ஓம் சிவ சக்தி
ஒரு ஜனனமான குழந்தையின் ஜாதகத்தை கொண்டு அந்த குழந்தை எந்த இடத்தில் எந்த சூழ்நிலையில் பிறந்ததிருக்கும் என்று சொல்லலாம்.
பொதுவாக குழந்தை பிறப்பது அந்த பெண்ணின் தாய் வீட்டிலும் அல்லது பெண்ணின் கணவனின் வீட்டிலும் இருக்கலாம்.
சுருக்கமாக சொல்ல போனால் தந்தை தாய் இவர்களின் கோள் வலிமையை கொண்டு அந்த குழந்தை யார் வீட்டில் பிறந்திருக்கும் என்பதை அறியலாம் .
பகலில் பிறந்தவர்களுக்கு சூரியனும் இரவில் பிறந்தவர்களுக்கு சனியும் வலிமை இருந்தால் அந்த குழந்தை தன்னுடைய தந்தை வீட்டில் பிறந்திருக்கும்.
பகலில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரனும் வலிமை பெற்று இருந்தால் அந்த குழந்தை தன்னுடைய தாய் வீட்டில் அதாவது தன்னுடைய அம்மாவை பெற்ற பாட்டி வீட்டில் பிறந்திருக்கும் என்று பிருகத் ஜாதக ஜோதிட நூல் குறிப்பிடுகிறது .
லக்னம் அல்லது சந்திரனுக்கு 12 ல் சனி பகவான் இருக்க அந்த சனியை தீய கோள்கள் பார்க்க அந்த குழந்தையானது சிறை சாலையில் பிறந்திருக்கும்.
கடகம் மீனம் விருச்சிகம் மகரம் போன்ற நீர் ராசிகள் லக்னமாகி அதில் சனியிருந்து அந்த சனி பகவானை புதன் பார்த்தால் அந்த குழந்தையானது ஆண் பெண் சயனிக்கும் வீட்டில் பிறந்திருக்கும்.
மிதுனம் கன்னி துலாம் கும்பம் இவற்றில் ஒன்று லக்னமாகி அதில் சனி பகவான் இருக்க அந்த சனி செவ்வாய் பார்க்க அந்த குழந்தை இடுகாட்டுக்கு அருகில் பிறந்திருக்கும் .
மிதுனம் கன்னி துலாம் கும்பம் ஆகியவற்றில் ஒன்று லக்னமாகி அதில் சனி பகவான் இருந்து அந்த சனி பகவானை புதன் பர்ர்க்க அந்த குழந்தை அழகு பொருள்களால் அலங்கரிக்கப்பட்ட பலவித சிறப்புகள் பொருந்திய வீட்டில் பிறந்திருக்கும்.
ஒரு ஜனனமான குழந்தை மேலே சொல்லப்பட்ட சூழ்நிலைகள் உள்ள இடத்தில் பிறந்திருந்தாலும் அந்த குழந்தையின் லக்னத்தை நற்கோள்கள் பார்த்தால் தாய்க்கு எவ்வித துன்பமும் இன்றி அந்த குழந்தை பிறந்திருக்கும்.
லக்னத்தை சனி செவ்வாய் பார்த்தால் தாய் துன்புற்று அந்த குழந்தையை பெற்றிருப்பாள்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







