குழந்தை பாக்கியம் பெறுவதற்கு ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு வகையான கிரக அமைப்புகள் சொல்லப்பட்டிருகின்றன. இருந்தாலும் வராக மிஹிரரர் அருளிய பிருஹத் சமிதா என்ற நூலில் ஆண் குழந்தை பிறப்பதற்கான கிரக நிலை கொடுக்கப்பட்டிருக்கின்றன. பெண்களுடைய ஜாதகத்தில் மாத விடாய் நின்ற எட்டாவது நாளில் கோசாரத்தில் சந்திரன் லக்னத்திற்கு 3 - 6 - 10 - 11 ஆம் பாவங்களில் வரும் கால கட்டங்களிலும், கோசாரத்தில் குரு அல்லது செவ்வாய், சந்திரனை பார்க்கும் காலங்களில் மனைவி உடன் தாம்பத்திய உறவு வைத்து கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.
மேலும் ஒரு பெண்ணுக்கு மாத விடாய் நின்ற 12 , 16 , ஆவது நாளில் தாம்பத்திய உறவு கொண்டால், அரசாள ஒரு ஆண் மகன் பிறப்பான் என்பது விதியாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக