அதாவது ஜாதகர் பிறந்தபோது சந்திரன் கீழ்வானத்துக்கு அருகில் இருந்தது என்பது பொருள்.
இதில் சந்திரன் லக்கினத்தை விட அதிக பாகை பெற்றிருந்தால் (அதாவது சந்திரன் இன்னும் உதயமாகவில்லை) அது பாவகத்திலும் லக்கின பாவகத்திலேயே பெரும்பாலும் அமையும்.
லக்கின பாகை சந்திரனை விட அதிகமானால் (அதாவது சந்திரன் ஏற்கனவே உதயமாகிவிட்டது) சந்திரன் பாவகத்தில் 12க்கு போய்விடும். இரண்டு நிலைகளிலும் சந்திர தசையின் பலன்கள் மாறிவிடும்.
லக்கினத்தில் நின்ற கிரகம் ஜாதகரின் மறைக்க முடியாத அடையாளங்களை சொல்லும் .
தனித்த சந்திரன் லக்ன ராசியில் மற்றும் பாவகத்திலும் அமைந்தால் ஜாதகர் தாயின் மீது மிகுந்த பற்று கொண்டவர். சந்திரனின் காரக மற்றும் பாவகத்துவங்களே அவரை வழிநடத்தும்.
அவரிடம் அந்த விடயங்களை மட்டம் தட்டி பேசினால் விரோதம் வந்துவிடும்.
இலக்கினத்தை பொறுத்து சந்திரன் நின்ற பாவக பலன்கள் மாறும். கடக லக்ன சந்திரனும் ரிஷப லக்கின சந்திரனும் மிகவும் வலிமையானவர்கள்.
விருச்சிக லக்ன சந்திரன் மேலே போய் பெயரை கெடுத்துவிடும்.
பொதுவாக லக்ன சந்திரன் வட்டமான அழகிய முக அமைப்பை தரும். பெண்தன்மை (கருணை) சற்று தூக்கலாக வெளிப்படும். ஜாதகருக்கு பயணம் போவது பிடிக்கும்.
அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பது பிடிக்கும். வேகமாக சிந்திப்பவர் மற்றும் முடிவெடுப்பவர். உணவு பிரியர். மிஸ்டர் பொது ஜனம்.
சிம்ம, தனுர், கும்ப மற்றும் விருச்சிக லக்னங்களை தவிர்த்து பிற ராசிகளில் அமையும் லக்கின சந்திரன் சிறப்பானது!
மேலும்
- ஒரு ஜாதகத்தில் லக்கினமும் ராசியும் தான் மிகவும் முக்கியமாக கவனிக்க பட வேண்டிய வீடுகள். இருப்பினும் ஜோதிட சாஸ்திரப்படி விதி என்னும் லக்கினம், மதி என்னும் சந்திரன் மற்றும் கதி என்னும் சூரியன் ஆகிய 3 ராசி வீடுகள் பற்றிய விஷயங்களை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும் என்று கூறுவர்.
- லக்கின அதிபதி காரகத் துவத்தையும், ராசி அதிபதி காரகத் துவத்தையும் தான் ஜாதகர் அதிகம் பிரதிபலிப்பார்.
- உதாரணமாக ஒருவர் சிம்ம லக்கினம் மற்றும் மீன ராசி என்னும் பட்சத்தில் அவர் சூரியன் மற்றும் குருவின் காரகத் துவங்கள் உள்ள விஷயத்தை தான் மிகவும் அதிகமாக வெளிப்படுத்துவார். அதாவது சூரியனின் ஆளுமை, அதிகாரம், மற்றும் நிர்வாக திறன் போன்ற விஷயங்களையும், எல்லோரிடமும் அன்பாக பழகுதல், அனைவரையும் நேசித்தல், பிறருக்கு வழிகாட்டும் குருவாக இருத்தல் போன்ற குருவின் தன்மைகளும் குணங்களும் கூட ஜாதகரிடம் அதிகம் இருக்கும்.
- அதுவே லக்கினமும் ராசியும் ஒன்றாக இருக்கும் பொழுது ஜாதகர் ஒரே ஒரு கிரகத்தின் தன்மைகளை தான் அதிகம் வெளிப்படுத்துவார்.
- உதாரணமாக லக்கினம் மற்றும் ராசி இரண்டும் புதனின் வீடுகளாக இருக்கும் பட்சத்தில் அவரது ஜெனன கால ஜாதகத்தில் புதனின் வலுவை பொறுத்து அவரது புத்திசாலி திறன், எண்ணம், சிந்தனை, செயல், கல்வி அறிவு, தொழில் திறமை, கலைகளில் தேர்ச்சி, வியாபார யுக்தி போன்ற விஷயங்கள் அவரிடம் அதிகம் வெளிப்படும்.
- இறுதியாக லக்கினமும் ராசியும் ஒரே கிரகத்தின் கீழ் இருக்கும் பட்சத்தில் ஜாதகரை அந்த ஒரே கிரகமான லக்கின மற்றும் ராசி அதிபதி கிரகம் தான் அவரை அதிகம் ஆளுமை செலுத்தும். அதுவே லக்கினமும் ராசியும் வேறு வேறாக இருக்கும் பொழுது இரு வேறு கிரகத்தின் தன்மைகள் அந்த இரு கிரகத்தின் வலுவை பொறுத்து அவரிடம் இருக்கும்.
- இருப்பினும் பலன்கள் பற்றி பார்க்கும் பொழுது தசா- புக்தி மற்றும் கோட்சாரம் ஆகிய இரண்டையும் வைத்து அதனுடன் சேர்ந்து கிரகங்கள் பெற்று இருக்கும் நட்சத்திர பாத சாரம், ஷட் பலம், பாவ பலம், அஷ்டக வர்க்கம் மற்றும் 5 பங்கு நட்புறவு அட்டவணை போன்ற ஏராளமான கணித வழிமுறைகளை ஆராய்ச்சி செய்த பின்னரே பலன்கள் பற்றி கூற முடியும்.
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக