பொதுவாகவே ஆலயங்களில் உடைக்கும் தேங்காய் நல்லதாக இருந்தால் அது நல்ல சகுனம் அல்லது நல்லது நடப்பதற்கான அறிகுறியை உணர்த்தும். அதேபோல் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால் தெய்வ குற்றத்தை உணர்த்தும். சிதறுகாய் போல் தூள் தூளாக உடைவதும் தெய்வ குற்றத்தை உணர்த்தும் . குறுக்கு வாட்டில் உடையாமல் நெடுக்கு வாட்டில் உடைவதும் தெய்வ குற்றமாகும் . தேங்காய் உடைக்கும்பொழுது
அது கை நழுவி கீழே விழுந்தால் அது அபச சகுனமாகும். உடைக்கும்பொழுது
சரி பாதியாக உடைந்தால் பெரும் சிறப்பு உண்டாகும். தொட்டில் போல் தேங்காய் உடைந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். சிறிய மூடியாகவும் பெரிய மூடியாகவும் உடைந்தால் தப்பில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக