Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 22 நவம்பர், 2013

விவாகரத்து ஏற்படுவதற்கு கிரகங்களும் முக்கிய காரணமாக அமையுமா? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் - ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

                                                              ஓம் சிவ சக்தி 
அன்பான வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . 

ஒருவருக்கு கணவன் அமைவதும் - மனைவி அமைவதும் நவ  கிரகங்களின் ஆதிக்கத்தை  வைத்துத்தான் அமையும். நாம் ஆடு, மாடு வாங்குவது கூட கிரகத்தை வைத்துத்தான் இருக்கிறது. நல்ல கிரக அமைப்பு இல்லாவிட்டால் நாம் வாங்கும் ஆடு, மாடு கூட சரியாக அமையாது.

மேலும் லக்னாதிபதி மிகவும் முக்கியம். ஒருவர் பிறக்கும்போது அந்த நேரத்திற்கான லக்னாதிபதியைப் பார்க்க வேண்டும். மேஷ லக்னமா, ரிஷப லக்னமா என லக்னத்தை பார்க்க வேண்டும். அந்த லக்னம் சுபத் தன்மை பெற்று சுப கிரகங்களுடன் சேர்க்கை, சுப நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தால் அவரது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

7ஆம் இடம், 8ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்திருந்தாலும் -சின்ன சின்ன சண்டைகள் நடக்கும், அதனால் வாழ்க்கை சிறப்பாக அமையாது. ஆனால் ஒரு சிலருக்கு அவ்வாறு அமைந்தும் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதற்குக் காரணம் சுக்ரன் வலுவாக இருக்கும். சுக்ரன் களத்திரக் காரகன். சிறப்பான துணைக்கு சுக்ரன் தான் காரணம். சுக்ரன் நல்ல விதத்தில் சுபத் தன்மை பெற்றிருந்தால் 7வது, 8வது இடத்தில் பாவ கிரங்கள் இருந்தாலும் வாழ்க்கைத் துணை சிறப்பாகவே அமையும்.

ஆனால் சுக்ரனும் கெட்டு, 7வது, 8வது இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தால் விவாக ரத்து நடக்கும்.

ஒரு சில ஜாதகங்களை எடுத்துகொண்டோமானால்  சுக்ரன் சிறப்பாக இருந்தும், 7வது 8வது இடங்களில் நல்ல கிரகங்கள் இருந்தும் விவாகரத்து ஆனவர்களும் இருப்பார்கள்.

அதற்குக் காரணம், இருவருக்கும் அஷ்டமத்து சனி தசை நடக்கும்போது திருமணம் நடந்திருந்தால் இதுபோன்ற நடக்க வாய்ப்பு உண்டு. மாப்பிள்ளைக்கு அஷ்டமத்து சனி, பெண்ணுக்கு ஏழரை சனி நடந்தாலும் அவர்கள் பிரிந்துவிடுவார்கள்.

அப்பாவால் பிரிந்தவர், அம்மாவாலபிரிந்தவர், சகோதரனால் பிரிந்தவர்களும் உண்டு.

ஒரு பெ‌ண்‌ணி‌ற்கு தனுர் லக்னம் என்று நாம் வைத்து கொள்வோம் . லக்னாதிபதி குரு, களத்ரக் காரகன் சுக்ரன். குருவும், சுக்ரனும் ஒரே வீட்டில் அமர்ந்து இருக்கிறார்கள் . அந்த பெண்ணுக்கு கணவனா? தாயாரா? யாருக்கு முக்கியத்தவம் தருவது எ‌ன்ற ‌பிர‌ச்‌சினை.

ஒரே மகள், அம்மாவையும் விட்டுவிட்டு தனியே போய் விட முடியாது. அம்மாவுடன் இருந்தால் கணவர் கோபித்துக் கொள்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலைகளை உருவாக்குவது லக்னத்துக்கு ஆறாம் வீட்டுக்கு உரிய கிரகத்தின் வேலையாகும் . ஆறாம் வீட்டுக்குரியவன் உடைய கிரகத்தின் தசை நடந்தால் பிரிவுக்கான சாத்திய கூறுகள் உண்டு . 


அதேபோல ஜாதகம் பொருந்தவில்லை என்றாலும் சமமான ராசியாக இருந்தால் பரஸ்பரம் சண்டை போட்டுக் கொண்டு, ஆனால் ஒற்றுமையாக இருப்பார்கள். எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருந்தாலும் அவர்கள் பிரியவே மாட்டார்கள். அதில் மாற்றமே இல்லை. 

எனவே கணவன் - மனைவி -  கருத்து வேறுபாடு ஏற்பட்டு - விவாகரத்து வரை போகிறது என்றால் அதற்க்கு கிரகங்கள் முக்கிய காரணம் வகிக்கின்றன . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்