குழந்தைகள் கல்வி பயிலும் காலங்களில் பிரச்சனையே ஞாபக சக்தி குறைவாக இருப்பதுதான். இதற்க்கு பல வகை பயிற்சிகள் இருந்தாலும் இறை உணர்வும் மிக முக்கியம். கல்வியில் ஞாபக சக்தி அதிகமாக வளர கீழ் கண்ட சரஸ்வதி மந்திரத்தை தினமும் உச்சரிக்க ஞாபக சக்தி அதிகமாக வளரும்.
ஸ்ரீ வித்யா ரூபிணி சரஸ்வதி
சகலா வள்ளி சார பிம்பாதரி
சாரதாதேவி சாஸ்திரவல்லி
வீணா புஸ்தகராணி வாணி
கமலபாணி வாக்தேவி
புஸ்தகஹஸ்தே நமோஸ்துதே
இந்த சரஸ்வதி மந்திரத்திற்கான பொருள்.
கல்வி என்ற செல்வத்தின் வடிவமான சரஸ்வதியே சகல கலைகளுக்கும் தலைவியே! பால் போன்ற வெண்ணிற ஆடை அணிந்த மாசற்றவளே! சாரதை என்னும் வீணையை ஏந்தியவளே! சாஸ்திரங்களுக்கு அரசியே! இசைக்கும் இனிய நூல்களுக்கும் பாட்டுக்கும் தலைவியே! வெள்ளை தாமரையில் அமர்ந்து இருப்பவளே! நல்ல சொற்களுக்கு உரியவளே! விரும்பிய வரங்களை கொடுப்பவளே! புத்தகத்தை கையில் உடையவளே! நல்லறிவு தருபவளே! உன்னை வணங்குகிறேன்.