Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 21 நவம்பர், 2013

பிரம்ம ஹத்தி தோஷம் உங்களுக்கும் இருக்கலாம்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

                                                   ஓம் சிவ சக்தி

அன்பான வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .  

பிரம்ம ஹத்தி தோஷம் என்பது பெரிதாகச் சொல்லப்படும் ஒருவகையான தோஷமாகும்  . குறிப்பாக பிராமணர்களை துன்புறுத்துபவர்களுக்கு இந்த பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், உயிர் பறித்தல், மாற்றான் மனை கவர்தல், கர்ப்பிணிப் பெண்ணை புனர்தல், பண மோசடி செய்தல் போன்றவர்களுக்கும் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும்.

காமம் தொடர்பான விஷயங்கள்தான் பிரம்ம ஹத்தி தோஷத்தில் ஏராளமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதாவது, பெண் ஒருவள் தானே விரும்பி காமத்திற்கு அழைத்து அதனை ஆண் மறுத்தாள் அவனுக்கும் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும்.

கோயிலுக்கு சொந்தமான நிலம், சொத்துக்களை கையகப்படுத்துதல், அரசு சொத்து, நிலத்தை தன்னுடைமை ஆக்கிக் கொள்பவர்களுக்கும் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும்.

தசாபுக்தி நன்றாக நடந்தால் அப்போது அவர்கள் தப்பித்துவிடலாம். ஆனால் எந்த நேரத்தில் அவர்களுக்கு தசா புக்தி பலவீனமடைகிறதோ அப்போது அவர்களை பிரம்ம ஹத்தி தாக்கும். அவ்வாறு இல்லாமல் போனாலும், அவர்களுடைய வம்சத்தையே பாதிக்கும்.

பிரம்ம ஹத்தி தோஷம் பிடிக்காத அளவிற்கு கொஞ்சம் ஒழுக்கமாக இருந்து கொள்வது நல்லது.

கன்றுக்கு பால் விடாமல் அனைத்து பாலையும் கறப்பவர்கள், உணவில் விஷம் வைத்து கொள்பவர்களையும், ஊர் குளத்தில் விஷம் கலப்பவர்கள் பிரம்ம ஹத்தி தோஷம் பிடிக்கும். மேலே சொல்லப்பட்ட தோஷங்கள் அனைத்தும் சென்ற ஜென்மத்தில் செய்த பாவங்களினாலும் ஏற்படும். இந்த ஜென்மத்தில் அதாவது வாழும் காலத்திலும் இந்த பிரம்ம ஹத்தி தோஷத்திர்க்கான பலனை அனுபவிக்க நேரிடலாம் . 

தோஷங்கள் என்பது

தோஷங்கள் என்பது குறை அல்லது தடை என்று சொல்லலாம். முன் வினைப் பயனால் விளைவதுதான் தோஷங்கள். அதை இந்த பிறவியில் மேற்கொண்டு நிகழாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

ராகு, கேது என்ற முக்கியமான நிழல் கிரகங்கள்.

ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் ராசிக்கு அதிபதியுடன் ராகு சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு செயல்களிலும் வெற்றியை காண இயலாது .சுருக்கமாக சொல்ல போனால் திறமைகள் -தகுதிகள் இருந்தும் அதற்கான பலனை அதற்க்கான பலனை அவர் பெற முடியாது . உதாரணத்திற்கு ஒரு ஜாதகர் ஒரு பணியில் இருக்கிறார் என்றால் அந்த பணியின் மூலம் அவர் உயர்வான நிலையையோ அங்கீகாரத்தையோ அவர் அடையமுடியாது . இவரை விட தகுதியில் குறைந்தவர் அந்த பணியில் மேலானான பலனை அடைவார் .ராகு வந்து பணியில் பாராட்டையோ, அதற்கான அங்கீகாரத்தையோ தராமல் மறைக்கும். 

ராகு பெண்களுக்குரிய கிரகம். அதுவும் விதவைப் பெண். ஒரு பெண்ணை விதவை ஆக்கி இருந்தாலோ அல்லது தெரிந்தோ தெரியாமலோ ஒரு கணவன் மனைவி பிரிவதற்குக் காரணமாக இருந்தாலோ, தனியாக இருக்கும் பெண்ணிடம் இருந்து தன, தானிய சம்பத்துகளை பறித்திருந்தாலோ, இளம் பெண்ணை ஏமாற்றி இருந்தாலோ இந்த பிறவியில் ராசி நாதனுடன் ராகு இருப்பான்.

எனவே இப்பிறவில் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்தல், ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு நகை வாங்கிக் கொடுப்பது போன்றவை செய்யலாம். மேலும், இந்த பிறவியில் வேறு எதுவும் பாவச் செயலில் ஈடுபடாமல் இருந்து கொள்ள வேண்டும். அதற்கான பரிகாரங்களையும் செய்ய வேண்டும்.

யோகங்கள்

கெஜ கேசரி யோகம், புதாதித்ய யோகம் போன்ற 300க்கும் மேற்பட்ட யோகங்கள் உள்ளன. இந்த யோகம் எல்லாம் பார்க்கப் போனால் அடுத்தவர்களை உடலால் இன்பமுற்றுபவர்களுக்குப் அதாவது பசியைப் போக்கும் தம்பதிகளுக்கு தேகமான பிள்ளைகள் பிறக்கும்.

இந்த பிறவியில் நாம் பெறும் அந்த பலனுக்கும், நாம் முற்பிறவியில் செய்த புண்ணியம்தான் காரணம்.

ஒரு பிறவியில் நாம் செய்யும் நல்ல, தீய நடவடிக்கைகளுக்குக் பிரதிபலன்தான் அடுத்த ஜென்மத்தில் நாம் அடையும் யோகங்கும், தோஷங்களும். ஆனால் இந்த ஜென்மத்தில் அதனை செய்யத் தூண்டுவதும் நமது கிரகங்கள்தான்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்