வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
ரிஷபம்
அஸ்வினி, பரணி , கார்த்திகை – முதல் பாதம் – நட்சத்திரங்களில் ரிஷப ராசியில் பிதந்தவர்களுக்கு…….
மற்றவர்களின் புகழ்ச்சிக்காகத் தன்னையே அர்ப்பணிக்கும் உங்களுக்கு கஷ்டமான பலன், நன்மையான பலன் என மாறி மாறி நடக்கும். பொருளாதாரத்தைப் பொறுத்த மட்டில் எதிர்பாராத செலவினங்கள் உங்களுக்கு வந்து கொண்டு இருக்கும். பொருளாதாரத்தில் நீங்கள் ஒரு கணக்குப் போட்டால் நடப்பது வேறு ஒரு கணக்காக எதிர்மாறாக அமையும். பொருளாதாரத்தில் மிகவும் கவனம் தேவை. யாருக்கும் எந்த ஜாமீன் கையொழுத்தோ வாக்குறுதிகளோ எவ்விதமான விஷயத்திலும் போடாதீர்கள். எதிர்பாராத விதமாக பயணத்தின்போது விபத்துகளில் மாட்டிக் கொள்ளும் அபாயம் உள்ளது; கவனம் தேவை.
உடல்நிலையில் சற்று கவனம் தேவை. கலைத் துறையினருக்கு நல்லதொரு ஏற்றம் மிக்க காலம். விருதுகளும் பேரும் புகழும் வந்து சேரும். தொழில் வகையில் எதிர்பாராத புதிய கடன் ஏற்படும். வீடு, கட்டிடங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யாமல் இருப்பது நலம். தாயார் உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்பு ஏற்படும். பயப்படத் தேவையில்லை. குழந்தைகளின் உடல்நிலையிலும் சற்று கவனம் தேவை. திருமணமாகாத ஆண்- பெண் இருபாலருக்கும் திருமண நிச்சய ஏற்பாடுகள் ஆகும். பொருளாதார சூழ்நிலை கடந்த காலத்தைவிட சற்று ஏற்றம் தரும்.
தகப்பனார் வகையில் எதிர்பாராத உதவிகள் மற்றும் பணவரவு ஏற்படும். தெய்வீக அனுகூலம் ஏற்படும். புனித ஸ்தலங்களுக்குச் செல்லும் யோகமும் அமையும். கணவன்- மனைவி உறவில் நெருக்கமான சூழ்நிலை ஏற்படும். உங்கள் குழந்தைகளின் கல்வி நல்ல முறையில் செயல்படும். என்றாலும் தேர்வு நேரம் நெருங்குவதால் கடும் முயற்சி எடுத்துப் படித்தால் பாஸ் பண்ணுவதோடு நல்ல மதிப்பெண்களையும் பெறமுடியும். துடிப்புடன் செயல்பட்டால் வெற்றி உங்கள் கையில் வந்து சேரும். மூத்த சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
உங்களுக்கு எதிர்பாராத கவுரவத் தலைவர் பதவி தேடிவரும். புகழ், கீர்த்தியில் எந்தவித குறைபாடும் இல்லை. அரசாங்க வகையில் எதிர்பாராமல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகும். வி.ஜ.பி.யின் தொடர்பு மூலம் அந்தப் பிரச்சினை சுமூகமாகத் தீர்க்கப்படும். அரசுப் பணியில் இருப்பவர்கள் மூத்த அதிகாரியின் கெடுபிடிக்கு உள்ளாவார்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வியாபாரிகளும் அரசு வகையில் எச்சரிக்கையாகச் செயல்படுவது நல்லது. தொழில் வகையில் புதிய நண்பர்கள் மூலம் கூட்டு உடன்படிக்கை ஏற்படும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகளும் ஆதாயமும் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர், வாகன வகையில் தொழில் புரிவோருக்கு சற்று கவனம் தேவை. புதிய கடன்கள் தொழிலுக்காக ஏற்படும். அரசியலில் ஈடுபாடு உடையவர்களுக்கு சரிவு ஏற்படும் காலம்! கவனமுடன் செய்லபட வேண்டும். உடல் நலத்தில் கவனம் தேவை. அகலக்கால் வைக்காமல் திட்டமிட்டு செலவு செய்யுங்கள். பணத்தை மூலதனமாக வைத்து தொழில் செய்வோருக்கு கவனம் தேவை. தங்க நகை வியாபாரம் செய்பவர்களுக்கு மிதமான ஏற்றம் காணப்படும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். ஸ்பெகுலேஷன் தொழில் செய்வோருக்கு ஏற்றம் காணப்படும்.
ஜூன்
பிறருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்து, நீங்கள் கஷ்டத்தில் மாட்டிக் கொள்வீர்கள். எனவே நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயம்- யாருக்கும் வாக்குறுதியோ சத்தியமோ செய்யாதீர்கள். காற்றில் பறக்க விடும் காலம். மிகவும் கோபப்பட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காலமாகும். கவனமுடன் இருப்பது நலம். உங்கள் குழந்தையின் உடல்நலம் நன்றாக இருக்கும். புதிய குழந்தை பிறக்கும் அல்லது கரு உருவாகும்! நகை, ஆபரணம் வாங்கும் காலம். ஆனால் அந்த சமயம் புதிய கடன் ஏற்படும். பூர்வீகச் சொத்துகளில் ஒன்றை விற்கும் சூழ்நிலையும் உருவாகும்.
