Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 26 ஜனவரி, 2012

கும்பகர்ணன் தூங்கியது ஏன்? ஜோதிடர் ஆர் ராவணன்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
இவன் தூக்கத்தில் கும்பகர்ணன் என்று ஒரு சிலர் சொல்வதை சொல்ல கேட்டிருப்பீர்கள்.
கும்பகர்ணன் என்பவன் ராவணனின் தம்பி ஆவான். இவன் ஆறு மாதம் தூங்குவதும் , ஆறு மாதம் தூங்காமல் விழித்து இருக்கும் இயல்பினை பெற்றவன். இவன் இப்படி ஆறு மாதம் தூங்குவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தனது அண்ணன் ராவணனைப்போல் சாகா வரம் வேண்டி பிரம்ம தேவனை நோக்கி கடுமையான தவம் இருந்தான் . பிரம்ம  தேவன் இவனது தவத்தை கண்டு மகிழ்ந்து அவன் முன்னே தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.கும்பகர்ணனின் எண்ண போக்கைஅறிந்த  தேவர்கள்  ராவணனை போல் இவனும் சாகா வரம் வாங்கி விட்டால் தேவர் குலத்துக்கே அழிவு வந்துவிடும் என  அஞ்சினர். அதற்காக தேவர்கள்  சரஸ்வதி தேவியின்  உதவியை நாடி அவன் அந்த வரத்தை வாங்காமல் இருக்க உதவி செய்யும்படிவேண்டினர். சரஸ்வதி தேவியும் அதற்க்கு ஒப்புக்கொண்டு பிரம்ம தேவன் கும்பகர்ணனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்கும்  வேளையில் சரஸ்வதி தேவி அவன் நாவில் தாண்டவமாடியதால்  நித்தியத்துவம் வேண்டும் என்பதற்கு பதிலாக , நாக்கு குழறி நித்திரைத்துவம் வேண்டும் என்று கேட்டுவிட்டான். அதனாலலேயே அவன்   தூங்கும் படி ஆகிவிட்டது.   

ஜோதிட ஆலோசனைகளுக்கு எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  தொலைபேசி எண் +91 8122733328 .  இந்தியா. தமிழ் நாடு

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  
                                                 
                                                 ஜோதிடர் ஆர். ராவணன் BSC  
                                                 தொலைபேசி எண் +91 8122733328 
                                                 இந்தியா. தமிழ் நாடு

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்