Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 24 ஜூன், 2016

திருமண தடையை நீக்கும் அம்பிகை வழிபாடு ? ஆன்மீக ஜோதிடர் ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்
                                                    தாயே பூமாதேவி 
                                      


ஒரு சிலருக்கு திருமண வயதை அடைந்தும் , அந்த பாக்கியம் கிடைக்காமல் தவிப்போர் எண்ணிக்கை இன்று அதிக அளவில் உள்ளது,  இப்படி பட்டவர்கள் , வெள்ளிக்கிழமைகளில் வரும் பவுர்ணமி அன்று அம்பிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து , சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து , மா , பலா . வாழை ஆகிய முக்கனிகள் சந்தனம் கற்கண்டு பொங்கல் ஆகியவற்றை நிவேதனமாக செய்து வழிபட்டால் அவர்களது திருமண தடை அகன்று விடும் . வராத வரனும் வீடு தேடி வரும் . கூடிய விரைவில் கெட்டி மேளம் கொட்டும் . 


பிரிந்து வாழும் தம்பதியரும் இந்த பூஜை செய்யலாம் . அவர்கள் மீண்டும் இணைந்து இல்லற வாழ்க்கை வாழலாம் . 


                                              


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>

புதன், 22 ஜூன், 2016

ஹிட்லரும் - நியமராலஜியும் - பெயர் அமைப்பும் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஜோதிடர் ஆர் . ராவணன் BSC

0 கருத்துகள்
                                                  தாயே பூமாதேவி 
                                     

ஒரு உயிர் பூமியில் ஜெனித்தவுடன் அதனுடைய வாழ்க்கை பாதையை கிரகங்கள் தீர்மானித்து விடுகின்றன . இப்படி கிரகங்கள் அவனுடைய வாழ்க்கையை தீர்மானிப்பதில் ஒரு பங்கு வகித்தாலும் அவனுடைய பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவைகளும் அவனுடைய குணாதிசயங்கள் - அவனுடைய வாழ்க்கையின் செயல்பாடுகள் அனைத்தையும் தீர்மானிக்கின்றன . 

1 லிருந்து 100 வரை உள்ள எண்களில் நன்மை செய்யும் எண்களும் இருக்கின்றன . தீமை செய்யும் எண்களும் இருக்கின்றன. விபத்து மூலம் ஆபத்தை ஏற்படுத்தும் எண்களும் இருக்கின்றன . எதிரிகளால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எண்களும் இருக்கின்றன . 

அதே போல் பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் - பெயரின் நியூமராலஜி எண்ணும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் சரியான முறையில் அமையவில்லை என்றால் அவன் மன நிலையில் கொடூரமான  எண்ணங்களை ஏற்படுத்தி அவனை ஒரு கொலை காரனாக கூட ஆக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும் .

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - இந்த இரண்டும் ஒரு பக்கம் இருந்தாலும் பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் மனிதனுடைய வாழ்க்கையின் ரகசியங்களை மிக துல்லியமாக காட்டும் .  ஒரு மனிதன் பிறந்த உடன் அவனை அடையாளம் காண அவனுக்கு பெயரை சூட்டி அழைக்கிறோம் . 

ஆனால் அவன்  பிறந்த உடன் முன்னிலை வகிப்பது பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்களை காட்டிலும் பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் அவனின் குணம் - செயல்பாடுகள் - வாழ்க்கையில் அவன் அனுபவிக்க போகும் கஷ்ட- நஷ்டங்கள்- அனைத்தையும் துல்லியமாக காட்டும் . 


இப்படி அவன் பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் வாழ்க்கையில் மிக மோசமான பலன்களை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைந்து அவனுக்கு அமையும் பெயரின் கூட்டு எண்ணும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் மிக மோசமான கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைந்துவிட்டால் அவன் விபரீதமான எண்ணங்களை உடையவனாகவும் - தன்னுடைய கொடூரமான செய்கைகளால் மற்றவர்கள் பார்த்து குலை நடுங்க வைக்கும் சூழ்நிலைகள் இவர்களால் உண்டாகும் . மேலும் இவர்களின் முடிவை இவர்கே தேடிக்கொள்வார்கள் .

உலகையே நடுநடுங்க வைத்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர்  பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இதற்கு ஒரு உதாரணமாகும் . இவர் பிறந்தது ஆஸ்திரியாவில் ஹங்கேரியில் . இவரின் பிறந்த தேதி  20 - 4 - 1889 . இவர் பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்னை காண்போம் . 

1 6
2  8 7
6 5  3 4
6 9 5 7 6
2 4 5  9 7 8
2 0 4  1 8 8 9 

இவர் பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 16. 

அடால்ப் ஹிட்லர் (ADOLF HITLER ) என்ற பெயரின் நியூமராலஜி கூட்டு எண் .43
இந்த 43 ம் எண்ணின் பலன்களை பற்றி இந்த கட்டுரையின் கடைசி அத்தியாத்தில் கூறுகிறேன் . இந்த 43 ம் எண்ணும் மிகவும் கோரமான பலன்களை தரக்கூடிய ஒரு ஆபத்தான எண்ணாகும் .

இந்த பதினாறாம் எண் சாதாரண எண்ணல்ல . கொடூரமாக பல உயிர்களை பலிவாங்கும் எண்ணாகவும் . பல உயிர்களுக்கு உலை வைக்கும் எண்ணாகவும் கருதலாம் . இரண்டாம் உலக போரில் அணுகுண்டு வீச்சால் பல லட்சம் உயிர்களை பலி  கொண்ட ஜப்பான் ( JAPAN ) நாட்டின் பெயரும் இந்த 16 ம் எண் ஆதிக்கத்தில் வரும் . ஒரு நாட்டின் பெயரே இந்த 16 ம் எண் ஆதிக்கத்தில் வந்து அணுகுண்டு வீச்சால் அழிந்தது என்றால் ஒரு தனி மனிதனின் பிறந்த தேதியில் இந்த 16 ம் எண் வந்தால் ஒன்று அவன் அழிவு பாதைக்கு செல்லவேண்டும் இல்லையென்றால் இவனால் மற்றவர்களால் அழிவு உண்டு என்பதற்கு ஏற்ப ஹிட்லரின் முதல் கொலை வெறி தாக்குதல் குழந்தைகளிடமிருந்தே ஆரம்பித்தது . 


முதல் உலக போரில் ஹிட்லர் 1914 ல் ஓய்பெர்ஸ் சண்டையில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தார். இந்த போரில் கிட்டத்தட்ட 40, 000 குழந்தைகள் கொல்லப்பட்டதாக பதிவெடுகள் தெரிவிக்கின்றன. இந்த போர் பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (Massacre of Innocents) என்று விமர்சிக்கப்பட்டது. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் இட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இவர் பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணான 16 ம் எண் உயிர்களுக்கு கேடு விளைவிக்கும் அத்தியாத்தை இந்த நிகழ்ச்சியிலிருந்து தொடங்கியது . 

இந்த 16 ம் எண்ணின் கோரத்தனமான நிகழ்வுகள் மீண்டும் ஹிட்லர் மூலம் தொடங்கியது . 1944 ஜுலை 20 ம் தேதி ஹிட்லரின் படை தளபதிகளே இவரை கொள்ள சதி திட்டம் தீட்டினர் என்ற காரணத்துக்காக 5000 பேர் தூக்கில் இடப்பட்டனர் . இந்த 5000 பேர் அனைவருக்கும் தூக்கில் பட இடம் கிடைக்காததால் விளக்கு கம்பங்களிலும் - மரங்களிலும் தூக்கு மாட்டி தொங்க விடப்பட்டனர் . 

மேலும் ஹிட்லரால் இரண்டாம் உலக போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடிக்கு மேல் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன . 

பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு 16 ம் வந்து பெயரின் கூட்டு எண்கள் தீமை தரக்கூடிய எண்களில் அமைந்து விட்டால் தன்னுடைய முடிவை தானே தேடி கொள்வார்கள் என்பத்துக்கேற்ப 1945 ஏப்ரல் 26 ம் தேதி ரஷ்ய படைகள் தன்னை சுற்றி வளைத்து விட்டன என்று தெரிந்ததும் . தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் . 

ஹிட்லரின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 16 வந்ததால் தான் அவர் இரண்டாம் உலகப்போரில் பலகோடி உயிர்களை பலிவாங்கினார் என்றால் 
2 0 - 4  - 1 8 8 9 . இந்த தேதியில் ஹிட்லர் மட்டும்தான் பிறந்தாரா ? அப்படியானால் இந்த தேதியில் பிறந்த பல கோடி பேருக்கு ரகசிய ஹீப்ரு பிரமிட் எண் 16 வரும் , அப்படியானால் இந்த பல கோடி பேரும் ஹிட்லரை போல் உயிர் பலி வாங்கும் அரக்கர்களா ? என்ற கேள்வி எழும் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவைகள் அனைத்தும் மோசமான எண்ணில் அமைவது இயற்கையின் விதி . 


ஆனால் அந்த மோசமான எண்களின் கோரமான நிகழ்வுகளில் இருந்து தப்பிக்க பெயரின் கூட்டு எண்ணையும் - பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணையும் சரியான முறையில்  அமைத்து கொண்டால் அனைத்து . விதத்திலும் சிறப்பான வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம் . 

மேலும் (ADOLF HITLER ) என்ற பெயரில் என்ன அர்த்தம் ஒளிந்திருக்கிறது என்று பாருங்கள் HIT  என்ற சொல் வருவதை கவனியுங்கள் HIT என்றால் தாக்குதல் என்று பொருள் , இந்த  சொல்லுக்கு ஏற்ப எதிரி நாடுகளின் மீது பல அபாயகரமான யுக்திகளுடன் தனது தாக்குதலை தொடங்கினார் . அதே சமயத்தில் HIT என்றால் பிரபலம் என்ற அர்த்தத்தையும் தரும் . இரண்டாம் உலக போரில் பிரபலம் ஆன பெயரில் ஹிட்லர்தான் , இந்த இரண்டாம் உலகப்போரில் ஹீரோவும் அவர்தான் வில்லனும் அவர்தான் . (ADOLF HITLER )(அடால்ப் ஹிட்லர் ) இந்த பெயரில் OLF என்ற சொல் WOLF என்ற அர்த்தத்தை கொண்டு ஒலிக்கும் . WOLF என்றால் ஓநாய் என்று அர்த்தம் . விலங்குகளில் ஓநாய் மிகவும் தந்திரமானது நாட்டின் படை பலன்களில் ஓநாய் தாக்குதல் என்றால் திடீர்  திடீர் என்று எதிரிகளை தாக்கும் ஒரு முறையாகும் . இந்த அமைப்புகள் ஹிடலரின் படைப்பிரிவில் இருந்தன . இந்த தாக்குதல் மூலம எதிரி நாடுகளின் படைகளை முறியடித்து வெற்றி கண்டார் .

இனி ஹிட்லரின் (ADOLF HITLER ) என்ற பெயரின் நியூமராலஜி எண் 43 ம் எண்ணிற்கான பலன்களை காணலாம் . இந்த 43 ம் எண்ணிற்க்கான பலன்களை ஏற்கனவே எனது இந்த இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறேன் என்பதை தேடி பார்த்தால் உங்களுக்கு தெரியும் . 


ஹிட்லரின் (ADOLF HITLER ) 43 ம் எண்ணிற்கான பலன்

 ""கற்பக தருமலர் வாசம் செய்யும் இடம் "" என மந்திர சாஸ்த்திர நூல்களிலும் மூன்று கோப்பைகள் மூன்று பெண்கள் என்ற சித்திர அமைப்பை கொண்டு எகிப்திய பிரமிடுகளில் சித்தரிக்கப்பட்டுள்ளது . மர்மம் -சக்தி வாய்ந்த இந்த எண்ணிற்கு இரண்டு பக்கங்கள் உண்டு . ஒன்று ராகு பலம் - மற்றொன்று குரு பலம் எனலாம் . 

உன்னதமான நிலையையும் தரும் . அதே சமயத்தில் உயிர் ஆபத்துகளையும் - திடீர் சரிவையும் சிறை வாழ்வையும் தரும்  தன்மை இந்த 43 ம் எண்ணுக்கு உண்டு . 

புரட்சிகரமான வாழ்க்கையையும் - விரோதிகள் பெருகிக்கொண்டே இருப்பதையும் - தீவிரமான அபிப்பிராயத்தை பிரசவித்தலும் கற்பனை எழுத்துவளம் பேசும் திறன் இவைகள் அனைத்து இந்த எண்ணிற்கு உண்டு (ஹிட்லர் தனது பேசசு திறமை மூலம் ஜெர்மன் நாட்டு மக்களை கவர்ந்து ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது ). 

புரட்சிகரமான மாற்றங்கள் - பொதுவாழ்க்கையை பிரதானமாக எடுத்து கொள்ளுதல் பொறாமை குணம் கொண்ட சிலர் மூலம் பிரச்சனைகள் ஏற்படுதல் - மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்துவதால் உண்டாகும் பிரச்சனைகள் இவை அனைத்தும் எந்த 43 ம் எண் பெயராக அமைந்தால் ஏற்பட்டு வரும் . 

இவர்களின் லட்சியங்கள் ஈடேறினாலும் சுயமாக சுகம் காணும் நிலை உண்டாகாது . புத்தி கூர்மையும் திறமையும் பெற்ற இவர்களுக்கு அனுபவிக்க வேண்டிய சுகங்கள் எல்லாம் தூர ஓடி விலகி நிற்கும் . இவர்களது கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் உருவாகும் . 

நிம்மதியற்ற வாழ்வும் - உயிர் ஆபத்துகளும் உண்டு . 


                                                   
     
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

திங்கள், 20 ஜூன், 2016

கிளியோபாட்ராவும் அதிர்ஷ்ட நியூமராலஜியும் -அதிர்ஷ்ட பெயர் அமைப்பும் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஜோதிடர் ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்
                                         தாயே பூமாதேவி
                                  


சரித்திரத்தின் பழைய நிகழ்வுகள் எல்லாம் அவர்களின் வீரத்தையும்- அவர்களின் புகழையும் அவர்களின் கொடையையும் - இனத்தின் பெருமையையும் விளக்கும் விதமாகவே  அமைந்திருக்கிறது .

உனக்கு என்ன மனதிற்குள் பெரிய கிளியோபாட்ரான்னு நெனப்பா ? என்ற சொல்லை இன்னும் நாம் சொல்லி கொண்டிருக்கும் அளவிற்கு காலத்தால் அழியாத கோலமாக அழகு என்ற சொல்லுக்கு அர்த்தமாக தன்னுடைய கிளியோபாட்ரா என்ற பெயரை விட்டு சென்றிருக்கிறார் .உலக அழகி என்று வருணிக்கப்பட்ட கிளியோபாட்ரா வாழ்ந்த காலத்தின் நிகழ்வுகள் முடிந்து கிட்டத்தட்ட 2000 ம் ஆண்டுகள் ஆகிவிட்டது . 

ஜோதிட சம்பந்தமான தகவல்களையும் - பெயரியல் சம்பந்தமான ஆராய்ச்சி கட்டுரைகளையும் உங்களுடைய இணைய தளத்தில் வெளியிட்டு கொண்டிருக்கும் உங்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த பேரழகி கிளியோபாட்ரா என்ற ஒரு பெயரை வைத்து என்ன ஜோதிட செய்தியை சொல்ல போகிறீர்கள் என்று கேட்கலாம் .


ஒரு நாட்டை ஆளவேண்டுமானால் அனைத்து வித தகுதிகளும் ஒரு ஆண்மகனுக்கு வேண்டும் . இந்த தகுதிகளில் எதற்கும் அஞ்சாத மனத்துணிவும் - வீரமும் வேண்டும் முதன்மையானதாக இருக்க வேண்டும் . அத்தகைய பண்பு சராசரியாக ஒரு ஆண்மகனுக்கு இருக்கும் . ஆனால் சரித்திரத்தில் ஒரு பெண் ஆணுக்கு நிகரான அறிவு - வீரம் - துணிச்சல் அனைத்தையும் கொண்டு ஒரு நாட்டை ஆண்டாள் என்று சொன்னால் அந்த வீர பெண்மணிகளில் ஒரு சிலரே சரித்திரத்தில் இடம்பிடித்து இருக்கிறார்கள் .


ஒரு ஆண்மகனுக்கு உரிய வீரம் - துணிச்சல் - அறிவு - அனைத்தையும் பெற்று எகிப்து சாம்ராஜ்யத்தையே ஆட்டம் காண வைத்த பெயர்தான் கிளியோபாட்ரா (CLEOPATRA ). உலகையே மயங்க வைக்கும் பேரழகு . தன்னுடைய அழகை மெருகூட்ட தினமும் கழுதை பாலில் குளிப்பாள் . 9 விதமான மொழிகளில் எழுதவும் பேசவும் செய்வாள் , 7 விதமான வாசனை திரவியங்களை தானே தயாரித்து அதை உபயோகப்படுத்தினால் என்ற வரலாற்று செய்திகளை அவளுடைய சரித்திரத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் .

தந்தை 12 ம் தாலமிக்கு பிறகு கிளியோபாட்ராவின் தம்பி 13 ம் தாலமியாக பதவி ஏற்றாலும் ஆட்சி அதிகாரம் அனைத்தும் கைவிட்டு போகாமல் இருக்க எகிப்திய மரபுப்படி தன்னுடைய தம்பி 13 தாலமியை திருமணம் செய்து கொண்டாள் . அப்பொழுது கிளியோபாட்ராவிற்கு 18 வயது இருந்தது . தனது தம்பி 13ம் தாலமிக்கு வயது 10.



அப்பொழுது ஜூலியஸ் சீசரின் எகிப்திய படை எடுப்பாள் தன்னுடைய சகோதரன் 13 தாலமி கொல்லப்பட்டதும் தன்னுடைய மற்றொரு சகோதரன் 14 ம் தாலமி அரியணை ஏறியதும் அந்த சகோதனை தன்னுடைய பதவி ஆசையால் ஜூலியஸ் சீசரை தான் வசப்படுத்தி அவரை திருமணம் செய்து கொண்டு அவரின் துணையால் தன்னுடைய இரண்டாவது சகோதரனையோ கொலை செய்து ஆட்சியை கைப்பற்றினாள் .

அதன் பிறகு ஜூலியஸ் சீசர் எதிரிகளால் கொல்லப்பட்டதும் ஜூலியஸ் சீசரின் படை தளபதி மார்க் அந்தோணிக்கும் இவளுக்கும் காதல் ஏற்பட்டு மார்க் அந்தோணியையும் தன்னுடைய கணவராக அடைந்தாள் . இவை எல்லாம் வரலாற்று செய்திகள் என்றாலும் ஜோதிடம் பற்றியும் நியூமராலஜி பற்றியும் - மனிதனின் பெயர் அமைப்பு பற்றியும் - ஆராய்ந்து ஜோதிட கட்டுரைகளை எழுதும் நீங்கள் CLEOPATRA (கிளியோபாட்ரா ) என்ற பெயரை வைத்து என்ன சொல்ல போகிறீர்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது .


தன்னுடைய இரண்டு சகோதரனையும் கொன்று அரியணை ஏறியது . ஜூலியஸ் சீசர் - மார்க் அந்தோணி இருவரையும் தான் காதல் வலையில் விழ வைத்து மறுபடியும் தன்னுடைய சகோதரன் வசம் இருந்த எகிப்து நாட்டை மீட்டு ஆட்சி பீடம் ஏறியது போன்ற செய்கைகளால் அந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு மன தைரியமும் - செய்கையும் - வீரமும் இருந்திருக்குமா ? 


இதற்கு காரணம் அவள் பிறந்த நேரமா ? அல்லது அவளது பிறந்த ஜாதக அமைப்பில் நீ இப்படி இருக்கவேண்டும் . நீ இப்படி இந்த நாட்டை ஆளப்போகிறாய் . நீதான் இந்த எகிப்து சாம்ராஜ்யத்திற்க்கே ராணி என்று இருக்கிறதா என்ற கேள்வி எழும் .

இதற்கு ஜோதிட ரீதியான விளக்கம் - அல்லது பெயரை பற்றி ஆராய்ச்சி செய்யும் நீங்கள் கிளியோபாட்ரா (CLEOPATRA ) என்ற பெயருக்கு என்ன விளக்கம் கொடுக்க போகிறீர்கள் என்றுதானே கேட்கிறீர்கள் . ஆளுமை தன்மைக்கு உரிய உச்சரிப்புகள் - அந்த உச்சரிப்புக்கு உரிய கிரகங்களின் ஆதிக்க அமைப்புகள் இருந்தால் அவருக்கு ஒரு வித MANPOWER அதாவது மற்றவரை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சக்தி - அதிகார தன்மை - எதற்கும் பயப்படாத மன தைரியம் - தன்னுடைய புத்தி - யுக்தியால் எதையும் சாதிக்கும் வல்லமை உலக புகழ் பெரும் அமைப்புகள் அனைத்தும் உண்டாகும் .



ஆளுமை தன்மைக்கு உரிய கிரகம் என்றால்   1 - 10 - 19 - 28-ம் எண்களை குறிக்க கூடிய சூரியன் . இந்த சூரியனுக்கு உரிய ஆட்சி வீடு சிம்ம ராசி .சிம்ம ராசியை ஆங்கிலத்தில் LEO என்று கூறுவார்கள் . இப்பொழுது உலக பேரழகி CLEOPATRA (கிளியோபாட்ராவின் ) பெயரை எடுத்து கொண்டால் C LEO PATRA
LEO எந்த சொல் வரும் . LEO என்றால் சிம்ம ராசி என்று பொருள் .


தான் உடன் பிறந்த சகோதரர்கள் இருவரின் இறப்புக்கு தானே காரணமாகி தான் அரியணை ஏறுவதையே குறிக்கோளாக கொள்ளும் எண்ணம் ஒரு பெண்ணுக்கு ஏற்படுகிறது என்றால் இதை எப்படி சொல்வது . அதாவது என்ன நடந்தாலும் பரவாயில்லை பார்த்து கொள்ளலாம் என்ற மன தைரியத்தை கொடுக்கும் எண்ண அலைகள் இவளது  பெயரில் உள்ள LEO என்ற உச்சரிப்பு அலைகள் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது .

மேலே சொன்ன ஆணாக இருந்தாலும் சரி - பெண்ணாக இருந்தாலும் சரி சிம்ம ராசியில் பிறந்தாலும்  - அல்லது சிம்ம லக்கினத்தில் பிறந்தாலும் அவரை எந்த ஒரு விஷயத்திலும்  அவரை ஜெயிக்க முடியாது . அவர் எந்த ஒரு செயலுக்கும் பின் வாங்க மாட்டார் . தான் செல்வதை 1000 பேர் கேட்க வேண்டுமே தவிர மற்றவர் சொல்வதை தான் கேட்க முடியாது என்ற ஆளுமை தன்மையை உடைய மனதை உடையவர்   என்ற பண்புகளுக்கு ஏற்ப கிளியோபாட்ராவின் செயல்பாடுகளும் அமைந்திருந்தன . 

தனிமனிதனின் பெயரில் சோகம் வருத்தம் என்ற அர்த்தத்தை கொடுக்கக்கூடிய SAD (உதாரண பெயர் சாதுவன் - SADHUVAN - )என்ற சொல் வரும்பொழுது அவன் வாழ்க்கையில் அவன் பல விதமான சோகங்களையும் துக்கங்களையும் அனுபவிக்க நேரிடுகிறது . போர்க்களம் - போராட்டம் என்ற பொருளை தரக்கூடிய WAR என்ற சொல் ஒருவருடைய பெயரில் வரும்பொழுது அவர்களுடைய  வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருக்கும் 
 இதற்கு உதாரண பெயராக ராஜேஸ்வரி (RAJES WAR  I ) மஹேஸ்வரி (MAHES WAR I ) வரலக்ஷ்மி (VAR ALAKSHMI இந்த பெயரில் VAR என்ற சொல் WAR என்ற உச்சரிப்பை  பெற்று வரும் ) போன்ற பெயர்களை சொல்லலாம் . 


வாழ்க்கையில் வெற்றி என்பதே இல்லாமல் வாழ்க்கையே தோல்வியாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற அமைப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வினோத் (VIN OTH இந்த பெயரை பிரித்து பார்த்தால் VIN NO அதாவது வெற்றி என்பதே இல்லை என்ற சொல் வரும் )  என்ற பெயர் அமைப்புகளுக்கு தகுந்தாற்போல் மனிதனின் வாழக்கை இவ்வாறாக அமையும்பொழுது சரித்திர நாயகி கிளியோபாட்ரா உலக அழகியாக பெயர் பெற்றதும் ஆண்களுக்கே உரிய துணிவுடன் - தைரியமான எண்ணத்துடன் எகிப்து சாம்ராஜ்ஜியத்திற்கே அசைக்க முடியாத ஒரு தூணாக ஆட்சி செய்தால் என்றால் CLOPATRAA (கிளியோபாட்ரா  ) என்ற பெயரில் உள்ள LEO என்ற சொல்லும் ஜோதிட - பெயர் அமைப்பும் ஒரு காரணம் என்றால் அதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றும் இல்லை . 


