Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 27 ஏப்ரல், 2013

கடன் பிரச்சனையில் சிக்க வைக்கும் நியூமராலஜி பெயர் அமைப்புகள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC



                                                          ஓம் சிவ சக்தி



 ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத்துவம் கொடுக்க பட்டுள்ளது .அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்ட எண் கணித ஜோதிடத்தில் அதாவது நியூமராலஜியில் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  

இதில் தனத்தை குறிக்க கூடிய அதாவது பணம் , பொருளாதார வளத்தை  குறிக்க கூடிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார் . இந்த குரு பகவானை குறிப்பிடும் நியூமராலஜி எண் 3 ம் எண்ணாகும் .

அதேபோல் சோகம் துக்கம் துன்பம் துயரம் தனிமை தாழ்வு மனப்பான்மை மன குழப்பம் தற்கொலை எண்ணம் , விரயம் , போன்ற தீமையான பலன்களுக்கு காரகம் வகிப்பவர் சனி பகவான். இந்த சனி பகவானை குறிக்கும் நியூமராலஜி எண்  8 ம் எண்ணாகும் .

தனத்தை குறிக்க கூடிய குரு பகவானின் ஆதிக்க எண்ணான 3 எண்ணோடு விரயத்தை உண்டுபண்ண கூடிய சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண் சேரும்பொழுது பணம் சம்பந்தப்பட்ட சூழ் நிலையில் விரயத்தை உண்டு பண்ணி பண கஷ்டத்தை கொடுக்கும் .

இதற்க்கு உதாரணமாக 38 ம் எண்ணை கூறலாம் . ஒரு நபரின் நபருடைய பெயரின் மொத்த கூட்டு எண்கள் 38 க வருமானால் அந்த நபர் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சிக்கி கஷ்டத்தை அனுபவிக்கும் சூழ் நிலை ஏற்படும். அதாவது கடனாளியாக இருப்பார்.

கையில் காசு பணம் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்தாலும் அந்த காசு பணம் கையில் தங்காமல் ஏதாவது ஒரு   சூழ் நிலையில் விரயமாகும். அதனால் ஏற்படும்  அந்த சூழ் நிலையில் சிக்கி தவித்து , கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டு கடைசி வரை அந்த கடன் பிரச்சனையில் இருந்து மீள முடியாத சோகத்தில் தத்தளிக்கும் சூழ்நிலையும் உண்டாகும். 

இந்த 38 ம் எண்ணில் ஒரு நபருடைய பெயர் கூட்டு எண்களாக அமையும்பொழுது அந்த நபர் கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பர் என்றாலும் இந்த 38 எண்ணில்  3 ம் எண் என்பது  தனம் ,உடல் ஆரோக்கியம் குழந்தை பாக்கியம். உடல் உறுப்பில் காது  போன்றவற்றிற்கு காரகம் வகிக்கும் எண் என்பதால் இந்த எண்ணோடு அனைத்து வகையிலும்  சோகத்தையும் விரயத்தையும் உண்டு பண்ணகூடிய 8 ம் இணைந்து 38 என்று வரும்பொழுது
குடுபத்தில் சோகம் குழப்பம் புத்திர விஷயத்தில் மன வருத்தம் உடல் ஆரோக்கியத்தில் தீராத பிணி காது சம்பந்தப்பட்ட உறுப்பில் பிரச்னை போன்றவைகள் இந்த 38 ம் எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும்.

ஆதலால் இந்த கடன் பிரச்சனையில் இருந்து மீள உங்களுடைய பெயரை உங்களின் பிறந்த தேதிக்கு ஏற்றார் போல் அதிர்ஷ்டமான  முறையில் திருத்தம் செய்து

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தன நாயகாயை
ஸ்வர்ண கர்ஷன தேவ்யாயை
சர்வ தாரித்திரிய நிவாரணாயை  
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா! 

என்ற மந்திரத்தை தினமும் உச்சரித்து வர உங்கள் வாழ்வில் உள்ள கடன் பிரச்சனை நீங்கி  தரித்திரம் நீங்கி செல்வ வளம் பெருகும் .

கடன் பிரச்சனையை உண்டாக்குவதற்கு பெயர் அமைப்புகள்  ஒரு காரணம் என்றாலும் ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லகனாதிபதியும் , லக்னத்துக்கு ஆறாம் இடமும் , ஆறாம் இடத்து அதிபதியும் பாதிக்க பட்டு இருந்தால் அந்த ஜாதகர் கடன் பிரச்சனையில் தாங்க முடியாத சோகத்தை அனுபவிக்க நேரிடும் ,

ஆதலால் உங்களின் ஜாதகபடியும் , பிறந்த தேதிக்கு ஏற்றாற்போலும் உங்களின் பெயரை அதிர்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்து மேலே சொன்ன 

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தன நாயகாயை
ஸ்வர்ண கர்ஷன தேவ்யாயை
சர்வ தாரித்திரிய நிவாரணாயை  
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா! 

என்ற மந்திரத்தை தினமும் உச்சரித்து வர வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.











 
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்