ஜோதிட சாஸ்திரத்தில் அதிகப்படியான காம உணர்ச்சிக்கான கிரக அமைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சாதரணமாக இல்லற வாழ்க்கையில் சிற்றின்பம் முக்கியமாக கருதப்படுவதால் அவற்றிக்கு காரகம் பெரும் கிரகங்களாகிய சுக்கிரன், செவ்வாய், ஜாதகத்தில் வலுவுடன் காணப்படவேண்டும் ஒருவரோடு ஒருவர் சேரலாம், அல்லது, ஒருவரை, ஒருவர் பார்க்கலாம். இப்படி இருந்தால் அவருக்கு சிற்றின்ப உணர்ச்சி அதிகமாக இருக்கும் எனலாம். ஆனால் இவர்கள் தனித்தனியாக 6 , 8 , 12 , போன்ற இடங்களில் வீற்றிருந்தாள் சிற்றின்ப உணர்ச்சி குறைந்து காணப்படும்.அதனால் தான் திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது இவருடைய ஜாதகங்களிலும் சுக்ரனும் செவ்வாயும் மறைவு ஸ்தானங்கள், நீசம் அடையாமல் இருக்கிறார்களா என்று பார்த்து இருவருடைய ஜாதகங்களையும் இணைக்க வேண்டும்,ஒருவருக்கு செவ்வாயும் சுக்ரனும் நல்ல இடங்களில் இருந்து மற்றவருக்கு மறைவு ஸ்தானங்களில் அல்லது நீசம் அடைந்து இருந்தால் கணவன் மனைவி இருவருக்கும் தாம்பத்ய உறவு ரீதியாக பிரிவினை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் அதிகப்படியான காம உணர்ச்சியை ஒரு ஜாதகர் பெற்றிருக்கிறார் என்றால்.அதற்க்கு லக்னத்துக்கு மூன்றாம்.இடத்தை வீரிய ஸ்தானம் என்பார்கள். மூன்றுக்கு உடையவனும், சுக்ரனும், செவ்வாய் பகவானும், ஒன்றாக இணைத்திருந்தாலும். அல்லது ஒருவரோடு ஒருவர் தொடர்பு பெற்றிருந்தாலும். அவருக்கு காமம் சம்பந்தப்பட்ட செயல்களில் விபரீத, ஆசைகள் இருக்கும்,இது இப்படி இருக்க ஒருவருடைய ஜாதகத்தில் , சுக்கிரன், வீட்டில் செவ்வாயும், செவ்வாய் வீட்டில் சுக்ரனும் பரிவர்த்தனை, ஆகி இருந்து, இவர்களோடு ராகுவோ, கேதுவோ, இருந்தால் அவருக்கு திருமணத்திற்கு முன்பு அந்நிய பெண்களின் தொடர்பு இருந்திருக்கும் என்று சொல்லலாம். சுக்ரனுக்கோ, செவ்வாய்க்கோ , சுபர்களின் பார்வை இருந்தால்திருமண த்திற்கு பிறகு, அந்த தொடர்பு நீங்கி விடும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக