Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

தீங்கு விளைவிக்கும் பெயர் அமைப்புகள் உண்டா?

ஆங்கில எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கையில் அபச குணமான , ஆரம்ப எழுத்தை பொருளாக கொண்டு, ஆரம்பிக்கும் எழுத்துக்களில் D என்ற ஆங்கில எழுத்துக்கு அதிக பங்கு இருக்கிறது. DANGER (ஆபத்து), DOWN (கீழே), DARK (இருட்டு),DAMAGE ( உபயோகமில்லாதது), DEATH (இறப்பு), DIE (சாவு), DISEASE (வியாதி),இன்னும், பல அபச குணமான  சொற்கள்  இந்த D ஐ ஆரம்ப எழுத்தாக கொண்டு சொற்களாக  அமைவதை  காணலாம்.இப்படி இந்த D , என்ற எழுத்து பெயரில் வரும்பொழுது , ஆபத்து, இருட்டு, உபயோகமில்லாதது, இறப்பு, சாவு, கீழே இறங்குதல், போன்ற அபசகுனமான , நிகழ்ச்சிகளை, குறிப்பதால், வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் எல்லா முயற்சிகளிலும், தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் பெயரின் ஆரம்ப எழுத்தாகவே D என்று வரும்பொழுது மேலே சொன்ன கெட்ட  பலன்கள்  நிகழ்சிகள், இளம் வயதிலேயே அனுபவிக்க கூடிய சூழ்நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும். D என்ற எழுத்து, DIE (சாவு ) என்ற மரணத்தை உச்சரிக்கும் ஒரு சொல்லாக இருப்பதால் , ஒரு மனிதனின் பெயரின் ஆரம்ப எழுத்து, D இல் ஆரம்பித்து  பெயரின் கூட்டு எண், 4 , 13 , 22 , 31 , இப்படியாக வந்தால், இந்த எண்களை குறிக்கும் வயதுகளில் , அபாயகரமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். அதே போல் ஒரு தனி மனிதனின் பெயரில், WAR (போராட்டம் ) MAR(நாசம் விளைவிக்கிற)  NO (இல்லை) LOW (கீழ்நிலை) ILL (நோயுற்ற )  என்ற சொற்கள், வராமல் இருப்பது நல்லது.ஒரு தனி மனிதனின் பெயரில் WAR என்ற சொற்கள் வந்தால் அவனுடைய வாழ்க்கை போராட்ட மாயமானதாகவும், மிகவும் சிரம பட்டு வாழ்க்கையை எதிர் நீச்சல் போட்டே காலத்தை ஓட்டவேண்டிருக்கும். உதாரண பெயர்கள் PARAMESWARI , MAHESWARI ,BUVANESWARI ,PARAMEWARAN , RAJESWARI  போன்ற பெயர்களை சொல்லலாம். 
ஒரு தனிமனிதனின்  பெயரில் MAR  என்ற சொற்கள் வருவதை  தவிர்க்கவும்  அப்படி இந்த சொற்கள் வந்தால் அவனுடைய வாழ்க்கைக்கு உயிருக்கு  நாசம் விளைவிக்ககூடிய அல்லது தீங்கு விளைவிக்க கூடிய ஒரு தவறான பாதைக்கு இந்த சொற்கள் அவனை அழைத்து செல்லும். மேலும் இந்த சொல் ஒரு தனி மனிதனின் பெயரில் வந்தால் அவனுடைய ஆயுளுக்கு உத்திரவாதம் இல்லை. இது மிகவும் ஆபத்தான சொல்லாகும்.  உதாரண பெயர்கள். 
KUMAR , PREMKUMAR , MARIYAPPAN, MARUTHAVANAN , KUMARADEVAN , இந்த பெயர்களில் MAR  என்று வருவதை கவனிக்கவும். 
அடுத்து ஒரு தனி மனித வாழ்க்கையில்  சொத்து , சுகம், இல்லையென்றாலும். அவனுக்கு நல்ல ஆரோக்கியமான நோய் நொடியில்லாத வாழ்க்கை, அமையும்பொழுது, இதை விட பாக்கியம் வேறென்ன வேண்டும். ஒரு மனிதனின் பெயரில், ILL என்ற சொற்கள் வராமல் இருப்பது நல்லது. காரணம், இந்த சொல் ஒரு மனிதனின் பெயரில் வரும்பொழுது, உள்ளுக்குள் நோயை பற்றிய பயம் அதிகமாகவும் ஒரு உடல் நலம் குன்றிய நபர் எப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்படுகிறாரோ அந்த உடல் மாதிரியான  அமைப்பை பெற்றிருக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் உடல் ரீதியாக தீராத  நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்