Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 31 டிசம்பர், 2014

2015 - புத்தாண்டு – பொது பலன்கள் எப்படி இருக்கும் ? ஆன்மீக ஜோதிடர் -அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் – ஆர் . ராவணன் BSC

0 கருத்துகள்



நவ கிரகங்களில் குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை வளர்பிறை ஏகாதசி திதி பரணி நட்சத்திரம் மேஷ ராசி கன்னி லக்னத்தில் சித்தி நாம யோகம், பத்தரை நாமகரணத்தில், நவாம்சத்தில் ரிஷப லக்னத்தில், நேத்திரம், ஜீவனம் நிறைந்த சித்தயோகத்தில் நள்ளிரவு 12 மணிக்கு 01.01.2015ம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி இந்த ஆண்டின் கூட்டுத் தொகை (2+0+1+5) எட்டாக வருவதால் உலகெங்கும் இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும். எரிமலைகள் வெடிக்கும். கடல் கொந்தளிக்கும், சாலை விபத்துகள் அதிகரிக்கும். மக்களிடையே பழிவாங்கும் குணமும், குறுக்கு வழியில் முன்னேறும் போக்கும் அதிகரிக்கும்.

இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளப் பெருக்கால் விளை நிலங்கள் சேதமடையும். சுரங்கங்கள், காற்றாலைகள், இரும்புத் தொழிற்சாலைகள் பாதிப்படையும். நகரத்தை காட்டிலும் நகரத்தை ஒட்டியிருக்கும் பகுதிகள் நவீனமாகும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நிலக்கரி, இரும்பு போன்ற கனிம, கரிம பொருட்களின் விலை குறையும். பாலியல் சம்பந்தமான புதிய நோய்கள் உண்டாகும். மின்வெட்டை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காற்றாலை மற்றும் சோலார் வகைகளால் மின்உற்பத்தி அதிகரிக்கும். அந்தமான், இந்தோனேஷியா, இந்தியாவில் கடல் சீற்றம் காணப்படும். 

மிதுனம் கன்னி ராசிக்கு அதிபதியான புதனின் அம்சமான கன்னி லக்னத்தில் இந்த வருடம் பிறப்பதனால் பாலைவனம் சோலவனமாகும். அதேநேர சோலைகள் பாலையாகவும் பாதைகளாகவும் மாறும். லக்னாதிபதி புதன் குருவின் பார்வை பெறுவதால் மக்களின் அடிப்படை வசதிகள் பெருகும். பாலியல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு அதிகரிக்கும்.

மாணவ மாணவிகளின் பள்ளிப் பாடத் திட்டங்கள் மாறும். பாரத நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்களின் பெருமைகள் பாடத் திட்டங்களில் இடம்பெறும். கணிதம், அறிவியல் பாடங்கள் நவீனமாகும். புதனோடு சுக்கிரன் இருப்பதால் தமிழ் கவிதைகள், அறநெறி நூல்கள், பக்தி இலக்கியங்கள் நாடெங்கும் உலகெங்கும் பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகி பரவும். வருடம் பிறக்கும் நேரத்தில் சுக்கிரனும், புதனும் ஆடம்பர வீடான மகரத்தில் சேர்ந்திருப்பதால் மக்கள் மனதில் அலங்காரச் சிந்தனை அதிகரிக்கும். 


இல்லத்தரசிகள் குறிப்பாக சமையல் அறை, படுக்கை அறை, குளியலறை போன்றவற்றின் உள் அரங்க அலங்காரத்திற்காக அதிகம் செலவழிப்பார்கள். லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் சனி வலுத்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் நான்கு வழி, ஆறு வழிச் சாலைகள் புதியதாக அமைக்கப்படும். ரயில்வே துறை அனைத்து பாதைகளையும் அகல ரயில் பாதைகளாக மாற்றும். ரயில்களின் வேகம்அதிகரிக்கப்படும்.

அரசாங்கத்துக்கு விரோதமாக செயல்படும் போலி மருந்துகள் மற்றும் போலி மருத்துவக் கூடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்படும். போலி மருத்துவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள். பணப் பரிமாற்ற அட்டைகளின் பயன்பாடு அதிகரிக்கும். மக்கள் சிற்றின்பத்தில் அதிக நாட்டம் கொள்வார்கள். வாழ்க்கையை அனுபவிப்பதற்கே! நாளையைப் பற்றி கவலைப்படாதே! இன்று சந்தோஷமாக இருஎன்கிற மனோநிலை அதிகரிக்கும்.  

2015- ஜூலை மாதம் முதல் குரு சிம்ம ராசியில் வந்தமர்வதால் சில அரசியல் கட்சிகளுக்கு மதிப்பில்லாமல் போகும். புதிய கட்சிகளும், புதிய கூட்டணிகளும் உதயமாகும். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள போராட வேண்டிய சூழல் வரும். எதிர்கட்சிகள் ஒன்று சேரும். சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எதிலும் பெண்களின் ஆதிக்கம் பெருகும். கம்ப்யூட்டர், கார், டி.வி., ஃபிரிட்ஜ், ஏ.சி மற்றும் சமையலறை சாதனங்களின் விலை குறையும்.

பொழுபோக்கு துறையான சினிமாத்துறை செழிக்கும். யதார்த்தமான கதை அமைப்புள்ள படங்கள் விருதுகள் பெறும். உலகத் திரைப்பட துறையில் தமிழ்மொழியின் தரமான படங்கள் அதிகரிக்கும். சிலம்பாட்டம், தற்காப்புக் கலைகள் மீண்டும் பிரபலமடையும். புதுமுகங்கள் பிரபலமடைவார்கள். ஆடியோ, வீடியோ சாதனங்களின் விலை குறையும். பரம்பரை பணக்காரர்களுக்கு சோதனைகள் உண்டாகும். கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் சேவைகளை பாதிக்கும் நவீன வைரஸ்கள்,கதிர்வீச்சுகள்பரவும்.

புதிய உத்திகளுடன் நவீன வசதிகளுடன் கூடிய அடுக்ககங்கள், வாணிபக் கூடங்கள் அதிகம் எழும்பும். பால் விலை உயரும். வெள்ளி விலை உயரும். அழகு நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் அதிகமாகும். புதிய வானொலி, தொலைக்காட்சி சேவைகள் மற்றும் மொபைல் போன் சேவைகளும் அதிகரிக்கும். 

சுப கிரகமான குரு உச்சம் பெற்றிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் பைனான்ஸ், சி.ஏ., தேசிய அளவிலான சட்டக் கல்லூரியின் சட்டப் படிப்புகள் பிரபலமடையும். ஃபேஷன் டெக்னாலஜி, கேட்டரிங் டெக்னாலஜி, ஜுவல் டிசைனிங், மாடலிங் துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மாணவர்களிடையே எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை குறையும். மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு சமூகத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.

எதிர்பார்க்காத சிலர் பெரிய பதவிகளிலும் அமர்வார்கள். யோகா, தியானம் போன்றவற்றின் மீது மக்களுக்கு நாட்டம் அதிகரிக்கும். மருந்துகளில் டானிக் போன்றவற்றின் பயன்பாடு குறைந்து கஷாயம், லேகியம், சூரணம் போன்றவற்றின் பயன்பாடுகள் பிரபலமாகும். 

நமது இந்தியாவின் மூலிகை மருத்துவத்தின் பக்கம் உலக நாடுகளின் பார்வை திரும்பும். வீடுகளின் விலை குறையும். மலைப் பிரதேசங்களிலுள்ள சுற்றுலா தலங்கள் பிரபலமடையும். சுற்றுலாத்துறையை விரிவுபடுத்த மத்திய மாநில அரசுகள் அதிக நிதியை ஒதுக்கும். 11.2.2015 முதல் 16.7.2015 வரை மற்றும் 5.11.2015 முதல் டிசம்பர் முடிய உள்ள காலகட்டங்களில் வன்முறைகள், தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும்.

அரசாங்கத்திற்கு விரோதமான - சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட செல்வாக்குமிக்க முக்கியஸ்தர்கள் தண்டனைக்குள்ளாவார்கள். சனி ரிஷபத்தை பார்ப்பதால் உதடு, காது, கண் மற்றும் மூளைக் குறைபாடுள்ள குழந்தைப் பிறப்பு அதிகரிக்கும். மத்திம வயதில் இருப்பவர்கள் வேலையிழப்பார்கள். அதிகம் படித்தவர்களுக்கு உரிய வேலை கிடைக்காமல் போகும். ஆண் குழந்தை பிறப்பு அதிகரிக்கும். தாயகம் திரும்புபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.  

மந்த கிரகம் என்று சொல்ல கூடியதும் ஊழ்வினை கிரகமான சனியின் ஆதிக்கத்தில் இந்தாண்டு பிறப்பதால் எந்த உணவை சாப்பிடுகிறோமோ அதற்கான தாதுக்கள் நம் உடம்பில் சேருவதைப்போல நாம் என்ன நினைக்கிறோமோ எந்த செயலைச் செய்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் நல்லதும், தீயதும் நம்மை நாடிவரும். இதை உணர்ந்து மனசாட்சியோடு செயல்படுவது நல்லது. காவல் தெய்வங்கள் மற்றும் மகான்களின் ஜீவ சமாதிகளை அடிக்கடி சென்று தரிசிப்பது நல்லது.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328







Continue reading >>

2015 - மீன ராசி – ஆங்கில புத்தாண்டு பலன்கள் - ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் . ராவணன் BSC

0 கருத்துகள்

குரு பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மீன ராசி அன்பர்களே! இந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகி முன்னேற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் விடா முயற்சிக்கு அரிய பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் பேச்சில் நுண்ணறிவு வெளிப்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.


குடும்பத்தில் பொருளாதாரம் நிறைவாக இருக்கும். உங்களின் அதைர்யங்கள் நீங்கி தைரியம் கூடும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். உங்கள் ஞாபகசக்தி அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் உயரும். குழந்தைகளை மேற்படிப்புக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்புவீர்கள். பொது காரியங்களில் தன்னலம் பாராட்டாமல் ஈடுபடுவீர்கள். சிலர் விலையுயர்ந்த வீட்டுப் பிராணிகளை வாங்குவார்கள்.


உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். அதேசமயம் அரசாங்கத்திற்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை குறித்த காலத்திற்குள் சமர்ப்பிக்கவும். தீயவர்கள் என்று உணர்ந்திருந்தாலும் அவர்களின் தொடர்பை தவிர்க்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மற்றபடி பிறர் தயவுடன் நீங்கள் செய்து வந்த செயல்களை நீங்கள் தன்னிச்சையாக முடிக்கக்கூடிய நிலைமைகள் உருவாகும். அதோடு வாக்கு கொடுத்தால் அதை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள் என்கிற காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.


2015 - ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலட்டத்தில் உங்களின் தெய்வ பக்தி உயரும். தியானம், பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் விவகாரமின்றி கைக்கு வந்து சேரும். சிலர் நீண்ட தூரப்பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதை அரித்து வந்த பிரச்னைகள் தானாகவே தீர்ந்துவிடும். உங்கள் எதிரிகள் சிதறி ஓடுவார்கள். புதிய எண்ணங்களைச் செயல்படுத்தி சாணக்கியன் என்று பெயரெடுப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களிடம் நெருக்கமாகப் பழகுவீர்கள்.


நீங்கள் பேசும் பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் செயல்களின்மூலம் தேவைக்கேற்ற பணவசதிகளைப் பெறுவீர்கள். மேலும் உங்கள் செல்வம் தர்மகாரியங்களுக்கும் பயன்படும். உங்கள் தொழிலில் அதிகாரம் கூடப்பெறுவீர்கள். உழைப்பு கூடினாலும் அதற்கேற்ற பலன் பன்மடங்காக உயரும். உங்கள் பழைய கடன்களும் இந்த காலகட்டத்தில் திரும்ப வரும். உங்கள் தொழிலில் அதிகாரமும் உயரப் பெறுவீர்கள். உழைப்பு கூடினாலும் அதற்கேற்ற பலன் பன்மடங்காக உயரும். 


நீண்ட நாட்களாக நீங்கள் கொடுத்த உங்கள் பழைய கடன்களும் இந்த காலகட்டத்தில் திரும்பி வரும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் நிரந்தர தீர்வு காண்பார்கள். உங்களின் நெடுநாளைய ஆசைகள் செயல்வடிவம் பெற்று உங்களை புகழின் உச்சாணிக்கே கொண்டு சென்று விடும். சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்வீர்கள். அதோடு உங்களின் ஆலோசனைகளை மற்றவர்கள் கேட்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.


உத்தியோகத்தில் உள்ள உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் முன்கூட்டியே செயல்படுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களில் வெற்றி பெறுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வும் உங்களைத் தேடி வரும். உங்களின் வேலைகளை பட்டியலிட்டுச் செய்தால் அனைவரின் பாராட்டுகளையும் பெறலாம். வருமானம் சிறப்பாக இருப்பதால் கடன்வாங்க நேரிடாது. மனதிற்கினிய இடமாற்றங்களும் உள்ளூரிலேயே அமையும்.


வியாபாரம் வியாபாரிகளுக்கு நினைத்தது நினைத்தபடியே நடக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பழைய சேமிப்புகளை முதலீடு செய்து வியாபாரத்தைப் பெருக்க நினைப்பீர்கள். அதேசமயம் கடும்போட்டிகளை நீங்கள் சந்திக்க நேரிடும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் நினைத்தபடியே சாதகமாக முடியும். அதேசமயம் கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டால் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

விவசாயத்தை நம்பி உள்ள விவசாயிகளுக்கு இந்த ஆண்டு முழுவதும் தேவையான வருமானம் கிடைக்கும். மகசூலில் எதிர்பார்த்த அளவைக் காண்பீர்கள். அதேசமயம் புழு பூச்சிகளால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சரியான நேரத்தில் பூச்சிக் கொல்லி மருந்துகளை உபயோகிக்கவும். வங்கிகளிடமிருந்து தக்க நேரத்தில் கடன் கிடைக்கும்.


அரசியல் துறையினரும் அரசியல்வாதிகளும்  தங்கள் செயல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவார்கள். இதனால் எத்தகைய கடின வேலைகளையும் மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் செய்து முடிக்கவும். உங்களின் செயல்கள் படிப்படியாக வெற்றியைத் தேடித்தரும். கட்சி மேலிடத்திடம் இணக்கமான உறவை வைத்துக் கொள்வது நலம் பயக்கும். குறிப்பாக ஆண்டு பிற்பகுதியில் வாக்குவாதம், விவாதம் போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.


கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதேநேரம் நிதானம் மற்றும் பொறுமையாகவும் நடந்து கொண்டு வெற்றிப்பாதையை எட்டுவீர்கள். பணவரவில் சிறிது தாமதமுண்டானாலும் எதிர்பார்த்த பணம் கிடைத்துவிடும். அதேநேரம் இந்த ஆண்டு முழுவதும் ரசிகர்களின் ஆதரவு சுமாராகத்தான் இருக்கும். மற்றபடி எதிர்பார்த்த பயணங்களைச் செய்வீர்கள்.

குடும்பத்தில் உள்ள பெண்மணிகள் தன்னடக்கத்தோடும் போதுமென்ற மனநிறைவோடும் இருந்து குடும்பத்தில் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்வார்கள். குடும்பத்தில் ஒற்றுமையையும் கணவரிடம் இணக்கத்தையும் காண்பார்கள். உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுற்றுலா சென்றுவர வாய்ப்புகள் உண்டாகும். அதேநேரம் எவரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம்.


கல்வி பயிலும் மாணவமணிகளின் முயற்சிகளுக்கு ஆசிரியரிடம் நல்ல பாராட்டு கிடைக்கும். சிறப்பான மதிப்பெண்களைப் பெற கடுமையாக உழைப்பீர்கள். புதிய மொழிகளை கற்கவும் ஆர்வம் உண்டாகும். உற்சாகத்துடன் இருக்க உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.


பரிகாரம்: ஸ்ரீ அனுமனை வழிபட்டு வரவும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328

 


Continue reading >>

2015 - கும்ப ராசி – ஆங்கில புத்தாண்டு பலன்கள் – ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன்

0 கருத்துகள்

கும்ப ராசி அன்பர்களே இந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் பணப்புழக்கத்தில் குறைவு ஏற்படாது என்றாலும் சேமிப்புகளுக்கு இடமிருக்காது. சமூகத்தில் உங்கள் பெயர், புகழ் கூடும். உங்களின் தன்னம்பிக்கை உயரும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு காரியங்களையும் சிரமமின்றி முடித்து விடுவீர்கள். பெரியோர்களின் நட்பும் ஆசியும் உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். உங்களுக்கு மனதளவில் நெருக்கடி கொடுத்தவர்கள். விலகிச் செல்வார்கள். உடலில் இருந்த நோய்நொடி உபாதைகள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும். குடும்பத்திலும் மருத்துவச் சலவுகள் குறையும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும்.

கடவுள் சம்பந்தப்பட்ட சேவைகள் ஆன்மிகத்தில் ஈடுபாடும் கோயில், தர்மஸ்தாபனம் இவை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் சுப நிகழ்ச்சிகளும் நடக்கக் காண்பீர்கள். அதேநேரம் குழந்தைகள் வழியில் சில மனச் சஞ்சலங்கள் தோன்றி மறையும். அதோடு பேசும் போது கவனமாக இருக்கவும். உங்கள் பேச்சுகள் தவறாக புரிந்துக்கொள்ளப்படும். அவசர முடிவுகளால் பணவிரயம் உண்டாகலாம். எச்சரிக்கைத் தேவை.

உங்களின் மன குழப்பங்களைத் தவிர்க்க தனிமையை நாடுவீர்கள். வெளிவிஷயங்களிலும் காலத்தைக் கழிக்க முயற்சி செய்யுங்கள். மற்றபடி எவ்வளவு சிக்கலான நிலைமையில் மாட்டிக் கொண்டாலும் எந்தவித பாதிப்புமில்லாமல் வெளியில் வந்து விடுவீர்கள். அதே சமயம் வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும். அடுத்தவர்களின் தவறுகள் உங்களை பாதிப்படையச் செய்யும். மற்றபடி வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் நலம் தரும்.

2015 -ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரையில் உள்ள காலகட்டத்தில் பணவருவாய் அதிகமாக இருப்பதால் எதிர்கால பிரகாசமான வாழ்க்கைக்கு வித்திடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் கூடும். எதிரிகள் உங்களைக் கண்டு விலகி ஓடுவார்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் ஆதரவுடன் நடந்து கொண்டு உங்கள் முயற்சிகள் துரிதமாக வெற்றியடையும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.

உங்கள் குடும்ப  உறவினர்களிடம் சுமுகமாக பழகி வர, உங்கள் பழைய மனத்தாங்கல்கள் சீர்படும். உங்கள் உடலாரோக்கியம் பலப்படும். சிலருக்கு புதிய இல்லங்களுக்கு மாறும் யோகமும் உண்டாகும். சமூகத்தில் நல்ல பெயர் உண்டாகும். பெரிய செல்வந்தர்களிடம் நட்பு கிடைக்கும். அவர்களின் செல்வாக்கையும் உங்கள் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களிடம் பெருந்தன்மை நிறைந்து காணப்படும். செய்தொழில் மூலமாகச் செய்து வந்த பயணங்களால் லாபம் அதிகரிக்கும்.

பங்கு வர்த்தகம் மூலமாகவும் உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கும். சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கும் சேவை செய்வீர்கள். உங்களின் விடாமுயற்சிகளால் அரிய பலன்கள் கிடைக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகத்தில் உள்ள உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்து வந்த கெடுபடிகள் குறைந்து சுமுகமான சூழ்நிலை தென்படும். அதேநேரம் அலைச்சல்களுக்கு பயந்து வேலைகளை தட்டிக் கழித்தால் வீண் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

அதனால் பணிகளைத் திட்டமிட்டு மகிழ்ச்சியுடன் செய்து முடிப்பீர்கள். மேலும் உங்கள் வேலைகளை சக ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் கோரிக்கைகள் கருணையுடன் பரீசீலிக்கப்பட்டு உங்கள் நிலைமை உயரும்.
வியாபாரம் செய்யும்  வியாபாரிகள் கடின முயற்சிகளைச் செய்து கொடுக்கல்வாங்கலில் சிறப்புகளைக் காண்பார்கள். எதிரிகளின் தொல்லைகளில் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். 

வியாபாரத்தைப் பெருக்குவதற்காக வண்டி வாகனங்களா வாங்குவார்கள். சரளமான பணவசதி இருப்பதால் புதிய பொருள்களை வாங்கி விற்க முயற்சி செய்வீர்கள். கடையையும் அழகுபடுத்தி வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.
விவசாயம் செய்யும் விவசாயிகள் விளைச்சலில் திருப்தியைக் காண்பார்கள். விளைபொருள்களில் விற்பனையும் நன்றாக நடக்கும். விரும்பிய நேரத்தில் கடன்கள் கிடைக்கும். எதிர்காலத்திற்கு ஏற்றம் தரும் வகையில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். நீர்வரத்தும் அதிகமாக இருப்பதால் மாற்றுப் பயிர்களை பயிரிட்டு பலன் பெறலாம். சிலருக்கு உஷ்ண ஆதிக்க நோய்களும் ஜீரணக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அரசியல் துறையில் உள்ளவர்களும் அரசியல்வாதிகளும் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். எதிரிகளும் உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவு அவ்வப்போது குறையுமாகையால் தொண்டர்களை அரவணைத்துச் செல்லுங்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். அதனால் வாழ்க்கைத் தரம் உயரும் ஆண்டாக இது அமைகிறது.

கலை துறையில் உள்ளவர்கள்  தங்கள் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக்கொண்டு தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெற ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும் புகழும் கிடைக்கும். அதனால் எல்லா காலத்திலும் உழைப்பைக் கூட்டிக்கொண்டு செயல்படவும். மற்றபடி புதிய வாய்ப்புகள் தடங்கலின்றி வந்து கொண்டிருக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் சில பயணங்களை மேற்கொண்டு பலன் அடைவீர்கள்.

குடும்ப பெண்மணிகளுக்கு இந்த புத்தாண்டில் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அக்கறையுடன் நடத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். பொருளாதாரம் ஏற்றமாக இருக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவு செய்வீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கல்வி பயிலும் மாணவ மணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடும் வருடமிது. போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். வெளி விளையாட்டுகளிலும் கவனத்துடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் நிரம்ப கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328
 
    
Continue reading >>

சமீபத்திய கருத்துகள்