ஓம் சிவ சக்தி
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான்
அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர்.
சிம்மாசலம் என்னும் ஊரில் குன்றின் மேல் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார்.
ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்றுதான் அப்பெருமானைக் காண இயலும். பிறகு
சந்தனப் பூச்சு பூசி வைத்து விடுவார்கள். வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த
நாளாகவும் கூறப்படுகிறது.
சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும்
இதே நாளன்றுதான். எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான்
என்பார்கள். இந்நாளில் எமனுக்குத் தனி பூஜை உண்டு. எம பூஜை செய்வதால்
நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை. வைகாசி
விசாகத்தினை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை
நடைபெறும். இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு
ஆற்றல் பெற்றான்.
திருமழபாடியில் ஈசன் வைகாசி விசாக நாளில் திருநடனம்
புரிகிறார். நம்மாழ்வார் அவதரித்த நாள், வைகாசி விசாகம் என்று
ஆழ்வார்திருநகரியில் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி
விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில்
குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால்
மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது
நம்பிக்கை.
ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்
படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே
தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள்
மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும்,
பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித
நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள்
கொண்டாடப்படுகின்றது.
இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு
நடக்கும். புத்தன் (சித்தார்த்தன்) அவதரித்ததும்(பிறப்பு) புத்தாரனதும்,
(திருவருள்) நிருவாணமடைந்ததும்(மறைவு) இதே திதியிற்தான் என்பர்.
விசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும்படும். இருபத்தேழு
நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின்
கொடுமைகளைத் தாங்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை
முறையிட்டனர். கருணையங்கடலாகிய சிவபிரான் அசுரர்களுடைய கொடுமைகளினின்று
அவர்களைக் காத்தருள விரும்பினார்.
தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு
தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி,
தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு
சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி
விளங்கின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக
அக்குழந்தைகட்குப் பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான
தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும்.
பன்னிரு கரங்களின் பணி: முருகனின் பன்னிரு கரங்கள்
செய்யும் பணிகள் என்னவென்று தெரியுமா? இரு கைகள் தேவரையும் முனிவரையும்
காக்கிறது. மூன்றாவது கை அங்குசத்தைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை
உடுத்திய தொடையில் இருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச்
சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அருள்பொருளை உணர்த்துகிறது.
எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு
சுழன்று வேள்வியை ஏற்கின்றது. பத்தாவது கை மணியை ஒலிக்கின்றது (அருளோசை).
பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.
வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி
முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம்
அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில்
இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று
பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை
நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள்
அனைத்தும் போகும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம்
முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும்.
குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.
பார்வதி மட்டுமில்லாமல் முருகனுக்கு "சஷ்டி பெண்கள் என்றும் கார்த்திகை
பெண்கள் என்றும் அழைக்கப்பட்ட ஆறு தாயார்கள் இருந்தனர். அவர்கள் ஆறுபேரும்
அவரது தாய்மார்களே. நட்சத்திர வரிசையில் கார்த்திகை ஆறாவது. அதேபோல,
திதிகளில் சஷ்டி ஆறாவதாகும். சிவனுக்குரிய ஐந்து முகங்களும், ஞானியர்
மட்டுமே தரிசிக்கும் அதோமுகத்தோடு சேர்ந்து ஆறுமுகங்கள் உண்டானது.
இவருக்குரிய மந்திரம் "சரவணபவ என்னும் ஆறு எழுத்து கொண்டது. காமம் (பொருள்
ஆசை), குரோதம் (கோபம்), லோபம் (கருமித்தனம்), மோகம் (பெண்ணாசை), மதம்
(ஆணவம்), மாச்சரியம்(பொறாமை) என்னும் ஆறு பகைவர்களையும் அழிக்கும்
படைவீரராகத் திகழ்கிறார். அந்த ஆறுமுகப்பெருமானை தரிசித்தவருக்கு வாழ்வில்
என்றென்றும் ஏறுமுகம் தான்.
முருகன் கதை கேட்டா லாபம்: காளிதாசர் எழுதிய
காவியங்களில் குமார சம்பவம் புகழ்பெற்றது. வால்மீகி ராமாயணத்தில் இருந்தே
காளிதாசர் இந்த சொல்லை எடுத்தாண்டுள்ளார். விஸ்வாமித்திரர் பாலகாண்டத்தில்
ராமலட்சுமணருக்கு முருகனின் வரலாற்றை எடுத்துச் சொல்லியதாக ராமாயணம்
கூறுகிறது. குமாரசம்பவம் என்னும் இப்புனிதமான கதையைக் கேட்டவருக்கு செல்வம்
சேரும். கார்த்திகேயனிடம் பக்தி வைத்தவருக்கு இப்பிறவியில் தீர்க்காயுள்,
மழலைச்செலவம் போன்ற பாக்கியம் உண்டாவதோடு ஸ்கந்த லோகத்தில் வாழும்
பாக்கியமும் வாய்க்கும்.
செவ்வேள் முருகன்: ஒருமுறை சிவன் தியானத்தில் இருந்த
போது, அவர் மீது காதல் பாணத்தை தொடுத்தான் மன்மதன். கோபமடைந்த சிவன்
நெற்றிக்கண்ணைத் திறக்க நெருப்புக்கு இரையானான். அவனுடைய கரும்பு
வில்லையும், மலர் அம்பையும் அம்பிகை எடுத்துக் கொண்டாள். அவற்றை சிவனின்
பாதத்தில், அர்ப்பணித்து வணங்கினாள். அப்போது, மன்மதனை எரித்த அதே
கண்ணிலிருந்து ஆறுபொறிகள் புறப்பட்டன. அவை சரவண பொய்கையில் விழுந்து
ஆறுகுழந்தைகள் உண்டாயின. பார்ப்பதற்கு மன்மதனைப் போலவே அவர்கள் இருந்தனர்.
மன்மதன் கருநிறம். ஆனால், இந்த ஆறுமன்மதர்களோ சிவப்பு நிறம். அதனால்,
தமிழில் மன்மதனை கருவேள் என்றும், முருகனை செவ்வேள் என்றும் குறிப்பிடுவர்.
"வேள் என்ற சொல்லுக்கு அழகுமிக்கவன் என்பது பொருள்.
இறைவனுகே நீ இறைவனப்பா!: பிரம்மாவின் மனதில் இருந்து
பிறந்தவர் சனத்குமாரர். பிரம்மஞானியான இவரைக் காண சிவபார்வதி வந்தனர்.
ஆனால், அவர்களை அவர் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தார். தெய்வத்தைக்
கோயிலில் பார்த்தாலே, அது வேண்டும், இது வேண்டும் என கேட்பது உலக
வழக்கம். ஆனால், தெய்வம் நேரில் வந்தும் சனத்குமாரர் ஏதும் கேட்கவில்லை.
இதனால் மகிழ்ந்த சிவன், ""உன் பற்றற்ற நிலையைப் பாராட்டி வரம் தருகிறேன்,
கேள், என்றார். சனத்குமாரரோ தனக்கு எதுவுமேதேவையில்லை என்று
சொல்லிவிட்டார்.
சில ஞானிகள் "பிறவாவரம் கொடுங்கள், என்றாவது தன் ஆசையை
வெளிப்படுத்துவார்கள். சனத்குமாரர் அதைக்கூட கேட்க விரும்பவில்லை. வியந்து
போன சிவன் அவரிடம், ""நீ என்னிடம் வரம் கேட்காவிட்டால் பரவாயில்லை. நான்
உன்னிடம் ஒரு வரம் கேட்கிறேன். நீயே எனக்கு மகனாகப் பிறக்கவேண்டும்,
என்றார். சனத்குமாரரும் ஒப்புக்கொண்டார். ஆண்டிச்சாமியாக இருந்த
சனத்குமாரர், அடுத்த பிறவியில் சிவனுக்கு மகனாகப் பிறந்து, ஆண்டிக்கோலம்
பூண்டு பழநி சென்றார்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக