Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 30 நவம்பர், 2011

பல் மருத்துவர்( DENTAL DOCTOR) ஆகும் யோகம் யாருக்கு? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                    தாயே பூமாதேவி 


ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவருக்கு அமையும்  தொழிலை  பற்றி, அறிய லக்னத்துக்கு பத்தாம் இடம் அல்லது சந்திரனுக்கு பத்தாம் இடத்தை கொண்டு அறியலாம்.   

ஒருவர் பல் மருத்துவர் ஆவதற்கு என்ன கிரக நிலை அமைய வேண்டும் என்பதை பார்ப்பதற்கு முன்பு , கேது பகவானை மருத்துவ கிரகம் என்று கூறுவர். 

அதேபோல், மருத்துவர், மருத்துவமனை, என்றால் ரத்தம் கூர்மையான ஆயுதம், போன்றவை தொடர்பு கொண்டிருப்பதால் ரத்தம் கூர்மையான ஆயுதம், போன்றவற்றை ஆட்சி செய்யும் கிரகமானசெவ்வாய் பகவானும், மருத்துவதுரையோடு சம்பந்தப்பட்ட கிரகங்களாகும் .

மேலே சொல்லப்பட்ட இரண்டு கிரகங்களும். மருத்துவ துறையோடு, சம்பந்தப்பட்ட கிரகங்கள் என்றாலும். மருத்துவ துறையில் பல பிரிவுகள் உள்ளன. 

அதில் , கண், காது, பல்,  போன்ற பிரிவுகள் அடங்கும். அந்த  பிரிவுகளில், பல் சம்பந்தப்பட்ட  துறையோடு சம்பந்தமுடைய கிரகம், சூரியன், ஆகும். 

நமது உடல் உறுப்பில் பல்லை ஆட்சி செய்யும் கிரகம் சூரியன் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனும், இரண்டாம் இடமும் பாதிக்கப்பட்டால், அவருக்கு பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாகிய,சொத்தை பல்,  பல்லில் சீழ்  வடிதல் , பல் விரைவில்  கொட்டி போகுதல்  ஒழுங்கற்ற  பல் வரிசை, சுருக்கமாக  சொல்லப்போனால் பல்லிலே குறைபாடு என்று சொல்லக்கூடிய பிரச்சனைகள் இருக்கும்.


லக்னத்துக்கு இரண்டாம் இடம், சந்திரனுக்கு இரண்டாம் இடம், வாக்கு ஸ்தானம், அதாவது வாய் சம்பந்தப்பட்ட இடம் என்பதால் இரண்டாம் இடம், பல்லை குறிக்கும் இடமாகிறது.

எனவே பல் மருத்துவர் ஆவதற்கும் கீழ் கண்ட கிரக நிலை வழி வகுக்கிறது.

பல்லுக்கு காரகமான சூரியன், நீசம் அடையாமலும், அல்லது மறைவு ஸ்தானங்களில் இல்லாமலும் இருக்க வேண்டும். அதாவது சூரியன் நல்ல இடங்களான  உச்சம், ஒன்று, நான்கு, ஏழு, பத்து, ஐந்து, ஒன்பது, போன்ற இடங்களில் இருக்க வேண்டும். 

சூரியனுக்கு இரண்டாம் இடம்  அல்லது இரண்டாம் இடத்து அதிபதியோடு தொட ர்பு பெற்றிருக்க வேண்டும். 

லக்னத்துக்கு பத்தாம் இடம் அல்லது சந்திரனுக்கு பத்தாம் இடம் , அல்லது பத்தாம் இடத்து அதிபதியோடு சூரியன் , இரண்டாம் இடத்து அதிபதி தொடர்பு பெற்றிருக்க வேண்டும்.

மேலே சொன்ன கிரக அமைப்புகளோடும், மேலே சொன்ன இடங்களோடும் , கேதுவும், செவ்வாயும், சம்பந்தம் பெற்றிருக்கும் கிரக அமைப்புகள் இருந்தால் அவர் பல் மருத்துவர் ஆகும் வாய்ப்புகள் உண்டு. 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328










Continue reading >>

செவ்வாய், 29 நவம்பர், 2011

வெற்றியை தரும் பெயர் அமைப்புகள் உண்டா?

1 கருத்துகள்
ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்ட பல சாஸ்திரங்களில் , கைரேகை, எண்கணித ஜோதிடம். நேமாலஜி , புரோனாலாஜி,  என்ற பிரிவுகள்  உள்ளன. என்னிடம் ஜோதிடம் பர்ர்க்க வருபவர்களிடமும், அதிர்ஷ்ட முறையில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வருபவர்களிடமும் சரி, அல்லது அதிர்ஷ்ட முறையில் பெயரை திருத்தம்  செய்ய வருபவர்களிடமும் சரி, அவர்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து மேலே சொன்ன நியூ மராலாஜி , நேமாலாஜி, புரோனாலாஜி , முறைல்யில்தான் பெயரை அமைத்து கொடுப்பேன்.ஒருவருடைய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும், இல்லை என்றாலும் சரி பெயரில் உள்ள வெற்றியை தரும் ஒலி உச்சரிப்புகள் , அவரை வெற்றியின் உச்சத்திற்கு  அழைத்து செல்கின்றன. அரவிந்த், பிரவின், வினித், வினிதா, வினயன், வினாகமூர்த்தி, விந்தியா, விஷ்ணு, விஷ்வா, விஜய், பிரவினா, கோவிந்தராஜி, கோவிந்த், வின்சென்ட்  , அஷ்வின், இப்படி இன்னும், பல உதாரண பெயர்களை, சொல்லலாம். மேலே சொன்ன பெயர்களில், ஒரு சில பெயர்களுக்கு விளக்கம் , சொல்ல  வேண்டி இருக்கிறது, கோவிந்த், இந்த பெயரை ஆங்கிலத்தில் எழுதும்பொழுது GOVINTH, இந்த பெயரை தனி  தனியாக பிரித்து பார்க்கும்பொழுது  GO VIN TH என்று வருகிறது , அதாவது வெற்றியை, நோக்கி செல் என்று  பொருள் தந்து , வெற்றி பாதைக்கு  அழைத்து செல்கிறது.  மற்ற பெயர்களை  பிரித்து பார்க்கும்பொழுது  வினித், ( VINITH, )இந்த பெயரை தனி தனியாக   பிரித்து  பார்க்கும்பொழுது ,VIN  ITH, என்று வருகிறது , அதாவது பெயரின்  ஆரம்பத்திலேயே   VIN  என்ற உச்சரிப்பு  வெற்றி  என்ற பொருளை தந்து அவரை வெற்றி பாதைக்கு  அழைத்து செல்கிறது . 

அதேபோல் வினோத் (VINOTH ) என்ற பெயரை , அதிர்ஷ்ட பெயரா என்று ஆராய்ச்சி நோக்கோடு எடுத்து பார்க்கும்பொழுது, VIN  NO  அதாவது வெற்றி என்பதே இல்லை என்று பொருள் தருகிறது. அதற்காக இந்த பெயரை வைத்துள்ளவர்கள் எல்லாம் வெற்றி பெற போவதில்லை என்று நாம் சொல்ல  முடியாது. அவருடைய ஜாதக அமைப்பு யோகமான அமைப்பாக இருந்தால் எல்லாமே சிறப்பாக இருக்கும். இந்த பெயர் அதிஷ்ட பெயர் அமைப்பு முறைப்படி  சரியாக உள்ளதா  என்று பார்த்தால் சரியான பெயர் அமைப்பாக இல்லை.   

பெயரில்  MAR  என்று முடியும் சொல்லும். பெயரின்   ஆரம்பத்திலேயே  MAR என்று ஆரம்பிக்கும் பெயர் அமைப்புகளும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் உச்சரிப்புகளாகும்.காரணம் MAR  என்ற சொல்லுக்கு தமிழ் அகராதியில் பொருளை தேடி பார்த்தோமானால் , நாசம் விளைவிக்கிற கேடு விளைவிக்கிற  என்ற பொருள் தரும். பெயரிலே இப்படி அபசகுனமான பொருளை தரும் சொல் இருக்கும்பொழுது அது தீங்கு விளைவிக்கும் சூழ் நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும். உதாரணதிற்கு குமார் என்ற பெயரை பார்க்கும்பொழுது, KU  MAR . KU ( இந்த இரண்டு  எழுத்துக்கும்   உரிய எண்கள் (2  6  ).  
 இந்த இரண்டு எண்களின் கூட்டு எண்ணிக்கை , 2 + 6 = 8 . இந்த எட்டு என்ற எண் ஆயுளுக்கு அதிபதியான சனி பகவானை குறிக்கிறது. அடுத்து வரும் எழுத்துக்கள் MAR  இதன் பொருள் நாசம் விளைவிக்கிற, கேடு விளைவிக்கிற , என்று பொருள் வரும். அதாவது, குமார் என்ற பெயர் ஆயுளுக்கு  பங்கத்தை   விளைவிக்க கூடிய  பெயர் அமைப்பாக விளங்குகிறது என்று நாம் பொருள் கொள்ளவேண்டும். 
இப்படியாக அதிர்ஷ்ட  பெயர் அமைக்கும் முறையில் பல நுணுக்கங்கள் உள்ளது. ஒரு பெயரில் வெற்றியை தரும்,  ஒலி உச்சரிப்புகள் இருந்து ,நியூ நியூமராலஜி படி பெயரின் கூட்டு எண்ணிக்கையும் சிறப்பான எண்ணாக அமைந்துவிட்டால் வாழ்க்கையில் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றிதான்.   




Continue reading >>

நாக தோஷமா பயம் வேண்டாம்?

0 கருத்துகள்
ஜோதிடத்திலே பல வகையான தோஷங்கள் சொல்லப் பட்டிருக்கிறது.இதில் நாக தோஷம் என்ற ஒரு வகையான தோஷம் அடங்கும். லக்னத்திலிருந்து 1 , 5 , 9  இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும்பொழுது  அது  நாகதோஷம்  உடைய ஜாதகமாகிறது. நாக தோஷம் உடையவர்களுக்கு உடலில் ஏதோ ஒரு இடத்தில நாகம் போன்ற உருவம் கொண்ட மச்சமோ, அல்லது தழும்போ இருக்கும் என்று சொல்வதெல்லாம் கட்டு கதை. 


