Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 2 ஜனவரி, 2012

குரு பார்க்க அனைத்து தோஷங்களும் நீங்குமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்


                                                                
                                                                   ஓம் நம சிவாய  

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
ஆயக்கலைகள் 64 கலைகளுள்அதிகப்படியான கலைகளை கற்றவன் சந்திரன். அவன் ஜோதிட சாஸ்திரத்தை கற்று தேரவேண்டும் என்ற நோக்கத்தோடு. ஜோதிட சாஸ்திரத்திற்கு அதிபதியான குரு பகவானிடம்  சென்று முறைப்படி ஜோதிட சாஸ்திரத்தை கற்று தேர்ந்தான்.

தன்னை  போல் ஜோதிட சாஸ்திரத்தை கற்று ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கும் பலா பலன்களை மிகவும் துல்லியமாக யாராலும் கணிக்க முடியாது என்று   உள் மனதுக்குள் சிறு கர்வம் கொண்டு ஜோதிட சாஸ்திரத்தை கற்று கொடுத்த குரு பகவானிடம் சென்று என்னைப்போல்  ஒருவருடைய ஜாதகத்தை கணித்து அவருடைய வாழ்க்கையில் நடக்கும் பலன்களை மிகவும் துல்லியமாக சொல்ல முடியுமா என கேட்டான். 

குரு பகவானும்  பூலோகத்தில் தொட்டிலில்  தூங்கி கொண்டு இருந்த ஒரு குழந்தையின் ஜாதகத்தை கணித்து பலன் சொல்ல சொன்னார். அப்பொழுது  சந்திரன் அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்து அந்த குழந்தை இன்னும் சிறிது நேர்த்தில் நாகம் தீண்டி இறந்து விடும் என்று கூறினான். 


சரி என்று குரு பகவானும் சந்திரனும் தொட்டிலில் துங்கி கொண்டிருந்த  அந்த குழந்தையை பார்த்து கொண்டிருந்தனர்.சிறிது நேரத்தில் இரண்டு பக்கமும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த அந்த தொட்டிலின் மேல் முனை வழியாக ஒரு நாகம் அந்த குழந்தையை நோக்கி வர தொடங்கியது. 

சிறிது சிறிதாக அந்த நாகம் குழந்தையின் அருகில் வந்துவிட்டது.சந்திரன் தாம் கணித ஜோதிட கணக்கு இன்னும் சிறிது நேரத்தில் பலிக்கப்போகிறது என்று உள்ளுக்குள்பூரித்து கொண்டான். 

குரு பகவானும் அந்த குழந்தையை பார்த்துகொண்டிருந்தார். அப்பொழுது தொட்டிலில் தூங்கிகொண்டிருந்த  அந்த குழந்தை திடீரென்று  கண்விழித்து இனம் புரியாத சந்தோஷத்தில் சிரித்து கொண்டே கையையும் காலையும் உதைத்து கொண்டது. 

அப்பொழுது அந்த தொட்டில் அங்கும் இங்குமாக ஆடி அசைந்தபொழுது அந்த இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்ட அந்த தொட்டிலின் ஒரு வளையத்திற்குள் அந்த நாகத்தில் தலை மாட்டி கொண்டு அதிலிருந்து தன்னை விடுவிக்க முடியாமல்  அந்த நாகம்  துடி துடித்து இறந்து போனது. 

இதனை குரு பகவானின் அருகிலிருந்து பார்த்து கொண்டிருந்த சந்திரனுக்கு ஒரே அதிர்ச்சி. தான் கணித்த ஜோதிட கணக்குப்படி அந்த குழந்தை இந்த நேரத்தில் நாகம் தீண்டி இறந்திருக்க வேண்டுமே . 

ஆனால் அப்படி நடக்கவில்லையே . அப்படி என்றால் ஜோதிட சாஸ்திரம் பொய்யா. தான் கணித்த ஜோதிட கணக்கு தவறா? என இதற்க்கான விளக்கத்தை குரு பகவானிடம் சந்திரன் கேட்டான். 

அப்பொழுது குரு பகவான் ஜோதிட சாஸ்திரம் என்பது பொய்யுமல்ல . நீ கணித்த ஜோதிட கணக்கும் பொய்யுமல்ல. ஆனால் நான் மட்டும் அந்த குழந்தையை பார்த்து கொண்டிருந்தேனே , குரு பார்க்க கோடி நன்மை அனைத்து தோஷங்களும் விலகும்  என்பதை நீ மறந்துவிட்டாயே . என்று சாந்தமாக பதிலளித்தார்.   


ஜாதகத்தில் எந்த விதமான தோஷங்கள் இருந்தாலும் குரு பகவானின் பார்வை பட்டால் அனைத்து  தோஷங்களும் நீங்கும் என்றாலும் 

மணி கண்ட கேரளம் போன்ற  ஜோதிட நூல்களில், குரு பகவான் பார்வை இருக்கிறது என்பதைவிட அந்த குரு எந்த வீட்டிலிருந்து  பார்க்கிறார் என்பதை முதலில் பார்க்க வேண்டும். 

குரு பகவான் கேந்திரம் திரிகோணம்  உச்சம்  ஆட்சி நட்பு வீடு, போன்ற இடங்களில் இருந்து பார்த்தால் மட்டுமே அந்த பார்வைக்கு சக்தி உண்டு என்றும் குரு பகவான் நீசம்   பகை வீடு  மறைவு ஸ்தானம் போன்ற இடங்களில் இருந்து பார்த்தால் குருவின் பார்வைக்கு சக்தி இல்லை என கூறுகிறது. 

ஆதலால்  குரு பகவான் எங்கிருந்து  பார்க்கிறார் என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்