Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

திருநங்கை ஆவதற்கு .பெயர் அமைப்பு ஒரு காரணமாக இருக்க முடியுமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC


                                                  தாயே பூமாதேவி

அரவாணிகளாக மாறுவதற்கு ஜோதிட ரீதியாக காரணம் என்று சொன்னால் ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைந்திருந்தால் அவர்களுக்கு அலி தன்மை ஏற்படும் . அப்படியானால் சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் அனைவருக்கும் அலிதன்மை ஏற்படுமா ? சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைந்திருந்தால் அலிதன்மை ஏற்படாது 

சூரியனும் சந்திரனும் பெண் ராசியில் இருந்தாலும் – அல்லது ஒன்றாக பெண் ராசியில் இணைந்து இருந்தாலும் அவர்களுக்கு அந்த தன்மை ஏற்படும் . இந்த மாற்றங்கள் அவரவர் ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்றவாறு அவர்களின் உடல் ரீதியான மாற்றங்கள் மற்றவர் பார்வைக்கு படும்படியாக அவர்கள் காட்டி கொள்வார்கள் .   



மேலே சொன்னது அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை கொண்டு இந்த மாற்றங்களை கணித்தாலும் ஒரு தனி மனிதனின் பெயர் அமைப்பும் அவர்கள் அரவாணிகளாக மாறுவதற்கும் – பெண்களை போன்று இவர்களின் நடவடிக்கைகள் அமைவதற்கும் ஒரு காரணமாகிறது . ஒருவருடைய பெயரின் மொத்த கூட்டு எண்களும் – பெயரின் பிரமிடு எண்களும் பெண் ராசியில் அமைந்தால் அவர்களுக்கு பெண்மைக்குரிய குணாதிசயங்கள் அமையும் . 

அவர்களின் நடை – உடை – பாவனை – அனைத்திலும் பெண்மை தனம் தோன்றும் . இரட்டை படை ராசிகள் என்று சொல்ல கூடிய பெண் ராசிகளான ரிஷபம் – கடகம் – கன்னி – விருச்சிகம் – மகரம் – மீனம் – இந்த ராசிகளில் ஒருவருடைய ஒருவரின் பெயரின் நியுமராலஜி எண்ணும் – பெயரின் பிரமிடு எண்ணும் இந்த ராசிகளில் வந்தால் அவர்களுக்கு பெண்மை தனம் தோன்றும் .

பொதுவாக ஆணாக இருந்து பெண்ணாக மாறும் அரவாணிகளுக்கு பெண்களுக்கு உரிய அனைத்து குணாதிசயங்களும் – உடல் சார்ந்த உணர்ச்சிகள் இருக்கும்பொழுது அதை அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையில் வெளி காட்டி கொள்ளும்பொழுது சமுதாயம் அவர்களை ஒரு தப்பான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது . 


மேலும் காமகாரன் என்று சொல்ல கூடிய சுக்ரனுக்கு சொந்தமான வீடுகளான ரிஷபம் – துலாம் (இது பெண் ராசிகள் ) போன்ற வீடுகளில் ஒருவரின் பெயரின் கூட்டு எண்களும் – பெயரின் பிரமிடு எண்களும் வரும்பொழுது அவர்களுக்கு பெண்மை தனம் ஏற்படும் . இந்த மாற்றம் ஏற்படும்பொழுது இவர்கள் தன்னை அழகுபடுத்தி கொள்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள் . இவர்கள் ஆண்களுடன் நட்பை ஏற்படுத்தி கொள்வதிலும் அதிகமாக அக்கறை எடுத்து கொள்வார்கள் . 


உதாரணமாக ஒரு பெயரை எடுத்து கொள்வோம் :


3 2 1 3 1 1 1  இது ஒரு ஆண்மகனின் பெயரின் கூட்டு எண்கள் 


இந்த பெயரின் மொத்த கூட்டு எண்கள் 12. 


இந்த 12 ம் எண் சுக்ரனின் வீடான ரிஷப ராசியில் வரும் எண்ணாகும் . இங்கே ஒன்றை கவனிக்கவும் . ஜோதிடத்தில் சூரியனும் சந்திரனும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு பெற்றாலும் – சேர்ந்திருந்தாலும் அவர்களுக்கு பெண்மை தனம் (அலி தன்மை ) ஏற்படும் என்று மேலே கூறி இருக்கும் வரிகளை நினைவில் கொள்ளவும் . இந்த 12 ம் எண்ணில் நியுமராலஜிப்படி 1 ம் எண் என்பது சூரியன் – 2 ம் என்பது சந்திரன் இந்த இரண்டு எண்களும் இணைந்து இருக்கிறது . இப்படி இணைந்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பெண்மை தனம் தோன்றும் . 


இந்த பெயருக்கு பிரமிடு எண்ணாக எந்த எண் வரும் என்று பார்ப்போம் .



3 2 1 3 1 1 1 எண் இது ஒரு ஆணின் பெயர் எண். இதற்க்கு பிரமிடு எண்  


5 8

3 2 6

6 6 5 1

8 7 8 6 4 

5 3 4 4 2 2 

3 2 1 3 1 1 1 


இந்த பெயரின் பிரமிடு எண்ணாக  5 8 எண் வருகிறது . இந்த எண் காமக்காரன் என்று சொல்ல கூடிய சுக்ரனின் வீடான் துலாம் ராசியில் வரும் எண்ணாகும். பெயரின் கூட்டு எண்கள் – பெயரின் பிரமிடு எண்கள் இரண்டுமே சுக்ரனின் வீட்டில் வந்திருப்பதால் இவருக்கு பெண்மை தனம் தோன்றியது. மற்றவர் பார்வைக்கு இவரின் நடை உடை பாவனை பேசும் பேச்சு இவைகள் அனைத்தும் இவர் ஏன் இப்படி ஆனார் என்று மற்றவர்கள் பேசும் அளவுக்கு இவரின் போக்கு இருக்கும் . 




பொதுவாக பெயருடைய அமைப்பு – பெயரின் கூட்டு எண்கள் – பெயரின் பிரமிடு எண்களின் தாக்கங்களினால் ஆணாக இருக்கும் கால கட்டத்திலேயே இவர்களுக்கு சிறு வயதிலேயே இவர்களின் பெற்றோர்கள் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தாலும் இவர்களின் திருமண வாழ்க்கை பிரகாசமாக இருப்பதில்லை . 


எனவே பெயரில் என்ன இருக்கிறது . என்று சொல்பவர்கள் பலர் . ஒவ்வொரு பெயரில் உள்ளே ஒளிந்திருக்கும் பொருளுக்கு தகுந்தாற்போலும் ஒவ்வொரு பெயரின் மொத்த கூட்டு எண்ணுக்கு தகுந்தாற்போலும் அவர்களின் வாழ்க்கை பாதை திசை திரும்பும் . எனவே ஒரு பிறந்த குழந்தைக்கு அவர்களின் பிறந்த தேதி – பிறந்த தேதியின் கூட்டு எண் – பிறந்த தேதியின் பிரமிடு எண் இவற்றிக்கு தகுந்தாற்போல் பெயரை நல்ல முறையில் தேர்வு செய்து பெற்றோர்கள் குழந்தைக்கு சூட்டும் பொழுது அந்த குழந்தையின் எதிர்காலம் நல்ல முறையில் அமையும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328


Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்