ஜாதகத்திலே நாக தோஷம் இருப்பவர்களுக்கு நான்கு, பதிமூன்று, இருபத்தி இரண்டு, முப்பத்தி ஒன்று, இந்த தேதியில் பிறந்தவர்களுக்கும், அல்லது பெயரின் கூட்டு எண்  நான்கு வந்தாலும், இவர்களுடைய கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும். கனவிலும் பாம்புகள் அடிக்கடி தென்படும். இந்த தோஷங்கள் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும், ஒன்றாக இணைந்து  இருக்கும்பொழுது   அதை துன்புறுத்தினால், இந்த  ஜென்மத்தில் அவருடைய  ஜாதகத்தில் லக்னத்துக்கு  ஏழாம் இடத்தில ராகு என்ற கருநாகம் நின்று,  கணவனுக்கு     தோஷத்தையும், பாம்பு தன்னுடைய பசிக்காக இரையை தேடி 
செல்லும்பொழுது  அதை துன்புறுத்தினால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில்,தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று,தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தையும் பாம்பு  முட்டையிட்டு குஞ்சு  பொரிக்கும்  காலத்திலும்,அல்லது தனது 
குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும்பொழுது  அதைதுன்புறுத்தினால் இந்த
ஜென்மத்தில்,அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில்,ராகுவோ,கேதுவோ நின்று  நாக தோஷத்தை ஏற்படுத்தும்.
 நாக தோஷத்தை ஏற்படுத்தும். புராண காலங்களில் நாக தோஷம் எதற்க்காக பார்க்கப்பட்டது என்றால். ஒருவர் சன்யாசம் பெற்று காடுகளிலும் மலைகளிலும்,கடுமையான, தவங்கள் செய்வதற்கு கடுமையான  விஷ ஜந்துகளினால் இவருக்கு ஆபத்துஏற்படுமா என்பதை அறிந்த பின்னரேஅவருக்குசன்யாசம் கொடுக்கப்பட்டது.
நாக தோஷம் இதற்க்ககதான் பார்க்கப்பட்டது.நாளைடைவில் அது  ஒரு பயப்படக்கூடிய தோஷமாக  பார்க்கப்பட்டது.

நாக தோஷத்திற்க்கான பரிகாரங்கள். 


இந்த தோசதிர்க்கான பரிகாரம் என்னவென்றால், இறை வழிபாடு மட்டுமே ஒருவர் செய்த வினையை போக்க உதவும் கருவியாகும். அதில் கர்ம கர்ம, ஞான , பக்தி மார்க்கம் என்று மூன்று வகைகள் உள்ளன. அதில் பக்தி மார்க்கமே இக்கலியுகத்தில் சிறப்பான பலனை தருகிறது. ஏழையின் சிரிப்பில்தான் இறைவனை முழுமையாக காண முடியும். வறியவர்களுக்கு தொண்டு செய்தாலே செய்த பாவத்தை  போக்க உதவும் பரிகார மாகும்.
வசதி படைத்தோர் கீழ் கண்ட திருத்தலங்களுக்கு சென்று பிரார்த்தனை சேது வருவதால் ராகு, கேதுவால், ஏற்படும் நாக தோஷங்கள் நீங்கி  நலம்  பெறலாம். கும்ப கோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம் , ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருகாளஹஸ்தி, சென்னைக்கு அருகில் உள்ள கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு, சென்று வணங்கி வருவது, நாக தோஷங்களை நீக்கும். பரிகாரிகாரமாகும்.

பிரதோஷ வழிபாடு. 


ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ வேளையில் மாலை 4 .30 மணியிலிருந்து 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும். 
ராகு கேதுவால் ஏற்படும் நாக தோசத்தை போக்க இது சிறந்த வழிபாடாகும்.  



Continue reading >>

திங்கள், 28 நவம்பர், 2011

மருத்துவர் ஆகும் யோகம் யாருக்கு? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 கருத்துகள்

ஆயிரம் பேரை கொன்றால் தான் அரை வைத்தியன் ஆகமுடியும் என்ற ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி அப்படி அல்ல. ஆயிரம் வேரைக்கண்டவன் தான் அரை வைத்தியன். இந்த பழமொழியே நாளைடைவில் பேச்சு வாக்கில் இப்படி மாறி மக்களால் உச்சரிக்கப்படுகிறது.  

ஜோதிடத்திலே ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தொழில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு  லக்னத்துக்கு  பத்தாம் இடத்தை தொழில் ஸ்தானமென்று சொல்வார்கள்.  

நவ கிரகங்களில் கேது பகவானை மருத்துவ கிரகமென்று சொல்வார்கள்.  

மருத்துவத்துறை என்றாலே ரத்தம், அறுவைசிகிச்சை, கூர்மையான ஆயுதம், பேன்றவை தொடர்பு கொண்டிருப்பதால், செவ்வாய் கிரகமும் , மருத்துவ துறையோடு தொடர்பு கொண்ட கிரகமாகிறது. 


ஒருவர் மருத்துவ
துறையில் மருத்துவர் ஆக கீழ்கண்ட கிரக நிலைகள் அமையவேண்டும்,  

எந்த லக்னமாயினும், எந்த யோகமான கிரக அமைப்புகள் செயல்பட வேண்டுமானாலும்,. லக்னாதிபதி மறைவு ஸ்தானங்கலான ஆறு, எட்டு, பன்னிரண்டு, போன்ற ஸ்தானங்களில் இல்லாமல் இருக்கவேண்டும்.  

லக்னத்தில், கேது அல்லது. செவ்வாய், இருவரும், தனித்தோ அல்லது, இணைந்தோ இருந்தாலும்.  

கேது அல்லது, செவ்வாய், இருவரும், பத்தாம் இடத்து அதிபதி உடனோ, அல்லது, பத்தாம் இடத்தோடு, தொடர்பு பெற்று இருந்தாலும்,   

ஒருவர் மருத்துவர் ஆவதற்கான ஏற்ற கிரக நிலைகளாகும்.  


மேலும் மருத்துவர் ஆவதற்கான மேலே சொன்ன கிரக அமைப்புகள் இருந்தாலும், மருத்துவ துறையோடு, தொடர்பு பெற்ற கிரகங்களான, செவ்வாய், கேது,  பத்தாம் இடத்து அதிபதி , பத்தாம் இடம் இவைகளுக்கு குரு பகவானின் தொடர்பு இருந்தால், மருத்துவ துறையில் விரைவில் மருத்துவர் ஆவதற்கான , வாய்ப்புகள்  விரைவில் கிடைக்கும்.  


மருத்துவ துறையில் மருத்துவர் ஆவதற்கான  கிரக  நிலைகள் இருந்தாலும், அந்த மருத்துவத்துறையில் பல பிரிவுகள் உள்ளன .அந்தந்தந்த துறையிலும் , முதன்மை என்ற அந்தஸ்து உள்ளது அல்லவா ? 

மருத்துவ துறையில் மருத்துவர் அந்தஸ்து பெற்று, இவர் முதன்மையான மருத்துவர், என்ற சிறப்பு பெயர் எடுக்க , எதிலும் முதன்மை என்ற அந்தஸ்தை கொடுக்கும் கிரகமான சூரியன், மேலே சொன்ன கிரகங்களான  கேது , செவ்வாயுடன் , பத்தாம் இடம், பத்தாம் இடத்து அதிபதியோடு தொடர்பு , பெற்று இருந்தால், அவர் மிக சிறந்த மருத்துவர், என்ற சிறப்பு அந்தஸ்தை பெறுவார்.  


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328





Continue reading >>

சனி, 26 நவம்பர், 2011

ஜோதிடத்திற்கும் அரசமரத்திற்க்கும் தொடர்பு உண்டா?

0 கருத்துகள்
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை என்ற பழமொழி சொல்வார்கள். அந்த பழமொழிக்கு உண்மையான விளக்கம், குழந்தை பாக்கியம்  இல்லாத பெண் ஒருவள் அரச மரத்தை சுற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். என்று yaaro  சொன்ன கருத்தைக்கேட்டு , கணவனிடம் ஒன்றாக இருப்பதை விட்டுவிட்டு அரச மரமே கதி என்று  அரசமரத்தையே  சுற்றிவந்தாள். கணவனிடம் ஒன்றாக இணைந்து இருந்தால்தானே குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதுதான் இந்த பழமொழிக்கு உண்மையான விளக்கம். 

ஜாதகத்தில் புத்திரக்காரன் என்று சொல்லக்கூடிய குருவும். லக்னத்துக்கு ஐந்தாம் இடது அதிபதியும். பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தை பாக்கியம் இருக்காது. 

 அரச மர  குழந்தை பாக்கியம். 

திருமணமாகி பல ஆண்டுகளாகி குழந்தை செல்வம் கிடைக்காத பெண்மணிகள்  சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து நல்லாடை உடுத்தி வேம்பும் அரசமரமும் உள்ள இடத்தை 108 முறை வலம்வந்தால் அங்கு கிடைக்கும் காற்றில் கலந்திருக்கும் கலந்திருக்கும் ஓசோன் என்ற மருத்துவ குணமுடைய சக்தி கர்ப்ப பையில் உள்ள கோளாறை நீக்கி விடுகிறது. மேலும் அரசமரம் வெளியிடும் காற்றில் செனட்டோனியம் என்ற வேதிப்பொருள் உள்ளதால் பெண்களின் கர்ப்ப பையில் உள்ள குறைகள் நீங்கி கரு முட்டை உற்பத்தியாகி கர்ப்பம் உண்டாவதற்கு வழி வகுக்கிறது.  
மருத்துவ பரிசோதனையில் அரச மரம் ஒரே நாளில் 1800 கிலோ கரியமில வாயுவை பெற்று 2400  கிலோ பிராண வாயுவை வெளியேற்றுகிறது என சொல்லப்படுகிறது.  இதன் வேர் பிரம்மனையும், நடுமரம் விஷ்ணுவையும், கிளை சிவபெருமானையும், குறிப்பதாகும். இதை வணங்கி வந்தால் , படைக்கும் கடவுளான பிரமாவையும், காக்கும் கடவுளான, விஷ்ணுவையும், அழிக்கும் கடவுளான சிவபெருமானையும், ஆக மும்மூர்த்திகளையும் வணங்குவதற்கு ஒப்பாகும் என்பதே இதன் பொருளாகும். எனவே அரச மரம் ஜோதிடத்தோடு தொடர்பு பெற்று குழந்தை பாக்கியம் பெறுவதற்கு , வழி செய்வதால் அரச மரத்திற்கும் , ஜோதிடத்திற்கும் தொடர்பு உண்டு என்று சொல்லலாம்.

Continue reading >>

வெள்ளி, 25 நவம்பர், 2011

திருமணமே ஆகாத கிரக நிலை உண்டா?

0 கருத்துகள்
ஒவ்வொரு  மனிதனும் எந்தெந்த கால கட்டங்களில் எதை செய்ய வேண்டுமோ  அந்த காரியங்களை சரியான கால கட்டங்களில் செய்தால்தான் அவனை  சமூகம் ஒரு அந்தஸ்து உள்ள மனிதனாக பார்க்கிறது. அந்த வகையில் திருமண வயதை ஒரு நபர் எட்டும் பொழுது அதற்குரிய கால கட்டங்களில் அவர் திருமணம் செய்தால்தான் அவருக்கு ஒரு அந்தஸ்து கிடைக்கிறது. ஒரு சில பேருக்கு திருமண பேச்சை எடுத்தாலே அவருக்கு அதில் விருப்பமே இல்லாமல் கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல்  காலத்தை கழித்து விடுவார்கள். திருமணமே நடக்காத கிரகநிலை கொண்ட அமைப்புகளை  இப்பொழு பார்க்கலாம்.  

உப பதா லக்னம் ஜைமினி மகரிஷியின்  திருமண வாழ்க்கையை குறிக்கும் லக்னமாகும். பன்னிரண்டாம் பாவத்தில் இருந்து பன்னிரண்டாம் அதிபதி இருக்கும் இடம் வரை எண்ணி, எண்ணிவந்த  எண்ணை பன்னிரண்டாம் அதிபதி இருக்கும் இடத்தில இருந்து எண்ண வரும் ராசியே உபபதா லக்னமாகும். உபபதா லக்னம், அதற்க்கு இரண்டாம் பாவம், உபபதா லக்னத்திற்கு ஏழாம் பாவம், இவற்றோடு பாவ கிரகங்கள் சம்பந்தப்ப்படுமானால் கடைசிவரை திருமணமே நடைபெறாத சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துவிடும். 

உதாரண ஜாதகம்

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் ஜாதகம்.    

ரிஷப லக்னம். விருச்சிகராசியில் இவர் பிறந்துளார். லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில சுக்ரன்,சந்திரன், புதன்,மூவரும். மூன்றாம் இடத்தில குருவும், சூரியனும். லக்னத்துக்கு நான்காம் இடத்தில கேது. லக்னத்துக்கு ஆறாம் இடத்தில செவ்வாய்.லக்னத்துக்கு பத்தாம் இடத்தில ராகுவும் இல்ல கிரக அமைப்பாகும்.  
இதில் உப பதா லக்னம் காணும் முறை.  

பன்னிரண்டாம் பாவத்தில் இருந்து பன்னிரண்டாம் பாவாதிபதி புதன் ரிஷபத்தில் இருக்கும் இடம் வரை எண்ணி  எண்ணி வந்த ராசி 3 . ரிஷபத்தில் இருந்து 3  ஆவதாக எண்ண வரும் ராசி மகரம்  இதில் மகர ராசியே உபபதா லக்னமாகும். உபபதா லகன்த்தில் கேது, உபபதா லக்னத்திற்கு ஏழாம் இடத்தில ராகு, அதற்க்கு இரண்டாம் பாவத்தை சனி பார்க்கின்றார். உப பதா லக்னம் ஒன்று, இரண்டு, ஏழு, இம் மூன்றும் சனி ராகு, கேதுவால்  , பாதிக்கப்படுவதால் திருமணமே செய்து கொள்ள முடியாத சூழ்நிலையை இந்த கிரக அமைப்புகள் உருவாக்கி கொடுத்து இருக்கிறது.  
Continue reading >>

புதன், 23 நவம்பர், 2011

வழக்கறிஞர் ஆகி புகழ் பெரும் அமைப்பு யாருக்கு ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 கருத்துகள்
  • ஒருவருடைய ஜாதகத்தை பார்த்தவுடன் , இவர் இந்த துறையில் எந்த பிரிவில் இவர் உத்தியோகம் அமையும் என்பதை அவர் ஜாதகத்தை பார்த்து சொல்லலாம். 
  • அப்படி பார்க்கும்பொழுது லக்னத்துக்கு பத்தாம் இடம் என்பது தொழில் ஸ்தானமாகிறது. ஒருவர் நீதி துறையில் வழக்கறிஞர் ஆக வேண்டுமானால், பின்வரும்  கிரக நிலைகள் அமைய வேண்டும். 
  • நவ கிரகங்களில் முதன்மை சுப கிரகமான குருபகவான், பத்தாம் இடத்திலோ  அல்லது பத்தாம் இடது அதிபதி உடனோ  தொடர்பு பெற்றிருக்கவேண்டும். 
  •  
  • அல்லது லக்னத்திலே குரு அமர்ந்து , அவரை பத்தாம் இடத்து அதிபதி பார்க்க வேண்டும். 
  •  
  • மேலும் அவர் அரசு வழக்கறிஞர் ஆவதற்கு  அரசாங்க கிரகம் என்று சொல்லக்கூடிய கிரகமான சூரியன் உடனோ அல்லது பத்தாம் இடத்து அதிபதியுடனோ தொடர்பு பெற்றிருக்க  வேண்டும். 
  •  
  • வழக்கறிஞர் என்றால் வாதாடும்  திறமை வேண்டும். அதாவது பேச்சு திறமை வேண்டும். அப்பொழுதுதான் நீதி துறையில் தமது வாத திறமை  மூலம் இவர் ஒரு தலைசிறந்த வழக்கறிஞர் எதையும் தமது வாத திறமை மூலம் வென்று விடுவார் என்ற பெயர் கிடைக்கும்.  
  •  
  • லக்னத்துக்கு இரண்டாம் இடம் பேச்சு திறனை குறிக்கும் இடமாகும்
  •  
  • இந்த இரண்டாம் இடத்தில குரு, சுக்ரன், புதன் போன்ற சுப கிரகங்கள் இருக்க வேண்டும்.அல்லது இந்த இடத்தை  பார்க்க வேண்டும். மேலும் இரண்டாம் வீட்டுக்கு அதிபதியாக இருக்கும் கிரகத்தோடு மேலே சொன்ன  சுப கிரகங்களின் தொடர்பு இருக்க வேண்டும்.  
  •  
  • இரண்டாம் வீட்டுக்கு அதிபதி நல்ல ஸ்தானங்கலான ஒன்று , நான்கு, ஏழு, பத்து, ஐந்து, ஒன்பது, பதினொன்று போன்ற இடங்களில் அமர்ந்து இருக்கவேண்டும். 
  • வாக்கு ஸ்தானம் என்று சொல்லும் பொழுது   அந்த   இடங்களில் சுப கிரகங்கள் இருக்க வேண்டும், என்று நான் குறிப்பிட்டு இருக்கிறேன்.
  •  
  • அதேபோல்  பழமையான் ஜோதிட நூல்களில் , இரண்டாம் இடத்தில பாவ கிரகங்கலான ராகு, கேது, இருந்தால் அவருக்கு சரியாக பேச்சு வராது என்று கூறுகின்றன. 
  •  
  • ஜோதிட துறையில் பல ஆண்டு அனுபவத்தில் சொல்கிறேன். ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து கருத்துக்களும் சரியானவையே  என்று சொல்ல என் மனம் இடம் தரவில்லை. 
  •  
  • ஒவ்வொரு கிரக அமைப்பையும் ஆராய்ச்சி நோக்கோடு பார்க்க வேண்டும் என்பதே என் கருத்து.  
  •  
  • அதை அப்படியே படித்து விட்டு இன்றைக்கும் சில ஜோதிடர்கள் இரண்டாம் இடத்தில ராகு, கேது இருந்தால் அவருக்கு சரியான பேச்சு வராது என்று  சொல்லி கொண்டிருக்கிறார்கள் . 
  •  
  • முன்னால்  முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, இரண்டில் ராகு, வார்த்தை வித்தகர், வலம்புரி ஜான், அவர்களுக்கு, இரண்டில் கேது, இவர்களில் அடுக்கு மொழி வார்த்தை ஜாலங்களை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். 
  •  
  • ஆகவே வழக்கறிஞர், ஆவதற்கு மேலே சொன்ன கிரக அமைப்புகள் இருந்து, இரண்டாம் இடத்தில ராகு, கேது, இருந்தால் அவர் வாத திறமையில் புகழ் பெற்ற வழக்கறிஞர்  என்ற பெயரோடு நீதி துறையில் சாதனை  படைக்க முடியும்.   






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>

செவ்வாய், 22 நவம்பர், 2011

செவ்வாய் தோஷம் பற்றி சொல்ல முடியுமா?

0 கருத்துகள்
ஜாதகத்திலே பல வகையான தோஷங்கள் உள்ளன. அவைகளில் நாக தோஷம் , மாங்கல்ய தோஷம் , பிதுர்தோஷம், பாலர்ரிஷ்ட தோஷம், என்ற பல வகையான தோஷங்கள் உள்ளன. மேலே சொன்ன தோஷங்களை காட்டிலும் செவ்வாய் தோஷத்தை கண்டு பயப்படுவர்களே அதிகம். இது வீணான பயமே. எந்த ஒரு கிரகமும் கெடுதல் செய்வதில்லை. இயற்கையில் பாவியானவரே செவ்வாய். ஆனால் அவர் சுப கிரகங்களுடன் சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ தன இயற்கையான குணத்தை இழந்து நன்மையே செய்து விடுவார். பாவிகளின் சம்பந்தம் பெருமானால் இயற்கையான பாவத்தன்மை அதிகமாகி விடுகிறது.  
 இந்த செவ்வாய் தோஷத்தால் திருமண நிலையில்  பாதிக்கபடுபவர்களே அதிகம். லக்னத்துக்கு இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டில், செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது. சந்திரனுக்கு இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டில், செவ்வாய் இருந்தால் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது. சுக்கிரனுக்கு இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது. 
லக்னம், சந்திரன், சுக்கிரன், இந்த மூன்றுக்கும், இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டில், இருப்பது, செவ்வாய் தோஷம் அதிகமாக இருக்கும் நிலையாகும். 
லக்னத்துக்கு எட்டாம் இடம் ஆயுளை குறிக்கும் இடமாகும். பெண்களுக்கு, மாங்கல்ய பலத்தையும், கணவரின் ஆயுளையும், இருவருக்கும் ஏற்படும் இன்பத்தையும், குறிக்கும் இடமாக கருதப்படுகிறது. இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் மேலே சொன்னவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும். 
மேலும் எட்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகமான உதிரப்போக்கு  இருக்கும்.
செவ்வாய் தோஷம் நீங்கும் நிலை. 
  • செவ்வாய் தோஷம் செவ்வாய் எட்டில் இருந்து, அது, மேஷ ராசி, விருசிக ராசி, போன்ற  ஆட்சி வீடாக இருந்தாலும். 
  • செவ்வாய் மகர ராசியில் உச்சம் பெற்றாலும்
  • செவ்வாய் இரண்டாம் பாவத்தில் இருந்து, அது மேஷம், விருசிகம், மிதுனம் கண்ணின் ராசியாக இருந்தாலும்.
  • செவ்வாய் நான்காம் பாவத்தில் இருந்து, அது சுக்ரன், வீடான ரிஷபம், துலாம் ராசியில் இருந்தாலும், 
  • செவ்வாய் பன்னிரண்டில் இருந்து, அது, கன்னி, மிதுனம், ரிசபம், துலாம், ராசியாக இருந்தாலும், அது செவ்வாய் தோஷமாகாது.
  • லக்னம் , சந்திரன், சுக்கிரன், இம்மூன்றிற்கும்  இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டு, இந்த இடங்களில்  செவ்வாய் இருந்தால்  அந்த பெண்ணை காவல் துறை, ராணுவம், மருத்துவமனையில் பணியாற்றுபவர், இவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தால் செவ்வாய் தோஷம் அதிகம் பாதிப்பதில்லை. 
  • சற்று வயது வித்தியாசம் அதிகம் உள்ள கணவராக அமைந்தாலும். ( சுமார் 10  வருட வயது வித்தியாசம்) அல்லது இரண்டாம் தாரமாக அமைந்தாலும். செவ்வாய் தோஷம் பாதிப்பை தருவதில்லை. 
  • பொதுவாக ஆண்களுக்கு முப்பது வயதுக்கு மேலேயும். பெண்களுக்கு இருபத்தேழு வயதுக்கு மேலேயும் திருமணம் செய்து வைத்தால் எந்த தோஷமும் பாதிப்பை தருவதில்லை. 

செவ்வாய் தோஷ  திருமண தடை நீக்கும் பரிகாரம்.

 செவ்வாய் கிழமை விரதமிருந்து. 

வீரத் வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
                                                 தன்னோ பௌம  ப்ரசோத யாத்

என்ற செவ்வாய் காயத்திரி மந்திரத்தை தினமும் 45  தடவை உச்சரித்து  செவ்வாய்கிழமையில் கோவிலுக்கு சென்று நவகிரக வரிசையில் செவ்வாய் பகவானை  தரிசித்து வணங்கி, வந்தால் திருமண பாக்கியம் உடனே கிடைப்பதும் மட்டுமல்லாமல்,மனதில் உள்ள அனைத்து  குறைகளும் விரைவில் நிவர்த்தியாகும். 
முடிந்தால் செவ்வாய் பகவானுக்கு உகந்த  திருத்தலமான சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வருவது. உடனடியாக பலன்கள் கிடைக்கும்.
Continue reading >>

அரசு வேலை கிரக நிலை

0 கருத்துகள்
லக்னத்துக்கு பத்தாமிடத்தில் சூரியன் நின்றால் அரசுவேலை , அரசாங்கத்தோடு தொடர்புடைய துறையோ, அல்லது அரசாங்கத்தின் மூலமாகவோ, ஏதோஒரு வகையில் அவருக்கு ஜீவனம் வரும் என்பது ஜோதிட விதி. ஆனால் என்னுடைய ஜோதிட அனுபவத்தில் பத்தாம் இடத்தில சூரியனை பெற்றவர்கள் ஒரு நிலையான தொழில் அமையாமல் கஷ்டப்படுவதை நம்மால் பார்க்கமுடிகிறது. இதற்கு காரணம் பத்தாமிடத்தில் உள்ள சூரியனுக்கு பாதகாதிபதியின் பார்வையோ, அல்லது சனியின் பார்வையோ, அல்லது, துர் ஸ்தான  அதிபதிகளின் பார்வையோ இருந்தால் அரசாங்கத்தோடு தொடர்புடைய எந்த துறையோடும் , அவர்கள் நிலைத்திருக்க முடியாது. 
மேலும் பத்தாம் இடத்தில சூரியன் இருப்பவர் ஒருவர் மாவட்ட ஆட்சியாளராக உள்ளார். அதே பத்தாம் இடத்தில சூரியன் உள்ளவர் ஒருவர் அரசு துறை அலுவகத்தில் பியூனாக உள்ளார். இரண்டு பேருக்குமே சூரியன் பத்தில் இருக்கும்பொழுது  இருவரும் வகிக்கும் பதவி   மேன்மையான நிலையை கொண்ட பதவியாக இருக்க வேண்டுமே. என்ன அப்படி இல்லை என்ற கேள்வி எழுகிறது. பத்தாமிடத்தில் சூரியன் இருந்தும் இந்த ராஜ யோகத்தில் மாறுதல் ஏற்படுவது ஏன்.
 இந்த ராஜ யோகத்தை பெற கொடுப்பினை வேண்டும்.  கொடுப்பினை ஒருவருக்க இருக்க பூர்வ, புண்ணியம் இருக்க வேண்டும். பூர்வ புண்ணியம் கிட்ட லக்னம் முதல் எண்ணப்படும் ஐந்தாம் வீடு செழித்து இருக்க வேண்டும். அதற்க்கு ஐந்துக்கு  உடையவன் பூர்ண பலம் பெற்றிருக்க வேண்டும். 
எங்கே நாம் செய்த  புண்ணியம் சேமித்து வைக்கப்படுகிறதோ அங்கிருந்துதானே தேவைக்கு ஏற்ப எடுக்க வேண்டும். 
இதிலிருந்து ஒருவருக்கு பத்தாம் இடத்தில சூரியன் இருந்தாலும்  அவர் பார்க்கும் உத்தியோகத்தில்ஒருமேன்மையான நிலையை அடைய லக்னத்திற்கு ஐந்தாம் இடம் ,ஐந்தாம் இடத்து  அதிபதி   செழிப்புடன் இருக்கவேண்டும் என தெரிகிறது.   
Continue reading >>

ஞாயிறு, 20 நவம்பர், 2011

விரும்பிய வாரிசுகளை நாம் பெற முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்


ஜோதிடத்தை  அடிப்படையாக கொண்ட சில சாஸ்திரங்களில் ஆண் வாரிசுகளை  பெறவும் பெண் வாரிசுகளை  பெறவும்  அதற்க்கு தகுந்த நாட்கள் அதற்க்கு தகுந்த தேதிகளையும் வகுத்து கொடுத்துள்ளார்கள்.  

முற்காலத்தில் வாழ்ந்த பெரியோர்களும்   ரிஷிகளும் மைந்தனை பெறுவதில் சாஸ்திர பூர்வமாயும் பகுத்தறிவுக்கு ஏற்றவையாகவும் உள்ள ஆராய்ச்சிகளை செய்திருக்கின்றனர்

அம்முறைகளை பின்பற்றினால் எவரும் விரும்பிய சந்ததிகளை  பெறமுடியும்.


மாதம்தோறும் பெண்கள் வீட்டிற்கு விலக்காக  இருக்கும் நாள் முதல் பதினாறாம் நாள் முடிய கருத்தரிக்கும் காலமாகும். 

பதினேழாம் நாள் முதல் மறுபடியும் விலகி இருக்கும் நாள் வரையில் 
அவர்களுக்கு கரு ஏற்படாது. 

அந்த பதினாறு நாட்களில் முதல் மூன்று  நாட்கள் விலகி இருக்கும் நாட்கள் ஆகும். 

.நான்காவது நாள் ஒரு பெண் குளித்து   தூய்மை பெருபவளாகிறாள் . ஆனால் முழுமையான தூய்மை அன்று வந்துவிடாது. 

ஆதலால் அந்த நான்காம் நாளையும் விளக்கவேண்டும். 1  2  3  4  ம் நாட்கள், மைந்தனை பெற வேண்டி மங்கையை அணுகுவதற்கு - போகம் அல்லது புணர்ச்சிக்கு  - ஆகாத நாட்களாகும். 


ஐந்தாவது நாள் முதல் 16 முடிய உள்ள மிகுந்த நாட்களில்  பதினொன்றாவது நாளும் பதிமூன்றாவது நாளும்  விளக்கப்பட வேண்டிவையாகும். 

அதில் அதில்  ஓற்றை படை   (5 - 7 -9 ) ம் முதலிய நாட்களில் புணர்ந்தால் புதல்விதான் ஜெனிப்பாள். 

இரட்டைப்படை (6 - 8  - 10 - ) ம் நாட்களில் புணர்ந்தால் தான் ஆண் குழந்தையை பெறமுடியும். 

அதிலும் விலக்கு நாளிலிருந்து  நாள் அதிகம் செல்ல செல்ல உயர்ந்த  அறிவுப்பூர்வமான்  அனைத்து வகையிலும் சிறந்த சந்ததிகள் கிடைக்கும்.  


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328




Continue reading >>

வெள்ளி, 18 நவம்பர், 2011

பட்ட படிப்பு படிக்கும் யோகம் ஜாதகப்படி உங்களுக்கு அமைந்திருக்கிறதா ? ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 கருத்துகள்

ஜோதிடத்தில் ஒவ்வொரு பாவத்திற்கும்  ஒவ்வொரு பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது . ஒருவருடைய ஜாதகத்தில் ஆரம்ப கல்வியை லக்னத்திற்கு இரண்டாம் இடத்தை கொண்டும் அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கல்வியை அறியலாம் . 

நடுத்தர கல்வியை லக்னத்திற்கு நான்காம் இடத்தை கொண்டும். அதாவது பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வரையிலான கல்வியை அறியலாம் 

பட்டபடிப்பு படிக்கும் யோகத்தை பற்றி அறிய லக்னத்திற்கு ஒன்பதாம் இடத்தை கொண்டும் . அறியலாம் .

ஒன்பதாம் இடத்தில சுபகிரகங்கள் இருந்தாலும். அல்லது ஒன்பதாம்
வீட்டை சுப கிரகங்கள் பார்த்தாலும் அல்லது ஒன்பதாம் வீட்டுக்கு உடைய கிரகம்  கேந்திர ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய லக்னத்திற்கு ஒன்று நான்கு ,ஏழு , பத்து,  திரிகோண ஸ்தானங்கள்  என்று சொல்லக்கூடிய ஒன்று , ஐந்து, ஒன்பது போன்ற ஸ்தானங்களில் ,இருந்தாலும் அவருக்கு பட்ட படிப்பு படிக்கும் யோகம் உண்டாகிறது.

மேற்கண்ட கிரக அமைப்புகள் பட்ட படிப்பு படிக்கும் யோகத்தை கொடுத்தாலும். வித்தைக்கு அதிபதியான புதன் கிரகம் நல்ல இடங்களில் இருந்து சுபர்களின் பார்வை பெற்று இருந்தால் படிப்பில் எவ்வித  தடங்களும் இல்லாமல்  சரளமான போக்கு இருக்கும்.



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>

சமீபத்திய கருத்துகள்