Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 28 ஆகஸ்ட், 2013

கிரகப்பிரவேசத்தை அதிகாலையில் தான் நடத்த வேண்டுமா?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்



கிரகப்பிரவேசம் செய்ய அதிகாலை நேரமே உகந்தது. வாசல்நிலையில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். எனவே, லட்சுமி கடாட்சம் பெற காலையில் வாசல்நிலை பூஜை செய்து, பசு, கன்று, சீர்வரிசைகளுடன் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும்.

தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள உங்கள் இல்லத்திற்கே வந்து மிக துல்லியமான ஜோதிட பலன்கள் சொல்லப்படும் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

யோகங்களை அனுபவிக்ககூடிய கிரக அமைப்புகள்? (அனுபவ ஜோதிட ஆராய்ச்சி கட்டுரை) ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                         ஓம் சிவ சக்தி

யோகம்  என்றாலே  வாயை பிளக்கிறார்கள் . யோகமே இல்லாமல் போனால்தான் என்ன? உலகத்தில் பிறந்த அனைவரும் யோகம்  பெறுவது என்றால் முடியுமா? சிலர் ஆரம்ப காலத்தில் யோகத்தோடு கூடி இருப்பார்கள்.பின்னால் தேய்ந்து விடுவார்கள். சிலர் மத்திய காலத்தில் யோகமாக இருப்பார்கள். சிலர் அந்திம காலத்தில் நல்ல யோகத்தை அனுபவிப்பார்கள். ஆக யோகமேன்பது யாருக்கும் நிரந்தரமல்ல. வரும் போகும், அவ்வளவுதான் , சிலருக்கு எந்த காலத்திலும் யோகம் ஏற்படுவதில்லை , அப்படியே மடிந்து விடுகிறார்கள். உலகத்தில் யோகமும் அவ யோகமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதற்கு ஆண்டவன் இடம் கொடுப்பதில்லை .
இருந்தாலும் மனித இனம் கிடைத்ததுடன் திருப்திபடுவதில்லை. மேலும் மேலும் ஆசைகள் வளர்ந்து கொண்டுதான் போகும். ஆசைக்கோ அளவில்லை.இப்படியாக ஆசைகள் உயர்ந்து கொண்டே போகும் மனிதனுக்கு முன்னேறுவதில் முயற்சியும் எண்ணமும்  வேண்டும்.எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. அவனுடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியமும் சிறப்பாக இருக்கவேண்டும்.
இல்லாவிட்டால் எட்டா பழத்தை கண்டு கொட்டாவி விட்டதை போல் ஆகி விடும். .பூர்வ புண்யம் இருக்கிறதா?  இல்லையா எப்படி தெரிந்து கொள்வது? இந்த அமைப்பை  ஒருவனுடைய ஜாதக அமைப்புகள் எடுத்து காட்டும். ஒரு ஜாதகன் எந்த அளவுக்கு பாக்கியவான் என்பதை காட்டும் கிரக அமைப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.

லக்னாதிபதி எந்த கிரகமோ  அந்த கிரகம் லக்னத்திற்கு ஐந்தாம் இடம் ஒன்பதாம் இடம் போன்ற இடத்தில் இருந்தால் அவன் தேசத்திற்கே அதிபதி ஆவான் என்கிறது சாஸ்திரம். அதாவது இப்பொழுது உள்ள சூழ்நிலையில் ஒரு ஒரு மந்திரி பதவியில் இருக்கின்ற சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கும் கிரக அமைப்புகள் என்று கூட சொல்லலாம். 

லக்னத்திற்கு இரண்டாம் இடத்திலும் , பத்தாம் இடத்திலும் , லக்னாதிபதியும் , லாபாதிபதி என்று சொல்ல கூடிய பதினொன்றாம் இடத்துக்கு அதிபதியும் இருந்தால் 20 வயதிற்கு மேல் யோகமேற்படும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

குரு -புதன் -ஏழாம் இடத்து - அதிபதி மூவரும், கேந்திரம்- திரிகோணம் இரண்டில் இருந்தால் கல்வி பயின்று ஆசிரியர் கல்லூரி புரபொசர் ஆகலாம் .

தனஸ்தானத்தில் பாக்கியாதிபதி என்று சொல்ல கூடிய ஒன்பதாம் இடத்து அதிபதி இருந்தால் செல்வந்தனாக வாழ்வான் .

சந்திரனுக்கு இரண்டில் சனி இருந்தால் தந்தையின் சொத்துக்கள் கிடைப்பதில் தகராறுகள் ஏற்படும். 

மூன்று  -  ஆறு - எட்டு - பதினொன்றுக்கு அதிபதிகள் நீச்ச்சமானால் செல்வ சேர்க்கைகள் ஏற்படும். சந்திர லக்னாதிபதி உச்சம் பெற்றாலும் அல்லது நீச்சம் பெற்றாலும் செல்வந்தனாக வாழ்வான். 

ஜீவனாதிபதியாகிய பத்தாம் இடத்ததிபதி நான்காம் இடத்தில் இருந்தால் புதையல்  எதிர்பாராத சொத்துக்கள் கிடைக்கும் . தொழில் மேன்மை பெற்று அதன் மூலம் திடீர் தன லாபங்கள் ஏற்படும். 

சந்திரனும் சுக்கிரனும் சம சப்தமாக நின்றால் வாகன சேர்க்கை ஏற்படும். நான்காம் அதிபதி உச்சம் பெற்றால் அரண்மனை போன்ற வீட்டை கட்டுவான். 

லக்னாதிபதி வலுவிழந்து லக்னத்தை பாவ கிரகங்கள் பார்த்தால் ஜாதகருக்கு பூர்வீக சொத்துக்கள் இருக்காது . 

ஜென்ம லக்னம் சர ராசி என்று சொல்ல கூடிய மேஷம் கடகம் துலாம் மகரம் போன்ற ராசிகளாக  இருந்து அதற்க்கு இரண்டு பன்னிரெண்டாம் இடங்களில் சுப கிரகங்கள் இருந்தால் ராஜயோக பலன்கள் ஏற்படும்.ஆனால் பாபர்  இருந்தால் தரித்திர  .யோகமாகும். 

சந்திர லக்னாதிபதியும் ஜென்ம லக்னாதிபதியும் சம சப்தமாக நின்றால் தீர்க்க ஆயுள் பெற்றவனாயும் யோகவானாகவும் இருப்பான். குருவுக்கு கேந்திரத்தில் சுக்கிரன் இருந்தாலும் பிரபல ராஜ யோகம் ஏற்படும் என்று சொல்ல படுகிறது. 

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வலு பெற்ற  கிரகம் இருந்தால் , பட்டம் பதவி கீர்த்தி ஆதாயங்கள் இவைகள் மிகுந்து காணப்படும். ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்கள் சந்திரனை பார்த்தால் விசேஷமான யோக பலன்கள் நடக்கும் என சாஸ்திரம் கூறுகிறது. 

திரிகோண அதிபதிகளாக ஐந்து ஒன்பதாம் இடத்து அதிபதிகள் இருவரும் சேர்க்கை பெற்று நின்றால் சர்வ பவ்ம யோகம் ஏற்பட்டு தாழ்ந்த குடியில் பிறந்தவனாக இருந்தாலும் உலகத்தில் மாட மாளிகையில் மனைவி குடும்பம் இவைகளுடன் யோகமாய் வாழ்வான். 

ஒரு ஜாதகத்தில் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் யோகம் ஏற்படும் என்பதை மேலே சொல்லப்பட்ட கிரக அமைப்புகள் ஏற்படுத்தி கொடுத்தாலும் யோகம் தரும் கிரகங்களின்  தெசை ஜாதகரின் ஜீவிய காலத்தில் நடந்தால்தான் அவன் ஜாதகத்தில் இருக்கும் யோகத்தின் பலனை பூரணமாக அனுபவிக்க முடியும். அப்படியின்றி ஜாதகரின் ஜீவிய காலத்தில் யோகங்களை அளிக்கும் கிரகங்களின் தெசை நடக்க வில்லை என்றால் அந்த ஜாதகரின் வாழ்க்கையில் சாதாரண பலன்கள் தான் நடைபெறும்.
தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள உங்கள் இல்லத்திற்கே வந்து மிக துல்லியமான ஜோதிட பலன்கள் சொல்லப்படும் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.





Continue reading >>

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

ராகு காலம் கெடுதல் செய்யுமா?அனுபவ ஜோதிட ஆராய்ச்சி கட்டுரை? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
   ஓம் சிவ சக்தி
ராகு காலத்தில் போகாதே போகாதேன்னு தலைக்கு தலை அடிச்சுகிட்டேனே கேட்டியா? இப்படி காரியத்தை கெடுத்திக்கிட்டு வந்து நிக்கறியே என்று பலர் புலம்புவதை அனுபவ ரீதியாக நாம் பார்த்திருப்போம்.

திங்ககிழமை ஏழரை ஒன்பது ராகு காலம் . ஒன்பது மணிக்கு மேலே வரனை அழைச்சுகிட்டு வருகிறேன் , ஏன் என்றால் நாம் செய்ய போவது நல்ல காரியம் கால நேரம் பார்த்து செய்யணும் பாருங்க என்று பேச்சு  வார்த்தை நடத்துவார் , ஒரு கல்யாண தரகர் .

எம்.எல்.ஏவை பார்த்து காலேஜுக்கு சீட் வாங்கணும் ராகு காலத்துக்கு முன்னேயே புறப்பட்டாகனுமே , என்று ஒரு  சில முக்கியமான விஷயத்துக்கு எல்லாம் கால நேரம் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.

ஜோதிடத்தில் தீவிர நம்பிக்கை உள்ள சிலரோ, ராகு காலத்தில்  வெளியில் தலை காட்டுவதே  கிடையாது . ஏன் இப்படி ராகு காலம் என்றால் இவ்வளவு பயம் ? ராகு காலத்தில் போன காரியம் உருப்படாது செய்த காரியம் சரிபடாது. இப்படி ஒரு நம்பிக்கை நம்மவர்களிடையே அழுத்தமாக வேரூன்றி விட்டது . இந்த நம்பிக்கை சரிதானா?

ராகு காலம் நிறைய பேர் கொண்டிருக்கும்  அபிபிராயத்தை நீக்கவே இந்த சிறு ஜோதிட கட்டுரையை நீங்கள் அனைவரும் படிக்கும்படி வேண்டுகிறேன்.
ராகு கிரகம் ஓர்  கிரகம்தான் . ஆனால் ராகு எல்லோருக்கும் கெடுதல் செய்கிறது? அதுவே ஜாதக ரீதியாக சுப பலன் தரக்கூடிய விதத்தில் அமைந்து ராஜ யோக பலனை வாரி வழங்குவதும் உண்டல்லவா?

அதே போல்  சுப கிரகமான்  சுக்கிரன் கூட கெடுதலான ஆதிபத்தியம் ஏற்பதாலோ  தீய ஸ்தானங்களில்  அமர்ந்தோ வறுமையை கொடுத்து நடுத்தெருவில் நிறுத்துவதும் உண்டு. என்பதை ஜோதிடம் தெரிந்தவர்கள் அறிவார்கள் .

எனவே இயற்கையில் சுப கிரகமானாலும் அசுப கிரகமானாலும் அது நன்மைகளை செய்யுமா?என்பதை ஜாதக மூலம் தான் நிர்ணயிக்க வேண்டி இருக்கிறது .

இந்த நிலையில் ராகு காலம் எல்லோருக்கும் கெடுதல் செய்யும் என்பது எப்படி சரியாக இருக்க முடியும் ?

இரவில்  செய்தாலும் அரவில் செய்யாதே பழமொழி எல்லாம் பொது கருத்தாக தான் எடுத்து கொள்ள  வேண்டுமே தவிர தனிப்பட்ட  முறையில் எல்லோருக்கும் பொருந்துவதாக எடுத்து கொள்ள முடியாது . அனுபவமும் இதைதான்  சொல்கிறது.

ஞாயிற்று கிழமை  நான்கு முப்பது முதல் ஆறு மணி -  திங்ககிழமை காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரையிலும் செவ்வாய் கிழமை பிற்பகல் மூன்று மணி  முதல் நான்கு முப்பது வரையிலும் - புதன் கிழமை நன் பகல் பன்னிரண்டு மணி முதல் ஒன்று முப்பது வரையிலும் வியாழக்கிழமை பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரையிலும்  வெள்ளி கிழமை காலம் ஒன்று முப்பது முதல் பன்னிரெண்டு மணி வரையிலும் சனி கிழமை காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரையிலும் ராகு காலம் ஆகும். இதை எல்லா பஞ்சாங்களிலும் காலண்டர்களிலும் பார்த்து  கொள்ளலாம் .

ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரத்தை ராகு காலம் ஆட்சி செய்கிறது.

இந்த ராகு காலம் யாருக்கு நன்மை தரும் என்பதை பார்ப்போம்.

பன்னிரண்டு ராசிகளில் விருச்சிக ராசி கீட ராசி என்றும்-  நச்சு ராசி-  என்றும்  அழைக்கபடுகிறது இது விஷ ராசி ஆனதால் விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கும் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கும் விஷக்கடி கூட அவ்வளவாக பாதிப்பதில்லை என்பதை அனுபவ ரீதியாக அறிகிறோம். விருச்சிக ராசி கேதுவின் உச்ச  ,ராகுவின் நீச்ச வீடென்றும் வழங்கபடுவது உண்டு. இந்த விருச்சிக லக்னத்தை ஜென்ம லக்னமாக கொண்டவர்களுக்கு ராகு காலம் கெடுதல் செய்வதில்லை.

விருச்சிக ராசி எனும்பொழுது அதில் விசாக நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் நீங்கலாக கடைசி நான்காம் பாதமும் அனுஷ நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும், கேட்டை நட்சத்திரத்தின் நான்கு பாதங்கும் அடங்கி இருக்கின்றன. இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் ராகு காலம் தீங்கு விளைவிப்பதில்லை .

அத்துடன் திருவாதிரை - சுவாதி - சதயம் - ஆகிய நட்சத்திர காரர்களுக்கும் ராகு காலம் நல்ல காலமேயாகும்.

சூரியன் கார்த்திகை மாதம் முழுவதும் விருச்சிக ராசியிலேயே சஞ்சரிக்கிறார். எனவே விருச்சிக மாதம் என்று அழைக்கப்படும் கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ராகு காலம் நன்மையே செய்கிறது.

இவை மட்டுமல்லாமல் ராகு காலம் நன்மையை தருவதற்கு உரிய வேறு சில கிரக அமைப்புகளும் உள்ளன. ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் ராகு இரண்டு நான்கு ஆறு ஏழு எட்டு பன்னிரண்டு ஆகிய ஸ்தானங்களிலும் பகை ராசிகளில் அமைந்து இருந்தாலும் சூரியனுடனோ சந்திரனுடனோ சம்பந்த பட்டிருந்தாலும் ராகு காலத்தால் அனுகூலமில்லை. இவர்கள் மட்டும் ராகு காலத்தில் தன் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

ஆனால் ராகு லக்கினம் 3- 5 - 9 - 10 - 11- ஆகிய ஸ்தானங்களிலோ மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய ராசிகளிலோ காலத்தில் நன்மை உண்டும். மேற்கண்ட விதத்தில் ராகு அமைந்து ராகு தசை நடந்தாலும் ராகு புத்தி ராகு அந்தரம் போன்றவை நடைபெற்றாலும் சிறப்பான நற்பலன்களையே பெறலாம்.

ராகு காலத்தில் தீமை பெறுவதாக  அமைப்பு மேற்கண்டபடி ராகுவின் அனுகூலம்  பெற்றவர்களால் வெற்றியடைய இடமுண்டு , எப்படி என்கிறீர்களா? ராகு காலத்தில் ராகுவின் அனுகூலம் பெற்றவர்களின் உதவியை நாடி அவர்களின் உதவியை கொண்டு ,ஒரு செயலில் ஈடுபட்டாலோ அவர்களுடன் சேர்ந்து சென்றாலோ கேடு பலன்கள் குறைந்து நலம் விளைவதை அனுபவத்தில் அறியலாம்.

ஆகவே மேலே சொல்லப்பட்ட விதத்தில் லக்னம் ராசி நட்சத்திரம் கிரக நிலைகள் அமைய பெற்றவர்கள் ராகு காலத்தை கண்டு பயப்பட வேண்டிய அவசியமே இல்லை . ராகு காலத்தில் அவர்களுக்கு கெடு பலன்கள் கொஞ்சமும் இல்லை என்பதுடன் மற்ற காலங்களை விட விசேஷமான நற்பலன்களை அளிக்கும் என்பதால் ராகு காலத்திலே எந்த வித நன் முயற்சிகளிலும்  ஈடுபட்டு பிரமாத வெற்றியை அடையலாம். 
Continue reading >>

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

வேதனை இன்றி நிம்மதியாக உயிர் நீங்க? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                              ஓம்  நம சிவாய 
சிவனை வழிபாடு செய்யும்போது, வழிபாட்டின் நிறைவில் வேண்டிக் கொள்வது இதைத்தான். அந்த ஸ்லோகத்தைத் தருகிறேன். நீங்களும் பாராயணம் செய்யுங்கள். 

அனாயா சேன மரணம் 
விநா தைன்யேன ஜீவனம்
கிருபயா தேஹி மே சம்போ 
த்வயி பக்தி ரசஞ்சலம்

பொருள்: ஹே சம்புவே! எனக்கு எந்த வேதனையும் இன்றி நிம்மதியாக உயிர் நீங்க வேண்டும். வாழும் காலத்தில் யாரிடமும் அடிமைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். உன்னிடத்தில் நிலையான பக்தி இருக்க வேண்டும். கருணை கூர்ந்து இவற்றை அருள்புரிவாயாக.

தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள உங்கள் இல்லத்திற்கே வந்து மிக துல்லியமான ஜோதிட பலன்கள் சொல்லப்படும் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :


ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


Continue reading >>

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மறு பிறவியே வேண்டாம் - ஆன்மீக ரீதியான வழி உண்டா ?

0 கருத்துகள்
                                         ஓம் சிவ சக்தி 

பிறவிப்பிணி தீர்க்கும் ஐந்தெழுத்து மந்திரம் சிவாயநம. இதனை ஜெபிப்பவர்கள் பிறவியில்லாத முக்தி நிலையை அடைந்து சிவலோகத்தில் வாழும் பேறு பெறுவர். இவ்வுலகில் நலமுடன் வாழ, இதே மந்திரத்தை சற்று மாற்றி நமசிவாய என சொல்ல வேண்டும்.

தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள உங்கள் இல்லத்திற்கே வந்து மிக துல்லியமான ஜோதிட பலன்கள் சொல்லப்படும் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.



Continue reading >>

சனி, 17 ஆகஸ்ட், 2013

கணவனுக்கு ஆயுள் அதிகரிக்க ஆவணி ஞாயிற்று கிழமை விரதம்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                      ஓம் சிவ சக்தி 

ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் மகத்துவம்: ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம்  ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார்.  

இதனால் தான் ஆவணிமாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது. ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6--7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர்.

சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும், இதனாலேயே ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் முன்னோர்கள். அக்காலத்தில் ஆடிப்பட்டம் தேடி விதைப்பார்கள். ஆவணியில் பயிர்கள் வளர ஆரம்பிக்கும். பூச்சிகள், பாம்புகள் தொல்லை அதிகரிக்கும். இவற்றால் விவசாயப்பணிகளுக்குச் செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் உருவானது. 

இந்தியாவில் பாம்பை மூலவராகக் கொண்ட கோயில்கள் நாகர்கோவிலிலும், கேரள மாநிலத்தில் சில இடங்களிலும் உள்ளன. இந்தக் கோயில்களில் ஆவணி ஞாயிறு விழா விசேஷம். இந்நாளில், பெண்கள் நாகருக்கு பாலபிஷேகம் செய்து,  பாம்புத்தொல்லை இருக்கக்கூடாது என வேண்டுவர். தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாகக் கொள்வது மரபு. இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். 
இந்நாளில், ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.

மங்களநாயகி:இந்தியாவில்தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் உள்ள அம்மன் மங்களநாயகிக்கு, மந்திரபீட நலத்தாள் ஆகிய திருநாமங்கள் உண்டு. சம்பந்தர் இவளை வளர்மங்கை என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக மந்திரபீடேஸ்வரி என்ற திருõமமும் பெறுகிறாள்.அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானதாக கருதப்படுகிறது. 

அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருள்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். எனவே ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இங்குள்ள மங்களாம்பிகைக்கு செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள உங்கள் இல்லத்திற்கே வந்து மிக துல்லியமான ஜோதிட பலன்கள் சொல்லப்படும் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :


ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

ஏழரை நாட்டு சனியினால் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 கருத்துகள்

                                                         ஓம் சிவ சக்தி  



சனி  பகவான் ஜென்ம ராசி முதல் 3 - 6 - 11-  முதலிய ஸ்தானங்களில் இருக்கும் பொழுது நற்பலனும் மற்ற இடங்களில் கெடு  பலன்களும் ஏற்படுத்துவார்  என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

மேலும் ஜென்ம ராசிக்கும் பன்னிரெண்டாம் இடத்தில்  எப்பொழுது சனி பகவான் அடி எடுத்து வைக்கிறாரோ அது முதல் ஏழரை நாட்டு சனி ஆரம்பம் என்று சொல்லுவார்கள்.

ராசிக்கும் பன்னிரெண்டாம் இடத்தில் சனி வாசம் செய்யும் காலம் இரண்டரை ஆண்டுகளாகும். அப்படி இருக்கும் பொழுது தன்னுடைய  பார்வையால் ரோகஸ்தானத்தையும் - ஏழாம் பார்வையால் பாக்ய ஸ்தானத்தையும் - சனி பார்வை இடுவதால் ஜாதகருக்கும் வருமானம் தடை பட்டு செலவினங்கள் அதிகப்பட்டு காணுதலும், குடும்பம் ஒரு இடத்தை விட்டு இன்னோர் இடம் மாறுதலும், தன் பேச்சுக்கும் மதிப்பின்மையும் உடலில் அடிக்கடி நோய்கள் ஏற்பட்டு விலகுவதும்  சொத்துகள்  வீட்டிலுள்ள பொருட்கள் கைவிட்டு போவதுமான பலன்களும் ஏற்படலாம். 

இக்காலத்தை கருத்தில் கொண்டு பக்குவமாக  நடந்து வந்தாரானால் ஓரளவு தப்பித்து கொள்ளலாம். அடுத்த ஜென்ம சனியை எடுத்து கொள்வோம். ஜென்மத்திலுள்ள சனியால்  இரண்டரை ஆண்டு காலபலன் என்ன வென்று பார்ப்போம். 

ஜென்மத்திலுள்ள சனி தன மூன்றாம் பார்வையால் மூன்றாவது ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் ஜீவன ஸ்தானத்தையும் பார்வையிடுவதால் இத்தகையோருக்கும் ஏற்கனவே இருந்து வந்த தைரியம் இழந்து இனம் தெரியாத  ஓர் பயம் ஏற்படுவதுடன் மனைவியின் உடல் தளர்ச்சியையும் - இருக்குமிடம் மாறுதலையும் - செய்து வரும் தொழிலில் திருப்தியற்ற போக்கும் - எடுத்த காரியம் தாமதத்தில் முடிவு பெறுவதும் ஆகிய பலன்கள்  ஏற்பட கூடும். இத்துடன் ஏழரை நாட்டு சனியின் ஐந்தாண்டு கால பலன்கள்  முடிவடைகிறது. 

இப்பொழுது ராசிக்கு இரண்டாம் இடம் இருக்கும் சனியை பற்றி பார்ப்போம். இங்கே சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் வாசம் செய்வார். இந்த இரண்டரை ஆண்டு காலத்திலும் இவரால் அதிக கெடுதல் பலன்கள் ஜாதகருக்கு ஏற்படாது. அநேகமாக வருமானம் உயரத்தக்க சூழ்நிலை அந்த ஜாதகருக்கு உண்டாகலாம். 

இரண்டில் இருக்கும் சனி பகவான் தன் மூன்றாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் -  ஏழாம் பார்வையால் எட்டாம் இடத்தையும் பத்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் - பார்வையிடுவதால் ஜாதகருக்கும் சில சமயம் வாய்வு சம்பந்தமான சிறு நோய் ஏற்பட்டு விலகுதலும், கண் பார்வையில் கோளாறும், இதுவரையில் ஏற்பட்டிருந்த இடைஞ்சல் மாறி நற்பலன்கள் ,  வருமானம் உயர்வதும் உண்டாகும். ஆக முப்பது சதவீத கெடு  பலனும் , எழுபது சதவீத நற்பலனும் ஏற்படும். இதுதான் ஏழரை நாட்டு சனியின் பலன்களாகும். 

இப்படிப்பட்ட ஏழரை நாட்டு சனியின் காலத்தில் ஜாதகத்தின் படி சுப ஆதிபத்தியம் உடைய கிரகத்தின் தசா புக்தி நடை முறையில் இருக்குமானால் சொல்லப்பட்ட கேடு பலன்கள் ஏற்படாது . மகர - கும்ப - ரிஷப துலாம் லக்னகாரர்களுக்கும், இதுவே ராசியாக அமைய பெற்றவர்களுக்கும் ஏழரை நாட்டு சனியால் பாதிப்பு இல்லை .

இந்த ஏழரை சனியின் காலத்தில் ஒரு ஜாதகனின் பிறந்த தேதி, பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு ஹீப்ரு எண் , இவற்றிற்கும் ஏற்றாற்போல்  அந்த ஜாதகரின் பெயரின்  மொத்த கூட்டு எண்கள்- பெயரின் ஹீப்ரு எண்கள் அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து அதிர்ஷ்ட முறையில் அமைந்திருந்தால் ஏழரை சனியின் தாக்கத்திலிருந்து தப்பித்து கொள்ளலாம். 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

மனைவி வழியாக யாருக்கு சொத்து சேரும்? (அனுபவ ஜோதிட ஆராய்ச்சி கட்டுரை ) ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்



ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம் என்பது தனக்கு வரக்கூடிய மனைவியை பற்றி அறியக்கூடிய இடமாகும் . அதேபோல் ஆண்கள் ஜாதகத்தில் மனைவியை குறிக்க கூடிய கிரகமாக சுக்கிரன் திகழ்கிறார். 

லக்னத்துக்கு ஏழாம் வீட்டுக்கு அதிபதி லாபஸ்தானத்தில் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகர் தனக்கு வரக்கூடிய மனைவி மூலம் லாபத்தை அனுபவிக்க கூடிய பாக்கிய சாலியாக திகழ்வார். 

இப்படி அமைந்து சுக்கிரனும் கேந்திரம் , திரிகோணம் பெற்று நல்ல நிலைமையில் இருந்தால் அந்த ஜாதகர் மனைவி மூலம் பெரும் லாபத்தை அடையக்கூடிய அதிஷ்டசாலியாக திகழ்வார். 


அதே போல் களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அந்த ஜாதகர் தனக்கு வரக்கூடிய மனைவி மூலம் ராஜ போக வாழ்க்கையை அனுபவிப்பார் என்று சொல்லலாம். இங்கே மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன்.

ஜென்ம லக்னத்துக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருந்தால் மட்டும் போதாது. ஏழாம் இடத்து அதிபதியோடு லாபாதிபதி லாபஸ்தானம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் மனைவியால் லாபம்  ஏற்படும்.அப்படி லாபம் சொத்து மூலமாக வரும் என்று சொல்வதற்கு இல்லை. நல்லபடி சம்பாதிக்க கூடிய நிலையில்  வாழ்க்கை துணைவியாக வர முடியும். 

லக்னங்களில் சர லக்னம் , ஸ்திர லக்னம், உபய லக்னம் , என்ற மூன்று வகையான லக்னங்கள் உண்டு. மேஷம் - கடகம் - துலாம் -  மகரம் - இந்த லக்னங்கள் சர லக்னங்கள் ஆகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம் , கும்பம் , ஸ்திர லக்னங்கள் ஆகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம்  ,இவை உபய லக்னங்கள் ஆகும். ஜென்ம லக்னம் சர லக்னங்களில் ஒன்றாக இருந்து விட்டால் லாபஸ்தானம் ஏறிய கிரகம் பாதக ஸ்தானம் பெற்றதாகி விடும். 


எனவே சர லக்னகாரர்களுக்கு மனைவியால் லாபம் என சொல்வதற்கு இல்லை. ஸ்திர லக்னங்களான ரிஷபம் சிம்மம் விருச்சிகம் கும்பம் முதலிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு மனைவியால் லாபம் ஏற்படலாம். 

விருச்சிக லக்னத்துக்கு மட்டும் களத்திர அதிபதியான சுக்கிரன் லாபஸ்தானமாகிய கன்னி ராசியில் இருந்தால் சுக்கிரன் நீசம் பெற்ற அமைப்பை பெறுவதால் மனைவியால் லாபம் ஏற்படுமா ? என்ற கேள்வி எழலாம். கேட்க வேண்டிய கேள்விதான் . 

விருச்சிக லக்னகாரர்களுக்கு லாப ஸ்தான அதிபதி சுக்கிரன் லாபஸ்தானமான கன்னி ராசியில் இருந்தால் நீச்சம் பெற்ற அமைப்பை பெற்றாலும் நான்கில் ஒரு பங்காவது நன்மையுண்டு. ஒருக்கால் புதனும் அங்கிருந்து விட்டால் சுக்கிரனுக்கு  நீசம் பங்கம் ஏற்பட்டு மனைவி வழியாக ராஜ யோக பலனை அந்த ஜாதகருக்கு ஏற்படுத்தி கொடுத்து விடும். 

எந்த ஸ்திர - உபய லக்னமானாலும் , களத்திர அதிபதி லாபஸ்தானம் பெற்று அவனோடு  பூமி காரனான செவ்வாயும்  சேர்ந்தால் வீடு - நிலம் போன்ற ஸ்திர சொத்துக்கள் ஜாதகனை வந்தடையும். புதன் சேர்ந்தால், மனைவி கல்வி வளம் பெற்று உத்தியோகம் செய்து ஜீவிப்பவளாக இருப்பாள். 


லாபாதிபதி களத்திர ஸ்தானம் பெற்றாலும் , மனைவியால் சொத்து சேரும். அதுபோலவே பாக்கியாதிபதியான ஒன்பதாம் வீட்டு உடைய கிரகமும் , ஏழுக்கு  உடைய கிரகமும் ஒன்று கூடினாலும்  மனைவியால் சொத்து ஏற்படலாம். பாக்கிய ஸ்தானம் என்று சொல்ல  கூடிய ஒன்பதாம் இடத்தில் களத்திர ஸ்தான அதிபதியான ஏழாம் வீட்டு அதிபதி இருந்தால் மனைவியால் சொத்து சேரும். 

இவர்களுடன் எந்த கிரகம் சேருகிறதோ அந்த காரக விசேஷத்தால் மனைவி மூலம் சொத்து கிடைக்கும். இவை மட்டுமல்லாமல்  லக்னத்துக்கு இரண்டாம் இடமான தனாதிபதியின் நிலையையும் நன்கு கவனிக்க வேண்டும். என்னதான்  மனைவி மூலம் சொத்து கிடைத்தாலும் தன ஸ்தானாதிபதி என்று சொல்ல கூடிய லக்னத்துக்கு இரண்டாம் இடத்துக்கு அதிபதி கெட்டிருந்தால் எல்லாம் தேய்ந்து விடும். கெட்டிருப்பது என்றால் பகை - நீசம் பெற்றிருப்பதும் . லக்னத்துக்கு ஆறாம், எட்டாம் , பன்னிரெண்டாம் இடங்களில் மறைவதும் ஆகும். 

பாக்கியாதிபதியின் சேர்க்கையும் பாக்கிய ஸ்தானத்தில் களத்திர ஸ்தான அதிபதியும் இருந்தால் மனைவி மூலமாக சொத்து வரும் என்று சொல்லி இருக்கிறேன். இங்கே இந்த பாக்கியம் ஸ்திர லக்னமாக கொண்ட ரிஷபம் - சிம்மம் - விருச்சிகம் - கும்பம் - போன்ற லக்ன காரர்களுக்கு ஆகாது என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன். காரணம் இந்த நான்கு ஸ்திர லக்னங்களுக்கும் பாக்கிய ஸ்தானம் ஒரு பாதக ஸ்தானமாகும். 


உதாரணத்துக்கு ரிஷப லக்னகாரர் ஒருவருக்கு களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் பாக்கிய ஸ்தானமான மகரத்தில் உச்சம் பெறுகிறார் என்று கொள்வோம். ஆனால் உச்ச்சமடைந்தும் பிரயோஜனமில்லை , காரணம் ஸ்திர லக்னமான  ரிஷப லக்னகாரர்களுக்கு ஒன்பதாம் இடம் ஒரு பாதக ஸ்தானமாகையால் மனைவியால் லாபம் ஏற்படுவதற்கு பதில் அதிருப்திகரமான பலன்களே ஏற்படும். மற்ற லக்ன காரர்களுக்கும் இந்த அமைப்பை பொருத்தி பார்க்க வேண்டும். 

எனவே மனைவியால் சொத்து சேர வேண்டும் என்று பார்க்கும் பொழுது ஜோதிடர்கள் மேலே சொன்ன பல்வேறு கிரக அமைப்புகளை கொண்டு பலன் சொல்வது மிகவும் முக்கியமாகும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

சமீபத்திய கருத்துகள்