உணவில் புதன் கிரகத்திற்கு உரிய தானியமான பச்சைப்பயிறு வாரம் ஒருமுறை சேர்த்துகொள்வது மிகவும் நன்று.
திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெள்ளரை என்னும் திருத்தலம் உள்ளது. இங்கு அருள் பாலிக்கும் இறைவனின் திருநாமம் செந்தாமரைக் கண்ணன் ( புண்டரீகாட்ச பெருமாள்), இறைவியார் செங்கமலவல்லி தாயார் ஆவர். இத்தலம் சுமார் 11,800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறுகிறார்கள்.
ஸ்ரீ ராமர் அவதரித்ததற்கு ஏழு தலைமுறைக்கு முன்னர் சிபி சக்ரவர்த்தி (புறாவுக்காக தன் தொடையை அறுத்து அளித்த வள்ளல் என்று இவரை கூறுவர்) என்னும் அரசன் இருந்ததாக புராண நூல்கள் கூறுகின்றன. இத்தளத்தில் சிபி சக்கரவர்த்தி, பூமா தேவி மற்றும் மார்க்கண்டேய மகரிஷி இறைவனின் பாதத்திற்கு அருகில் அமர்ந்து கொண்டு இருக்கும் சிற்பங்கள் உள்ளன.
நீங்கள் உத்தராயண காலத்தில் பிறந்தவராக இருந்தால் (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) உங்களது ஜாதகத்தில் புதன் எந்த நட்சத்திர சாரம் பெற்று உள்ளரோ அந்த குறிப்பிட்ட நட்சத்திரம் வரும் நாளில் இத்திருத்தலத்திற்கு சென்று, பிரார்த்தனை பலிபீடத்தை 28 முறை சுற்றி வந்த பின்னர், உத்தராயண வாசல் வழியாக சென்று இத்தல இறைவனை வழிபாடு செய்வது அதிக நன்மையை தரும். குறைந்தது இரண்டு முறையாவது நீங்கள் செல்லவேண்டும்.
இதுவே நீங்கள் தட்சிணாயன புண்ய காலத்தில் பிறந்தவர் என்றால் (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) உங்களது ஜாதகத்தில் புதன் எந்த நட்சத்திர சாரம் பெற்று உள்ளரோ அந்த நட்சத்திர நாளன்று, பிரார்த்தனை பலி பீடம் 28 முறை வலம் வந்து, தட்சிணாயான வாசல் வழியாக சென்று இறைவனை பிரார்த்தனை மேற்கொள்வது மிகுந்த நன்மையை தரும்.
நான் எனது குரு நாதரின் வழிமுறைப்படி இரண்டு முறை (தட்சிணாயான காலத்தில்) சென்று வந்தேன்.
குருவின் வாக்கு அர்ஜுனன் வில்லை விட வலிமையானது என்று முழுவதும் நான் தற்போது உணர்கிறேன்.
தாங்களும் இத்தலத்திற்கு சென்று வழிபாடு செய்து எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எமது குருமார்கள் அனைவரையும் பிரார்த்திக்கிறேன்.
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com