Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 28 மே, 2013

குருபெயர்ச்சி- 2013-விருச்சிக ராசி - பலன்கள் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC


                                                         ஓம் சிவ சக்தி 


முருக பெருமானின் அம்சத்தில் பிறந்த விருச்சிக ராசி அன்பர்களே !
 
உங்கள் ராசிக்கு7ல் சஞ்சரிக்கும் குரு, மே28 முதல் ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதை அஷ்டம குரு என்பர். அவரின் சுபபார்வை 2,4,12 ஆகிய ராசிகளில் பதிகிறது. விரய ஸ்தானமான 12ல் சஞ்சரிக்கும் சனி 2,6,9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.  சொல்லவே பொன்னவனும் ஜென்மம் மூன்று சுகமான நாலாறு எட்டு பத்து வல்லவே பன்னிரண்டில் இருந்து வாழ அலைச்சலோடு சத்துரு நிஷ்டூர வாதம்புல்லவே சகோதரர் தாய் மனையாள் புத்திரரின்நலம் கெடும் பொருளும் போகும் அல்லவே மன்னவரால் பதியும் சேதம் அரிவையர் தங்களால் வியாதியாமே!என்கிறது ஒரு வெண்பா.

எட்டில் குரு வந்தால், அவரால் நடக்க வேண்டிய நன்மைகள் தடைபடும் என்று எச்சரிப்பதே இந்த ஜோதிட வெண்பாவின் நோக்கம். ஏழரைச்சனி வேறு நடப்பதால் நிலைமை கொஞ்சம் சிக்கலோ என்று எண்ண வேண்டியுள்ளது. இருப்பினும், குருவின் 12ம் இட பார்வை ஏழரையின் தாக்கத்தை குறைக்கும்.மற்ற கிரகங்களால் கடுமையை எதிர்கொண்டாலும் கேதுவின் அனுகூலத்தால் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். அதனால்,அடிக்கடி கோயிலுக்குச் செல்வதன் மூலம் பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்துக் கொள்ளலாம். படைத்தவன் தானே நம்மைப் பாதுகாக்க முடியும்! குருபலத்தால் ஆயுள்பலம் அதிகரிக்கும், இருப்பினும், ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை கொள்வது அவசியம். எட்டாம் இட குரு வாழ்வில் தடுமாற்றத்தை உருவாக்கும்.

பணப் பற்றாக்குறை உண்டாகும். கடன்விஷயத்திலும் உஷாராக இருப்பது அவசியம். சிக்கனத்தை கடைபிடித்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம். குடும்பத்தில்சலசலப்புக்கு பஞ்சமிருக்காது. பேச்சில் மிகவும் கவனம் தேவை. நிதானம் இழந்து பேசுவதால் பிரச்னைக்கு உள்ளாகலாம், கவனம். சகோதரர்கள் உங்களிடம் உரிமை என்ற பெயரில் மோதுவார்கள். அவர்களிடம் அளவாக உறவு கொள்வது நல்லது. இயன்ற உதவிகளை அவர்களுக்கு மறுக்காமல் செய்வதன் மூலம் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கலாம். முரட்டு தைரியம் அதிகரிக்கும். 

இது சில சிக்கல்களில்மாட்டி விடும். கவனம். தாயிடம் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி இணக்கம் அதிகரிக்கும். அவர்களின் தேவையை நிறைவேற்றி அன்புக்குரியவராகத் திகழ்வீர்கள். வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியைப் பயன்படுத்திக் கொள்வது போதுமானது. வீட்டில் பராமரிப்பு செலவு செய்ய நேரிடும்.குழந்தைகளின் கல்வி, ஆரோக்கிய விஷயங்களில் அதிருப்திக்கு ஆளாவீர்கள். விழிப்புடன் இருந்து அவர்களை நல்வழிப்படுத்துவது நல்லது. அதிக அலைச்சல் இருக்கும்.

 உங்கள் உடல்நிலை சீராக இருக்காது. உஷ்ண வியாதிகளால் அவதிப்படலாம். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் தடைகள் குறுக்கிடும். உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைப்பது சந்தேகம் தான். கணவன், மனைவி கருத்துவேறுபாடு கொள்வர். விட்டுக்கொடுக்கும் மனோபாவம் குறையும். குடும்ப உறுப்பினர்கள் சிலரே பிரித்தாளும் தந்திரத்தை செய்து கொண்டிருப்பர். உஷார்.நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாற வாய்ப்புண்டு. அந்தரங்கப் பணிகளை, உங்களின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்வதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும். அவருடன் கருத்துவேறுபாடு கொள்ளும் சூழ்நிலையும் இருக்கிறது. பூர்வீகச் சொத்தின் மூலம் பிரச்னைக்கு உள்ளாவீர்கள். 

தொழிலதிபர்கள்: உற்பத்தி மிக சுமாராகவே இருக்கும். லாபம் எதிர்பார்த்த அளவு இருக்காது. பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் குளறுபடி ஏற்படலாம். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். தொழில் கருவிகளை மாற்றியமைத்து உற்பத்தியைப் பெருக்கும் திட்டம் சிரமத்தின் பேரில் நிறைவேறும். தொழிற்சாலை இடவசதியை அதிகரிப்பீர்கள். பண வரவு செலவில் நேரடி கண்காணிப்பு நல்லது.

வியாபாரிகள்: சந்தையில் போட்டி அதிகரிப்பதால் விற்பனை இலக்கை அடைவதில் பின்தங்குகிற நிலை ஏற்படும். பொருட்களின் தரம் உயர்வாகவும், அளவான லாபத்திற்கு விற்பதன் மூலமும், வியாபாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். நிர்வாகச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை பயனறிந்து மேற்கொள்வதால் பணம் மிச்சமாவதுடன், உடல்நலமும் பாதுகாக்கப்படும். வியாபார அபிவிருத்திக்காக எதிர்பார்க்கிற நிதியுதவி கிடைக்கும். 

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அதிக பணிச்சுமையை எதிர்கொள்கிற நிலை உண்டு. சோம்பல் குணம் மேலோங்கும் என்பதால், மனஉறுதியுடன் அன்றைய பணியை அன்றே முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இல்லாதபட்சத்தில் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரும். சிலர் நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். சலுகைகள் அதிகம் இராது. எனவே, குடும்பத் தேவைகளுக்காக அலுவலகத்தில் கடன் வாங்க நேரும். சக பணியாளர்களுடன் சுமூக நட்பு இருக்கும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படலாம். 

பெண்கள்: குடும்பப்பெண்கள் கணவருடன் அனுசரித்து நடக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்படுவர். நல்லோரின் அன்பு, ஆசி கிடைத்து மனதில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பிறக்கும். வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு இருக்கும் என்பதால், சிக்கன செலவு செய்து சிரமம் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்வீட்டு உதவி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதால் மட்டுமே பணியில் குளறுபடி, ஒழுங்கு நடவடிக்கை வராமல் தவிர்க்கலாம். சலுகைகள் குறைவே. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனம் இட்டால் போதும். கடுமையாக உழைத்தால் தான் உற்பத்தி, விற்பனையை காத்துக் கொள்ள முடியும். 

மாணவர்கள்: உடல்நலத்தை நல்லமுறையில் பராமரித்துக்கொள்வதால் மட்டுமே படிப்பில் கவனம் ஏற்படும். படிப்புக்கான பணவசதி குறைந்த அளவில் கிடைக்கும். சிலர், பகுதிநேர வேலை பார்த்து படிப்புக்கான பணச்செலவை ஈடுகட்ட முயற்சிப்பர். சக மாணவர்களிடம் கருத்துபேதம் வராத சுமூக சூழ்நிலை இருக்கும். பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு குறை ஏற்படாமல் படிப்பில் அதிக கவனம் கொள்வது நல்லது. வண்டியை வேகமாக ஓட்டுவது கூடாது. 

அரசியல்வாதிகள்: செயல்கள் நிறைவேறுவதற்குள் பலவித சோதனை, எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும். நம்பிக்கையுடன் நடந்துகொள்வதால் மட்டுமே நன்மை கிடைக்கும். அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி ஊக்கம் தரும். ஆதரவாளர்களின் நம்பிக்கையை பெறுவது அவ்வளவு எளிதல்ல. எதிரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டுமென செயல்பட்டால் நேரமும் பணமுமே விரயமாகும். கடன் கொடுத்த பணம் வசூலாகும். வாகன வசதிபெற வழியுண்டு. 

விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான இடுபொருட்கள் கிடைப்பதில் தாமதமும் பணப்பற்றாக்குறையும் ஏற்படும். அளவான மகசூல், அதற்கேற்ப பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் நல்ல வருமானமும் பெறுவீர்கள். நிலம் தொடர்பான பிரச்னை இழுத்தடிக்கும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வணங்குவதால் பிரச்னைகளின் தீவிரம் குறைந்து விடும்.

பரிகாரப் பாடல்:

அன்பர்கள் நேயா! அம்பிகை புதல்வா!
துன்பம் அகற்றிடும் சீலா பாலா!
சிவகுமாரா முருகா வருக!
பரமா! புருஷா! வரம் தர வருக!
கலங்காது எனையே காத்திட வருக!
காவாய் முருகா கார்த்திகை குமரா!
வா வா முருகா! வல்லமை தரவே.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்