ஓம் சிவ சக்தி
வெற்றி தோல்வியை சமமாகக் கருதும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4ல் சஞ்சரித்த குருபகவான், மே28 முதல்
பூர்வ புண்ணிய ஸ்தானமான 5க்கு பெயர்ச்சியாகிறார். இதனால், குருபலம்
உண்டாகப் போகிறது. இவர் 1,9,11 ஆகிய ராசிகளைப் பார்வையால்
பலப்படுத்துகிறார். 9ல் இருக்கும் சனியின் பார்வை 3,6,11 ஆகிய ராசிகளில்
பதிகிறது. பெரு பதினொன்றைத் தேழ் பேர், ஒன்பதாம் இரண்டில் தேவ குருவரில்
செல்வம் சிரூர், குதிரை வெண்குடை தீவர்த்திதருமமும் தானமுண்டு, தாய் தந்தை
துணையும் உண்டாம்அருமையும் பெருமையுண்டாம், அரசர் சேவையும் உண்டாமேஎன்கிறது
ஒரு ஜோதிட வெண்பா.
ஆம், குரு ஐந்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ஆயுள்பாவம்
அதிகரிக்கும். கடந்த காலத்தில் குருவின் சஞ்சாரத்தால் பல துன்பங்களில்
சிக்கித் தவித்தீர்கள். தற்போது குருவின் பார்வை ராசியில் பதிவதால் உடல்
பொலிவு பெறும். ஆரோக்கியம் மேம்படும். பொருளாதாரநிலை உயர்ந்து
பணப்பற்றாக்குறை நீங்கும். புதியவகையில் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.
புதிய தொழில்களில் ஈடுபட்டால் பணம் கோடியாய் கொட்டும். குடும்பத்தேவை
நிறைவேறும். பழைய கடன்பாக்கியைத் திருப்பிச் செலுத்துவீர்கள். பிறருக்கு
வாக்கு கொடுக்கும்போது, கவனமாக இருப்பது நல்லது.காரணமே இல்லாமல் அவ்வப்போது
மனதில் பயம் உருவாகும்.
சகோதரர் வகையிலும் எச்சரிக்கை தேவைப்படும்.
அளவுக்குமீறிய உதவிகளைச் செய்து அவதிக்கு ஆளாகலாம் கவனம். சிலநேரத்தில்
தேவையற்ற வாக்குவாதம், வம்புகளைச் சந்திக்க இடமுண்டு. தாயின் உடல்நலத்தில்
அக்கறை தேவை. வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலருக்கு
வீடு, இடமாற்றம் ஏற்படும். வாகன வகையில் ஓரளவு ஆதாயபலன் பெறுவீர்கள்.
மராமத்துச் செலவைக் குறைக்க முடியாது. புதிய வீடு, வாகனம்
வாங்குவீர்கள்.குழந்தைப் பேறு வாய்க்கப் பெறாதவர்கள் குருவருளால் மழலை
பெற்று மகிழும் சந்தர்ப்பம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
பிள்ளைகள் வகையில்
மருத்துவச் செலவு இனி செய்ய இடமில்லை. அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பில்
முன்னேற்றம் உண்டாகும். மொத்தத்தில் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம்
கொள்வீர்கள். கடந்த இரு ஆண்டுகளாக இருந்து வந்த திருமணத் தடை அகலும்.
உறவினர் ஆதரவால் மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். கருத்துவேறுபாடு
நீங்கி கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும். குடும்பத்தில் நிம்மதியும்,
மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். சத்ரு ஸ்தானத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு
நீங்களே எதிரியாக இருப்பீர்கள்.
எந்த விஷயத்தையும் காரணமின்றி தள்ளிப்
போடுவதாலும், முடிவு எடுக்க முடியாமல் திணறுவதாலும் பிரச்னைக்கு
உள்ளாவீர்கள். தந்தையின் உடல்நலனுக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும்.
அதே சமயத்தில் பூர்வீகச் சொத்து பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வு உண்டாகும்.
கல்வி ஸ்தானம் மந்தகதியில் இருப்பதால் உயர்கல்வி கற்பதில் தடையுண்டாகும்.
மொத்தத்தில் குருவின் சஞ்சாரத்தால் சனியின் தாக்கம் பெருமளவு குறைந்து
விடும். பிரச்னைகள் அவ்வப்போது தலைதூக்கினாலும், அதற்கான தீர்வும்
உடனடியாகத் தென்படும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு தாராள பணவசதி,
தொழில்நுட்ப உதவி எளிதாக கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: தொழிலதிபர்களுக்கு கடின உழைப்பும்,
விடாமுயற்சியும் தேவைப்படும். தொழிலில் அபிவிருத்தி பணிகளை திறம்பட
மேற்கொள்ள புதிய திட்டம் உருவாக்குவீர்கள். எதிர்பார்த்த பணவசதி தாராள
அளவில் கிடைத்து பணிகளை மேற்கொள்வீர்கள். உற்பத்தி, விற்பனை செழித்து உபரி
பணவரவைத் தரும். நிர்வாக பணியில் புத்திரர்களுக்கு தகுந்த பயிற்சி தந்து
பொறுப்புடன் செயல்பட உதவுவீர்கள். புதிய கிளை துவங்கவும் அனுகூலம் உண்டு.
வியாபாரிகள்: சந்தையில் போட்டி குறைந்து வியாபாரத்தில்
ஆர்வமுடன் செயல்படுவீர்கள். வாடிக்கையாளர்களின் பேராதரவு கிடைத்து விற்பனை
இலக்கில் வியத்தகு சாதனை புரிவீர்கள். லாபம் அதிகமாக இருக்கும். சில
வகைகளில் கிடைக்கும் உபரி பணத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள்.
கூடுதல் கிளை துவங்குகிற முயற்சி நிறைவேறும். சக தொழில் சார்ந்தவர்கள்
ஒத்துழைப்பு தருவர். குடும்பத்தின் முக்கிய தேவைகளை தாராள செலவில்
நிறைவேற்றுவீர்கள். அரசு, நிதி நிறுவனங்களில் பெற முயற்சிக்கிற உதவி
கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள்
ஒருமித்த மனதுடன் செயல்பட்டு பணிகளை வேகமாக முடிப்பர். பணிச்சுமை எவ்வளவு
அதிகரித்தாலும் இன்முகத்துடன் முடித்து விட்டு, அடுத்த வேலையைத் தரத்தயாரா
என கேட்குமளவு மனநிலையும், உடல்நிலையும் ஒத்துழைக்கும். ஓவர்டைம், சம்பள
உயர்வு, விரும்பிய பதவி உயர்வு, விண்ணப்பித்த கடனுதவி தாமாக வந்து சேரும்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை
மதித்து நடந்து கொள்வர். தாராள பணவசதி பெற்று அத்தியாவசிய செலவுகளை
மனமகிழ்வுடன் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும்.
ஆடை, ஆபரணம் விரும்பியபடி வாங்குவீர்கள். பணிபுரியும் பெண்கள் பணித்திறமையை
வளர்த்து பணிகளை வேகமாக முடிப்பர். தாமதமான சலுகைகள், பதவி உயர்வு எளிதாக
கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி,
விற்பனையில் முன்னேற்றம் காண்பர். உபரி வருமானம் கிடைத்து மூலதன
தேவைகளுக்கு பயன்படும்.பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
மாணவர்கள்: முறையான பயிற்சியை பின்பற்றி
பாடத்திட்டங்களை மனதில் எளிதில் பதித்துக்கொள்வீர்கள். நல்ல மார்க் பெற
இடம் உண்டு. படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். சக
மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் பெற ஒருவருக்கொருவர் உதவி கரமாக
செயல்படுவர். தாய், தந்தையின் அன்பு, பாசம் மனதை நெகிழ வைக்கும்.
விளையாட்டு, தனித்திறன் வளர்ப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். பாராட்டு,
பரிசு கிடைக்கும். படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு பெற
முயற்சிப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பணிவாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: உற்சாகத்துடன் சேவை புரிந்து
ஆதரவாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேற அதிகாரிகளின்
ஒத்துழைப்பு சீராக கிடைக்கும். எதிரிகளால் வருகிற இடையூறுகளை எப்படியாவது
சரிக்கட்டி விடுவீர்கள். புத்திரர்கள் உங்களின் அரசியல் பணிக்கு அதிகளவில்
உதவிகரமாக செயல்படுவர். சொத்து வாங்க அனுகூலம் உண்டு.
விவசாயிகள்: விவசாயப் பணிகளில் ஆர்வமுடன்
ஈடுபடுவீர்கள். சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் தாமதமின்றி கிடைக்கும்.
பணவசதியும் சீராக இருக்கும். அதிக மகசூல் கிடைத்து நல்ல வருமானம்
பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் கணிசமான லாபமும்
கிடைக்கும். புதிய நிலம் வாங்க அனுகூலம் உண்டு.
பரிகாரம்: சிவபெருமானை வணங்கினால் உங்கள் நிலையில் மேலும் முன்னேற்றமாகி புகழும் கிடைக்கும்.
பரிகாரப் பாடல்:
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளிந்தாய் போற்றி
ஓவாத சந்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான
பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில்
விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக