செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

புதன் கிரகத்தை வலுப்படுத்த ஜாதக ரீதியாக என்ன செய்யவேண்டும் . ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC




புதன் கிரகத்தின் அதிதேவதை ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆவார். எனவே ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது மிகுந்த நன்மையை அளிக்கும்.

உணவில் புதன் கிரகத்திற்கு உரிய தானியமான பச்சைப்பயிறு வாரம் ஒருமுறை சேர்த்துகொள்வது மிகவும் நன்று.

திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெள்ளரை என்னும் திருத்தலம் உள்ளது. இங்கு அருள் பாலிக்கும் இறைவனின் திருநாமம் செந்தாமரைக் கண்ணன் ( புண்டரீகாட்ச பெருமாள்), இறைவியார் செங்கமலவல்லி தாயார் ஆவர். இத்தலம் சுமார் 11,800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறுகிறார்கள்.

ஸ்ரீ ராமர் அவதரித்ததற்கு ஏழு தலைமுறைக்கு முன்னர் சிபி சக்ரவர்த்தி (புறாவுக்காக தன் தொடையை அறுத்து அளித்த வள்ளல் என்று இவரை கூறுவர்) என்னும் அரசன் இருந்ததாக புராண நூல்கள் கூறுகின்றன. இத்தளத்தில் சிபி சக்கரவர்த்தி, பூமா தேவி மற்றும் மார்க்கண்டேய மகரிஷி இறைவனின் பாதத்திற்கு அருகில் அமர்ந்து கொண்டு இருக்கும் சிற்பங்கள் உள்ளன.

நீங்கள் உத்தராயண காலத்தில் பிறந்தவராக இருந்தால் (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) உங்களது ஜாதகத்தில் புதன் எந்த நட்சத்திர சாரம் பெற்று உள்ளரோ அந்த குறிப்பிட்ட நட்சத்திரம் வரும் நாளில் இத்திருத்தலத்திற்கு சென்று, பிரார்த்தனை பலிபீடத்தை 28 முறை சுற்றி வந்த பின்னர், உத்தராயண வாசல் வழியாக சென்று இத்தல இறைவனை வழிபாடு செய்வது அதிக நன்மையை தரும். குறைந்தது இரண்டு முறையாவது நீங்கள் செல்லவேண்டும்.

இதுவே நீங்கள் தட்சிணாயன புண்ய காலத்தில் பிறந்தவர் என்றால் (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) உங்களது ஜாதகத்தில் புதன் எந்த நட்சத்திர சாரம் பெற்று உள்ளரோ அந்த நட்சத்திர நாளன்று, பிரார்த்தனை பலி பீடம் 28 முறை வலம் வந்து, தட்சிணாயான வாசல் வழியாக சென்று இறைவனை பிரார்த்தனை மேற்கொள்வது மிகுந்த நன்மையை தரும்.

நான் எனது குரு நாதரின் வழிமுறைப்படி இரண்டு முறை (தட்சிணாயான காலத்தில்) சென்று வந்தேன்.

குருவின் வாக்கு அர்ஜுனன்  வில்லை விட வலிமையானது  என்று முழுவதும் நான் தற்போது உணர்கிறேன்.

தாங்களும் இத்தலத்திற்கு சென்று வழிபாடு செய்து எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எமது குருமார்கள் அனைவரையும் பிரார்த்திக்கிறேன்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக