Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 15 மே, 2013

வீடு , மனை சொந்தமாக வாங்க ஜோதிட ரீதியான ஆன்மீக வழி இருக்கிறதா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC


                                                     
                                                  ஓம் சிவ சக்தி 

 ஒருவருடைய ஜெனன ஜாதகப்படி அந்த நபருக்கு சொந்தமான வீடு மனை அமையும் யோகத்தை லக்னத்துக்கு நான்காம் இடத்தை கொண்டும் , வீட்டு மனைக்காரன்  என்று சொல்ல கூடிய செவ்வாய் பகவான் இருக்கும் நிலையை கொண்டும் அந்த ஜாதகர் பிறக்கும்பொழுதே சொந்தமான தனக்கு சொந்தமான வீடு மனை இருக்கும் யோகத்தோடு பிறந்து உள்ளாரா?  அல்லது வாடகை வீட்டில் இருக்கும் சூழ்நிலையில் அந்த ஜாதகர் பிறந்து இருக்கிறாரா? என்பதை பற்றி சொல்லலாம்.  

லக்னத்துக்கு நான்காம் வீட்டில் சுப கிரகங்கள் என்று சொல்ல கூடிய குருபகவான் சுக்கிரன் புதன் சந்திரன் போன்ற சுப கிரகங்கள் இருந்தாலும் சரி , அல்லது சுப கிரகங்கள் உச்சம் பெற்று , இந்த நான்காம் வீட்டையோ அல்லது இந்த நான்காம் வீட்டுக்கு அதிபதியாக இருக்கும் கிரகத்தையோ பார்த்தால் அந்த ஜாதனுக்கு பிறக்கும்பொழுதே சொந்தமான வீடு மனை யோகம் அமையும். 

மேலும் வீட்டு மனைக்கு செவ்வாய் பகவான் காரகம் வகிக்கிறார். இந்த செவ்வாய் பகவான் லக்னத்துக்கு நான்காம் வீட்டில் இருந்தாலும் . நான்காம் வீட்டை பார்த்தாலும் சரி அந்த ஜாதகர் பிறக்கும்பொழுதே சொந்தமான வீடு அமைந்திருக்கும் பாக்கியத்தை பெற்ற ஜாதகர் ஆவார். 

ஒரு சிலரது ஜாதகங்களில் சொந்தமான வீடு கட்டிசந்தோஷமான வாழ்க்கை வாழும் பாக்கியம் இருந்தாலும்   எதோ காரணம் காரணம் புரியாத சூழ்நிலைகளால் சொந்தாமாக வீடு கட்டும் பாக்கியம் இல்லாமல் போய்விடும். 


சொந்தமாக வீடு கட்டும் யோகம் அவரது ஜாதகத்தில் இருந்தாலும் கூட கோச்சார ரீதியாக அதாவது தற்பொழுது உள்ள யோகமான கிரகங்களின் தசா புக்தி வரும்பொழுதுதான் அந்த பாக்கியம் தங்கு தடையின்றி நடைபெறும். 

அதேபோல் ஒரு நபர் தனது உழைப்பால் வந்த வருமானத்தால் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் , அந்த நபரின் பெயரின் கூட்டு எண்கள் அவரின் பிறந்த தேதிக்கு சாதகம் இல்லாத கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும்பொழுது எவ்வளவுதான் அந்த ஜாதகரின் ஜாதக அமைப்பு ஒரு யோகமான ஜாதக அமைப்பாக இருந்தாலும் கூட சொந்தமாக வீடு கட்டும் அவரது செயல்பாடுகளில் தடைகள் ஏற்பட்டு அந்த நினைவு ஒரு கனவாகவே போய்விடும். 

எந்த ஒரு நபரின் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண்  , பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் , இவற்றிக்கு தகுந்தாற்போல் அவரின் பெயரை அதிர்ஷ்ட முறையில் சிறு திருத்தம் செய்து 

ஸ்யோனா ப்ருதிவி பவாந்ருஷரா நேவேசனீ !
யச்சான சர்ம சப்ரத !

என்ற மந்திரத்தை மனதினை ஒருமுக படுத்தி திட சிந்தனையுடன் காலையும் மாலையும் கூறி வந்தால் சொந்தமாக வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.




Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்