Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 31 டிசம்பர், 2016

2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள்? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்
                                                     தாயே பூமாதேவி 

மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

அன்பான  மீன ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியாதிபதி குரு சமசப்தம ஸ்தானமான 7-ல் அமைந்து ஜென்ம ராசியை பார்வை செய்வதும் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதும், 6-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். பணம் பலவழிகளில் தேடிவருவதுடன் எதிர்பாராத திடீர் தனச்சேர்க்கைகளும் அமையும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தியவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைவார்கள். 
உங்கள் குடும்பத்தில் சுபிட்சமும், வட்சுமி கடாட்சமும் நிலைத்திருக்கும். பூமி மனை சேர்க்கைகளும், பூர்வீகச் சொத்துகளால் அனுகூலங்களும் அமையும். திருமண சுபகாரி யங்கள் கைகூடும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்யோன் யம் அதிகரிக்கும். புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்கு கடவுளின் அருள்கிட்டும். உற்றார்- உறவினர்கள் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றுவீர்கள். வரும் 27-07-2017-ல் ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்தால் கேது பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான லாபங்கள் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். சேமிப்புகளும் பெருகும். 
உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் தடையின்றி கிடைக்கும். வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தின்மூலம் குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்து கொள்வதும், தொழில், வியாபாரம், மற்றும் உத்தியோகம் செய்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவதும் நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம் உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். நீண்ட நாட்களாக ஏதாவது ஒரு பிரச்சினைக்காக மருத்துவச் சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்கள்கூட படிப்படியான முன்னேற்றத்தை காண்பார்கள் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு எடுக்கும் காரியங்களில் வெற்றிமேல் வெற்றிகளை பெறுவீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் பூரிப்பும், மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்திலும் சுபகாரி யங்கள் கைகூடும். பொன்பொருள் சேரும். வீடுமனை போன்றவற்றை வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகும். புதிய நவீன பொருள் சேர்க்கைகளும் அமையும். கடன்கள் குறையும்.

கொடுக்கல்- வாங்கல்கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறைகளிலிருப்ப வர்களுக்கு ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்த்த லாபங்கள் தடையின்றி அமையும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். ஆண்டின் பிற்பாதியில் பண விவகாரங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை.

தொழில், வியாபாரம் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் இரட்டிப்பாக லாபங்கள் கிடைக்கும். போட்டிகளும், மறைமுக எதிர்ப்புகளும் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் மேன்மை கிட்டும். புதிய நவீன கருவிகளை வாங்கி போடுவீர்கள். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். கூட்டுத்தொழிலிலும் கூட்டாளிகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகம் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான பதவிகளும், ஊதிய உயர்வு களும், எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்களும் கிடைக்கும். சமுதாயத் தில் பெயர், புகழ், கௌரவம் யாவும் உயரும். உங்கள் திறமைகளுக்கு தகுந்த பாராட்டுதல்கள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் தடையின்றி நிறைவேறும்.

பெண்கள் உடல்நிலை சுறுசுறுப்பாக  அமையும். கணவன்- மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை பலப்படும். ஏதாவது உதவி கேட்பீர்களோ என பயந்து ஒதுங்கிய உறவினர்களும் தேடிவந்து நட்பு பாராட்டுவார்கள். இப்பொழுது உங்களின் உதவி அனைவருக்கும் தேவைப்படும். அதனால் நல்ல பெயரும் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தடைபட்ட சுபகாரியங்களையும் நடத்தி பார்ப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வுகள் கிட்டும்.

அரசியல் அரசியல்வாதிகளின் பெயர், புகழ், உயரக்கூடிய காலமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். உங்கள் வார்த்தைகளுக்கு மக்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அனைவரிடமும் நல்ல பெயரை எடுப்பீர்கள். பொருளாதாரம் உயர்வடையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

விவசாயிகள் விவசாயிகளுக்கு அபரிமிதமான விளைச்சல்கள் பெருகும். சந்தையில் விளைபொருட்களுக்கேற்ற விலை கிடைக்கப்பெறுவதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்திலும் சுபிட்சமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். அரசுவழியில் ஆதரவுகள் கிட்டும். சேமிப்பு பெருகும்.

மாணவ- மாணவியர்மாணவ- மாணவிகள் சாதனை படைப்பார்கள். நல்ல மதிப்பெண் களை பெற்று பெற்றோர், ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். கல்விக்காக அரசுவழியில் அனுகூலமானப் பலன்களும் கிடைக்கும். நல்ல நண்பர்களின் நட்புகள் உங்களுக்கு உறுதுணையளிப்பதாக அமையும்.

2017 - ஆங்கில மாதப்பலன்கள்


ஜனவரி
உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும்,  ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் ராகு  சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். காரியங்கள் கைகூடும். பொன்பொருள் சேரும். சிலருக்கு பூமி, மனை, வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் போன்றவற்றில் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.சந்திராஷ்டமம்:  19-01-2017 மதியம் 03.54 மணி முதல் 22-01-2017 அதிகாலை 04.23 மணி வரை

பிப்ரவரி
ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் ராகு மாதப் முற்பாதியில் லாப ஸ்தானமான 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபங்களை பெறுவார்கள். குடும்பத்திலும் நிம்மதியான நிலையிருக்கும். தாராள தனவரவுகளால் சேமிப்பும் பெருகும். ஆடை ஆபரணங்கள் சேரும். பூமி மனை வாங்கும் யோகங்கள் அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகளும் குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபத்தை அடைய முடிவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.சந்திராஷ்டமம்:  15-02-2017 இரவு 12.36 மணி முதல் 18-02-2017 பகல் 12.31 மணி வரை
மார்ச்
ஜென்ம ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவிடையே தேவையற்ற கருத்து வேறு பாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தி லுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர் களும் தேவையற்ற மனசஞ்சலங்களை ஏற்படுத்துவார்கள்.  தொழில், வியாபாரம் செய்பவர்கள் வீண் நெருக்கடிகளையும் போட்டிகளையும் சந்தித்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்துவிட, முடியும். பயணங்களாலும் அனுகூலமான பலன்களை அடையலாம். பேச்சில் நிதானத்துடன் இருப்பதும் முன்கோபத்தை குறைப்பதும் பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பதும் நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்யவும்.சந்திராஷ்டமம்:  15-03-2017 காலை 09.11 மணி முதல் 17-03-2017 இரவு 08.40 மணி வரை
ஏப்ரல்
ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் ராகு 11-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கொடுத்த வாக்கு றுதிகளை காப்பாற்றக்கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில், வியாபாரத் திலும் எதிர்பார்த்த லாபத்தை அடைந்துவிடமுடியும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும். தொழிலாளர்களிடையே இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் குறையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வைகளால் லாபம் அமையும். விநாயகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.சந்திராஷ்டமம்:  11-04-2017 மாலை 04.40 மணி முதல் 14-0-2017 அதிகாலை 04.09 மணி வரை    

மே
ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் ருணரோக ஸ்தானமான 6-ல் ராகு, 7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டி பொறாமை களும் மறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பொன்பொருள் சேரும். கடன்கள் படிப்படியாக குறையும். பூமி மனை வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர் களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலும் திருப்திகரமாக அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். சிவபெருமானை வழிபடலாம்.சந்திராஷ்டமம்:  08-05-2017 இரவு 10.54 மணி முதல் 11-05-2017 காலை 10.40 மணி வரை

ஜுன்
குடும்ப ஸ்தானமான 2-ல் சுக்கிரன், முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களின் பலமும் வலமும் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக சாதிப்பீர்கள். எதிரிகளை ஓட ஓட விரட்டக் கூடிய அளவிற்கு வலிமையும் வல்லமையும் உண்டாகும். பணம் கொடுக் கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் அமையும்.  குடும்பத்திலும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மனநிம்மதியுடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் நிம்மதியான நிலை இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.சந்திராஷ்டமம்:  05-06-2017 அதிகாலை 04.36 மணி முதல் 07-06-2017 மாலை 04.39 மணி வரை

ஜுலை
சுக ஸ்தானமான 4-ல் சூரியன் செவ்வாய், சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 7-ல் குரு சஞ்சரிப்பதாலும், இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சியின் மூலம் கேது லாப ஸ்தான மான 11-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக அமையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. அசையும் அசையாச் சொத்துகள் வாங்கும் விஷயங் களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளி களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். இம்மாதம் முருகனை வழிபடவும்.சந்திராஷ்டமம்:  02-07-2017 காலை 10.55 மணி முதல் 04-07-2017 இரவு 10.46 மணிவரை மற்றும்  29-07-2017 மாலை 06.30 மணி முதல் 01-08-2017 காலை 05.42 மணி வரை

ஆகஸ்ட்
ராசிக்கு 7-ல் குரு, லாப ஸ்தானமான 11-ல் கேது, மாதப்பிற் பாதியில் ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பணவரவுகள் சரளமாக அமைந்து குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். தொழில், வியாபாரத்தில் அனுகூலமானப் பலனை அடையமுடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்புடன் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். இம்மாதம் முருகனை வழிபாடு செய்வது நல்லது.சந்திராஷ்டமம்:  26-08-2017 அதிகாலை 03.12 மணி முதல் 28-08-2017 மதியம் 01.33 மணி வரை

செப்டம்பர்
பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 6ல் சூரியன், செவ்வாய் நல்ல அமைப்பு என்றாலும் இம்மாதம் 2-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத் தால் அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில்களில் சாதகமான பலன் கிட்டும். புதிய வாய்ப் புகள் கிடைக்கப் பெற்றாலும் எதிர்பார்க்கும் லாபங்கள் தாமதப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற சற்று தாமத நிலை ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் சாதகமானப் பலன்களை அடைய முடியும். உடல் ஆரோக்கித்தில் சற்றே பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். இம்மாதம் குருவுக்கு பரிகாரம் செய்யவும்சந்திராஷ்டமம்:  22-09-2017 மதியம் 12.04 மணி முதல் 24-09-2017 இரவு 09.52 மணிவரை
அக்டோபர்
மாத கோளான சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதும், 8-ல் குரு சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பாகும். மாதப் முற்பாதி வரை செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு உயர்வுகள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணவரவுகளிலும் சற்று ஏற்றஇறக்கமான நிலையிருக்கும். உத்தி யோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். குடும்பத்தி லுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல்நிலையில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். இம்மாதம் தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.சந்திராஷ்டமம்:  19-10-2017 இரவு 08.02 மணி முதல் 22-10-2017 காலை 05.50 மணி வரை
நவம்பர்
களத்திர ஸ்தானமான 7-ல் செவ்வாய், 8-ல் குரு, சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள் வீர்கள். உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளை உண்டாக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். பேச்சில் மிகவும் நிதான மாக செயல்படுவது உத்தமம். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்கள் கூட மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங் களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். இம்மாதம் முருகனை வழிபடவும்.சந்திராஷ்டமம்:  16-11-2017 அதிகாலை 02.32 மணி முதல் 18-11-2017 மதியம் 12.50 மணி வரை

டிசம்பர்
செவ்வாய் சாதமற்று சஞ்சரிப்பதும், 8-ல் குரு சஞ்சாரம் செய்வதும் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடன் இருப்பது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்வதால் மட்டுமே நற்பலனை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவும். நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.சந்திராஷ்டமம்  13-12-2017 காலை 08.08 மணி முதல் 15-12-2017 மாலை 06.53 மணி வரை
அதிர்ஷ்டம் அளிப்பவைஎண் : 1, 2, 3, 9; கிழமை : வியாழன், ஞாயிறு; திசை : வடகிழக்கு; கல் : புஷ்ப ராகம்; நிறம் : மஞ்சள், சிவப்பு; தெய்வம் :  தட்சிணாமூர்த்தி. 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் - ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                தாயே பூமாதேவி 
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

அன்பான  கும்ப ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு உங்கள் ராசியாதிபதி சனிபகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டு கோளான குருபகவானும் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும்., சர்ப்ப கிரகங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு எதிர்பாராத செலவுகளை உண்டாக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாத அளவிற்கு அலைச்சல்கள் ஏற்படும். எடுக்கும் காரியங்களை முடிப்பதற்கு எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். 
 
நீங்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தாமதப்படுவதால் பொருளாதார நிலையும் நெருக்கடிக்கு உள்ளாகும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். ஆண்டின் தொடக்கத்தில் இவ்வளவு பிரச்சினைகளை சந்திக்கும் உங்க ளுக்கு வரும் 27-07-2017-ல் ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்தின்மூலம் ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதையும் சமாளிக்கும் வலிமையும், வல்லமையும் உண்டாகும். இதுமட்டுமின்றி செப்டம்பர் 2-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தினால் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் வாழ்வில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைபட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். 
 
உங்களின் உற்றார்- உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் இருந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் வந்துசேரும்.  கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பும், வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு பூமி மனை யோகம் வண்டி வாகன யோகம், யாவும் சிறப்பாக அமையும். சனி 10-ல் சஞ்சரித்தாலும் உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். கடன்களும் படிப்படியாக குறையும்.

உடல் ஆரோக்கியம் 
உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. உடல்நிலையில் நிம்மதி குறைவும் உண்டாகும். உங்களுடைய முன்கோபமே உங்களுக்கு இருந்த அழுத்தம் உயர்வடைய காரணமாக அமையும். குடும்பத்திலுள்ளவர்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். வீண்வம்பு வழக்கு ஏற்படும்.

குடும்பம், பொருளாதார நிலை கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடும் பொருளாதார நிலையில் இடையூறுகளும் உண்டாகும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிர்பாராத முன்னேற்றங்களை அடைய முடியும். சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமைவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
கொடுக்கல்- வாங்கல்கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் துறைகளில் இருப்போர் எதிலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது- ஆண்டின் முற்பாதியில் விரயங்கள் ஏற்பட்டாலும் பிற்பாதியில் அவற்றை ஈடுகட்டும் வகையில் லாபங்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பும் தேடிவரும். வம்பு வழக்குகள் மறையும்.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறுவிரயங்கள், நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செப்டம்பர் மாதத்திற்குப் பின் ஓரளவுக்கு மேன்மைகளை சந்திப்பீர்கள். அதுவரை போட்டி பொறாமைகளையும், வீண் வம்புவழக்குகளையும் எதிர்கொள்ள நேரிடும். தேவையற்ற பயணங்களாலும்  அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளாலும் அனுகூலமும் ஏற்படும்.

உத்தியோகம்
பணியில் வேலைப்பளு சற்று அதிகரித்தே காணப்படும். எடுக்கும் வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்துமுடிக்க முடியாதபடி இடை யூறுகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் பிறர் பணிகளையும் சேர்த்து செய்யவேண்டி வரும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகளைப் பெற்றுவிடமுடியும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருந்தாலும் நீங்கள் நல்லது செய்தாலும் அது மற்றவர்களுக்கு தீமையை போலத் தோன்றும். குரு மாற்றத்திற்குப் பின்பு உங்கள் வாழ்வில் ஓரளவுக்கு பொருளாதார மேன்மைகளைப் பெறுவீர்கள். தடைபட்ட சுபகாரியங்களும் தடைகள் விலகி கைகூடும். கடன்கள் படிப்படியாக குறையும். அசையும் அசையாச் சொத்து சேர்க்கைகளும் அமையும்.

அரசியல்
அரசியல்வாதிகளுக்கு உடனிருப்பவர்களே போட்டியாக மாறுவார்கள். எடுக்கும் காரியங்களிலும் தேவையற்ற இடையூறுகளை சந்திப்பீர்கள். என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார நிலை உயர்வுக்கு பஞ்சம் இருக்காது. மக்களின் தேவைகளை அறிந்து அவற்றைப் பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்களின் ஆதரவினைப் பெறமுடியும்.

விவசாயிகள்
விவசாயிகள் பயிர் நன்றாக விளைய அதிகப்படியான உழைப்பினை எதிர்கொள்ள நேரிடும். வேலையாட்களின் பற்றாக் குறையினால் அதிகப் பிரச்சினைகள் உண்டாகும் என்றாலும் பட்ட பாட்டிற்கானப் பலனை எதிர்நீச்சல் போட்டாவது அடைந்துவிடுவீர்கள். வங்கிக் கடன்கள் குறையும்.

மாணவ- மாணவியர்
மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் ஈடுபாடு குறையும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் சற்று தாமதமடையும். எதிலும் முழு முயற்சியுடன் செயல்படுவது நல்லது. பள்ளி, கல்லூரிகளில் பிறர்செய்யும் தவறுகளுக்கு தண்டனையை நீங்கள் அடைவீர்கள். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது.
2017 - ஆங்கில மாதப்பலன்கள்

ஜனவரி
ஜென்ம ராசிக்கு மாத முற்பாதியில் லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 17-ஆம் தேதி முதல் அதிசாரமாக குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத்தேவைகள் பூர்த்தி யாவதுடன் நினைத்ததையும் நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தை அடைந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. பயணங்களால் அனுகூலம் கிட்டும். நீங்கள் முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்:  17-01-2017 அதிகாலை 05.35 மணி முதல் 19-01-2017 மதியம் 03.54 மணி வரை

பிப்ரவரி
ஜென்ம ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ல் செவ்வாய், விரய ஸ்மாதமான 12-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், அதிசாரமாக குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார ரீதியாக மேன்மையை ஏற்படுத்தும் என்றாலும் நெருங்கி யவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. கணவன்- மனைவியிடையேயும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும், கொடுக்கல்- வாங்கலும் சரளமாக அமையும். பொன்பொருள் சேரும்.  உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். இம்மாதம் சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்:  13-02-2017 மதியம் 03.11 மணி முதல் 15-02-2017 இரவு 12.36 மணி வரை

மார்ச்
ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சாரம் செய்வது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும், 2-ல் சுக்கிரன் 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கடன்கள் குறையும். மறைமுக எதிர்ப்புகளும் மறையும். பூர்வீகச் சொத்து விஷயத்திலிருந்து வரும் பிரச்சினைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும், புத்திரவழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிலருக்கு பூமி, மனை வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும், பொன்பொருள் சேர்க்கை களும் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  12-03-2017 இரவு 11.55 மணி முதல் 15-03-2017 காலை 09.11 மணி வரை

ஏப்ரல்
ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதும், 2-ல் சூரியன் 8-ல் குரு சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்களும் இதனால் நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளிலும் தடை தாமதங்கள் நிலவும். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படு வதால் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டி யிருக்கும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கவும். பணியில் சிறுசிறு நெருக்கடிகள், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  09-04-2017 காலை 06.52 மணி முதல் 11-04-2017 மாலை 04.40 மணி வரை
 

மே
தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன் மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும், ஓரளவுக்கு சாதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினை ஏற்படுத்தும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்திலும் மகிழ்ச்சிகரமான பலன்கள் உண்டாகும். புத்திரவழியில் பூரிப்பு, உற்றார்- உறவினர்கள் ஆதரவு இருக்கும். பூர்வீக சொத்துகளாலும், அசையாச் சொத்துகளாலும் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் எதிர்பாராத வகையில் லாபம் உண்டாகும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள் உத்தியோகஸதர் களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெறும். இம்மாதம் விஷ்ணுவை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்:  06-05-2017 மதியம் 12.35 மணி முதல் 08-05-2017 இரவு 10.54 மணி வரை

ஜுன்
ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு, 4-ல் சூரியன், 8-ல் குரு  சஞ்சாரம் செய்வது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்பு, சோம்பல் போன்றவற்றால் அன்றாடப் பணிகளில் தடங்கல்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடித்து, நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே சாதகமானப் பலனை அடையமுடியும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகலாம். கொடுக்கல்- வாங்கலிலும் வீண்விரயங்களை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய நிலையும் இதனால் மனசஞ்சலமும் உண்டாகும். சர்ப்பசாந்தி செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்:  02-06-2017 மாலை 06.20 மணி முதல் 05-06-2017 அதிகாலை 04.36 மணி வரை

ஜுலை
சுக ஸ்தானமான  4-ல் சுக்கிரன், மாதப் பிற்பாதியில் ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் செவ்வாய்  சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். நெருங்கியவர்களிடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொன்பொருள் சேரும். ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்த்தாலே கடன் சுமைகளை குறைக்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கையில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தால் ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  30-06-2017 அதிகாலை 01.34 மணி முதல் 02-07-2017 காலை 10.55மணி வரை மற்றும்  27.07.2017 காலை 10.25 மணி முதல் 29-07-2017 மாலை 06.30 மணி வரை

ஆகஸ்ட்
பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய்  சஞ்சாரம் செய்வது ஏற்ற இறக்கமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். ஜீவன ரீதியாக ஊதிய உயர்வுகளைப் பெறுவீர்கள். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கும் புதிய வாய்ப்புகள் தேடிவருவதுடன் அதிக லாபம் கிடைக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலிலும் சரள நிலையிருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங் களை மேற்கொள்வீர்கள். இம்மாதம் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்:  23-08-2017 இரவு 08.02 மணி முதல் 26-08-2017 அதிகாலை 03.12 மணி வரை

செப்டம்பர்
ருணரோக ஸ்தானமான 6-ல் ராகு, சஞ்சாரம் செய்வதும், இம்மாதம் 2-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியின் மூலம் குரு பாக்கிய ஸ்தான மான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும், பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் சரளமாக இருக்கும். கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் சற்றே குறைவதால் நிம்மதி நிலவும்.  அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றிகளை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகளுக்கு போட்டிகள் நிலவி னாலும் எதிர்பாராத கௌரவப் பதவிகள் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. இம்மாதம் விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  20-09-2017 அதிகாலை 05.00 மணி முதல் 22-09-2017 மதியம் 12.04 மணி வரை
அக்டோபர்
களத்திர ஸ்தானமான 7-ல் செவ்வாய் அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது தேவையற்ற வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது உத்தமம். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் தேவையற்ற வீண் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறப்பான நிலையிலிருக்கும் எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் உண்டாகும். இம்மாதம் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்:  17-10-2017 மதியம் 12.18 மணி முதல் 19-10-2017 இரவு 08.02 மணிவரை

நவம்பர்
ருணரோக ஸ்தானமான 6-ல் ராகு, 9-ல் குரு மாதப் பிற்பாதியில் ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும், பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். கடன் சுமைகள் ஓரளவுக்கு குறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து வகையிலிருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் சாதகமான பலனை அடைவீர்கள். உத்தியோகத்தி லிருப்பவர்களையும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைக்க முடியும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்:  13-11-2017 மாலை 06.02 மணி முதல் 16-11-2017 அதிகாலை 02.32 மணி வரை

டிசம்பர்
ஜென்ம ராசிக்கு 9-ல் குரு, ருணரோக ஸ்தானமான 6-ல் ராகு, மாதப் பிற்பாதியில் லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால், பண வரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப் பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங் களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய முதலீடு களை தவிர்த்து விடுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் சுமாராக இருக்கும். இம்மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தின் மூலம் சனி லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறு தலாக இருப்பது அற்புதமான அமைப்பாகும். விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  10-12-2017 இரவு 11.42 மணி முதல் 13-12-2017 காலை 08.08 மணி வரை

                                                                      அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் : 5, 6, 8; கிழமை : வெள்ளி, சனி; திசை : மேற்கு; கல் : நீலக்கல்; நிறம் : வெள்ளை, நீலம்; தெய்வம் : ஐயப்பன். 
 
 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

 
Continue reading >>

வெள்ளி, 30 டிசம்பர், 2016

2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

0 கருத்துகள்
                                                     தாயே பூமாதேவி 

மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள் திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

சற்று பிடிவாதமான குணமிருந்தாலும் இளகிய மனம் படைத்த மகர ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த 2017-ஆம் ஆண்டு  உங்கள் ராசியாதிபதி சனிபவான் ஜென்ம ராசிக்கு 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். இதுமட்டுமின்றி பொன்னவனான குருபகவானும் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் ஆண்டின் செப்டம்பர் வரை சஞ்சாரம் செய்யவிருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்திற்கு மகிழ்ச்சி, சுபிட்சம் யாவும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியம் நடைபெற்று மகிழ்ச்சி அளிக்கும். பணவரவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. 
 
 
பூர்வீகச் சொத்து வழியிலும் சாதகமான பலன்கள் அமையும். உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்ற உறவுகளும் உங்களைத் தேடிவந்து நட்பு பாராட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தை அடைய முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு உடையவைகளாலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தி லிருப்பவர்கள் கௌரவமான பதவிகளைப் பெற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவார்கள். தற்போது 2, 8-ல் சஞ்சரிக்கும் கேது- ராகு வரும் 27-07-2017 முதல் கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். இதுமட்டுமின்றி செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் குரு 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். என்றாலும் உங்கள் ராசியாதிபதி சனி 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து வெற்றி நடைபோடுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியமானது அற்புதமான அமையும். நீண்ட நாட்களாக மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்குக்கூட படிப்படி யாக முன்னேற்றம் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருப்பதால் மனநிம்மதி உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக அமைந்து பூமி மனை வாங்கும் யோகம், வண்டி வாகன யோகம், பொன்பொருள் சேர்க்கை யாவும் அமையும். சுபகாரியங்களும் கைகூடும். உங்களைப் புரிந்துகொள்ளாமல் பிரிந்த உறவினர்கள்கூட தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. கடன்கள் படிப்படியாக குறையும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் துறையில் இருப்பவர்கள் அபரிமிதமான லாபத்தை அடையமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரள நிலையில் நடைபெறும். பெரிய தொகையினை ஈடுபடுத்தும் போதும், பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்கும் போதும் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். பெரிய மனிதர்கள் ஆதரவு தேடிவரும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினையும், அபிவிருத்தியையும் பெறமுடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு டையவைகளால் மேலும் மேலும் முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து நடந்து கொண்டால் நினைத்த முன்னேற்றங்களை அடையலாம்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உற்சாகத்தை உண்டாக்கும். உங்களின் திறமைகளை வெளிபடுத்தி அனை வரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். எதிர்பாராத பதவி உயர்வு, ஊதிய உயர்வு யாவும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பணியில் சிறுசிறு நெருக்கடிகள் அதிகரிக்கும். வேலைப்பளு காரணமாக உடல் நிலை சோர்வடையும். பெரிய கெடுதியில்லை.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைவதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன்பொருள் சேரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது என்றாலும் செப்டம்பர் மாதத்திற்குபின் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சேமிப்பும் பெருகும்.

அரசியல்

அரசியல்வாதிகளின் பெயர், புகழ், உயரக்கூடிய காலமிது. செல்வம் செல்வாக்கு யாவும் உயரும். மக்களிடையே இருந்த பிரச்சினை மறையும். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பிருக்கும். மக்களுக்காகவும், கட்சிக்காகவும் நிறைய செலவு செய்வீர்கள். பெயர் புகழ் கூடும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கும் மகசூல் பெருகும். விளைபொருட்களுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கும். பட்ட பாட்டிற்கெல்லாம் இரட்டிப்பான லாபம் பெறுவீர்கள். கால்நடைகளாலும் காய்கனி, பூ வகைகளாலும் லாபம் கிட்டும். கடன்கள் குறையும். நவீன கருவிகள் வாங்குவீர்கள்.

மாணவ- மாணவியர்

கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி யளிப்பதாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பாராட்டுதல்களையும் பரிசுகளையும் தட்டிச் செல்வீர்கள். கல்விக்காக அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும்.

2017 - ஆங்கில - மாதப்பலன்கள்

ஜனவரி

ஜென்ம ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ல் செவ்வாய், விரய ஸ்தானமான 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் லாப ஸ்தானமான 11-ல் சனி சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். நீங்கள் எதிர் பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவன முடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளை குறைப்பதும் நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் அமையும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஆதரவு கிட்டும். முருகப்பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  14-01-2017 இரவு 10.57 மணி முதல் 17-01-2017 அதிகாலை 05.35 மணி வரை

பிப்ரவரி

ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், லாப ஸ்தானமான 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் எதிர்பார்த்த முன்னேற்றங் களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தி யோகஸ்தர்களும் எதிர்பார்த்த உயர்வினை அடைவார்கள். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்கு தனவரவுகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று நிதானம் தேவை எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் விரயங்களை தவிர்க்கலாம். முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  11-02-2017 காலை 08.56 மணி முதல் 13-02-2017 மதியம் 03.11 மணி வரை

மார்ச்

ஜென்ம ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ல் சூரியன் சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், சஞ்சாரம் செய்வது குடும்பத்தில் தேவையற்ற பிரச்சி னைகள், அலைச்சல், டென்ஷன்களை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் பண விஷயத்தில் கவனம் தேவை. நண்பர்களே எதிரிகளாக மாறுவார்கள். கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகையாக மாறும். எடுக்கும் காரியங் களில் எதிர்நீச்சல்  போட்டே வெற்றிகளைப் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதே தற்போதைக்கு நல்லது. தொழில், வியாபாரத்தில் ரீதியாக எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. மாதப் பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய விருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சிவவழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்:  10-03-2017 மாலை 04.59 மணி முதல் 12-03-2017 இரவு 11.55 மணி வரை

ஏப்ரல்

மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பது பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் தடையின்றி அமையும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்- உறவினர்களால் ஏற்பட்டப் பிரச்சினைகளும் மறையும். உத்தியோ கஸ்தர்களுக்கு கௌரவமான பதவி கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். பொன்னும் பொருளும் சேரும். அசையாச் சொத்துகளால் லாபம் அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு டையவற்றாலும் லாபம் கிட்டும். துர்க்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  06-04-2017 இரவு 11.01 மணி முதல் 09-04-2017 காலை 06.52 மணி வரை

மே

சர்ப்ப கிரகங்களான 2-ல் கேது 8-ல் ராகு சஞ்சரிப்பதும், சுக ஸ்தானமான 4-ல்  சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும், பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். நினைத்ததை நிறை வேற்றுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யமுடியும். உற்றார்- உறவினர்களின் வருகையும் மகிழ்ச்சியளிக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடமுடியும். தொழில், வியாபாரத்திலும் ஓரளவுக்கு எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  04-05-2017 அதிகாலை 04.30 மணி முதல் 06-05-2017 மதியம் 12.35 மணி வரை

ஜுன்

ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, சஞ்சரிப்பதும் மாதப் பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பாகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணம் பலவழிகளில் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைவான லாபங்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். புத்திரவழியில் உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி யினை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில், வியா பாரம் நல்ல நிலையில் நடைபெறும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்:  31-05-2017 பகல் 11.14 மணி முதல் 02-06-2017 மாலை 06.20 மணிவரை மற்றும்  27-06-2017 இரவு 07.59 மணி முதல் 30-06-2017 அதிகாலை 01.34 மணி வரை

ஜுலை

மாதப் முற்பாதியில் 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு சஞ்சரிப்பதும் பயணங்களால் மேன்மையை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும்  இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்பட வுள்ள ராகு- கேது பெயர்ச்சியின்மூலம் கேது ஜென்ம ராசியிலும்,  ராகு 7-லிம் சஞ்சாரம் செய்யவுள்ளதால் நெருங்கியவர்களிடையே வீண் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரமாக செலவுகள் செய்வதையும் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்திலும் கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகளை சந்திப்பீர்கள். போட்ட முதலீட்டை எடுப்பதிலும் சற்று சிரமம் நிலவும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  25-07-2017 காலை 06.02 மணி முதல் 27-07-2017 காலை 10.25 மணி வரை

ஆகஸ்ட்

களத்திர ஸ்தானமான 7-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பது கணவன்- மனைவியிடையே தேவையற்ற வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தும் என்றாலும் பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, லாப ஸ்தானமான 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். குடும்பச் சுமைகள் சற்றே குறையும். உற்றார்- உறவினர்கனை அனுசரித்து நடப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுத்தால் வீண்சிக்கல்களில் சிக்கிக்கொள்வீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும்.  எடுக்கும் முயற்சி களில் தடைகளுக்குப் பின் வெற்றி பெறுவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  21-08-2017 மதியம் 03.52 மணி முதல் 23-08-2017 இரவு 08.02 மணி வரை

செப்டம்பர்

ஜென்ம ராசியில் கேது 7-ல் ராகு சஞ்சரிப்பதும், 8ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும், இம்மாதம் 2-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியின்மூலம் குரு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிற்கு மாறுத லாகவிருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அஜீரணக் கோளாறுகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களாலும் உடல்நிலை பாதிப்படையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் இழுபறிநிலை நீடிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். உற்றார்- உறவினர்களிடையே வீண்பிரச்சினைகள் அதிகரிக்கும். சனி 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் வலிமையைப் பெறுவீர்கள். சிவனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  17-09-2017 இரவு 12.07 மணி முதல் 20-09-2017 அதிகாலை 05.00 மணி வரை

அக்டோபர்

பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், புதன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கடந்த கால பிரச்சினைகள் யாவும் சூரியனைகண்ட பனிபோல மறையும். குடும்பத்தில் ஓரளவுக்கு நிம்மதியிருக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் சாதகமான பலனை அளிக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் ரீதியாக இருந்த பிரச்சி னைகள் விலகி எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். வெளியூர், வெளி நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். நற்பலனை உண்டாக் கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  15-10-2017 காலை 06.21 மணி முதல் 17-10-2017 மதியம் 12.18 மணி வரை

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 10, 11-ல் சூரியன், பாக்கிய ஸ்தானமான 9-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஏற்றஇறக்கமான பலன்களை பெறுவீர்கள். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும். பயணங்களிலும் கவனமுடனிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளை சமாளித்தே லாபம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டியிருப்பதால் உடல் நிலை சோர்வடையும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை பிறர் தட்டிச் செல்வார்கள். கவனம் தேவை. முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்  11-11-2017 பகல் 11.44 மணி முதல் 13-11-2017 மாலை 06.02 மணி வரை

டிசம்பர்

மாதப் முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் இம்மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தின்முலம் உங்களுக்கு ஏழரை சனி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். சிலருக்கு பூமி மனையால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் அவப்பெயரை எடுப்பீர்கள். சிவபெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  08-12-2017 மாலை 06.28 மணி முதல் 10-12-2017 இரவு 11.42 மணி வரை

                                                              அதிர்ஷ்டம் அளிப்பவை
 
 
எண் :  5, 6, 8; நிறம் : நீலம், பச்சை; கிழமை : சனி, புதன்; கல் : நீலக்கல்; திசை : மேற்கு; தெய்வம் : விநாயகர்.
 
 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
 
Continue reading >>

சமீபத்திய கருத்துகள்