Home
»
குரு பெயர்ச்சி -2012- சிம்ம ராசி பலன்கள்
» குரு பெயர்ச்சி -2012- சிம்ம ராசி பலன்கள்- ஜோதிடர் ஆர் ராவணன்
குரு பெயர்ச்சி -2012- சிம்ம ராசி பலன்கள்- ஜோதிடர் ஆர் ராவணன்
- சிம்மம் - மகம், பூரம், உத்திரம் 1
- வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
- குரு பகவான் மே 17, மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2013, மே 27 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.
- துணிச்சலுடன் வாழ்வை எதிர்நோக்கும் சிம்மராசி அன்பர்களே!
- உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்த குருபகவான் பெயர்ச்சியாகி இப்போது பத்தாம் இடத்தில் உள்ளார். கடந்த காலங்களில் அளப்பரிய நற்பலன்களை குருவருளால் பெற்றீருப்பீர்கள். பத்தாம் இடத்தில் அமர்வால் குரு, உங்கள் வாழ்வில்
- மாற்றங்களை ஏற்படுத்துவார். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு இரண்டாம் இடமான தனம், குடும்பம், நான்காம் இடமான தாய், வீடு, வாகனம், ஆறாம் இடமான கடன், பிணி, வழக்கு ஸ்தானங்களை பார்க்கிறார்.
- பத்தில் குரு பதவிக்கு இடர்' என்பது ஜோதிட சாஸ்திர மொழி என்றாலும் சந்திரனுக்கு பத்தாம் இடத்தில் குரு அமர்வதால் "கஜ கேசரி யோக' பலனைத்தரும். எனவே, நன்மையும் சிரமமும் கலந்த பலன் வாழ்வில் உண்டாகும். தாராள பணப்புழக்கம் இருப்பதால் குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்துவிடுவீர்கள். தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்தில் தேவையான நடைமுறை மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். புத்திரர் வேண்டாத நட்பும், பிடிவாத குணமும் கொண்டு செயல்படுவர். இதமான அணுகுமுறையால் அவர் களை பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்துவீர்கள்.
- ஆன்மிகம் நாட்டம் அதிகரிக்கும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவீர்கள். உடல்நலனில் அக்கறை ஏற்படும். எதிரியால் இருந்து வந்த தொல்லை குறையும். வழக்கு விவகாரங்களில் அனுகூலமான தீர்வு கிடைக்கும். கடன் தொந்தரவை ஓரளவு சரிக்கட்டுவீர்கள். தம்பதியர் ஒற்றுமை உணர்வுடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்கள் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து நடப்பர். ஆடம்பர எண்ணத்துடன் அதிக பயன் தராத பொருள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் ஏற்படும் குறுக்கீடுகளை மாற்றுத்திட்டத்தின் மூலம் முறியடிக்க முயல்வீர்கள். தொழில் சார்ந்த பயணத்தை அடிக்கடி மேற்கொள்வீர்கள்.
- தொழிலதிபர்கள்: ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ்,இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார,மின்னணு உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் உற்பத்தி தரத்தை உயர்த்துவதில் குறுக்கீடுகளைச் சந்திப்பர். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வர். நிர்வாக நடைமுறைச்செலவு அதிகரிக்கும். கடன் பெற்று அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது நல்லதல்ல. புதிய தொழில் முயற்சியை இப்போதைக்கு தவிர்ப்பது அவசியம்.
- வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, மின்சார, மின்னணு பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் விற்பனை இலக்கை எட்டுவதில் தாமதத்தை சந்திப்பர். புதிய உத்திகளின் மூலம் வியாபாரத்தை மேம்படுத்த முயற்சிப்பர். சகவியாபாரிகளின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். விரிவாக்கம், புதிய தொழில் முயற்சிகளை அடுத்த குருபெயர்ச்சிக்குப் பிறகு செய்வது நல்லது.
- பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணிசார்ந்த புதிய விஷயங்களை புரிந்து கொள்வதில் தயக்கம் கொள்வர். சகபணியாளர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். நிர்வாக அதிகாரிகளின் குறிப்பறிந்து நடப்பது மிக அவசியம். திட்டமிட்டு பணியாற்றினால் மட்டுமே நிர்ணயித்த காலவரையறைக்குள் பணியிலக்கை எட்ட முடியும். பணவரவு சீராக இருக்கும். பணிச்சுமையால் வருத்தம் ஏற்பட்டாலும், உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகையில் சில கிடைக்கும். பணியிடத்தில் பணி தவிர்த்த பிறவிஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
- பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியில் குளறுபடிகளை எதிர்கொள்வர். துறை சார்ந்த அனுபவசாலியின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவர். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். பதவி உயர்வு, சலுகை பெறுவதில் தாமதம் உண்டாகும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். தாய்வழி உறவினர்களின் சீர்முறையால் சந்தோஷ வாழ்வு உண்டாகும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் சுமாரான உற்பத்தி, விற்பனை காண்பர். பணப்பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம்.
- மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் பாராட்டும் விதத்தில் படிப்பர். மற்ற துறை மாணவர்களும் கல்வியில் வளர்ச்சி காண்பர். படிப்புக்கான பண வசதி சீராக கிடைக்கும். வெளிவட்டார விஷயங்களில் ஈடுபாடு குறையும். ஆரம்ப, மேல்நிலை பயிலும் மாணவர்கள்
- அக்கறையுடன் படித்து முன்னேற்றம் காண்பர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு.
- அரசியல்வாதிகள்: ஆதரவு மனப்பாங்குடன் நடந்த சிலரே உங்களின் எதிரியாக மாறிவிடுவர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். புத்திரர், உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகளின் மறைமுக சூழ்ச்சிக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். வழக்கு விவகாரத்தில் ஓரளவே சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு பெறுவதில் தாமதம் உண்டாகும்.
- விவசாயிகள்: விவசாயப்பணிகளை நிறைவேற்ற அதிகச் செலவும், சிரமும் ஏற்படும். மிதமான மகசூலும், அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற லாபம் குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். நில விவகாரம் சமரச முயற்சியால் தீர்ந்துவிடும். நிலம் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். அனுகூலத் தீர்வு கிடைக்கும்.
- பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் தொழில் சார்ந்த பிரச்னை அனைத்தும் நீங்கி லாபம் பெருகும்.
- செல்ல வேண்டிய தலம்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக