Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 16 மே, 2012

குரு பெயர்ச்சி 2012-- ரிஷப ராசி பலன்கள் - ஜோதிடர் ஆர் ராவணன்

      ரிஷபம் - கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2 பாதம் 

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
குரு பகவான் மே 17, மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2013, மே 27 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.    

  • ஆடம்பர வாழ்வில் நாட்டம் மிக்க ரிஷபராசி அன்பர்களே!
 
  • குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசியில் இடம் பெற்றுள்ளார். ராசியில் குருபகவான் அமர்வது "ஜென்மகுரு' என்கிற நிலையாகும். இதனால் மனக்குழப்பமும், செயல் தடுமாற்றமும் அவ்வப்போது தலைதூக்கும். ராசியில் அமர்ந்த குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணியம், புத்திரம், ஏழாம் இடமான மனைவி, நட்பு, ஒன்பதாம் இடமான பிதா, சவுபாக்ய வாழ்வு ஆகிய இடங்களை பார்க்கிறார். குருவின் பார்வை பதியும் ராசிகளின் வழியாக உங்கள் நற்பலன் கிடைக்கும்.
  • குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். கையிருப்பு கரைவதோடு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும். வாகன பயணத்தில் மிதவேகத்தைப் பின்பற்றுவது அவசியம். புத்திரர் உங்களின் சிரமத்தை அறிந்து உதவி செய்ய முன்வருவர். அவர்களின் ஒத்துழைப்பு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை காண்பர். பூர்வசொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும்.
  • உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சல் காரணமாக சோர்வு அடிக்கடி உண்டாகும். சத்தான உணவு, முறையான ஓய்வு அவசியம். மருத்துவச் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு சொத்தின் பேரில் கடன் பெறவும், சொத்துக்களை விற்கவும் நிர்ப்பந்தமான சூழ்நிலை உருவாகும். 
  • பிறர் பொருளை பாதுகாப்பது, ஜாமின் கொடுப்பது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்து போராட நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
  • தொழிலதிபர்கள்: ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், படகு, வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் செயல்பாடுகளில் தாமத நிலையை எதிர்கொள்வர். மற்ற தொழிலதிபர்களும் கடின உழைப்பால் தடைகளைத் தகர்த்தெறிய முற்படுவர். லாபத்தை தக்கவைத்துக் கொள்ள விடாமுயற்சி தேவைப்படும். அளவான உற்பத்தியில் சீரான லாபம் காண்பர். வெளியூர் பயணத்தை ஆதாயநோக்கில்மட்டும்மேற்கொள்வதுல்லது.தொழிலாளர்களின்ஒத்துழைப்பு கிடைக்கும்.
  • வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் சுமாரான விற்பனையால் மிதமான லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளும் மறைமுகப் போட்டிகளைச் சந்திப்பர். சகவியாபாரிகளின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. மாற்றுத்திட்டம் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெற முற்படுவர். அனுபவசாலிகளின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவர். தொழிலில் நிதானம், கடின உழைப்பு ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம்.
  • பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளில் தாமதநிலையைச் சந்திப்பர். நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். எதிலும் கவனமுடன் செயல்படுவதால் நிலைமை சீராகும். சக பணியாளர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது நல்லதல்ல. முக்கிய தேவைகளை நிறைவேற்ற கடன் பெற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சலுகை பெறுவதில் பொறுமை மிக அவசியம். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப ஆதாயம் கிடைக்கும்.
  • பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியை குறித்தநேரத்தில் முடிக்க இயலாமல் அவதிப்படுவர். நிர்ணயித்த காலத்திற்குள் முடிக்க முடியாமல் அவப்பெயர் காண்பர். நிர்வாகத்தினரிடம் மோதல் போக்கைத் தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வு, சலுகை பெறுவதில் நிதானம் அவசியம். குடும்ப பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலை அடைவர்.
  • மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்கள் வெளிவட்டார பழக்கவழக்கம் குறைப்பதால் மட்டுமே படிப்பில் தேர்ச்சி பெறமுடியும். மற்ற துறை மாணவர்களும் படிப்பில் மந்தநிலை காண்பர். ஆரம்ப, மேல்நிலை பயிலும் மாணவர்கள் பெற்றோர் அறிவுரையை ஏற்பது எதிர்கால நலனுக்கு வழிவகுக்கும்.
  • அரசியல்வாதிகள்: மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டிவரும். சமூகப்பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும்.அதிகாரிகளிடம் மோதல் போக்கை கைவிடுவது நல்லது. ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர்.
  • விவசாயிகள்: விவசாயப்பணிகளைச் செய்ய தேவையான பணம் பெறுவதில் சுணக்கம் உண்டாகும். மிதமான மகசூலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு.
பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் தொழில் தடைகள் நீங்குவதோடு லாபமும் அதிகரிக்கும்.


  • செல்லவேண்டிய தலம்: மதுரை மீனாட்சியம்மன் கோயில்


  • வக்ர கால பலன்
  • ராசிநாதன் சுக்கிரனுக்கு பகை கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் இன்னொருபகை கிரகமான குருபகவான் 10.10.2012 முதல் 6.2.2013 வரை வக்ரகதி பெறுகிறார்.இந்த நாட்களில் அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றுவதில் கூட தாமதம் உண்டாகும். குடும்பச் செலவுக்கு திண்டாட நேரிடும். கையிருப்பு கரைவதோடு சிலருக்கு கடன் வாங்கும் நிர்பந்தமும் உண்டாகும். வேண்டாத சிந்தனைகளால் கவலைஅதிகரிக்கும். பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள நேரிடும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழிலதிபர்,வியாபாரிகளுக்கு விடாமுயற்சி தேவைப்படும். அரசு தொடர்பான அனுகூலம் பெற வாய்ப்பில்லை. பணியாளர்கள் ஓரளவே சலுகை பெறுவர். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது அவசியம். இல்லாவிட்டால் வீண்விரயம் தான். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பதால் பிரச்னையைத் தவிர்க்கலாம்.       


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
 
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்