வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
ஒரு செயலை தொடங்க வேண்டுமானாலும் எந்த ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டுமானாலும் அதனுடைய முழுமையான பலன் அந்த செயல் தொடங்கபட்ட நேரம் அந்த செயல் தொடங்கப்பட்ட கிரகங்களின் ஹோரை, அந்த செயல் தொடங்கப்பட்ட தேதி, அந்த தேதியின் மொத்த கூட்டு எண், அந்த தேதியின் பிரமிடு எண் போன்றவற்றை பொறுத்தே அமைகிறது
TNPSC(தமிழ் நாடு அரசு தேர்வாணைய குழு) நடத்தும் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலை கிடைக்க ஜோதிட ரீதியான சில ஆலோசனைகள்.
தேர்வுக்கான விண்ணப்பம் வாங்கப்படும் தேதி மற்றும் தேதியின் கூட்டு எண் பிரமிடு கூட்டு எண் போன்றவை சுப கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள எண்களான 3 6 5 2 போன்ற எண்களின் ஆதிக்கத்தில் அமைய வேண்டும். அதே போல் விண்ணப்பம் நேரம் குரு சுக்ரன் புதன் சந்திரன் போன்ற சுப கிரகங்களின் ஹோரை நேரமாக இருக்க வேண்டும்.ஜெனன ஜாதகத்தில் தேய் பிறையில் பிறந்த ஒருவருக்கு 2 எண் எந்த வகையிலும் பலன் தராது.
மேற்கண்ட அனைத்து நல்ல கால ஒருவருக்கு அனைத்து வகையிலும் பொருந்தி வருமா என்று கேட்டால் நல்ல தேதி நல்ல கிரகங்களின் ஹோரை நல்ல நேரம் நல்ல கிழமை இவை அனைத்தும் ஒருவருக்கு பொருந்தி வருவது சாதாரண காரியமில்லை.
அதே போல் ஒரு செயலை தொடங்குவதற்கு முன் அவர்களுடைய அவர்களுடைய குல தெய்வத்தை முதலில் வணங்கி விட்டு பின்பு வெற்றிக்கு நாயகனான விநாயக பெருமானை வணங்கி விட்டு பின்பு அவர்கள் இஷ்ட கடவுளை வணங்கி விட்டு எந்த ஒரு செயலை தொடங்கும் பொழுது வெற்றி வாய்புகள் பிரகாசமாக இருக்கும்.
அந்த பலன்கள் அந்த ஜாதகரின் ஜாதகத்தில் உள்ள பூர்வ ஜென்ம புண்ய பலன்களை பொருத்து அமையும்.
ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கபட்டுள்ள 27 நட்சத்திரங்களில் 28 வது நட்சத்திரம் என்று சொல்ல கூடிய அபிஜித் நட்சத்திரத்தின் நேரம் என்று சொல்ல கூடிய காலை 11 - 12 - வரை உள்ள நேரத்தில் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்ல கூடிய விடியற் காலை 4.30- 6.00- மணிக்குள் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் அது வெற்றியை தரும்.
மொத்தத்தில் ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் அந்த ஜாதகர் அரசு வேலைக்கு தான் செல்வார் என்ற விதி பலன் அவருடைய ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகர் அரசு வேலை வாய்ப்பு சம்பந்தபட்ட முயற்சியில் அவர் இறங்கும்பொழுது நல்ல நேரம் கிழமை நல்ல ஹோரை அனைத்தும் இயற்கையாகவே சிறப்பாக அமைந்து விடும்.
ஓம் நம சிவாய
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
0 comments:
கருத்துரையிடுக