந்த தசா அல்லது எந்த புக்தி நடந்தாலோ அந்த தசா அல்லது அந்த புக்திக்கு குருவின் அந்தரம், தசா புக்தி நடந்தால் அப்போதுதான் குழந்தை உருவாகும். 

அதைத் தவிர்த்து மற்ற நேரங்களில் உருவாகும் கருதான் கருக்கலைப்பிற்கு உட்படும். ஒரு சிலர் ஏதாவது ஒரு காரணத்திற்காக தான் விருப்ப பட்டே கருகலைப்பு செய்து கொள்வார்கள் . அது அவர்களின் தவறு என்று சொல்ல முடியாது . காரணம் இந்த செயல்  அவர்களது தசாபுக்தியின் அடிப்படையிலேயே நடக்கும். அதாவது ஒரு சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு குழந்தை வேண்டாம் என்று தள்ளிப்போடுவது உண்டு. அப்போது அவர்களுக்கு குழந்தைக்கான தசா புக்தி நடக்காது. அதனால் இயற்கையிலேயே அவ்வாறு அமைந்துவிடும்.

அதுபோலத்தான் ஒரு சிலருக்கு அஷ்டமத்து சனி, ராகு போன்ற தசைகள் நடக்கும்போது குழந்தை பாக்கியம்  கொள்ள விரும்பும்பொழுது அந்த கருவுக்கு ஆபத்து உண்டாகும் .

 கரு குழந்தையாக உருவாகாத தசா புக்தி நடக்கும்போது உருவாகும் கரு தானாகவோ அல்லது தாங்களாகவோ கலைப்பு செய்யும்படிதான் அமையும். எனவே அதை ஒரு பாவச்செயலாகவும் கருத முடியாது.

என்னென்ன கிரக அமைப்பு இருக்கும்போது கருச்சிதைவு ஏற்படும் என்பதும் இருக்கிறது.

கருகலைப்பு ஏற்படுவதற்கு கிரக அமைப்புகள் ஒரு முக்கிய காரணமாக அமைகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது .  

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



 
Share this article :

1 கருத்துகள்:

சமீபத்திய கருத்துகள்