Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

சாபத்தின் காரணமாக புத்திர பாக்கியம் கிடைப்பதில் தோஷம் உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 5 ம் இடம் என்பது அவருக்கு அமைய இருக்கும் வாரிசுகளை பற்றி அறிய கூடிய இடமாகும் . இந்த இடத்தில் இருக்கும் கிரகங்களை பொறுத்து அவருக்கு பிறக்கும் சந்ததிகள் எப்படி இருக்கும் என்பதையும் புத்திர பாக்கியம் கிடைப்பதில் சாப கேடு ஏதாவது இருக்கிறதா ? என்பதை தெரிந்து கொள்ளலாம் .

சூரியன் பாதிக்கப்பட்டு 5 ம் இடத்தில் இருந்தாலும் அல்லது 5 ம் வீட்டுக்கு அதிபதியான கிரகத்துடன் கூடி இருந்தாலும் சிவபெருமான் கருடன் ஆகியோரை வழிபடாதது மற்றும் இறந்து போன முன்னோர்களின் சாபத்தினால் புத்திர தோஷம் உண்டாகும் . 

சந்திரன் பாதிக்கப்பட்டு 5 ம் இடத்தில் இருந்தால் பார்வதி தேவி - தனது தாய் மற்றும் ஒரு சுமங்கலி பெண் ஆகியோரின் கோபம் - மன பாதிப்பு காரணமாக அவர்கள் இட்ட சாபத்தின் காரணமாக புத்திர தோஷம் ஏற்படும் . 

செவ்வாய் பாதிக்கப்பட்டு 5 ம் இடத்தில இருந்தால் சொந்த கிராமத்தில் உள்ள தெய்வத்தை வணங்காமல் இருப்பதாலும் முருக வழிபாட்டை செய்யாமல் இருப்பதாலும் புத்திர தோஷம் இருப்பதை தெரிந்து கொள்ளலாம் .

புதன் கெட்டு 5 ம் இடத்தில் இருந்தால் குழந்தைகளையோ கருவையையோ அழித்த சாபத்தின் காரணமாகவும் மஹா விஷ்ணுவுக்கான வழிபாடுகளை நிறைவேற்றாமல் இருப்பதாலும் நீர் வாழ் உயிரினங்களை கொன்ற பாவத்தின் காரணமாக ஏற்பட்ட சாபத்தின் காரணமாக புத்திர  தோஷம் ஏற்படும் 

குரு 5 ம் இடத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால் உயர்ந்த குரு ஆசிரியர்கள் நண்பர்கள் ஆகியோருக்கு கெடுதல் செய்வதனாலும் புனித மரங்களை வெட்டியதன் காரணமாக ஏற்பட்ட சாபத்தினால் புத்திர தோஷம் ஏற்படும் . 

சுக்கிரன் 5 ம் இடத்தில இருந்து புத்திர தோஷத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்தால் பெண்களை - பசுக்களை துன்புறுத்தியதன் காரணமாகவும் அழகிய மலர் செடிகளை வெட்டியதன் காரணமாகவும் ஏற்பட்ட சாபத்தின் காரணமாக புத்திர தோஷம் ஏற்படும் . 

சனி 5 ம் இருந்து புத்திர தோஷம் ஏற்பட்டால் பிணங்கள் மற்றும் பிசாசுக்களின் சாபத்தினால் புத்திர தோஷம் ஏற்பட்டதாக இருக்கும் . 

ராகு 5 ம் இடத்தில் இருந்தால் பாம்புகளை கொன்றதின் காரணாமாக புத்திரம் தோஷம் உண்டாகும் . 

கேது 5 ல் இருந்து புத்திர தோஷம் ஏற்பட்டால் பெரியோர்களை முதியவர்களை துன்புறுத்தியதன் காரணமாக புத்திர தோஷம் உண்டாகி இருக்கும் . 






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்