தனி மனித பெயரின் அதிர்ஷ்ட கூட்டு எண்கள் - அந்த பெயரில் உள்ள அதிர்ஷ்ட உச்சரிப்பு அலைகள் இவைகள் ஒரு தனி மனிதனின் அதிர்ஷ்ட வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை . அதிர்ஷ்ட பெயரை அமைத்து கொள்ளுங்கள் . வளமான வாழ்க்கைக்கு அடித்தளம் இடுங்கள் 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

சனி, 18 ஜூன், 2016

கோயில் சிலைகளை திருடுபவர்களுக்கு கடவுள் தண்டனை தருவாரா ? ஆன்மீக ஜோதிடர் ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்

                                  தாயே பூமாதேவி
                             

கோயிலில் கடவுளை வணங்க செல்லும்பொழுது   சிவன் கோயில் இருக்கும் இடத்தில் உள்ள மரங்களில் இருந்து விழும் கனிகளைக் கூட எடுக்கக் கூடாது என்று பயந்து ஒரு சிலர் ஒதுங்கிக்கொள்வார்கள். ஏனென்றால் சிவன் சொத்து குல நாசம் என்றெல்லாம் கூட கூறுவார்கள்.  

ஆனால் சில கும்பல்கள் கோயில் சிலைகளையெல்லாம் கடத்தி விற்று வருகிறார்கள் .  ஆனால் அவர்கள் பாதிக்கப்பட வில்லையே என்ற என்ற கேள்வி எழலாம். யார் சொன்னது பாதிக்கப்பட வில்லை என்று . பாதிக்கப்படவில்லை என்று சொல்ல முடியாது. பொதுவாக, சிவன் சொத்து குல நாசம் என்பதை அனுபவத்தில் நிறைய பார்த்திருக்கிறோம். 

இதில் மற்றொரு விஷயமும் இருக்கிறது. வஞ்சித்தார் வாழ்ந்தாலும், வஞ்சித்தார் வாரிசுகள் வாழ்வதில்லை என்ற பழமொழியை கேள்வி பட்டிருக்கிறோம் . அதாவது வஞ்சித்தார் வேண்டுமானாலும் அப்படி இப்படி வாழ்ந்துவிட்டுப் போகலாம். ஆனால் வஞ்சித்தாருடைய வாரிசுகள் வாழ்வதில்லை. பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்.


சிவன் கோயிலில் சிவனை வணங்கிவிட்டு, அர்த்தனாரீஸ்வரரிடம் வந்து நான் ஒன்றுமே எடுத்துக்கொள்ளவில்லை என்று கையைத் தட்டிவிட்டு வருவது எதற்கு என்றால், நான் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை சிவனே என்று சொல்லிவிட்டு வருகிறோம் என்றுதான் அர்த்தம்.

மஹாவிஷ்ணுவை அதாவது பெருமாளை அலங்காரப் பிரியன் என்று சொல்கிறோம். அதாவது பெருமாள் நிறைய ஆபரணங்கள் அணிந்துகொண்டு அலங்காரத்துடன் காட்சி அளிக்கிறார். ஆனால் சிவன் அபிஷேகப் பிரியர். அதாவது ஆடமபரமாக சிவனுக்கு அபிஷேகம் செய்யமுடியவில்லை என்றாலும்   ஒரு டம்ளர் தண்ணியும் அதில் இரண்டு பச்சை இலைகளைப் போட்டால் போதும், ஒன்றுமே தேவையில்லை. அதாவது ஆவுடையார் லிங்கம் இருக்கிறாரென்றால், அபிஷேகத்திற்கு பால், தேன், மோர் எல்லாம் தேவையில்லை, தண்ணீர் விட்டால் போதும். இயற்கையான, சுத்தமான நீர் இருந்தால் போதும். அதற்கு அடுத்ததுதான் பச்சை இலை, அதாவது வில்வ இலை இருந்தால் போதும். அபிஷேகம் முடிந்துவிட்டது.


சிவபெருமான் என்பவர் எளிமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கக் கூடிய ஒரு அவதாரப் புருஷன். அவரே சிவ சிவா என்று இருக்கும் போது அவரிடம் இருந்தே உருவிக்கொண்டு வந்தால் அதைவிட மோசம் என்று சொல்வார்கள்.

அதனால், இதுபோன்று தவறு செய்தவர்கள் பிள்ளைகள் ஊமையாகப் பிறந்துப் பார்த்திருக்கிறோம். அவர்களுடைய சொத்தை வேறொருவர் எடுத்துப் போவது, கொள்ளையடிக்கப்படுவது என்று நிறைய பார்த்திருக்கிறோம். அதனால் ஒன்றும் நடக்காது என்று சொல்ல முடியாது. நிச்சயம் பாதிப்பு இருக்கும். மாற்றம் இல்லை


                                                

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>

சமீபத்திய கருத்துகள்