வாகனம் வைத்திருப்பவர்களுக்கு கைப்பிடித்தம் அல்லது நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளுக்கு திருமண நிச்சய ஏற்பாடுகள் நடைபெறும். தொழில் கஷ்டத்திற்கும் பிள்ளைகளின் திருமண ஏற்பாட்டிற்கும் மாமனார் வழியிலோ அல்லது வெளியில் கேட்ட இடத்திலோ பணவரவு கிடைக்கும். மூத்த சகோதரன், சகோதரி வகை உறவில் விரிசல் ஏற்படும். அவர்களுக்கு தொழில் வகைப் பிரச்சினைகள் உண்டாகும். தாயாரின் உடல்நலத்தில் மீண்டும் மிக கவனமுடன் இருப்பது நல்லது. அறுவை சிகிச்சை போன்ற கண்டங்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் அமைப்பு உள்ளது.
ஆகஸ்ட்
இளைய சகோதரர் வகையில் நல்ல சுமூகமான உறவும் உதவியும் ஏற்படும். தங்களின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில் பாதிப்புகள் ஏற்படும்; கவனம் தேவை. கல்வியைப் பொறுத்தமட்டில் பாதிப்புகள் அவ்வளவாக இருக்காது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அரியர்ஸ் எதுவும் வந்தால் அடுத்த செமஸ்டரில் சேர்த்து எழுதிப் பாஸ் பண்ணலாம். சிலர் மேற்படிப்பிற்காக வெளிநாடும் செல்லலாம். தொழில் துறையில் அகலக் கால் வைக்காமல் இருப்பது மிகவும் நல்லது. தெய்வ பலம் உங்களை வழிநடத்திச் செல்லும். அரசு வகையில் இருந்து வந்த பாதிப்புகள், தொந்தரவுகள் மாறி சுமூகமான நிலை உருவாகும்.
எந்த ஒரு விஷயத்திலும் புத்தி சாதுர்யமாகவும் வசீகரமாகவும் பேசினால் தங்கள் காரியங்களை சாதித்துவிடலாம் என்று நினைத்து சிலசமயம் வம்பில் மாட்டிக் கொள்வீர்கள். இது உங்களின் புகழ், கவுரவத்தில் பெரிய பாதிப்புகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்தும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் உயிர் பாதுகாப்பு உண்டு. உடலில் அறுவை சிகிச்சை போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆண்கள் பெண்களிடமும், பெண்கள் ஆண்களிடமும் பழகுவதில் கவனம் தேவை. அவமானம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
அரசு வகையில் பெரிய பாதிப்புகள் உண்டாகும். அரசிற்கு எதிராகச் செயல்படும் சூழலும் உண்டாகும். பொருளாதார பாதிப்புகள் பெரிய அளவில் இருக்காது. பணத்தைப் பொறுத்த வரையில் தட்டுப்பாடின்றிப் புரளும். தொழில் வகையில் இடமாற்றம் உண்டாகும் அல்லது புதிய கூட்டுத்தொழில் முயற்சி உருவாகும். புதிய நிலம் வாங்குதல், வீடு, மனைகள் வாங்குதல் அல்லது வீடு கட்டும் சூழ்நிலை போன்றவை ஏற்படும். காண்ட்ராக்டர்களுக்கு வீடு கட்டி விற்பதில் நல்ல முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும். தகப்பனார் உறவில் விரிசல் ஏற்பட்டு, சொத்து விவகாரமாக கோர்ட் கேஸ் வரை செல்லும்.
பிள்ளைகளின் வகையில் அதிருப்தியான சூழ்நிலை உருவாகும். அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றமும் பாதிப்பும் மாறி மாறி உருவாகும். கொஞ்சநாள் நன்றாக இருந்தால் கொஞ்சநாள் உடல்நலனில்லாமல் போகும். சந்திரனைப் போல் மாதத்தின் பாதிநாள் வளர்பிறையும் பாதி நாள் தேய்பிறையும் போல்! கணவன்- மனைவிக்கு இடையே உறவில் நெருக்கம் இருக்காது. சிறிய விஷயங்களுக்காக பிரச்சினைகள் உருவாகும். பாதிப்பு ஏற்படும். கணவன் உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று நெருக்கடியான சூழ்நிலை உருவாகிறது.
தாயார் வழி உறவில் உதவியும் நன்மையும் உண்டாகும். மாமனார் உறவில் விரிசல் ஏற்படும். தாத்தா அல்லது பாட்டிக்கு கண்டம் ஏற்படும். சகோதர, சகோதரி வகையில் இருந்த உறவின் விரிசல் மாறி நல்லுறவு மலரும். பாசப்பிணைப்புகள் அதிகரிக்கும். தெய்வ பலம் குறைவாக உள்ளதால் அதை விருத்தி செய்ய அனுதினமும் இறைவனைத் துதிக்க வேண்டும். ஆண்- பெண் திருமணத்திற்காகக் காத்திருப்போருக்கு திருமண வாய்ப்புகள் கூடும். அரசுப் பணியைத் தவிர, மற்ற பணிகள், வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் பெரிய பாதிப்பு ஏற்படாது. நிலம், வாகனம் மற்றும் புரோக்கர் தொழில் பார்ப்பவர்களுக்கு தொழில் சிறப்பாக அமையும். வெளிநாட்டுத் தொடர்புகளும் ஏற்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக