Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 28 டிசம்பர், 2011

2012 ஆங்கில புத்தாண்டு கடக ராசி பலன்கள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
கடகம்
புனர்பூசம் 4  ஆம் பாதம்,  பூசம்,  ஆயில்யம் நட்சத்திரங்களில் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு …….
ஜனவரி
கடந்த மாதத்தைவிட இந்த மாதம் தெளிவான சிந்தனைகள் உருவாகும். அரசியல் போக்கு ஆதாயம் தரலாம். அரசு வகை காரியங் களில் அனுகூலமுண்டாகும். விருந்து வேடிக்கையும் விருந்தினர் வருகையும் அதனால் செலவினங்களும் உண்டாகும். கடன் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டும். பகை கொண்டவர்கள் துயரப்பட்டு மீண்டும் உங்களிடம் உறவாட வருவார்கள். மறப்போம் மன்னிப்போம் பாலிசியில் ஏற்றுக்கொள்ளலாம்.
பிப்ரவரி
ஒவ்வொரு பிரச்சினையாக மாறி மாறி வந்தாலும், பாதிப்பும் பங்கம் ஏதும் வராத அளவில் உங்களுடைய காரியங்களும் தேவை களும் நடந்தேறும். கடன் தொடர்ந்து நீடித்தாலும் கடன்காரர்களின் கெடுபிடி குறையும். காது குத்து, கல்யாணப் பத்திரிகை கொடுப்பதற்குக் கடன்காரர் வருவார். ஆனால் நீங்கள் கடனைக் கேட்கத்தான் வருகிறார் என்று பதட்டம் அடைவீர்கள். வந்த பிறகு விஷயம் அறிந்து “நல்ல வேளை’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். வந்தவருக்கு காபி கொடுத்து அனுப்பிவிடலாம்.
மார்ச்
எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் கட்டுசெட்டாக இருந் தாலும், உங்களையும் மீறி செலவுகளும் விரயங்களும் உண்டாகத்தான் செய்கிறது. இந்த மாதம் பட்ஜெட் வரவுக்கு மேல் போய்விட்டது. அதனால் நாளை முதல் வெறும் ரசம், துவையல் என்று வீட்டில் ஆர்டர் போட்டு செலவைச் சுருக்கும் நிலை. ஒன்று விருந்தினர்கள் வீட்டிற்கு வருகை தந்து கோழி எடு, கறி எடு என்று செலவு கூடிவிடும். அது இல்லாவிட்டால் எதிர்பாராத வைத்தியச் செலவு வந்துவிடும். அதனால் ஆகிற செலவு ஆகட்டும்; வயிராற சாப்பிட்டாவது நிம்மதியாக இருங்கள்.
ஏப்ரல்
உங்களுடைய கௌரவம், மதிப்பு, மரியாதைக்கு எந்தவித குறையும் வராது. இருந்தாலும் சுற்றுச் சூழ்நிலைகள் உங்களை சும்மா இருக்க விடாது. யார் வம்பு- தும்பும் வேண்டாம்; எந்தச் சிக்கலும் வேண்டாம் என்று சிவனே என்று ஒதுங்கி இருந்தாலும் வலிய வந்து உங்களை டென்ஷன் ஆக்குவார்கள். இல்லாததையும் பொல்லாத தையும் புறம் பேசி, கோள் சொல்லி உங்களைக் கோபத்திற்கு ஆளாக்கு வார்கள். எதிலும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது. விரயங் களும் செலவுகளும் இருந்தாலும் கடைசி நேரத்தில் அதை சமாளிக்க வழியும் கிடைக்கும்.
மே
உங்களுடைய காரியங்களிலும் செயல்களிலும் முயற்சிகளிலும் தடை ஏதுமில்லை. முன்னேற்றத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. கடந்த கால அனுபவங்கள் காலம் போதித்த பாடமாகக் கருத்தில் நின்று, எதிர்காலத்தை நடத்திச் செல்ல வழிவகுக்கும். எதிர்பார்க்கும் எல்லா இனங்களிலும் உங்களின் வெற்றியைப் பதிக்கலாம். தொழில் துறையிலும் வியாபாரத்திலும் இழந்த வாடிக்கையாளர்களையும் நஷ்டத்தையும் ஈடுசெய்து நன்மையை அடையலாம். இழந்த செல்வாக்கை, பதவியை மீண்டும் பெறலாம். பூமி, வாகனம் சம்பந்தப்பட்ட யோகத்தையும் அடையலாம்.
ஜூன்
தொழில், பொருளாதாரம் இரண்டிலும் பிரச்சினைக்கு இட மில்லை. நீங்கள் ஈடுபடும் எல்லாக் காரியங்களிலும், செய்முயற்சி களிலும் வெற்றி உண்டு; தோல்விக்கு இடமில்லை. சில நேரங்களில் உங்கள் வெற்றி உங்களுக்கு மயக்கத்தையும் போதையையும் ஊட்டி விடும். அதனால் மற்றவர்களை சட்டை செய்ய மாட்டீர்கள். அலட் சியப்படுத்துவீர்கள். அந்த எண்ணத்தை வளரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது முன்னோர் கள் சொன்ன மூதுரை. யார் என்ன சொன்னாலும் சொல்லுகிறவர்களை எடை போட வேண்டாம். சொல்லும் வார்த்தையின் அர்த்தத்தை சீர் தூக்கிப் பாருங்கள்.
ஜூலை
வெளி வட்டாரப் பழக்கவழக்கம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித் தரும். சமூக அந்தஸ்தும் கௌரவமும் காப்பாற்றப்படும். வீட்டில் மதிப்பும் மரியாதையும் உருவாகும். எல்லாம் இருந்தும் அலைச்சலும் திரிச்சலும் குறைந்தபாடில்லை. சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படலாம். யாரோ ஒருவர் மீதுள்ள கோபத்தை மற்றவர்கள்மேல் காண்பிக்கும்படியான சூழ்நிலை அமையும். அதை கண்ட்ரோல் பண்ணிக்கொள்வது நல்லது. எல்லாருக்கும் நல்லவராக நடப்பது கஷ்டம்தான். ஆனால் எல்லாருக்கும் கெட்டவராகப் பேர் எடுக்காமல் நடந்துகொள்ளலாம் அல்லவா!
ஆகஸ்ட்
ஒரு சிலரை நம்பி சில ஏமாற்றங்களைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகலாம். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக நம்பக் கூடாதவர்களை நம்பி சில நல்லவர்களைப் பிரிந்தாலும், மீண்டும் அந்த நல்லவர்களோடு தொடர்பு கொள்ள மனம் விரும்பினாலும் கௌரவம் தடுக்கிறது. மனிதனுக்கே உரிய “ஈகோ’ உங்களைத் தடுமாற வைக்கிறது. “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்’ என்று பெரிய வர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த மனத்திலே துளிர்க்கும் “ஈகோ’ வைக் களையெடுத்துவிட்டால் நலம் என்னும் பயிர் நன்மை என்னும் மகசூலைத் தரும்.
செப்டம்பர்
ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை மிகுதியாக இருக்கும். வேலைக்கேற்ற கூலி கிடைப்பதில் திருப்தி இருக்காது. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு, இடமாற்றம் விஷயமாக மற்றவர்களின் உதவிகளை நாட வேண்டியிருக்கும். தன் நிழல் தன்னுட னேதான் வரும் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு வைராக்கிய மாக இருக்கும் இடத்திலே செயல்படவும். வியாபாரம், விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். குடும்பத்தில் ஆடை, ஆபரணச் சேர்க்கை கூடி வரும். நாணயப் பிசகு ஏற்படாது. எல்லாரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள்.
அக்டோபர்
எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் உங்கள் நடவடிக்கைகளையும் ரகசியங்களையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டாம். மாணவ- மாணவியர் படிப்பில் ஆர்வமும் கவனமும் செலுத்த வேண்டியது அவசியம். மனதில் இதுவரை நிலவிய கற்பனை பயம், நம்பிக்கையின்மை எல்லாம் விலகியோடிவிடும். உற்சாகமும் பிறக்கும். கொடுக்கல்- வாங்கல் சீராக ஓடியடையும். பணத் தேக்கமோ தட்டுப்பாடோ இருக்காது. வியாபாரம் நன்றாக அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாகக் காணப்படும்.
நவம்பர்
குடும்பத்தில் உங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவோர் இல்லை. அதற்காகத் தாங்கள் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள் ளாமல், இறைவனை மனதில் நினைத்து, “எல்லாம் உன் செயல்’ என்று எப்பொழுதும்போல தங்கள் கடமைகளைச் செவ்வனே செயலாற் றுங்கள். உங்கள் வாழ்க்கை, தொழில் அமைப்பில் நல்லதொரு மாற்றம் நிகழும். காலம் என்பதைப் பெரியோர்கள் “சக்கரம்’ என்பார்கள். காலச் சக்கரம் மாறும்போது மேல்பகுதி அடிப் பாகத்துக்கும் கீழ்ப்பகுதி மேல் பாகத்துக்கும் மாறிவருவது போல, மனிதர்கள் நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும்.
டிசம்பர்
இந்த மாதம் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியடையும் என்றா லும், சில குறுக்கீடுகளும் போட்டி, பொறாமைகளும் எதிர்ப்பு இடை யூறுகளும் ஏற்படத்தான் செய்யும். ஆனாலும் அவை ரோட்டின் குறுக்கே அமைந்த ஸ்பீடு பிரேக்கர்- வேகத்தடை மாதிரிதானே தவிர பயணத் தடையல்ல; முறிவு அல்ல. உங்கள் நம்பிக்கை, விடா முயற்சியைவிட தெய்வ பக்தி துணைக்கு வரும். நீண்டகாலமாக நிறை வேற்றாமலிருந்த தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி விடலாம்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்